“கடலும் கிழவனும்” நாவல் பற்றி அருள் ஸ்காட் எழுதிய
இந்த பதிவை ரசித்தேன். அந்த நாவலில் மஞ்சள் நிறம் எப்படி ஒரு குறியீடாக செயல்படுகிறது
என அவர் சுட்டுவது எனக்கு புது புரிதலை அளித்தது. மஞ்சள் நோய்மையின், மரணத்தின் நிறம்.
எழுபது, எண்பதுகளின் தமிழ் கவிதையில் இந்நிறம் அடிக்கடி வரும். இந்நாவலில் கடலில்,
கீழவனின் உணவில் எங்கும் மஞ்சள் வியாபிக்கிறது. இன்னொரு விசயம் கடலை நெருங்கிப் பார்க்கையில்
அது பழுப்பு நிறமானது என்பது. ஆக இது இயல்பாகவும் கதையில் பொருந்துகிறது. ஒரு படைப்பை
திரும்ப படிக்கையில் அது குறித்து பேசுகையில் சட்டென ஒரு புதிய அவதானிப்பு கிடைப்பது
சிலாக்கியமானது. இந்நாவலையும் நண்பர்கள் கூடி வாசித்து உரையாடும் போது தான் அருளுக்கு
இந்த கருத்துக்களும் தூண்டுதலும் கிடைக்கிறது. இலக்கியம் தனியாய் வாசிக்க வேண்டியதல்ல.
சினிமா, நாடகம் போல் கூட்டமாய் அமர்ந்து ரசிக்க வேண்டிய ஒன்றும்
( இது நவம்பர் 2025 இல் எழுதப்பட்ட கட்டுரை . டிசம்பர் 2025 உயிர்மையில் வெளியானது . ஆனால் இப்போதும் படிக்கத்தக்க ஒரு முக்கிய பிரச்சினைதான் இது என்பதால் பகிர்கிறேன் .) அண்மையில் கௌரி கிஷன் தன்னைக் குறித்து ஒரு யுடியூபர் உருவக்கேலிக் கேள்வியை எழுப்பியதாகச் சொல்லி அதை விமர்சித்த சம்பவத்தைப் பார்த்தேன் . தன் திறமையாலே தான் ஜொலிக்க விரும்புவதாகவும் , செறிவான வேடங்களிலே நடிக்க முயல்வதாகவும் அவர் கூடுதலாகச் சொன்னார் . எனக்கு இதுதான் பிரச்சினையின் மையம் , அவரது உடல் எடை அல்ல என்று தோன்றுகிறது . ஏன் ஆண்கள் மீது என்றுமே இவ்வகை கேள்விகள் வைக்கப்படுவதில்லை என்றால் தமிழ் சினிமா அவர்களை மட்டுமே நடிகர்களாகக் காண்கிறது . நடிகைகள் பார்வை இன்பம் அளிக்கிற பொம்மைகள் . அவர்கள் எவ்வளவுதான் புகழ் பெற்றாலும் விதவிதமான பாத்திரங்களை அவர்களால் பூண முடியாது . வந்து சிரித்து கவர்ச்சியாக நடனமாடி க்யூட் முகபாவனைகள் காட்டிவிட்டுப் போய்விட வேண்டும் . முப்பது படங்களில் நடித்தாலும் அந்த முப்பதும் ஒரே வேடம்தான் . வணிகப் பட நாயகர்கள...
Comments