Skip to main content

டொனால்ட் டிரம்பின் alt-right கொள்கையும் இந்தியாவின் மாற்று-இந்துத்துவாவும்

Image result for donald trumpImage result for narendra modi

டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதி ஆனதும் ஏதோ கடவுளே மரித்துப் போனது போல் முற்போக்கு நண்பர்கள் பலர் தளர்ந்து போனார்கள். மிகுந்த கசப்புடன் அச்சத்துடன் “இனி என்னாகுமோ?” என கேள்வி கேட்டு பல ஆங்கில கட்டுரைகள் எழுதப்பட்டன. தம் வேலை பறிபோகுமோ என பயந்த தமிழ் ஐ.டி நண்பர்கள் கூட டிரம்பை எதிர்த்தனர். ஆனால் இன்னும் எந்த பூகம்பமும் நேரவில்லை. அமெரிக்காவில் கறுப்பர்களோ, ஆசியர்களோ தாக்கப்படவோ துரத்தப்படவோ இல்லை. இன்னும் நம் ஐ.டி வேலைகள் பறிபோகவில்லை. இது ஒன்றை காட்டுகிறது: ஒரு கட்சியும் அதன் தலைவரும், அவர்கள் பிரதிநுத்துவப்படுத்தும் அரசியலும் வெறும் குறியீடுகள் தாம். கொள்கைகள், நிலைப்பாடுகள், வன்முறை ஆகியவற்றை பொருளாதாரம் தான் தூண்டுகிறது, வழிநடத்துகிறது, தீர்மானிக்கிறது. நாம் அளிக்கும் மலிவான ஐ.டி உழைப்பு அமெரிக்க முதலாளித்துவத்துக்கு அவசியம். அதை அவர்கள் கைவிட முடியாது. இன்னொரு பக்கம் வெள்ளையர்கள் அல்லாதோரும் பல்வேறு நிலைகளில் பங்களிக்கும் ஒரு சிக்கலான அமைப்பு தான் அமெரிக்கா. அங்கு வெள்ளையர்கள் மட்டுமே வாழ்வதென்றால் அந்த அமைப்பு நொறுங்கிப் போகும்.

