முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அன்னா கரனீனா: “அதற்கென்ன விருந்து சாப்பிட்டு விட்டு போங்க”


அன்னா கரனீனா நாவலில் எனக்கு ரொம்ப பிடித்த பாத்திரங்களில் ஒன்று ஒப்ளோன்ஸ்கியுடையது. ஒப்ளோன்ஸ்கி கதையின் நாயகியான அன்னாவின் அண்ணன். இவர் ஒரு வெகுளி. ஸ்திரிலோலரும் கூட.
ஒப்ளோன்ஸ்கி தன் குழந்தையின் தாதியின் மீது ஆசைப்படுவார். அவளுக்கு காதல் கடிதங்கள் எழுத அவை அவரது மனைவியிடம் மாட்டும். மனைவி கோபத்துடன் அவரிடம் கடிதம் பற்றி விசாரிக்க ஒப்ளோன்ஸ்கி சிரித்து விடுவார். வேண்டுமென்றே அல்ல. வாழ்க்கையை வெறும் சுகமாக கொண்டாட்டமாக மட்டுமே பார்க்கும் அவருக்கு துரோகம், கோபம், விசுவாசம் ஆகிய விழுமியங்கள் புரியாது. இவற்றுக்காக ஒருவர் உணர்ச்சிவசப்படுவது அவருக்கு நகைச்சுவையாய் தோன்றும். அவரது மனைவியின் அந்த உண்மையான கோபத்தின் ஆழம் அவருக்கு விளங்காமல் சிரித்து விடுவார். எவ்வளவு முயற்சி பண்ணியும் அவரால் முகத்தில் மிளிரும் சிரிப்பை மட்டும் கட்டுப்படுத்த முடியாது.


 சிரித்த முகத்துடன் மனைவியை சமாதானப்படுத்த முயல அவள் வாழ்க்கை வெறுத்து விடுவாள். அதன் பிறகு அவரிடம் பேசவோ குடும்பத்தை பார்த்துக் கொள்ளவோ மறுத்து தனியாய் அறைக்குள் அடைந்து கிடப்பாள். அவளுக்கு அந்தளவுக்கு கணவனை தண்டிக்கும் நோக்கமெல்லாம் இல்லை. ஆனால் அவரது முகத்தில் தெரிந்த அந்த வெகுளிச் சிரிப்பு. அதைத் தான் அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதற்காகவே அவரை கடுமையாக தண்டிக்க நினைப்பாள்.
பிறகு ஒப்ளோன்ஸ்கியின் தங்கை வந்து அவரது மனைவியை அமைதிப்படுத்தி குடும்ப பிரச்சனையை சரி செய்வார். பிறகு இந்த தங்கை, அதுவும் மணமான அவள், ஒரு இளைஞனைக் காதலித்து அவள் குடும்பம் பெரும் பிரச்சனைக்குள்ளாகும். அவள் கணவன் அவளை விவாகரத்து செய்ய முடிவெடுப்பான். அவன் மனைவியின் அண்ணன் ஒப்ளோன்ஸ்கியை தேடிப் போவோன்.
ஒப்ளோன்ஸ்கி அந்நேரம் தன் வீட்டில் ஒரு விருந்து ஏற்பாடு பண்ணிக் கொண்டிருப்பார். திடீரென மைத்துனர் வந்து விட அவருக்கும் சேர்த்து விருந்து சொல்வார். ஆனால் மைத்துனர் “இனி நம் குடும்பங்கள் இரண்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் உன் தங்கையை விவாகரத்து செய்ய போகிறேன்” என்பார். ஒப்ளோன்ஸ்கி ஒரு நொடி வியப்பாய் மைத்துனரைப் பார்ப்பார். பிறகு சற்றும் யோசிக்காமல் சொல்வார் “விருந்தில் கலந்து கொள்ளுங்கள்”
“ஒப்ளோன்ஸ்கி இனி நமக்குள் எந்த உறவும் இல்லை. நானெப்படி…?”
“இருக்கட்டும். இப்போது நீங்கள் என் வீட்டுக்கு வந்திருக்கிறீர்கள் அல்லவா. அதனால் என் விருந்தில் கலந்து கொண்டே ஆக வேண்டும். ரொம்ப விசேசமான உணவு வகைகளை நீங்கள் சுவைக்க போகிறீர்கள்”
இப்படித் தான் ஒப்ளோன்ஸ்கியால் பேச முடியும். அவர் வாழ்க்கையை அந்தந்த நொடிகளில் வாழ்பவர். அந்த வாழ்க்கைநோக்கில் இருந்து காண்கையில் திட்டமிட்ட முடிவுகளும் விதிமுறைகளும் ஒட்டுமொத்த கணிப்புகளும் கொண்ட நம் வாழ்க்கை அபத்தமாகவே தெரியும். எது எவ்வாறு நடந்தாலும் அந்த ஒரு நொடியில் எப்படியும் இருக்க மனிதனுக்கு சுதந்திரம் உண்டல்லவா? அதை பரிபூரணமாக அனுபவிப்பவர் ஒபோன்ஸ்கி.
இந்த காட்சியை நேற்று ரோமிடிநவ் அலைவரிசையில் பார்த்த அன்னா கரினீனா படத்தில் கண்டேன். அருமையான திரைக்கதையாக்கம். 2012இல் வெளியான படம். ஜோ ரைட் இயக்கியது. அன்னாவாக கெய்ரா நைட்லி நடித்திருப்பார். அன்னா என் கற்பனையில் சற்று புஷ்டியாகவே இருப்பார். ஆனால் கெய்ரா ஒல்லியாக உணர்ச்சிப்பிழம்பாக படபடவென துடிப்பாய் பேசுபவராக மாறுபட்ட தோற்றத்தில் இருப்பார். நன்றாக நடித்திருப்பார். இந்த படம் நடிக்கும் போது அவருக்கு 26 வயதிருக்கலாம். அதனால் வ்ரோன்ஸிக்கும் அவருக்கும் வயது வித்தியாசம் பெரிதாய் தெரியாது. குழந்தை பிறந்தவுடனான உடல் புஷ்டி காட்சியில் தெரியாது. இதெல்லாம் கொஞ்சம் முரணாக பட்டது. ஆனாலும் ஒரு கச்சிதமான படம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...