Skip to main content

சாக்ரடீஸ் - காந்தி - இன்றைய வலதுசாரிகள்


வேலம்மாள் பொறியல் கல்லூரியின் விவாத போட்டிக்கு நடுவராக சென்ற போது எடுத்த படம் இது. விவாதத்தில் வெல்ல தர்க்கம் எவ்வளவு முக்கியம், தர்க்க ரீதியாய் எதிராளியை முறியடிக்க முடியாத போது என்னவெல்லாம் தந்திரங்கள் பிரயோகிக்கலாம், ஒரு விவாதத்தின் மைய தர்க்கம், இரண்டாம் நிலை தர்க்கங்கள் என்னென்ன என விளக்கினேன்.


முக்கியமாய் ஒரு விவாதத்தில் வெற்றி தோல்வி இறுதியானது அல்ல. அது தனிப்பட்ட வீழ்ச்சியோ எழுச்சியோ அல்ல. ஒரு விவாதத்தில் எதிர்தரப்பை முறியடிக்கும் போது அல்லது எதிர்தரப்பால் நாம் முறியடிக்கப்படும் போது ஒரு கருத்தியலோ தத்துவமோ மேலும் கூர்மையாகிறது, வலுப்பெறுகிறது.



உதாரணத்திற்கு பிளேட்டோவின் Dialogoues புத்தகத்தில் இருந்து ஒரு கதையை எடுத்துக் காட்டினேன். சாக்ரடீஸ் ஒரு கருத்துமுதல்வாதி. மனிதனின் நன்மை, தீமை அவனது மனதில் இருந்துதான் வருகிறது என்றவர். ஆனால் பிளேட்டோவின் சகோதரர் குளோக்கன் மனிதனின் குணத்தை சமூக கட்டமைப்புகளே தீர்மானிக்கின்றன என நம்பியவர். அவர் சாக்ரடீஸிடம் ஒரு கேள்வி கேட்கிறார். கிரேக்க தொன்மத்தில் கைஜஸ் எனும் மன்னனின் மோதிரம் பற்றி ஒரு நம்பிக்கை உண்டு. அந்த மோதிரத்தை அணிந்தவர் பிறருக்கு புலப்பட மாட்டார். மாயமாகி விடுவார். அப்படியான மோதிரம் ஒன்று ஒருவருக்கு கிடைத்தால் அவர் சமூகம் தண்டிக்கும் எனும் பயம் இன்றி என்ன குற்றத்தை வேண்டுமெனிலும் செய்வார் இல்லையா? ஒரு பெண்ணிடம் போய் சில்மிஷம் பண்ணலாம். வங்கியில் பணத்தை திருடலாம். பிடிக்காதவரை அடிக்கலாம். கொல்லலாம். அவர் கிட்டத்தட்ட கடவுளாகி விடுவார். இந்த சூழலில் ஒருவர் மோதிரம் கைவசமான பின்னரும் நல்லவராக இருப்பாரா? இது தான் கேள்வி. நான் இதை மாணவர்களிடம் நேரடியாக கேட்டேன். அவர்கள் சிரித்தபடிவாய்ப்பே இல்லை. நிச்சயம் மோதிரத்தை கொண்டு துஷ்டகாரியங்கள் செய்வார்என்றார்கள்.


விவாதத்தில் இது ஒரு சிக்கலான இடம். இப்படியான வினாக்களை எதிரணி எழுப்பினால் அவர் பாணியில் போய் விடையளிக்க முயலக் கூடாது. அந்த கற்பனைக் கதையில் இருந்து வெளியே வந்து எதிர்தரப்பின் ஆதார நிலைப்பாடு என்னவென ஆராய வேண்டும். குளோக்கன் ஒரு சமூக கட்டமைப்பு நம்பிக்கையாளர். மனிதன் ஆதாரமாய் தன் உணர்வுகளுக்கு அடிமையானவன் என நம்புபவர். இதை உணரும் சாக்ரடீஸ் இப்படி பதிலளிக்கிறார்: “மோதிரம் கிடைக்கும் பட்சத்திலும் ஒருவர் தப்பு செய்வது அவர் தனிப்பட்ட விருப்பப்படி தான். அவர் நல்லவராக இருக்க விரும்பினால் மோதிரம் இருந்தாலும் தப்பு செய்ய மாட்டார்.”


