Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

தென்னாப்பிரிக்காவும் கண்ணீரும்



நேற்றைய உலகக்கோப்பை அரையிறுதியில் கிராண்ட் எலியட் ஸ்டெயினின் பந்தில் ஆறு அடித்த நொடி மற்றொரு நாடகம் அரங்கேறியது. தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் மைதானத்தில் மனம் உடைந்து சாய்ந்தனர். மோர்னெ மோர்க்கல், டூப்ளஸி ஆகியோர் கண்ணீர் விட்டு அழுதனர். ஸ்டெயின் அப்படியே படுத்து விட்டார். எலியட் சென்று அவரை தூக்கி விட்டார். இவர்களைப் பார்த்து அதுவரை தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டிருந்த டிவில்லியர்ஸும் அழ ஆரம்பித்தார். அப்படி ஒரு உணர்ச்சி மேலிடல் கடைசியாக இலங்கையிடம் இந்தியா 96 உலகக்கோப்பையில் தோற்று வெளியேறிய போது பார்த்தது. தென்னாப்பிரிக்க துக்கத்தில் வர்ணனையாளர்கள், நிபுணர்கள், மீடியா, எதிரணியினர் என அனைவரும் கலந்து கொண்டனர். அதாவது அந்த ஆட்டத்தை நியுசிலாந்து வென்றது ஒரு குற்றம் என்கிற கணக்கில் அனைவரும் பேச ஆரம்பித்து விட்டோம். உலகக்கோப்பை இறுதிக்கு செல்லும் தகுதி படைத்த அணி தென்னாப்பிரிக்காவே நியுசிலாந்து அல்ல எனும் ஒரு தொனி பரவலாக தென்பட்டது. இது சரியா?

