Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

தூற்றுவதன் உளவியல்

திமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்த நிலையில் பேஸ்புக்கில் சிலர் மனுஷ்யபுத்திரனை பகடி செய்து எழுதியிருப்பதை படித்தேன். வா.மணிகண்டன் ஒரு தனி ஸ்டேட்டஸே போட்டிருந்தார். “இனிமேல் கூவுவதை குறையுங்க. அரசியல் அதற்கும் மேலே…” என எழுதியிருந்தார். இம்முறை மனுஷுக்கு இடம் கிடைக்காது என்பது தெரிந்தது தான். அதனால் எனக்கு இந்த பட்டியல் எல்லாம் வியப்பாக இல்லை. ஆனால் இந்த சந்தர்பத்துக்கு என்றே காத்திருந்தது போல் அவர் மேல் ஏன் விழுந்து குதற வேண்டும் எனத் தான் புரியவில்லை.
 அவருக்கு அரசியல் பின்புலமோ பணபலமோ கட்சிப்பதவியோ இல்லை. தனிமனிதனாய் மிக மிக சமீபமாய் கட்சியில் நுழைந்த ஒருவர் இன்று தேர்தலில் இடம் பெறக் கூடும் என எதிர்பார்க்கும் அளவுக்கு வளர்ந்திருப்பதே ஒரு சாதனை தானே. நேற்று வரை அவர் எப்படி இருந்தார் என எனக்குத் தெரியும். இன்று அவர் குரலை வெகுஜன மீடியா கவனிக்கிறது. செய்திகளின் திசையை திருப்புகிறவராக இருக்கிறார். எதிர்க்கட்சிக்காரர்களுக்கு அவர் மீது அபிமானம் உள்ளது. ஒரு அதிமுக நண்பரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவர் மனுஷ்யபுத்திரனை வெகுவாக சிலாகித்தார். “அவருக்கு அரசியல் நெளிவுசுளிவுகள் கைவந்து விட்டன. குரல், உடல்மொழி எல்லாம் அபாரம்” என்றார். சொன்னவர் இருபது வருடங்கள் அரசியலில் பழுத்தவர். முன்பு முக்கிய பொறுப்பு வகித்தவர். மனுஷ் மிக சமீபமாய் அரசியலுக்கு வந்தவர். இந்த குறைந்த காலத்தில் அவர் கட்சியின் குரலாக மாறி இருக்கிறார். சல்மா மற்றும் பல வருடங்களுக்கு முன்பே கட்சியில் இருக்கிற இன்னும் பிறரை தாண்டி சென்றிருக்கிறார். இதெல்லாம் எத்தனை பேருக்கு சாத்தியம்?
நாம் பேசுவதை டீக்கடையில் நாலு பேர் கூட மதிப்பார்களா? பேஸ்புக் தாண்டி நமக்கு என்ன இடம் இருக்கிறது? இன்று இன்னொரு போக்கு உருவாகி வருகிறது. பொதுமக்கள் கூட தமக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாய் காட்டிக் கொள்ள முயல்கிறார்கள். பேச்சில் போகிற போக்கில் எனக்கு கட்சியில் இவரைத் தெரியும், அவரைத் தெரியும் என்கிறார்கள். நாம் ஒவ்வொருவரும் அரசியல் அதிகாரத்துக்காக உள்ளூர ஏங்குகிறோம். இப்போது மனுஷ்யபுத்திரனை நோக்கி கல் எறிகிறவர்களே அவர் இடத்தில் தாம் ஏன் இல்லை எனத் தான் மருகுகிறார்கள்.
