Skip to main content

கொலைகாரனுக்கு கொலை தண்டனை கொடுக்கலாமா? - ஒரு விவாதம்

இது நண்பர் லஷ்மி கணபதிக்கும் எனக்கும் இடையிலான மரண தண்டனை பற்றி ஒரு விவாதம்.


வணக்கம் அபிலாஷ்.
மரண தண்டனை விதிக்கப்படுவது குறித்து உங்களது கருத்துகளில் எனக்கு ஒரு கேள்வி. கொலை என்பது குற்றமாயினும் போரில் அது குற்றமாக பார்க்கப்படுவதில்லை. தீவிரவாதிகளில் மனிதம் பாராட்டி ஒரு ராணுவ வீரன் இறந்தாக செய்தி சென்ற வாரம் வந்தது. மனிதம் பாராட்டப்படுவது சரி எனில் இவர் இறந்திருக்க மாட்டார் தவறெனில் ஏன் கொலைக்கும் மரண தண்டனைக்கும் ஏன் இவ்வளவு எதிர்ப்பு குரல்கள்?
அப்பொழுது யார்வேண்டுமானாலும் போர் செய்கிறோம் எனக்கூறி யாரை வேண்டுமானாலும் கொலை செய்யலாமா?

இயக்குநர் SPEILBERG SAVING PRIVATE RYAN இல் தன் குழு வீரனை கொல்லும் நாஜி வீரனை மன்னிக்கும் மில்லர் கதாபாத்திரத்தை மீண்டும் அதே நாஜி வீரன் கொலை செய்ய வைத்திருப்பார். உண்மையில் HITLER மாண்டு போகாமல் சரணடைத்திருந்தால் அவரை மன்னித்‌திருக்க முடியுமா?

