Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

கொலைகாரனுக்கு கொலை தண்டனை கொடுக்கலாமா? - ஒரு விவாதம்

இது நண்பர் லஷ்மி கணபதிக்கும் எனக்கும் இடையிலான மரண தண்டனை பற்றி ஒரு விவாதம்.


வணக்கம் அபிலாஷ்.
மரண தண்டனை விதிக்கப்படுவது குறித்து உங்களது கருத்துகளில் எனக்கு ஒரு கேள்வி. கொலை என்பது குற்றமாயினும் போரில் அது குற்றமாக பார்க்கப்படுவதில்லை. தீவிரவாதிகளில் மனிதம் பாராட்டி ஒரு ராணுவ வீரன் இறந்தாக செய்தி சென்ற வாரம் வந்தது. மனிதம் பாராட்டப்படுவது சரி எனில் இவர் இறந்திருக்க மாட்டார் தவறெனில் ஏன் கொலைக்கும் மரண தண்டனைக்கும் ஏன் இவ்வளவு எதிர்ப்பு குரல்கள்?
அப்பொழுது யார்வேண்டுமானாலும் போர் செய்கிறோம் எனக்கூறி யாரை வேண்டுமானாலும் கொலை செய்யலாமா?

இயக்குநர் SPEILBERG SAVING PRIVATE RYAN இல் தன் குழு வீரனை கொல்லும் நாஜி வீரனை மன்னிக்கும் மில்லர் கதாபாத்திரத்தை மீண்டும் அதே நாஜி வீரன் கொலை செய்ய வைத்திருப்பார். உண்மையில் HITLER மாண்டு போகாமல் சரணடைத்திருந்தால் அவரை மன்னித்‌திருக்க முடியுமா?

