Skip to main content

மதவாத அரசை எதிர்க்க ஒரு இடதுசாரி அமைப்பை தாக்கலாமா?



இதுவரை தமிழில் சாகித்ய அகாதெமி விருது பெற்றவர்களின் பட்டியலை எடுத்துப் பார்த்தேன். ராஜம் கிருஷ்ணன், இந்திரா பார்த்தசாரதி, வல்லிக்கண்ணன், ரகுநாதன், சு.சமுத்திரம், பொன்னீலன், அப்துல் ரகுமான், தி.க.சி, சிற்பி, மேலாண்மை பொன்னுசாமி, புவியரசு, சு.வெங்கடேசன், டி.செல்வராஜ் என கணிசமானோர் இடதுசாரிகள் அல்லது இடதுசாரி சாய்வு கொண்டவர்கள். இவர்கள் போக எந்த நேரடி அரசியல் சார்பும் அற்ற அசோகமித்திரன், .க.நா.சு போன்ற இலக்கியவாதிகள்/ கலாச்சார நவீனத்துவர்கள் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் கல்கி, ந.பா போன்ற பிரபலங்களும், பின்னர் பாரதிதாசன் போன்ற திராவிட ”போர்வாளும்”, அதன் பிறகு மு.மேத்தா போன்ற சினிமாக்காரர்களும் விருதை பெற்றாலும் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாய் அகாடெமியில் இடதுசாரிகளின் பிடி வலுத்துள்ளது.

