முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பத்திகளின் காலம்

ஜூலை மாத அம்ருதா மிக நன்றாக வந்திருக்கிறது. முக்கிய கவர்ச்சி கிறிஸ்டபர் நோலனின் (மொழியாக்கப்பட்ட) பேட்டி தான். ஒரு இறுக்கமான, நடைமுறை கரார்தன்மையுடன் பேசுகிறார். சரளமான மொழியாக்கம். நான் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெற்றவர்களிடம் காணும் ஒரு விசித்திரமான குணம் அதிருப்தி. நோலன் தன் திரைவாழ்க்கையை திரும்ப பார்க்கும் போது பல்வேறு கட்டங்களில் தன் விருப்பத்திற்குரிய திரைப்படங்களை உருவாக்க பட்ட பாடுகளை குறிப்பிடுகிறார். ஒரு கசப்பான அனுபவத்தை கூறி விட்டு, இறுதியில் அது ஒரு முக்கியமான, உற்சாகமான நிகழ்வாக இருந்தது என்றும் முத்தாய்ப்பாய் சொல்கிறார்.

 அவருக்கு தன்னால் சுதந்திரமாய் இயங்க முடியவில்லை எனும் அதிருப்தி உள்ளது. இவரை விடுங்கள், பணம் படைத்த எழுத்தாளர்களிடம் தம்மால் படைப்பூக்கத்துடன் செயல்பட முடியவில்லை எனும் அதிருப்தியை காண்கிறேன். படைப்பூக்கத்துடன் செயல்படுகிறவர்களிடம் பணம் இல்லையே எனும் ஆற்றாமையை காண்கிறேன். ஏதோ ஒரு அதிருப்தி நல்லது தான் எனப் படுகிறது. அது உங்களை உயிர்ப்புடன் வைத்திருக்கும்.
சாம்ராஜின் துள்ளல் நடையில் ஒரு கட்டுரை – தமிழ் சினிமாவில் இலக்கிய நாவல்கள் படமாக்கப்பட்ட வரலாறும், அதன் போதாமைகளும் பற்றி. மிகவும் ரசித்து படித்தேன். சாய்ராட் படம் பற்றின சுரேஷ் கண்ணனின் கூர்மையான அவதானிப்புகளும், துல்லியமான நடையும் கொண்ட கட்டுரையும் அற்புதமானது. இதழை வேகமாய் ஒரு புரட்டு புரட்டி படித்ததில் கவர்ந்தவை இவை. இன்னும் மீதம் சில கட்டுரைகளும் கதைகளும் உள்ளன.
இப்போது அம்ருதா படிக்க ரெண்டாயிரத்தின் துவக்கத்தில் வந்த “உயிர்மை” இதழ் போல உள்ளது. முழுக்க முழுக்க பத்திகள். (மூத்த இலக்கிய நட்சத்திரங்கள் இல்லை என்பதே வேறுபாடு.)

தற்போதைய குமுதமும் நிறைய பத்திகளுடன் தான் வருகிறது. வண்ணப்படங்கள், நடிகைகளின் குறும்பேட்டிகள், வெட்டி ஒட்டினது போன்ற செய்தி அறிக்கைகளை விட பத்திகள் மேல் என்பது என் நம்பிக்கை. பத்திகள் எப்போதும் வாசகனுடன் நேரடியாய் உரையாடக் கூடியவை. எழுத்தாளனின் ஆளுமையை கண்ணாடி போல் பிரதிபலிப்பவை. குமுதத்தில் பழைய வெகுஜன நட்சத்திர எழுத்தாளரை அழைத்து கதைத்தொடர் எழுத செய்கிறார்கள். இப்போது பட்டுக்கோட்டை பிரபாகர். பட்டுக்கோட்டையின் மொழி எப்போதும் சுஜாதாத்தனம் கொண்டிருக்குமா அல்லது இப்போது தான் அப்படியா? அவரை தொடர்ந்து படித்து வருபவர்கள் தான் சொல்ல வேண்டும். சமகாலத் தலைமுறையின் மனப்போக்கை அவர் கவனித்திருப்பதில் எனக்கு ஆச்சரியம். இலக்கிய எழுத்தாளர்கள் எப்போதும் ஒரே காலத்தில் தான் இருக்கிறார்கள். வெகுஜன எழுத்தாளர்கள் தாம் வாழும் காலத்துடனே இருக்கிறார்கள். இதை நான் நிறைகுறையாக பார்க்கவில்லை. இது ஒரு அடிப்படை இயல்பு. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...