“கடலும் கிழவனும்” நாவல் பற்றி அருள் ஸ்காட் எழுதிய
இந்த பதிவை ரசித்தேன். அந்த நாவலில் மஞ்சள் நிறம் எப்படி ஒரு குறியீடாக செயல்படுகிறது
என அவர் சுட்டுவது எனக்கு புது புரிதலை அளித்தது. மஞ்சள் நோய்மையின், மரணத்தின் நிறம்.
எழுபது, எண்பதுகளின் தமிழ் கவிதையில் இந்நிறம் அடிக்கடி வரும். இந்நாவலில் கடலில்,
கீழவனின் உணவில் எங்கும் மஞ்சள் வியாபிக்கிறது. இன்னொரு விசயம் கடலை நெருங்கிப் பார்க்கையில்
அது பழுப்பு நிறமானது என்பது. ஆக இது இயல்பாகவும் கதையில் பொருந்துகிறது. ஒரு படைப்பை
திரும்ப படிக்கையில் அது குறித்து பேசுகையில் சட்டென ஒரு புதிய அவதானிப்பு கிடைப்பது
சிலாக்கியமானது. இந்நாவலையும் நண்பர்கள் கூடி வாசித்து உரையாடும் போது தான் அருளுக்கு
இந்த கருத்துக்களும் தூண்டுதலும் கிடைக்கிறது. இலக்கியம் தனியாய் வாசிக்க வேண்டியதல்ல.
சினிமா, நாடகம் போல் கூட்டமாய் அமர்ந்து ரசிக்க வேண்டிய ஒன்றும்
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share
Comments