 நேரடியான வலதுசாரி பார்வை கொண்டவர்களில் ஜெயகாந்தன் மட்டும் தான் விருதை பெற்றிருக்கிறார். அவரும் ஒரு மென் இடதுசாரி தான். பொதுவாய் சமூக நோக்குடனும் எழுதுகிறவர்களும் விளிம்புநிலை வாழ்க்கையை பதிவு செய்கிறவர்களும் அதிகம் தேர்வாகிறார்கள்.
 ஜெயமோகன் போன்றவர்கள் அகாதெமிக்கு எதிராக வைக்கும் குற்றச்சாட்டே அது இடதுசாரிகளின் முகாமாகி விட்டது என்பது தான். ஜோ டி குரூசுக்கு விருது வழங்கப்பட்ட போது நடந்ததாய் ஒன்றை கேள்விப்பட்டேன். குரூஸ் பா.ஜ.கவுடன் நெருங்கி விட்டதாய் ஒரு சேதி பரவுகிறது. அப்போது அவர் பெயர் விருதுப்பட்டியலில் முதலில் இருக்கிறது. ஆனால் ஒரு வலதுசாரிக்கு எப்படி விருதை கொடுப்பது என தேர்வாளர்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது. தில்லியில் இருந்து அம்பை குரூஸை அழைத்து இது குறித்து வினவ அவர் தனக்கும் எந்த வலதுசாரி சார்பும் இல்லை என்கிறது. பிறகு தான் அவருக்கு விருது வழங்கப்படுகிறது. அதாவது வலதுசாரி சார்பு தகுதியின்மையாகவும் இடதுசாரி சார்பு தகுதியாகவும் உள்ளது.
சாகித்ய அகாதெமியை இரண்டாய் பார்க்கலாம். அதன் தலைவர், செயலாளர் போன்றோர் மற்றும் ஊழியர்கள் ஒரு பக்கம் அரசியலற்றவர்களாய், எந்த கட்சிக்கும் சார்பு அற்றவர்களாய் தங்களை காட்டிக் கொள்ள நினைப்பவர்கள். தமிழகத்தில் நடந்த ஒரு சாகித்ய அகாதெமி கூட்டத்தில் என்.டி ராஜ்குமார் கவிஞர் கண்ணதாசன் ரசிகர்கள் சிலரால் அவமானப்படுத்தப்பட்டு அது சர்ச்சையானது. இதைப் படித்த ஒரு வடக்கிந்திய யுவபுரஸ்கார் விருதாளர் தான் விருது பெற்ற கூட்டத்தின் மேடையில் ஏறி அகாதெமியை கடுமையாய் கண்டித்து பேசினார். அப்போது நான் அங்கே இருந்தேன். என்.டி அவமானப்படுத்தப்பட்ட போது ஏன் அகாதெமி தலையிட வில்லை என அவர் கேட்டார். அதற்கு அகாதெமியின் செயலாளர் மேடையில் பதிலளித்தார். “ஒரு கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் பேசுவதற்கு நாங்கள் அகாடெமியினர் பொறுப்பாக முடியாது. ஆக அதனால் நாங்கள் விளக்கமளிக்கவோ மன்னிப்பு கோரவோ முடியாது”. இது ஒரு சிக்கலான நிலைப்பாடு. உயிர்மை கூட்டத்தில் ஜெயமோகனின் நூலை சாரு கிழித்து வீசிய போது இதே போன்ற ஒரு குழப்பம் ஏற்பட்டது. இதற்கு யார் பொறுப்பு? சாருவா உயிர்மையா? ஜெயமோகன் உயிர்மையை பொறுப்பாக்கி கடுமையாய் தாக்கினார். ஆனால் கூட்டம் நடத்தும் நெளியாளர்கள் ஓரளவுக்கு மேல் எதையும் கட்டுப்படுத்த முடியாது. பேச்சாளர்களின் செயல்பாட்டுக்கு அவர்கள் பொறுப்பாக முடியாது. கூடியபட்சம் இறுதியில் தமக்கும் இதற்கும் பொறுப்பில்லை என மைக்கில் கூறலாம். ஆனால் அப்போது “நீங்கள் ஏன் தடுக்கவில்லை?” எனக் கேட்பார்கள். இந்த கேள்விகளுக்கு முடிவே இல்லை.
இந்த அதிகாரிகளின் நிலைப்பாடு தான் சமீபத்தைய கல்புர்கி கொலையின் போதும் விவாதத்தை தோற்றுவித்தது. அகாதெமி கொலையை நேரடியாய் கண்டிக்க மறுத்தது. பெங்களூரில் இரங்கல் கூட்டம் மட்டும் நடத்தியது. ஆனால் இதைக் கொண்டு அகாதெமி மோடியை ஆதரிக்கிறது என கூற முடியாது. நாளை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும் அகாதெமி எந்த சர்ச்சையிலும் தலையிடாது.
இதுவரையிலும் அகாதெமி ஒரு தன்னாட்சி அமைப்பு தான். ஆனால் நிதிக்கு அது மத்திய அமைச்சகத்தை நம்பி உள்ளது. மத்திய அமைச்சகம் நேரடியாய் விருது தேர்வில் தலையிடுவதில்லை. ஒருவிதமான தொட்டும் தொடாத உறவு அரசுக்கும் அகாதெமிக்கும் இருந்து வருகிறது. ஒருவேளை அகாதெமி நேரடியாய் அரசை கேள்வி கேட்டால் அரசு சுலபமாய் அகாதெமியை கைவசப்படுத்தும். மேலும் தொடர்ந்து பல அரசுகளின் கீழ் இயங்க தேவையிருக்கும் என்பதால் ஒரு குறிப்பிட்ட அரசை விமர்சித்தால் பிறகு அகாதெமிக்கும் அதன் விருதுகளுக்கும் அரசியல் முத்திரை குத்தப்படும். இதுவும் சிக்கலானது.
ஆனால் இந்த அரசியலற்ற அதிகாரிகள் அகாதெமியின் உண்மையான முகம் அல்ல. அகாதெமி என்பது அதன் விருதளிக்கும் செயலால் தான் அடையாளம் கொள்கிறது. விருதை தேர்வு செய்யும் அதிகாரத்தை, குறிப்பாய் தமிழகத்தை பொறுத்தமட்டில், இடதுசாரிகளே வைத்துள்ளார்கள். அப்படி இருக்க நாம் அகாதெமியை ஒரு மறைமுக இடதுசாரி அமைப்பு என்றே கூறலாம்.
இப்போது மத்திய அரசின் மதவாதத்தையும் சகிப்பின்மை அரசியலையும் கண்டித்து எழுத்தாளர்கள் விருதுகளை திருப்பி அளித்து வருகிறார்கள். எனக்கு உள்ள கேள்வி இது தான்: “ஒரு வலதுசாரி அரசை கண்டிப்பதற்கு ஏன் ஒரு இடதுசாரி அமைப்பை எதிர்க்கிறீர்கள்?”

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...