Skip to main content

அன்புள்ள ஜெயமோகனுக்கு

Image result for ஜெயமோகன்

நான் சமீபத்தில் ஜெயமோகனுக்கு எழுதிய மின்னஞ்சல்களின் தொடர்ச்சியான ஒரு கடிதம் இது. முதல் மின்னஞ்சலுக்கு அவர் எனக்கு அளித்த கனிவான பதிலை இதில் நான் இணைக்கவில்லை.
 நான் ஜெயமோகனிடம் முரண்பட்டிருக்கிறேன். விமர்சித்திருக்கிறேன். நிறைய கசப்பை கக்கியிருக்கிறேன். கடந்த சில வருடங்களாய் இவையெல்லாம் அபத்தம் என எனக்கு தோன்றியவாறு இருந்தது. என்னைக் குறித்து நான் நடத்திய உள்விசாரணை தான் இக்கடிதம். ஜெயமோகன் குறித்த என் இதுவரையிலான பதிவுகளுக்கு மற்றொரு பக்கத்தை இக்கடிதம் அளிக்கும் என நம்புகிறேன்.


அன்புள்ள ஜெயமோகன்
ஈரமான விழிகளுடன் இதை எழுதுகிறேன். எனக்கு உங்கள் மீது இருக்கும் மிதமிஞ்சிய பிரியமும் possessivenessஉம் தான் பிரச்சனை. என் ஆளுமை உங்களை சார்ந்து இருந்தது. ஒரு கட்டத்தில் நீங்கள் என்னை பொருட்படுத்தவில்லை எனும் கற்பனை என்னை கட்டற்ற ஏமாற்றத்துக்கும் கசப்புக்கும் இட்டுச் சென்றது. உங்களை பழிசொல்லியும் விமர்சித்தும் மறுத்துமே நான் அதை கடக்க முயன்றேன். ஒரு சந்தர்பத்தில் விஷம் கக்கி கக்கி நானே ஓய்ந்து விட்டேன் என நினைக்கிறேன்.
 அது மட்டுமல்ல உங்கள் ஆளுமையின் கடும் வெளிச்சத்தின் அருகாமையில் கருகி விடுவேனோ என என் உள்மனம் அஞ்சியிருக்கலாம். உங்களை தொடர்ந்து வாசிக்கும் வாசகனின் மனதின் பகுதியாகவே நீங்கள் மாறி விடுவீர்கள். உங்களை மீறி அவனால் யோசிக்கவே முடியாது. எனக்குள் அந்த முரண் இருளோடு மோதும் சுடரைப் போல் துடித்துக் கொண்டே இருந்தது. என்னை உங்களிடம் இருந்து விலக்கிக் கொள்ள என்னை அறியாது நானே நடத்திய நாடகமோ இந்த தாக்குதல்கள் என நான் பலதடவை என்னிடம் கேட்டதுண்டு.
 உங்களிடம் முரண்பட்டு தான் நான் என் சுயமான பார்வையை அமைத்துக் கொள்ள முடியுமா? ஆனால் நான் இதை இன்னும் கண்ணியமாய் செய்திருக்க வேண்டும் அல்லவா!
போன வருடம் கவிஞர் கீதாஞ்சலி பிரியதர்ஷ்ரினியிடம் போனில் உரையாடும் போது அவர் உங்களைப் பற்றி குறிப்பிட்டார். ஒரு நிமிடம் கடுங்கோபத்தில் தொடர்பை துண்டிப்பீர்கள். ஆனால் மறுநிமிடம் குழந்தை போல் இணக்கமாகி விடுவீர்கள் என்றார். அவர் உங்களிடம் மிக குறைவாகவே உரையாடி இருக்கிறார். ஆனால் உங்களை துல்லியமாய் அவதானித்திருக்கிறார். நான் ஒப்பிடுகையில் உங்களிடம் அதிகமான நேரத்தை செலவிட்டிருக்கிறேன். உங்களைக் குறித்து சதா யோசித்து அலசி இருக்கிறேன். ஆனால் உங்கள் ஆதார இயல்பை தவறாகவே புரிந்து வைத்திருந்தேன் என எனக்கு அப்போது தோன்றியது.
உங்களை மட்டுமல்ல நான் பொதுவாக மனிதர்களை புரிந்து கொண்டிருந்த விதமே தவறானது தான்.