முடியாமல் போனால் இந்த வாதம் ஏன் இன்னும் தொடர்ந்து முன் வைக்கப்படுகிறது?
அன்புடன்
லஷ்மி கணபதி
அன்புள்ள லஷ்மி கணபதி,
நீங்கள் கேட்பது கொலைக்கு எதிரான ஒரு பொது அறம் சாத்தியமா என. நாம் கசாப்பின் மரண தண்டனையை எதிர்க்கும் போது இன்னொரு முனையில் ஒரு ஐ.எஸ்.ஐ எஸ் ஒரு அப்பாவியின் கழுத்தை வெட்டி மரண தண்டனை கொடுத்துக் கொண்டிருப்பார். எல்லை கடந்த பயங்கரவாதத்தில் இந்தியா நிறைய இளைஞர்களை பலி கொடுக்க நேர்கிறது. நாம் கொல்வது தவறென்றால் அவர்கள் கொல்வது மட்டும் சரியா? அவர்களை தடுக்க முடியாவிட்டால் நாம் ஏன் நம்மை தடுக்க வேண்டும்?
இக்கேள்விகளுக்கான என் பதில் இது: கொலைகளை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று பாதுகாப்புக்காகவோ சண்டையின் போது தவிர்க்க இயலாமலோ நடக்கும் கொலைகள். இன்னொன்று திட்டமிட்டு நிறைவேற்றப்படும் கொலைகள்.
 இரண்டாவது வகை கொலைகள் தான் தவிர்க்கப்பட வேண்டியவை. எதிர்க்க வேண்டியவை. அதாவது தீவிரவாத தாக்குதல் கொலை,  அரசு அமைப்பு தனிநபர் மீது நிகழ்த்தும் மரண தண்டனை கொலை. முதல் வகை கொலைகள் தவிர்க்க முடியாதவை. மனிதன் அடிப்படையில் ஒரு கொலைக்கருவி தான். அவனால் கொல்லுவதை முழுக்க தவிர்க்க இயலாது. எந்த நொடியிலும் யாரும் கொலை செய்யும் மனநிலைக்கு தள்ளப்படலாம். ஆனால் இரண்டாவது வகை கொலைகள் உண்மையில் மனிதனை திருத்தவோ குற்றத்தை தடுக்கவோ நடப்படுவதில்லை. அவை மனித உடலை சிதைத்து அழித்து அதன் மூலம் பொது மக்களை அச்சுறுத்தி அடக்குவதற்காக நடக்கிறது.
 மரண தண்டனை என்பது அரசின் ஒரு அதிகார பிரகடனம். சில நேரம் பொது சமூகம் தம்மில் சிலர் மீது அதிகாரம் காட்ட கூட மரண தண்டனையை வலியுறுத்துகிறது. மரண தண்டனை என்பது கையில் மாட்டியனை பொதுமக்கள் மொத்தும் தர்ம அடி போலத் தான். மரண தண்டனைக்கு பயந்து ஏன் குற்றங்கள் குறைவதில்லை என்பதையும் நாம் யோசிக்க வேண்டும். மரண தண்டனை என்றல்ல எந்த தண்டனையும் குற்றங்களை குறைப்பதில்லை. சமூக விலக்கம் பற்றின பயம் தான் குற்றங்களை குறைக்கிறது.
போர் கூட திட்டமிட்டு ஒரு நாட்டுக்கு நெருக்கடி கொடுக்கும் பொருட்டு நிகழ்த்தப்படுகிற ஒரு பெரும் மனித பலிச் சடங்கு தான். எளிய மக்களை கொன்று அரசாங்கங்கள் சமரச மேஜையில் தேனீர் அருந்தி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மறக்கும். மக்களின் உயிர் இவர்களுக்கு (ஷேக்ஸ்பியர் சொன்னது போல்) பீராங்கிக்குள் நிரப்பும் கச்சாப்பொருள் போலத் தான். இதைத் தான் நாம் எதிர்க்க வேண்டும். கொலைகளை அல்ல. நம் உடலை வைத்து அரசும் சமூகமும் பகடையாட்டம் ஆடுவதை எதிர்க்க வேண்டும். அதனால் தான் நான் மரண தண்டனையை எதிர்க்கிறேன்.
கொலைக்குற்றங்களை மட்டுமல்ல பெரும்பாலான குற்றங்களை அன்பினாலும் பண்பாட்டினாலும் மட்டுமே குறைக்க முடியும். தண்டனைகள் குற்றத்திற்கு ஏதுவான சூழலைத் தான் உருவாக்கும். உதாரணமாய் ஒரு முறை குற்றம் செய்தவரை நிரந்தர குற்றவாளி ஆக்குவதே நம் தண்டனைக் கூடங்களின் நோக்கம்.
பழிவாங்கும் உணர்ச்சி நம் மனதில் ஆழத்தில் காமம், அச்சம் போல் உறைந்து கிடக்கிறது. அது சக்தி வாய்ந்த உணர்ச்சி. ஆனால் இவ்வுணர்ச்சி பாதுகாப்பின்மையினால் தோன்றும் பீதியின் மற்றொரு வடிவம் தான். தில்லியில் இளம்பெண் ஒருத்தி கொடூரமாய் பேருந்தில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட போது இத்தேசத்தின் பெண்களுக்கும், பெண்களின் சார்பில் ஆண்களுக்கும் தாங்கவொண்ணாத அச்சம் ஏற்பட்டது. அந்த மூன்று குற்றவாளிகளையும் தூக்கிலிட வேண்டும் என கூக்குரல் எழுந்தது. ஆனால் கொன்று விட்டால் நம் தெருவில் போகிற பிற பெண்களுக்கு பாதுகாப்பு கிடைத்து விடுமா என நாம் யோசிப்பதில்லை. அக்குற்றம் நடந்து, குற்றவாளிகளில் இருவர் சிறையிலேயே கொல்லப்பட்ட பின்னரும் கூட பல பலாத்கார குற்றங்கள் நம் தேசத்தில் நடந்தன. இது ஏனென்றால் குற்றம் செய்கிறவர்கள் தாம் பிடிபட மாட்டோம் என பிடிவாதமாக நம்புகிறார்கள். இந்த நம்பிக்கையை குலைத்தால் உலகில் அத்தனைக் குற்றங்களையும் தடுத்தி விடலாம். ஆனால் அது சாத்தியமில்லை. குற்றம் என்பது ஒரு சாகசம். சாகசத்தின் பின்னால் அபாரமான, தர்க்கத்தை கடந்த ஒரு தன்னம்பிக்கை உள்ளது. மரண தண்டனை என்பது நமது தற்காலிக மனத்திருப்திக்காக ஒருவனின் உடலை சிதைக்கும் ஒரு தற்காலிக சல்ஜாப்பு மட்டும் தான். சாமிக்கு கிடாய் வெட்டி சாந்தி செய்வது போல் இந்நாட்டின் கோடானு கோடி மக்களின் அற்ப மனநிம்மதிக்காக ஒருவனை தூக்குக் கயிற்றில் தொங்க விடுகிறோம். எப்படி வெட்டப்படும் கிடாயை சாமி கேட்பதில்லையோ அது போல் கொல்லப்படும் உயிரை நீதிதேவதையும் கேட்பதில்லை.
அன்புடன்

ஆர்.அபிலாஷ்

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...