சரி என்றால் தென்னாப்பிரிக்காவே வென்று இறுதிப் போட்டிக்கு செல்ல வேண்டியது தானே? அவ்வளவு பெரிய இலக்கை தடுத்தாடி வெல்ல ஏன் இயலவில்லை? இலக்கை வென்றது நியுசிலாந்தின் குற்றமா? தென்னாப்பிரிக்கா போன்ற ஒரு ராட்சத திறமையாள அணி ஒரு குட்டி அணியிடம் வீழ்ந்தது ஒரு துன்பியல் நிகழ்வு தான், ஒத்துக் கொள்கிறேன். தொடர்ந்து நாக் அவுட் போட்டிகளில் அவர்கள் சறுக்குவதும் அவலம் தான். ஆனால் அதற்கு அவர்கள் தானே பொறுப்பு. ஒரு நோ பால் அல்லது வைட் பந்து அல்லது சூப்பர் ஓவரில் தோற்றால் அது பரிதாபமே! 92இல் நடந்தது போல் அடைய முடியாத இலக்கு D/L முறையில் அளிக்கப்பட்டாலும் அது பரிதாபம் தான். ஆனால் மழை ஒன்றைத் தவிர இம்முறை தென்னாப்பிரிக்காவுக்கு பெரிய துரதிஷ்டம் நிகழவில்லை. 43 ஓவர்களில் 298 மிக நல்ல இலக்கு. அதை தடுத்தாட முடியாதது தென்னாப்பிரிக்காவின் அணுகுமுறை மற்றும் வியூகத்தில் உள்ள தவறினால் தான். ஏனோ இவ்விசயத்தை யாரும் கவனித்ததாய் தெரியவில்லை.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தென்னாப்பிரிக்கா முழுக்க இருவேறான அணி. டெஸ்டில் அவர்கள் பந்து வீச்சாளர்கள் தாக்கி ஆடுவார்கள். ஆனால் ஒருநாள் என்றால் இதே வீச்சாளர்கள் தடுத்தாடுவார்கள். பதற்றமாக வீசுவார்கள். இந்தியாவின் தென்னாப்பிரிக்க பயணங்களின் போது ஒருநாள் போட்டிகளில் இந்தியா பெரிய இலக்குகளை தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அடைந்து வென்றிருக்கின்றன. டேல் ஸ்டெயின், மோர்க்கல் போன்றோ ஒருநாளில் அவ்வளவு சாமர்த்தியமான வீச்சாளர்கள் அல்ல. நேற்றைய ஆட்டத்தில் கூட பாகிஸ்தான் என்றால் நியுசிலாந்து இவ்வளவு எளிதாக 298ஐ அடைந்திருக்காது. ஆஸ்திரேலியா கூட வென்றிருக்கும். காரணம் இரு அணிகளும் தாக்கி ஆடும். விக்கெட்டுகளை இலக்காக்கி வீசும். ஆனால் நேற்றைய போட்டியில் முதல் இரு ஓவர்களில் மெக்கல்லம் அடிக்க ஆரம்பித்ததும் தென்னாப்பிரிக்க பின்னங்காலுக்கு சென்று விட்டது. அப்போது சுருட்டிய வாலை இறுதி வரை அவர்கள் நிமிர்த்தவில்லை. ஸ்டெயின், மோர்க்கல், தஹீர் வீசும் போது ஸ்லிப்பில் ஆட்களை நிறுத்தவில்லை என்பதை கவனித்திருக்கலாம். மெக்கல்லம், வில்லியம்சன், கப்தில், டெய்லர் ஆகிய நால்வரின் விக்கெட்டுகள் கூட அதிர்ஷ்டவசமாய் தென்னாப்பிரிக்காவுக்கு கிடைத்தது தான். கொஞ்சம் சாமர்த்தியமாக ஆடி இருந்தால் நேற்று நியுசிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருக்கலாம்.
தென்னாப்பிரிக்கா இதுவரை உலகக்கோப்பையை வெல்லாததற்கு இந்த எதிர்மறையான, பயந்தாங்கொள்ளி அணுகுமுறை தான் முக்கிய காரணம். உலகக்கோப்பை வரலாற்றில் ஆக்ரோசமாய், இயல்புணர்ச்சியுடன ஆடாத எந்த அணியும் வென்றதில்லை. மே.இ. தீவுகள், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, இந்தியா என ஐந்துமே ஆக்ரோசத்தை ஊக்குவிக்கும், நேர்மறையான, தனிப்பட்ட மேதைமையை கொண்டாடும் அணிகள். ஆனால் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகியவை கராறான திட்டம், ஒழுங்குபடி ஆடும் எதிர்மறையான அணிகள். அவற்றுக்கு உலகக்கோப்பை போன்ற பெருந்தொடர்களை வெல்வதற்கு உள்ள முக்கிய தடை இந்த அணுகுமுறையும் கலாச்சாரமும் தான்.
தென்னாப்பிரிக்காவிடம் உள்ள பந்து வீச்சு திறமைக்கு அவர்கள் சுலபமாய் நேற்று வென்றிருக்க வேண்டும். அதை செய்யாமல் பொம்மை தொலைந்த பாப்பா போல் மீடியா முன் தேம்புவது ஏமாற்றுத்தனம்.
இம்முறை நிச்சயம் தென்னாப்பிரிக்கா சாதாரணமாய் choke ஆகவில்லை. பதற்றத்தினால் மட்டும் விழவில்லை. இது இதுவரையிலான தென்னாப்பிரிக்க அணிகளிலேயே மிகச்சிறந்த அணி. டிவில்லியர்ஸ், ஆம்லா, டூமினி, ஸ்டெயின் போன்ற மேதைகள் இதுவரை தென்னாப்பிரிக்காவில் தோன்றியதில்லை (மற்றொருவர் பீட்டர்ஸன் இங்கிலாந்துக்கு சென்று விட்டார்). ஆனால் திறமையை சுதந்திரமாய் வெளிப்பட அனுமதிக்காத ஒரு அழுத்தமான, கட்டுப்பாடான, மூச்சுமுட்டுகிற கிரிக்கெட் சூழல் தென்னாப்பிரிக்காவின் பிரதான தடையாக உள்ளது. இதைப் பற்றி ஹெர்ஷல் கிப்ஸ் தனது சுயசரிதையில் விமர்சிக்கிறார். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் ஒரு சாமியார் மடம் போல் இயங்கும் வரையில் அவர்களால் உலகை ஆள முடியாது.
தென்னாப்பிரிக்கா விலகினதுடன் உலகக்கோப்பையின் தரம் பல மடங்கு கீழிறங்குகிறது. ஸ்டெயின், ஆம்லா, டிவில்லியர்ஸ் போன்றோர் தம் ஆட்டத்தினால் கிரிக்கெட்டை பல மடங்கு மேலே கொண்டு போகிறவர்கள். மற்றொரு உலகத்தில் கிரிக்கெட்டை கொண்டு சென்று ஆடுகிறவர்கள். முன்பு சச்சின் ஆடும் போது தான் கிரிக்கெட் ஒரு அற்புத செயலாக நமக்குத் தோன்றும். தென்னாப்பிரிக்கா நீங்கினதும் உலகக்கோப்பையில் கிரிக்கெட் மீண்டும் மானுடர்கள் ஆடும் சாதாரண ஆட்டம் ஆகி விட்டது.

அதிமானுடர்கள் அழக் கூடாது. அழுகிற போது மானுடர்கள் நாம் அவர்களை நோக்கி இரங்கக் கூடாது. அதைப் போன்ற கேலிக் கூத்து வேறில்லை.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...