முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூற்றுவதன் உளவியல்

திமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்த நிலையில் பேஸ்புக்கில் சிலர் மனுஷ்யபுத்திரனை பகடி செய்து எழுதியிருப்பதை படித்தேன். வா.மணிகண்டன் ஒரு தனி ஸ்டேட்டஸே போட்டிருந்தார். “இனிமேல் கூவுவதை குறையுங்க. அரசியல் அதற்கும் மேலே…” என எழுதியிருந்தார். இம்முறை மனுஷுக்கு இடம் கிடைக்காது என்பது தெரிந்தது தான். அதனால் எனக்கு இந்த பட்டியல் எல்லாம் வியப்பாக இல்லை. ஆனால் இந்த சந்தர்பத்துக்கு என்றே காத்திருந்தது போல் அவர் மேல் ஏன் விழுந்து குதற வேண்டும் எனத் தான் புரியவில்லை.
 அவருக்கு அரசியல் பின்புலமோ பணபலமோ கட்சிப்பதவியோ இல்லை. தனிமனிதனாய் மிக மிக சமீபமாய் கட்சியில் நுழைந்த ஒருவர் இன்று தேர்தலில் இடம் பெறக் கூடும் என எதிர்பார்க்கும் அளவுக்கு வளர்ந்திருப்பதே ஒரு சாதனை தானே. நேற்று வரை அவர் எப்படி இருந்தார் என எனக்குத் தெரியும். இன்று அவர் குரலை வெகுஜன மீடியா கவனிக்கிறது. செய்திகளின் திசையை திருப்புகிறவராக இருக்கிறார். எதிர்க்கட்சிக்காரர்களுக்கு அவர் மீது அபிமானம் உள்ளது. ஒரு அதிமுக நண்பரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவர் மனுஷ்யபுத்திரனை வெகுவாக சிலாகித்தார். “அவருக்கு அரசியல் நெளிவுசுளிவுகள் கைவந்து விட்டன. குரல், உடல்மொழி எல்லாம் அபாரம்” என்றார். சொன்னவர் இருபது வருடங்கள் அரசியலில் பழுத்தவர். முன்பு முக்கிய பொறுப்பு வகித்தவர். மனுஷ் மிக சமீபமாய் அரசியலுக்கு வந்தவர். இந்த குறைந்த காலத்தில் அவர் கட்சியின் குரலாக மாறி இருக்கிறார். சல்மா மற்றும் பல வருடங்களுக்கு முன்பே கட்சியில் இருக்கிற இன்னும் பிறரை தாண்டி சென்றிருக்கிறார். இதெல்லாம் எத்தனை பேருக்கு சாத்தியம்?
நாம் பேசுவதை டீக்கடையில் நாலு பேர் கூட மதிப்பார்களா? பேஸ்புக் தாண்டி நமக்கு என்ன இடம் இருக்கிறது? இன்று இன்னொரு போக்கு உருவாகி வருகிறது. பொதுமக்கள் கூட தமக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாய் காட்டிக் கொள்ள முயல்கிறார்கள். பேச்சில் போகிற போக்கில் எனக்கு கட்சியில் இவரைத் தெரியும், அவரைத் தெரியும் என்கிறார்கள். நாம் ஒவ்வொருவரும் அரசியல் அதிகாரத்துக்காக உள்ளூர ஏங்குகிறோம். இப்போது மனுஷ்யபுத்திரனை நோக்கி கல் எறிகிறவர்களே அவர் இடத்தில் தாம் ஏன் இல்லை எனத் தான் மருகுகிறார்கள்.
