Skip to main content

தூற்றுவதன் உளவியல்

திமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்த நிலையில் பேஸ்புக்கில் சிலர் மனுஷ்யபுத்திரனை பகடி செய்து எழுதியிருப்பதை படித்தேன். வா.மணிகண்டன் ஒரு தனி ஸ்டேட்டஸே போட்டிருந்தார். “இனிமேல் கூவுவதை குறையுங்க. அரசியல் அதற்கும் மேலே…” என எழுதியிருந்தார். இம்முறை மனுஷுக்கு இடம் கிடைக்காது என்பது தெரிந்தது தான். அதனால் எனக்கு இந்த பட்டியல் எல்லாம் வியப்பாக இல்லை. ஆனால் இந்த சந்தர்பத்துக்கு என்றே காத்திருந்தது போல் அவர் மேல் ஏன் விழுந்து குதற வேண்டும் எனத் தான் புரியவில்லை.
 அவருக்கு அரசியல் பின்புலமோ பணபலமோ கட்சிப்பதவியோ இல்லை. தனிமனிதனாய் மிக மிக சமீபமாய் கட்சியில் நுழைந்த ஒருவர் இன்று தேர்தலில் இடம் பெறக் கூடும் என எதிர்பார்க்கும் அளவுக்கு வளர்ந்திருப்பதே ஒரு சாதனை தானே. நேற்று வரை அவர் எப்படி இருந்தார் என எனக்குத் தெரியும். இன்று அவர் குரலை வெகுஜன மீடியா கவனிக்கிறது. செய்திகளின் திசையை திருப்புகிறவராக இருக்கிறார். எதிர்க்கட்சிக்காரர்களுக்கு அவர் மீது அபிமானம் உள்ளது. ஒரு அதிமுக நண்பரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவர் மனுஷ்யபுத்திரனை வெகுவாக சிலாகித்தார். “அவருக்கு அரசியல் நெளிவுசுளிவுகள் கைவந்து விட்டன. குரல், உடல்மொழி எல்லாம் அபாரம்” என்றார். சொன்னவர் இருபது வருடங்கள் அரசியலில் பழுத்தவர். முன்பு முக்கிய பொறுப்பு வகித்தவர். மனுஷ் மிக சமீபமாய் அரசியலுக்கு வந்தவர். இந்த குறைந்த காலத்தில் அவர் கட்சியின் குரலாக மாறி இருக்கிறார். சல்மா மற்றும் பல வருடங்களுக்கு முன்பே கட்சியில் இருக்கிற இன்னும் பிறரை தாண்டி சென்றிருக்கிறார். இதெல்லாம் எத்தனை பேருக்கு சாத்தியம்?
நாம் பேசுவதை டீக்கடையில் நாலு பேர் கூட மதிப்பார்களா? பேஸ்புக் தாண்டி நமக்கு என்ன இடம் இருக்கிறது? இன்று இன்னொரு போக்கு உருவாகி வருகிறது. பொதுமக்கள் கூட தமக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாய் காட்டிக் கொள்ள முயல்கிறார்கள். பேச்சில் போகிற போக்கில் எனக்கு கட்சியில் இவரைத் தெரியும், அவரைத் தெரியும் என்கிறார்கள். நாம் ஒவ்வொருவரும் அரசியல் அதிகாரத்துக்காக உள்ளூர ஏங்குகிறோம். இப்போது மனுஷ்யபுத்திரனை நோக்கி கல் எறிகிறவர்களே அவர் இடத்தில் தாம் ஏன் இல்லை எனத் தான் மருகுகிறார்கள்.
