Skip to main content

கேணி கூட்டம்: ஒரு கேள்வியும் பதிலும்

நான் கேணி கூட்டத்தில் போன ஞாயிறு பேசினதை ஒட்டி பிரேம் என்பவர் ஒரு கேள்வி கேட்டிருக்கிறார். இது முக்கியமான விவாதமாக படுவதால் அவரது அனுமதி பெற்று என் பதிலையும் சேர்த்து பிரசுரிக்கிறேன்.

வணக்கம் அபிலாஷ்,

நேற்று நடைபெற்ற கேணி கூட்டத்தில் நானும் ஒரு பார்வையாளனாக இருந்தேன். Extemporic ஆக இருந்தாலும் அது ஒரு சிறந்த உரையாகவே இருந்தது. ஆனால் கருத்தின் பின்புலத்தில் எனக்கு சில முரண்பாடுகள் உள்ளன.


எழுத்தாளனையும் அவனின் அரசியலையும், மறைந்த சிந்தனை புலத்தையும் (Hidden agenda) வேறு படுத்தி பார்க்காமல், எழுத்தை எப்படி அணுகவது? ஜோ டி க்ருஷ், வலது சாரியா அல்லது இடது சாரியா என்பதை அறிந்து கொள்வதில் எனக்கு எந்த ஆர்வமும் இல்லை. தனிப்பட்ட மனிதராக அவர் மோடியை ஆதரிக்கலாம். நான் மோடி எதிர்பாளனாக இருக்க்கலாம். அனால் நான் அவருடைய படைப்பில் மதம் குறித்த அரசியலையும், வரலாறு குறித்த நோக்கையும் கொண்டு நான் நிராகரிக்க வேண்டி உள்ளது. உங்கள் கூற்றின் படி, நான் வெறும் மொழி நடைக்காகவோ, கட்டமைபிற்க்காகவோ நான் அவரின் படைப்பை தொடர வேண்டுமா? தனி மனிதனும் படைப்பும் வேறு ஆனால் அந்த தனி மனிதனின் அரசியலும் அவனின் படைப்பு கூறும் பொருளும் ஒன்றல்லவா? 

ஒரு எழுத்தாளனின் நிலைபாடு மாறலாம் அனால் அடிப்படை அறம் மாறலாமா? அவ்வாறு மாறும் எழுத்தாளனின் படைப்பை வாசகன் நிராகரிக்கவில்லை என்றால் எழுத்தாளன் எல்லை எது?

இதை நான் திரைப்படத்திற்கும் பொருத்தி பார்க்கிறேன். தனி மனித ஒழுக்கத்தை மீறி, முன் வைக்கப்படும் சிந்தனைக்கும் அரசியலுக்கும் மட்டுமே கதாநாயகன் ஏற்க படுகிறான். பெண் வெறுப்பு, கவலை அற்ற தன்மை, sense of laziness rendering, கொண்ட கதாநாயகனே அடித்தட்டு மக்களை சேர்கிறான். அங்கே அவனை நீக்கி யாரும் படைப்பை பார்ப்பதில்லை அல்லவா?

Thanks,
Prem

அன்புள்ள பிரேம்
நான் மூன்றாவதாக ஒன்றையும் அங்கு கூற இருந்தேன். ஆனால் அந்த சூழலில் ஏனோ சொல்ல தோன்றவில்லை. எழுத்தாளன் எதற்கும் பொறுப்பாக வேண்டியதில்லை என்பதே என் சாரம். அதேவேளை அவனுக்கு சில நம்பிக்கைகளும் லட்சியங்களும் வேண்டும். அவற்றை அவன் ரொம்ப சீரியஸாகவும் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஒரு கத்தியில் உறையில் இருந்து வெளிப்பட்டு மீண்டும் உறைக்கு திரும்புவது போல் இருக்க வேண்டும்.

எழுத்தாளனுக்கு அரசியல் வேண்டும் எனக் கூற மாட்டேன். ஏனென்றால் அது அவனை குறுக்கி விடும். ஆனால் அரசியலுடன் உரையாடுபவனாக இருக்க வேண்டும். நமக்கான அரசியல் என ஒன்றை பற்றிக் கொண்டிருக்க கூடாது. உதாரணமாக இரா.நடராஜன இதே கூட்டத்தில் பேசும் போது வகுப்பறை ஒழுக்கத்தின் ஒடுக்குமுறையை கண்டித்தார். ஆனால் அவர் ஒழுக்கவாதத்துக்கு எதிரானவரா? அவரே இன்னொரு இடத்தில் சினிமாவும், டி.வியும் பார்த்து குழந்தைகள் கெட்டுப் போவதாக கூறுகிறார்? பெற்றோர் பொய் சொன்னால் குழந்தையும் பொய் சொல்லும் என்கிறார். அப்படி என்றால் குழந்தைகளை ஆசிரமங்களில் வளர்க்க வேண்டுமா?  இப்படியான முரண்பாடு எழுவதற்கு காரணம் சிந்தனை தெளிவின்றி அவர் ஏதோ ஒரு அரசியலை இறுக்க பற்றுவது தான்.
மேலும் நடராஜன் சொல்வது உளவியல் ரீதியாய் சரியும் அல்ல. மோசமான பெற்றோருக்கு மோசமான பிள்ளைகள் அமையும் என்பது ஒரு பொதுப்புத்தி மட்டுமே.
உதாரணமாய், என் அப்பா தினமும் மூன்று வேளை குடிப்பார். வாய் திறந்தால் கெட்டவார்த்தை தான். அம்மாவை அடிப்பார். ஆனால் நான் தினமும் குடிப்பதோ, கெட்டவார்த்தை பேசுவதோ மனைவியை அடிப்பதோ இல்லை. அதேவேளை மிக நல்ல பெற்றோர்களின் மகன்கள் இதையெல்லாம் (குடிப்பது அடிப்பது) செய்வதையும் பார்க்கிறேன். இதை எப்படி புரிந்து கொள்வீர்கள். டி.வி பத்திரிகை இல்லாத சூழலில் வளரும் ஒரு குழந்தையின் மனதில் வளர்ந்ததும் வக்கிரமே இராதா?

 எதன் அரசியலையும் முழுக்க புரிந்து கொள்ள அதில் இணையாது இருக்க வேண்டும். தள்ளி நின்று பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் இரா. நடராஜன் போல் ஒழுக்கவாதத்துக்கு எதிராக பேசிக் கொண்டே அதற்கு துணை போகவும் நேரிடும்.

நீங்கள் கூறும் அடிப்படை அறம் எழுத்தாளனுக்கு வேண்டும் தான். ஆனால் அவன் அதை இறுக்கமாக பற்றிக் கொள்ள கூடாது. அதை பயன்படுத்தி விட்டு விலக்கி வைத்து பரிசீலிக்க வேண்டும் என நினைக்கிறேன்.

சினிமா வெகுமக்கள் கலை. மக்களின் செண்டிமன்டுகள் வழியாக தான் இயங்கும். அங்கு ஒரு தெளிவான அறத்தை எதிர்பார்க்க முடியாது. சினிமா மக்களுக்கு தம்மை புரிந்து கொள்வதற்கான கலை அல்ல. மக்களை ஆய்வு செய்யும் ஒருவனுக்கான ஒரு கருவி. பிராய்ட் கனவுகளை ஆய்வு செய்வதது போல் நாம் சினிமாவை ஆய்வு செய்யலாம்.


அன்புடன்
ஆர்.அபிலாஷ்


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...