 இதற்குப் பதிலாய் நாம் ஏன் அவரைப் பார்த்து கற்றுக் கொள்ளக் கூடாது? நான் அன்று மனுஷ் ஒரு வட்டச்செயலாளருடன் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். எப்படி கட்சியின் இருவேறு நிலைகளுக்கு ஏற்ப தான் இரு தர்க்கங்களை வைத்துள்ளதாய் கூறினார். முந்தின தேர்தல் முடிவுகளுக்கு பின் முதலில் தான் டிவியில் தோன்றிய போது எப்படி தேர்தல் முடிவை வேறு கோணத்தில் காட்டி விவாதத்தை மடைமாற்றினார் எனக் கூறினார். வட்டச்செயலாளர் திகைத்து விட்டார். பிளேட்டோவை படித்தவர்களுக்குத் தெரியும். Dialogues முழுக்க அவர் எப்படி ஒரு கருத்தை பல கோணங்களில் அணுகி நியாயப்படுத்தவும் முறியடிக்கவும் செய்வது என தன் மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்தபடியே இருப்பார்.
 கருத்துக்களை கட்டமைப்பதற்கும் ஒரு கட்சி அதிகார அரசியலை அடைவதற்கும் ஒரு தொடர்புள்ளது. ரவிக்குமார் இல்லாமல் வி.சி.க இந்த இடத்துக்கு வந்திருக்க முடியாது. பொது அறிவுஜீவிகள் ஒரு கட்சிக்கு முக்கிய பலம். தி.மு.க இதை உணர்ந்தே மனுஷ்யபுத்திரனுக்கு முக்கிய இடத்தை கொடுக்கிறது. அவர் பிறந்த நாளுக்கு ஸ்டாலினே வீட்டுக்கு வந்து வாழ்த்திப் போகிறார்.
 ஆனால் தி.மு.க வி.சி.க போல் ஒரு சிறிய் கட்சி அல்ல. தி.மு.கவில் மூன்று தலைமுறையினர் பின்னால் கியூவில் நிற்க மூத்து நரைத்தவர்கள் நாற்காலியை கெட்டியாக பிடித்தபடி இருப்பார்கள். ரவிக்குமாரால் தி.மு.கவுக்குள் இப்போது போல வளர்ந்திருக்க முடியாது.
அரசியல் அதிகாரம், தேர்தலில் சீட் வாங்குவது, வெல்வது எல்லாம் பேச்சுத்திறன் மட்டும் அல்ல தான். நான் சமீபமாய் ஒரு அரசியல் குடும்பத்தை சேர்ந்த தோழியை சந்தித்தேன். அவர் கோடீஸ்வரர். தொடர்ந்து கட்சியில் முக்கிய பொறுப்பை வகித்தவர்களில் மூன்றாவது தலைமுறை. அவரிடம் “இந்த முறை உங்களுக்கு சீட் கொடுப்பாங்களா?” எனக் கேட்டேன். அவர் சொன்னார் “பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும். அதுக்கே ஏகப்பட்ட செலவு ஆகும். தேர்தலில் நிற்பதெல்லாம் சாத்தியமே இல்லை”. அவருக்கே என்ன நிலை பாருங்கள்.
ஆனால் அரசியலில் ஒருவர் எப்போது பெரும் உயரத்துக்கு செல்வார் என கணிக்கவே முடியாது. இப்போது தூற்றுகிறவர்கள் எல்லாம் அப்போது என்ன பண்ணுவார்கள் என யோசிக்கிறேன். சத்தமே இல்லாமல் ஒதுங்கிக் கொள்வார்கள். அது கூடத் தேவையில்லை. திமுக ஆட்சிக்கு வந்தாலே இவர்கள் அவரிடம் சிரித்துக் கொண்டே வணக்கம் போடுவார்கள். கடந்த முறை திமுக ஆட்சியில் இருந்த போது கட்சியின் அதிகார உள்வட்டத்தில் உள்ள இலக்கிய பிரமுகர்களிடத்து நம் இலக்கியவாதிகள் எப்படி எல்லாம் வளைந்தார்கள் எனப் பார்த்தோமே. ஏனென்றால் இவர்களாக வேண்டும் என்று தான் அவர்களே ஆசைப் படுகிறார்கள்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...