 இதற்குப் பதிலாய் நாம் ஏன் அவரைப் பார்த்து கற்றுக் கொள்ளக் கூடாது? நான் அன்று மனுஷ் ஒரு வட்டச்செயலாளருடன் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். எப்படி கட்சியின் இருவேறு நிலைகளுக்கு ஏற்ப தான் இரு தர்க்கங்களை வைத்துள்ளதாய் கூறினார். முந்தின தேர்தல் முடிவுகளுக்கு பின் முதலில் தான் டிவியில் தோன்றிய போது எப்படி தேர்தல் முடிவை வேறு கோணத்தில் காட்டி விவாதத்தை மடைமாற்றினார் எனக் கூறினார். வட்டச்செயலாளர் திகைத்து விட்டார். பிளேட்டோவை படித்தவர்களுக்குத் தெரியும். Dialogues முழுக்க அவர் எப்படி ஒரு கருத்தை பல கோணங்களில் அணுகி நியாயப்படுத்தவும் முறியடிக்கவும் செய்வது என தன் மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்தபடியே இருப்பார்.
 கருத்துக்களை கட்டமைப்பதற்கும் ஒரு கட்சி அதிகார அரசியலை அடைவதற்கும் ஒரு தொடர்புள்ளது. ரவிக்குமார் இல்லாமல் வி.சி.க இந்த இடத்துக்கு வந்திருக்க முடியாது. பொது அறிவுஜீவிகள் ஒரு கட்சிக்கு முக்கிய பலம். தி.மு.க இதை உணர்ந்தே மனுஷ்யபுத்திரனுக்கு முக்கிய இடத்தை கொடுக்கிறது. அவர் பிறந்த நாளுக்கு ஸ்டாலினே வீட்டுக்கு வந்து வாழ்த்திப் போகிறார்.
 ஆனால் தி.மு.க வி.சி.க போல் ஒரு சிறிய் கட்சி அல்ல. தி.மு.கவில் மூன்று தலைமுறையினர் பின்னால் கியூவில் நிற்க மூத்து நரைத்தவர்கள் நாற்காலியை கெட்டியாக பிடித்தபடி இருப்பார்கள். ரவிக்குமாரால் தி.மு.கவுக்குள் இப்போது போல வளர்ந்திருக்க முடியாது.
அரசியல் அதிகாரம், தேர்தலில் சீட் வாங்குவது, வெல்வது எல்லாம் பேச்சுத்திறன் மட்டும் அல்ல தான். நான் சமீபமாய் ஒரு அரசியல் குடும்பத்தை சேர்ந்த தோழியை சந்தித்தேன். அவர் கோடீஸ்வரர். தொடர்ந்து கட்சியில் முக்கிய பொறுப்பை வகித்தவர்களில் மூன்றாவது தலைமுறை. அவரிடம் “இந்த முறை உங்களுக்கு சீட் கொடுப்பாங்களா?” எனக் கேட்டேன். அவர் சொன்னார் “பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும். அதுக்கே ஏகப்பட்ட செலவு ஆகும். தேர்தலில் நிற்பதெல்லாம் சாத்தியமே இல்லை”. அவருக்கே என்ன நிலை பாருங்கள்.
ஆனால் அரசியலில் ஒருவர் எப்போது பெரும் உயரத்துக்கு செல்வார் என கணிக்கவே முடியாது. இப்போது தூற்றுகிறவர்கள் எல்லாம் அப்போது என்ன பண்ணுவார்கள் என யோசிக்கிறேன். சத்தமே இல்லாமல் ஒதுங்கிக் கொள்வார்கள். அது கூடத் தேவையில்லை. திமுக ஆட்சிக்கு வந்தாலே இவர்கள் அவரிடம் சிரித்துக் கொண்டே வணக்கம் போடுவார்கள். கடந்த முறை திமுக ஆட்சியில் இருந்த போது கட்சியின் அதிகார உள்வட்டத்தில் உள்ள இலக்கிய பிரமுகர்களிடத்து நம் இலக்கியவாதிகள் எப்படி எல்லாம் வளைந்தார்கள் எனப் பார்த்தோமே. ஏனென்றால் இவர்களாக வேண்டும் என்று தான் அவர்களே ஆசைப் படுகிறார்கள்.


Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...