 இதற்குப் பதிலாய் நாம் ஏன் அவரைப் பார்த்து கற்றுக் கொள்ளக் கூடாது? நான் அன்று மனுஷ் ஒரு வட்டச்செயலாளருடன் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். எப்படி கட்சியின் இருவேறு நிலைகளுக்கு ஏற்ப தான் இரு தர்க்கங்களை வைத்துள்ளதாய் கூறினார். முந்தின தேர்தல் முடிவுகளுக்கு பின் முதலில் தான் டிவியில் தோன்றிய போது எப்படி தேர்தல் முடிவை வேறு கோணத்தில் காட்டி விவாதத்தை மடைமாற்றினார் எனக் கூறினார். வட்டச்செயலாளர் திகைத்து விட்டார். பிளேட்டோவை படித்தவர்களுக்குத் தெரியும். Dialogues முழுக்க அவர் எப்படி ஒரு கருத்தை பல கோணங்களில் அணுகி நியாயப்படுத்தவும் முறியடிக்கவும் செய்வது என தன் மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்தபடியே இருப்பார்.
 கருத்துக்களை கட்டமைப்பதற்கும் ஒரு கட்சி அதிகார அரசியலை அடைவதற்கும் ஒரு தொடர்புள்ளது. ரவிக்குமார் இல்லாமல் வி.சி.க இந்த இடத்துக்கு வந்திருக்க முடியாது. பொது அறிவுஜீவிகள் ஒரு கட்சிக்கு முக்கிய பலம். தி.மு.க இதை உணர்ந்தே மனுஷ்யபுத்திரனுக்கு முக்கிய இடத்தை கொடுக்கிறது. அவர் பிறந்த நாளுக்கு ஸ்டாலினே வீட்டுக்கு வந்து வாழ்த்திப் போகிறார்.
 ஆனால் தி.மு.க வி.சி.க போல் ஒரு சிறிய் கட்சி அல்ல. தி.மு.கவில் மூன்று தலைமுறையினர் பின்னால் கியூவில் நிற்க மூத்து நரைத்தவர்கள் நாற்காலியை கெட்டியாக பிடித்தபடி இருப்பார்கள். ரவிக்குமாரால் தி.மு.கவுக்குள் இப்போது போல வளர்ந்திருக்க முடியாது.
அரசியல் அதிகாரம், தேர்தலில் சீட் வாங்குவது, வெல்வது எல்லாம் பேச்சுத்திறன் மட்டும் அல்ல தான். நான் சமீபமாய் ஒரு அரசியல் குடும்பத்தை சேர்ந்த தோழியை சந்தித்தேன். அவர் கோடீஸ்வரர். தொடர்ந்து கட்சியில் முக்கிய பொறுப்பை வகித்தவர்களில் மூன்றாவது தலைமுறை. அவரிடம் “இந்த முறை உங்களுக்கு சீட் கொடுப்பாங்களா?” எனக் கேட்டேன். அவர் சொன்னார் “பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும். அதுக்கே ஏகப்பட்ட செலவு ஆகும். தேர்தலில் நிற்பதெல்லாம் சாத்தியமே இல்லை”. அவருக்கே என்ன நிலை பாருங்கள்.
ஆனால் அரசியலில் ஒருவர் எப்போது பெரும் உயரத்துக்கு செல்வார் என கணிக்கவே முடியாது. இப்போது தூற்றுகிறவர்கள் எல்லாம் அப்போது என்ன பண்ணுவார்கள் என யோசிக்கிறேன். சத்தமே இல்லாமல் ஒதுங்கிக் கொள்வார்கள். அது கூடத் தேவையில்லை. திமுக ஆட்சிக்கு வந்தாலே இவர்கள் அவரிடம் சிரித்துக் கொண்டே வணக்கம் போடுவார்கள். கடந்த முறை திமுக ஆட்சியில் இருந்த போது கட்சியின் அதிகார உள்வட்டத்தில் உள்ள இலக்கிய பிரமுகர்களிடத்து நம் இலக்கியவாதிகள் எப்படி எல்லாம் வளைந்தார்கள் எனப் பார்த்தோமே. ஏனென்றால் இவர்களாக வேண்டும் என்று தான் அவர்களே ஆசைப் படுகிறார்கள்.


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...