முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஐரோம் ஷர்மிளாவின் புது அரசியல் நிலைப்பாடு பாராட்டத்தக்கது!

 Image result for irom sharmila
ஐரோம் ஷர்மிளா உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து மையநீரோட்ட அரசியலில் இறங்க முடிவெடுத்திருப்பது பாராட்டத்தக்கது. இன்னும் சில வருடங்கள் போனால் அவர் இறந்து, ஒரு ரத்த சாட்சியாக, தியாகியாக, குறியீடாக மட்டுமே எஞ்சி இருப்பார். கட்சிக்காரர்கள் அவரை வைத்து இன்னும் சில பத்தாண்டுகள் அரசியல் பண்ணி இருப்பார்கள். தமிழ் முற்போக்காளர்கள் அவருக்கு மனதில் மணிமண்டபம் எழுப்பி இருப்பார்கள். ஆனால் அதனால் அவருக்கோ மணிப்பூர் மக்களுக்கோ பயனில்லை.


ஒரு அரசியல் போராளி யாருக்கும் எதற்கும் குறியீடாக, பதாகையாக வாழ்ந்து சாகக் கூடாது. சுயசிந்தனையுடன், சுயமுடிவுகளுடன் செயல்பட வேண்டும்.
இந்தியாவின் ஒடுக்குமுறையை முறியடிக்க சிறந்த வழி பிரிவினையோ ஆயுத போராட்டமோ அல்ல. மையநீரோட்ட அரசியலில் நுழைந்து வெல்வது தான். கேரளாவில் நக்ஸல்பாரி இயக்கம் பெறாத வெற்றியை மார்க்ஸிய அரசியல் கட்சி தான் பெற்றது. அது பல பிழைகளை செய்திருக்கலாம். ஆனால் சமூகத்தை முதுகெலும்பு கொண்டதாய் மாற்றியது, அதை சாதிக்க அது மக்களோடு மக்களாய் கலந்து ஜனநாயக முறையில் செயல்பட்டு வெற்றி கண்டது.
தமிழில் விடுதலை சிறுத்தைகளின் திராவிட இயக்க அணுக்கம், சாய்வு, அரசியல் நிலைப்பாடுகள் குறித்து விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் தலித்தியத்திற்கு சமூக அளவில் ஒரு முக்கிய கவனமும் அங்கீகாரமும் சிறுத்தைகளின் ஜனநாயக அரசியல் நுழைவினால் தான் சாத்தியப்பட்டது. மாறாக விடுதலை புலிகள் தி.கவினரை போல் ஒதுக்கி நின்றிருந்தால் அது முழுமையான வீணடிப்பாய் முடிந்திருக்கும். அந்த விதத்தில் என்னைப் பொறுத்த மட்டில் தியாகுவை விட ரவிக்குமார் நூறு மடங்கு சிறந்த போராளி. நக்சல்பாரிகளை விட அதிமுக, திமுகவினர் ஆயிரம் மடங்கு சிறந்த மக்கள் தொண்டாளர்கள். ஏனென்றால் அவர்கள் குறைந்தபட்சம் மக்களோடு மக்களாக இருக்கிறார்கள். மக்கள் இயக்கத்தின் எதிர்முனையில் இல்லை.

ஐரோம் ஷர்மிளாவை பாராட்டி வரவேற்போம்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...