யோசித்துப் பார்த்தால் சாக்ரடீஸ் சொல்வதிலும் உண்மை உள்ளது.
நான் மாணவர்களிடம் இன்னொரு கதையை சொல்லி இதை விளக்கினேன். “உங்களுக்கு பிடிக்காத ஒரு நண்பர். அவர் உங்களை மோசமாய் அவமதித்து விட்டார். அல்லது ஏமாற்றி விட்டார். அல்லது அவர் காரணமாய் நீங்கள் ஒரு உறவையோ நல்ல வாய்ப்பையோ இழந்து விட்டீர்கள். ஒருநாள் அவருடன் சுற்றுலா போகிறீர்கள். மிக உயரமாய் சிகரத்தின் விளிம்பில் இருவரும் நிற்கிறீர்கள். அவர் சட்டென குனிந்து கீழே பார்க்கிறார். நீங்கள் நினைத்தால் அவரை கீழே தள்ளி விட முடியும். உங்கள் மேல் ஐயம் விழாமல் தப்பித்து விட முடியும். நீங்கள் அப்படி செய்வீர்களா? அல்லது மற்றொருவர் அப்படி செய்வாரா?”
மாணவர்கள் இப்போது குழம்பி விட்டார்கள். உறுதியாக சொல்ல முடியாது. பெரும்பாலும் செய்ய மாட்டோம் என்றார்கள். நான் சொன்னேன்ஆக கொலை வாய்ப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் கொல்லுவது நம் நம்பிக்கையை பொறுத்தது தான். கொலையை நம்பாத ஒருவர் இந்த சந்தர்பத்திலும் கொல்ல மாட்டார்.”
மாணவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.


நான் மேலும் சொன்னேன்குளோகனின் வாதத்திலும், சாக்ரடீஸின் எதிர்வாதத்திலும், அவை எவ்வளவு தான் வலுவானவை என்றாலும், சிறு ஓட்டைகள் உள்ளன. இதை பயன்படுத்தி இந்த விவாதத்தை நீட்டித்துக் கொண்டே போகலாம். இங்கு வெற்றி தோல்வியே இல்லை. இந்த விவாதங்கள் மேலும் மேலும் தீவிரமாகும் போது மனித மனம் பற்றின முக்கிய உண்மை ஒன்றை நாம் கண்டுபிடித்து விடுவோம். அது தான் முக்கியம்.”


நான் அடுத்து, எப்படி குளோகன்சாக்ரடீஸ் விவாதம் இருபதாம் நூற்றாண்டில் அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையிலான விவாதமாய் வளர்ந்தது என சுட்டிக் காட்டினேன். ”நம் காலத்தின் குளோகன் அம்பேத்கர், சாக்ரடீஸ் காந்தி. இன்றைய பின்நவீனத்துவ, பூக்கோவியலாளர்கள் குளோகனாகவும், இந்துத்துவ / இனவாத / மொழி, சாதி வெறி கொண்ட வலதுசாரிகள் சாக்ரடீஸாகவும் இருக்கிறார்கள். இன்றைய சர்ச்சைகள் அடிதடியாக, உணர்ச்சி தத்தளிப்பாக மாறியிருக்கலாம். ஆனால் விவாதத்தின் மையம் அன்றும் இன்றும் ஒன்று தான். உண்மை மனதில் இருக்கிறதா வெளியே இருக்கிறதா? மனிதன் தன் நம்பிக்கைகள், ஆதார குணங்களால் உருவாகிறானா அல்லது சமூக சூழ்நிலைகள் அவனை வடிவமைக்கின்றனவா?”


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...