Skip to main content

பெண்களைப் பற்றி மட்டுமான கதை (பகுதி 1)

 சில வாசகர்கள் இருக்கிறார்கள். ஒரு சின்ன குழந்தை ஒரு பிளாஸா அல்லது மால் வாசலில் மிக்கி மௌஸ் வேடம் போட்டு நிற்பவனை வீட்டுக்கு அழைத்து வர வேண்டும் என அடம் பிடிப்பது போல அவர்கள் எழுத்தாளனை தம் வீட்டுக்கு அழைத்து வந்து கூடவே பராமரிக்கிறார்கள். அல்லது சற்று அருகாமையில் இருத்தி கவனித்துக் கொள்கிறார்கள். அல்லது சற்று தொலைவில் வைத்து சமாளித்துக் கொள்கிறார்கள். வினோத் என்னை அப்படித்தான் தன் வீட்டுக்கு அழைத்து வந்தான்.
வினோத்துக்கு நான் பாதி நண்பன், பாதி எழுத்தாளன், கால்வாசி ஆலோசகன், கால்வாசி மனிதன். சிலரிடம் என்னை அண்ணன் என்று அறிமுகப்படுத்துவான். சிலரிடம் நான் வேலை தேடிக் கொண்டிருக்கிறேன் என சொல்லுவான். என்னிடம் கேட்டால் அவனை எப்படி அடையாளப்படுத்துவேன் எனத் தெரியாது.

விநோத் புதுமைப்பித்தன் காலத்தில் என்றால் கணக்குப்பிள்ளையாக இருந்திருப்பான். அதற்குப் பின் என்றால் வங்கி ஊழியனாக. இப்போது என்பதால் எம்.என்.ஸி மென்பொருள் கூலி. மற்றபடி இவர்கள் எல்லாம் ஒரேவகையானவர்கள். எனக்கு சாப்பாடு சரக்கு எல்லாம் வாங்கித் தருகிறான், சரிதான். ஆனால் எனக்கு அவன்பால் பாரித்த மரியாதை எல்லாம் கிடையாது. ஆனால் அவன் சகோதரி அனு அப்படி அல்ல. பார்த்தமட்டிலும் எனக்கு அவளைப் பற்றி நல்ல அபிப்ராயம் தோன்றி விட்டது. பெண் என்பதால் மட்டுமல்ல!
அனு விநோத்துக்கு எட்டு வயது மூத்தவள். விநோத்துக்கு என்னை விட ரெண்டு வயது அதிகம். இதைப் படிக்கிற நீங்கள் நவீன இலக்கிய அறிமுக வாசகர் என்றால் எனக்கு உங்களை விட பத்து வயது மூப்பு. இல்லையென்றால் ஐந்து வயதைக் குறைக்கலாம். இதை எதற்கு கூறுகிறேன் என்றால் அனுவும் விநோத்தும் பரஸ்பரம் உறவைச் சொல்லி அழைக்க மாட்டார்கள். தோற்றத்திலும் அனு விநோத்தை விட இளமையாக இருந்தாள்.
வீட்டுக்கு கூட்டிக் கொண்டு போகும் முன்பாக அவன் என்னை எச்சரித்திருந்தான். அனுவின் நடவடிக்கைகள் கடந்த சில மாதங்களாக எதிர்மறையாக வன்மமாக இருப்பதாக சொன்னான். அவளுக்கு விவாகரத்து ஆகப் போகிறது. கணவனிடம் இருந்து பிரிந்து ஆறுமாதமாகிறது. அவளுக்கு வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்கிறவர்கள் மீது ஒட்டுமொத்தமாக கசப்பு. யாரைப் பார்த்தாலும் கரித்து கொட்டுகிறாள். இதைப் பொறுக்க முடியுமென்றால் தாராளமாக வீட்டுக்கு வரலாம் என்றான்.
அனுவுக்கு ஏன் விவாகரத்து என விசாரித்தேன். கணவனுக்கு கள்ளத்தொடர்பு, குடிப்பழக்கம், வன்முறை, போதைப்பழக்கம், செக்ஸ் வெறி, சோம்பல், வேலையின்மை, மனநோய் இப்படி ஏதாவது உண்டா எனக் கேட்டேன். விநோத் தன் மாமா ஒரு உத்தமானவர் என்றான்.
அவன் தன் மாமாவையும் அக்காவையும் சேர்த்து வைக்க ரொம்ப முயன்றதாகவும், அவனது அக்கா பிடிவாதமாக பிரிய விரும்புவதாகவும் கோபமாக சொன்னான். அனு மீது அவனுக்கு நிறைய ஏமாற்றமும் வருத்தமும் இருந்தது. இவ்வளவு நல்ல கணவனை விட்டு வர முயலுகிறாளே என அவன் விசனித்தான். ஆனால் எனக்கு அப்போது தான் அவன் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்கிற விருப்பம் வந்தது. நல்ல கணவனை விட்டு வர வேண்டும் ஒரு பெண்ணிடம் ஏதோ இருக்கிறது என தோன்றியது.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...