முடியாமல் போனால் இந்த வாதம் ஏன் இன்னும் தொடர்ந்து முன் வைக்கப்படுகிறது?
அன்புடன்
லஷ்மி கணபதி
அன்புள்ள லஷ்மி கணபதி,
நீங்கள் கேட்பது கொலைக்கு எதிரான ஒரு பொது அறம் சாத்தியமா என. நாம் கசாப்பின் மரண தண்டனையை எதிர்க்கும் போது இன்னொரு முனையில் ஒரு ஐ.எஸ்.ஐ எஸ் ஒரு அப்பாவியின் கழுத்தை வெட்டி மரண தண்டனை கொடுத்துக் கொண்டிருப்பார். எல்லை கடந்த பயங்கரவாதத்தில் இந்தியா நிறைய இளைஞர்களை பலி கொடுக்க நேர்கிறது. நாம் கொல்வது தவறென்றால் அவர்கள் கொல்வது மட்டும் சரியா? அவர்களை தடுக்க முடியாவிட்டால் நாம் ஏன் நம்மை தடுக்க வேண்டும்?
இக்கேள்விகளுக்கான என் பதில் இது: கொலைகளை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று பாதுகாப்புக்காகவோ சண்டையின் போது தவிர்க்க இயலாமலோ நடக்கும் கொலைகள். இன்னொன்று திட்டமிட்டு நிறைவேற்றப்படும் கொலைகள்.
 இரண்டாவது வகை கொலைகள் தான் தவிர்க்கப்பட வேண்டியவை. எதிர்க்க வேண்டியவை. அதாவது தீவிரவாத தாக்குதல் கொலை,  அரசு அமைப்பு தனிநபர் மீது நிகழ்த்தும் மரண தண்டனை கொலை. முதல் வகை கொலைகள் தவிர்க்க முடியாதவை. மனிதன் அடிப்படையில் ஒரு கொலைக்கருவி தான். அவனால் கொல்லுவதை முழுக்க தவிர்க்க இயலாது. எந்த நொடியிலும் யாரும் கொலை செய்யும் மனநிலைக்கு தள்ளப்படலாம். ஆனால் இரண்டாவது வகை கொலைகள் உண்மையில் மனிதனை திருத்தவோ குற்றத்தை தடுக்கவோ நடப்படுவதில்லை. அவை மனித உடலை சிதைத்து அழித்து அதன் மூலம் பொது மக்களை அச்சுறுத்தி அடக்குவதற்காக நடக்கிறது.
 மரண தண்டனை என்பது அரசின் ஒரு அதிகார பிரகடனம். சில நேரம் பொது சமூகம் தம்மில் சிலர் மீது அதிகாரம் காட்ட கூட மரண தண்டனையை வலியுறுத்துகிறது. மரண தண்டனை என்பது கையில் மாட்டியனை பொதுமக்கள் மொத்தும் தர்ம அடி போலத் தான். மரண தண்டனைக்கு பயந்து ஏன் குற்றங்கள் குறைவதில்லை என்பதையும் நாம் யோசிக்க வேண்டும். மரண தண்டனை என்றல்ல எந்த தண்டனையும் குற்றங்களை குறைப்பதில்லை. சமூக விலக்கம் பற்றின பயம் தான் குற்றங்களை குறைக்கிறது.
போர் கூட திட்டமிட்டு ஒரு நாட்டுக்கு நெருக்கடி கொடுக்கும் பொருட்டு நிகழ்த்தப்படுகிற ஒரு பெரும் மனித பலிச் சடங்கு தான். எளிய மக்களை கொன்று அரசாங்கங்கள் சமரச மேஜையில் தேனீர் அருந்தி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மறக்கும். மக்களின் உயிர் இவர்களுக்கு (ஷேக்ஸ்பியர் சொன்னது போல்) பீராங்கிக்குள் நிரப்பும் கச்சாப்பொருள் போலத் தான். இதைத் தான் நாம் எதிர்க்க வேண்டும். கொலைகளை அல்ல. நம் உடலை வைத்து அரசும் சமூகமும் பகடையாட்டம் ஆடுவதை எதிர்க்க வேண்டும். அதனால் தான் நான் மரண தண்டனையை எதிர்க்கிறேன்.
கொலைக்குற்றங்களை மட்டுமல்ல பெரும்பாலான குற்றங்களை அன்பினாலும் பண்பாட்டினாலும் மட்டுமே குறைக்க முடியும். தண்டனைகள் குற்றத்திற்கு ஏதுவான சூழலைத் தான் உருவாக்கும். உதாரணமாய் ஒரு முறை குற்றம் செய்தவரை நிரந்தர குற்றவாளி ஆக்குவதே நம் தண்டனைக் கூடங்களின் நோக்கம்.
பழிவாங்கும் உணர்ச்சி நம் மனதில் ஆழத்தில் காமம், அச்சம் போல் உறைந்து கிடக்கிறது. அது சக்தி வாய்ந்த உணர்ச்சி. ஆனால் இவ்வுணர்ச்சி பாதுகாப்பின்மையினால் தோன்றும் பீதியின் மற்றொரு வடிவம் தான். தில்லியில் இளம்பெண் ஒருத்தி கொடூரமாய் பேருந்தில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட போது இத்தேசத்தின் பெண்களுக்கும், பெண்களின் சார்பில் ஆண்களுக்கும் தாங்கவொண்ணாத அச்சம் ஏற்பட்டது. அந்த மூன்று குற்றவாளிகளையும் தூக்கிலிட வேண்டும் என கூக்குரல் எழுந்தது. ஆனால் கொன்று விட்டால் நம் தெருவில் போகிற பிற பெண்களுக்கு பாதுகாப்பு கிடைத்து விடுமா என நாம் யோசிப்பதில்லை. அக்குற்றம் நடந்து, குற்றவாளிகளில் இருவர் சிறையிலேயே கொல்லப்பட்ட பின்னரும் கூட பல பலாத்கார குற்றங்கள் நம் தேசத்தில் நடந்தன. இது ஏனென்றால் குற்றம் செய்கிறவர்கள் தாம் பிடிபட மாட்டோம் என பிடிவாதமாக நம்புகிறார்கள். இந்த நம்பிக்கையை குலைத்தால் உலகில் அத்தனைக் குற்றங்களையும் தடுத்தி விடலாம். ஆனால் அது சாத்தியமில்லை. குற்றம் என்பது ஒரு சாகசம். சாகசத்தின் பின்னால் அபாரமான, தர்க்கத்தை கடந்த ஒரு தன்னம்பிக்கை உள்ளது. மரண தண்டனை என்பது நமது தற்காலிக மனத்திருப்திக்காக ஒருவனின் உடலை சிதைக்கும் ஒரு தற்காலிக சல்ஜாப்பு மட்டும் தான். சாமிக்கு கிடாய் வெட்டி சாந்தி செய்வது போல் இந்நாட்டின் கோடானு கோடி மக்களின் அற்ப மனநிம்மதிக்காக ஒருவனை தூக்குக் கயிற்றில் தொங்க விடுகிறோம். எப்படி வெட்டப்படும் கிடாயை சாமி கேட்பதில்லையோ அது போல் கொல்லப்படும் உயிரை நீதிதேவதையும் கேட்பதில்லை.
அன்புடன்

ஆர்.அபிலாஷ்

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...