முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கேணி கூட்டம்: ஒரு கேள்வியும் பதிலும்

நான் கேணி கூட்டத்தில் போன ஞாயிறு பேசினதை ஒட்டி பிரேம் என்பவர் ஒரு கேள்வி கேட்டிருக்கிறார். இது முக்கியமான விவாதமாக படுவதால் அவரது அனுமதி பெற்று என் பதிலையும் சேர்த்து பிரசுரிக்கிறேன்.

வணக்கம் அபிலாஷ்,

நேற்று நடைபெற்ற கேணி கூட்டத்தில் நானும் ஒரு பார்வையாளனாக இருந்தேன். Extemporic ஆக இருந்தாலும் அது ஒரு சிறந்த உரையாகவே இருந்தது. ஆனால் கருத்தின் பின்புலத்தில் எனக்கு சில முரண்பாடுகள் உள்ளன.


எழுத்தாளனையும் அவனின் அரசியலையும், மறைந்த சிந்தனை புலத்தையும் (Hidden agenda) வேறு படுத்தி பார்க்காமல், எழுத்தை எப்படி அணுகவது? ஜோ டி க்ருஷ், வலது சாரியா அல்லது இடது சாரியா என்பதை அறிந்து கொள்வதில் எனக்கு எந்த ஆர்வமும் இல்லை. தனிப்பட்ட மனிதராக அவர் மோடியை ஆதரிக்கலாம். நான் மோடி எதிர்பாளனாக இருக்க்கலாம். அனால் நான் அவருடைய படைப்பில் மதம் குறித்த அரசியலையும், வரலாறு குறித்த நோக்கையும் கொண்டு நான் நிராகரிக்க வேண்டி உள்ளது. உங்கள் கூற்றின் படி, நான் வெறும் மொழி நடைக்காகவோ, கட்டமைபிற்க்காகவோ நான் அவரின் படைப்பை தொடர வேண்டுமா? தனி மனிதனும் படைப்பும் வேறு ஆனால் அந்த தனி மனிதனின் அரசியலும் அவனின் படைப்பு கூறும் பொருளும் ஒன்றல்லவா? 

ஒரு எழுத்தாளனின் நிலைபாடு மாறலாம் அனால் அடிப்படை அறம் மாறலாமா? அவ்வாறு மாறும் எழுத்தாளனின் படைப்பை வாசகன் நிராகரிக்கவில்லை என்றால் எழுத்தாளன் எல்லை எது?

இதை நான் திரைப்படத்திற்கும் பொருத்தி பார்க்கிறேன். தனி மனித ஒழுக்கத்தை மீறி, முன் வைக்கப்படும் சிந்தனைக்கும் அரசியலுக்கும் மட்டுமே கதாநாயகன் ஏற்க படுகிறான். பெண் வெறுப்பு, கவலை அற்ற தன்மை, sense of laziness rendering, கொண்ட கதாநாயகனே அடித்தட்டு மக்களை சேர்கிறான். அங்கே அவனை நீக்கி யாரும் படைப்பை பார்ப்பதில்லை அல்லவா?

Thanks,
Prem

அன்புள்ள பிரேம்
நான் மூன்றாவதாக ஒன்றையும் அங்கு கூற இருந்தேன். ஆனால் அந்த சூழலில் ஏனோ சொல்ல தோன்றவில்லை. எழுத்தாளன் எதற்கும் பொறுப்பாக வேண்டியதில்லை என்பதே என் சாரம். அதேவேளை அவனுக்கு சில நம்பிக்கைகளும் லட்சியங்களும் வேண்டும். அவற்றை அவன் ரொம்ப சீரியஸாகவும் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஒரு கத்தியில் உறையில் இருந்து வெளிப்பட்டு மீண்டும் உறைக்கு திரும்புவது போல் இருக்க வேண்டும்.

எழுத்தாளனுக்கு அரசியல் வேண்டும் எனக் கூற மாட்டேன். ஏனென்றால் அது அவனை குறுக்கி விடும். ஆனால் அரசியலுடன் உரையாடுபவனாக இருக்க வேண்டும். நமக்கான அரசியல் என ஒன்றை பற்றிக் கொண்டிருக்க கூடாது. உதாரணமாக இரா.நடராஜன இதே கூட்டத்தில் பேசும் போது வகுப்பறை ஒழுக்கத்தின் ஒடுக்குமுறையை கண்டித்தார். ஆனால் அவர் ஒழுக்கவாதத்துக்கு எதிரானவரா? அவரே இன்னொரு இடத்தில் சினிமாவும், டி.வியும் பார்த்து குழந்தைகள் கெட்டுப் போவதாக கூறுகிறார்? பெற்றோர் பொய் சொன்னால் குழந்தையும் பொய் சொல்லும் என்கிறார். அப்படி என்றால் குழந்தைகளை ஆசிரமங்களில் வளர்க்க வேண்டுமா?  இப்படியான முரண்பாடு எழுவதற்கு காரணம் சிந்தனை தெளிவின்றி அவர் ஏதோ ஒரு அரசியலை இறுக்க பற்றுவது தான்.
மேலும் நடராஜன் சொல்வது உளவியல் ரீதியாய் சரியும் அல்ல. மோசமான பெற்றோருக்கு மோசமான பிள்ளைகள் அமையும் என்பது ஒரு பொதுப்புத்தி மட்டுமே.
உதாரணமாய், என் அப்பா தினமும் மூன்று வேளை குடிப்பார். வாய் திறந்தால் கெட்டவார்த்தை தான். அம்மாவை அடிப்பார். ஆனால் நான் தினமும் குடிப்பதோ, கெட்டவார்த்தை பேசுவதோ மனைவியை அடிப்பதோ இல்லை. அதேவேளை மிக நல்ல பெற்றோர்களின் மகன்கள் இதையெல்லாம் (குடிப்பது அடிப்பது) செய்வதையும் பார்க்கிறேன். இதை எப்படி புரிந்து கொள்வீர்கள். டி.வி பத்திரிகை இல்லாத சூழலில் வளரும் ஒரு குழந்தையின் மனதில் வளர்ந்ததும் வக்கிரமே இராதா?

 எதன் அரசியலையும் முழுக்க புரிந்து கொள்ள அதில் இணையாது இருக்க வேண்டும். தள்ளி நின்று பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் இரா. நடராஜன் போல் ஒழுக்கவாதத்துக்கு எதிராக பேசிக் கொண்டே அதற்கு துணை போகவும் நேரிடும்.

நீங்கள் கூறும் அடிப்படை அறம் எழுத்தாளனுக்கு வேண்டும் தான். ஆனால் அவன் அதை இறுக்கமாக பற்றிக் கொள்ள கூடாது. அதை பயன்படுத்தி விட்டு விலக்கி வைத்து பரிசீலிக்க வேண்டும் என நினைக்கிறேன்.

சினிமா வெகுமக்கள் கலை. மக்களின் செண்டிமன்டுகள் வழியாக தான் இயங்கும். அங்கு ஒரு தெளிவான அறத்தை எதிர்பார்க்க முடியாது. சினிமா மக்களுக்கு தம்மை புரிந்து கொள்வதற்கான கலை அல்ல. மக்களை ஆய்வு செய்யும் ஒருவனுக்கான ஒரு கருவி. பிராய்ட் கனவுகளை ஆய்வு செய்வதது போல் நாம் சினிமாவை ஆய்வு செய்யலாம்.


அன்புடன்
ஆர்.அபிலாஷ்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.