சமீபத்தில் கவிஞர் குமரகுருபரன் மறைந்த போது அவரது மூர்க்கமான அன்பு பற்றி தொடர்ந்து யோசித்துக் கொண்டிருந்தேன். உண்மையில் மனிதர்களை அப்படித் தான் அணுக வேண்டும் எனப் பட்டது. என் சிக்கல் நான் மனிதர்களை என் அறிவால் நேசிக்கிறேன் என்பது. நான் என்னை மெல்ல மெல்ல மாற்றிக் கொள்ள வேண்டும் என தோன்றியது.
என் உடல் நிலை எப்போதும் ஊசலாடிக் கொண்டு தான் இருக்கிறது. சில மாதங்கள் அமைதியாய் இருக்கும். திடீரென பாதாளத்தில் போய் விழுவேன். இரண்டு முறை மரணத்தை அருகில் பார்த்து விட்டேன். என்னைப் போன்றவர்களின் ஆயுள் சராசரியாகவே குறைவு தான். இன்னும் பத்திருபது வருடங்கள். இந்த குறைந்த காலத்தில் இன்னும் மகிழ்ச்சியாக திறந்த அன்புடன் வாழ ஆசைப்படுகிறேன்.
நீங்கள் குறிப்பிட்ட ஒழுங்கு ஒரு பழக்கமாய் எனக்குள் மாற சற்று காலம் ஆகலாம். ஆனால் நான் என்னை மாற்றிக் கொள்ள விரும்புகிறேன்.
எழுத்து குறித்து நீங்கள் சொன்னது உண்மையே. ஒருவேளை எழுத்து இல்லாமல் இருந்திருந்தால் நான் முழுக்க சீரழிந்திருப்பேன். எனக்குள் நொதிக்கும் தீமையை அது வடிகட்டி எனக்கே அருந்த தருகிறது. நான் எழுத வேண்டாம் என முடிவெடுத்த பின் நான் மிக அதிகமாய் எழுதிக் கொண்டிருக்கிறேன். என்னால் என்னை தடுக்கவே முடியவில்லை. சிலநேரம் வண்டி ஓட்டும் போதோ காரில் நண்பர்களுடன் பயணிக்கும் போதே எழுத வேண்டிய சொற்களில் என்னில் இருந்து பீறி வழிகின்றன. கோர்வையாய் வரிகள் மனதின் திரையில் ஓடிக் கொண்டே இருக்கின்றன. நான் கையாலாகாமல் அவற்றை விசித்திரமாய் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
என் மகனுக்கு 11 மாதங்கள் ஆகின்றன. ஊரில் இருந்திருந்தால் உங்கள் கைப்பற்றி அவனை அரிசியில் முதல் எழுத்து எழுத வைக்க வேண்டும் என ஆசைப்பட்டேன்.
இவ்வளவு வருடங்களும் நடைமுறையில் வாழ்க்கையை வீணடித்து விட்டேனோ என தோன்றுகிறது. நான் திடீரென போய் விட்டால் என் மகனுக்கு ஒன்றுமே இராது. வெறும் புத்தகங்கள். எங்கு பார்த்தாலும் புத்தகங்கள். எழுதப்பட்ட என் சொற்கள். அவனுக்கு ஏமாற்றமளிக்கும் ஒரு நிழலாக நான் எஞ்சி விடக் கூடாது. பொருள் சேர்க்க வேண்டும். நிலைப்பட வேண்டும். நான் மறையும் முன் அவனுக்கு ஒரு அடித்தளம் அமைத்து தர வேண்டும்.
இன்னும் தெளிவாய் திறந்த மனதுடன் மனிதர்களை அணுக வேண்டும். காரண காரியம் பார்க்காத அன்பை காட்ட வேண்டும். வேறுவிதமாய் வாழ்ந்து பார்க்க வேண்டும்.
உங்களுடைய நேரத்தை அதிகமாகவே எடுத்துக் கொண்டு விட்டேன். நன்றி.
அன்புடன்
ஆர்.அபிலாஷ்


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...