டிரம்பின் அடிப்படை அரசியல் என்பது alt-right என அறியப்படுகிறது. அதாவது மாற்று-வலதுசாரி அரசியல். மாற்று-வலதுசாரிகள் கறுப்பர்கள், ஆசியர்களை மட்டுமல்ல இஸ்ரேலிய யூதர்களையும் எதிர்க்கிறார்கள். அமெரிக்கா பிற தேசங்களின் அரசியலில் தலையிட்டு போர்கள் நிகழ்த்துவதையும் அவர்கள் எதிர்க்கிறார்கள். அவர்கள் ஜனநாயகத்துக்கும் எதிரானவர்கள். கிறித்துவ நம்பிக்கையின் அடிப்படையிலான அரசியலை விட இனவாத அடிப்படையிலான அரசியலை ஏற்கிறார்கள். குறிப்பாக வெள்ளையர்களை ஒரு குறுகின இனக்குழுவாய் அவர்கள் காண்கிறார்கள். அதனால அவர்களுக்கு யூத மனச்சாய்வும் இல்லை. அவர்கள் மரபான வலதுசாரிகளின் மென்மையான முற்போக்குவாதத்தை (பெண்ணிய, சிறுபான்மையினர் ஆதரவு) எதிர்க்கிறார்கள். அதாவது காலப்போக்கில் அமெரிக்காவில் வலதுசாரித்தனம் திரிந்து சற்றே முற்போக்குத் தன்மையும், யூத சாய்வும் கொண்டதாக மாறி விட்டது. அதே போல் ராணுவ நடவடிக்கைகளுக்காக பெரும் அமெரிக்க பணத்தை செலவழிக்கும், ஆயுத வியாபாரிகளுக்கு துணை போகும் ஒரு அமைப்பாக வலதுசாரிகள் மாறி விட்டார்கள். இதற்கான ஒரு மாற்று கொள்கை தான் alt-right. ராணுவ எதிர்ப்பை பொறுத்த மட்டில் மாற்ற்-வலதுசாரிகள் சற்றே மென்மையான இடதுசாரிகள் எனலாம். ஆனால் இனவாதம், ஆண்-மைய வாதம், அடையாளவாதம் அவர்களை தீவிர வலதுசாரிகள் ஆக்குகிறது. அதாவது மரபான வலதுசாரிகளும் இப்போதைய மாற்று வலதுசாரிகளும் சுலபத்தில் பிரித்தறி முடியாத படி, ஆனாலும் அதே நேரம் ஒருவரோடு மற்றவர்கள் வித்தியாசப்பட்டவராக, பின்னி முயங்கி போயிருக்கிறார்கள்.
இன்று இந்தியாவில் எழுச்சி பெற்றும் வரும் ஒருவித மாற்று-இந்துத்துவாவையும் நாம் இதை வைத்து புரிந்து கொள்ளலாம். மாற்று-வலதுசாரிகளைப் போல மாற்று-இந்துத்துவாவினரும் தம் பொருளாதார சிக்கல்களுக்கு சிறுபான்மையினரை காரணமாய் காண்கிறார்கள். அமெரிக்காவில் டிரம்ப் வெற்றி பெற்றதற்கும் இந்தியாவில் மோடி வென்றதற்கும் அவர்களின் தேர்தல் காலத்திலான பொருளாதார நெருக்கடிகள் முக்கிய காரணம். ஒரு சமூகத்தில் பொருளாதார தளர்ச்சி ஏற்படும் போது பெரும்பான்மை மக்களின் பாதுகாப்பு அச்சமும், வறுமை குறித்த பதற்றமும் இனவாத எச்சரிக்கை உணர்வாக வெளிப்படுகிறது. ஒரு கட்டத்தில் இது வளர்ந்து இனவாத வெறுப்பாக வெடிக்கிறது. பொருளாதார பயங்கள் சிறுபான்மையினர் மீது வாந்தி எடுக்கப்படுகின்றன. இந்த வெறுப்பு அலையில் நீந்தி மேலேறி வந்த மோடியும் டிரம்பும் தம் தேசத்தை பொருளாதார ரீதியில் மேம்படுத்துவதாய் வாக்குறுதி அளித்தே தம்மை அடையாளப்படுத்தினார்கள். இருவருமே மதவாதத்தை முன்னிறுத்தவில்லை. இதுவே அத்வானியின் இந்துத்துவாவுக்கும் மோடியின் இந்துத்துவாவுக்குமான வித்தியாசம். மோடி ஒரு ஆக்மார்க் மரபான இந்துத்துவாவாதி அல்ல. அவர் நேரடியாய் இஸ்லாமிய வெறுப்பை முன்னெடுக்க மாட்டார். ஆனால் மதவாதத்தை ஒரு அடையாளமாய், குறியீடாய் மட்டும் முன்வைப்பார். குஜராத்தில் முன்பு நிகழ்ந்த மதக்கலவரங்கள் இனி இந்தியாவில் எங்கும் நிகழ்வதை அவர் விரும்ப மாட்டார். மோடியுடையவது ஒரு “முற்போக்கு” இந்துத்துவா.
அமெரிக்க மாற்று-வலதுசாரிகளும் இந்திய மாற்று-இந்துத்துவர்களுக்குமான முக்கிய வித்தியாசம் இது: அமெரிக்க மாற்று-வலதுசாரிகள் இனவாத முன்னெடுப்பை ஒரு அடையாளமாய் பதாகையாய் பயன்படுத்துகிறார்கள். மதத்தை அல்ல. இந்திய மாற்று-இந்துத்துவர்களோ மதத்தை பதாகையாக தூக்கிப் பிடிக்கிறார்கள். (ஆரிய) இனவாதத்தையோ சாதியத்தையோ அல்ல. சொல்லப் போனால் மாற்று-இந்துத்துவா காலகட்டத்தில் இந்தியா முழுக்க இடைநிலை சாதிகளும், தலித்துகளும் இந்துத்துவாவின் கீழ் திரட்டப்படுகிறார்கள்.
இரு சாராருக்குமான முக்கிய ஒற்றுமை இந்த வாதம் – ”எங்களை தொந்தரவு செய்யாதீர்கள்; நாங்கள் தனிகுழு; எங்கள் மரபான அடையாளத்தை பறிக்காதீர்கள்; அதை உங்கள் முற்போக்கு விழுமியங்களால் கேலி செய்யாதீர்கள். நாங்கள் சுபிட்சமாக வாழ விரும்புகிறோம். எங்கள் மரபான நம்பிக்கைகளை, எந்த குற்றவுணர்வும் இன்றி, யார் குறுக்கீடும் இன்றி, பேண விரும்புகிறோம்.”
எங்கள் வீட்டின் அருகே இருந்த ஒரு ஐயனார் கோயிலை அதன் உரிமையாளர்கள் ஒரு பெரிய சாய்பாபா கோயிலாக மாற்றி கட்டியிருக்கிறார்கள். முன்பு அங்கு அடித்தட்டு வந்து ஆடு, கோழி பலி கொடுத்து மக்கள் வழிபடுவார்கள். நேற்று அங்கு குருக்கள் வந்து பூஜைகள் செய்தார்கள். சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் ஒலித்தார்கள். யானை வந்தது. கூட்டமாய் மத்திய வர்க்க பாபா பக்தர்கள் குழுமினார்கள். கோழி ரத்தத்திற்கு பதில் நைவேத்யமும் சுண்டலும் படைத்தார்கள். பிரசாதம் விநியோகித்தார்கள். காலையும் மாலையும் பஜனை பாடினார்கள். மக்கள் டோக்கன் வாங்கி பூஜைகளில் கலந்து கொள்ள வேண்டும் என முறைப்படுத்தப்பட்டது. கோயில் வாசலில் இரு பூக்காரிகளும் ஒரு பிச்சைக்காரியும் வந்து தம்மை நிறுவிக் கொண்டனர். பிச்சைக்காரி மாலையில் ஒரு ஆட்டோவில் ஏறி கிளம்பி சென்றாள். ஒரு சிறுதெய்வ வழிபாட்டுத்தலம் நிறுவனமயமாகி இந்துத்துவா மயமாகி விட்டது என ஒரு தோழியிடம் சொன்னேன். அவள் கோபமாய் திரும்ப கேட்டாள் “ஒரு கோயில் கட்டினால் உடனே அதை இந்துத்துவா என திட்டுவதா? அங்கே ஐயனாருடன் பாபாவும் இருந்து விட்டு போகட்டுமே. சமிஸ்கிருதத்தில் என்ன தப்பு? அதுவும் நம் மக்களின் மொழி தானே? பஜனை வெகுஜன மக்களின் வழிபாட்டு முறை தானே? அதை எப்படி நீ கேலி பண்ணலாம்?”
இந்த தோழி வழக்கமான இந்துத்துவாவாதி அல்ல. தன்னை அப்படி அடையாளப்படுத்த அவர் விரும்ப மாட்டார். அவர் மனித உரிமைகள், பெண்ணியத்தை முன்னெடுப்பவர். முற்போக்கானவர். அவர் ஒரு மாற்று-இந்துத்துவாவாதி. இளையதலைமுறையினர் இடையே, இணையத்தில் குறிப்பாய், அவரை போன்ற ஒரு பெரும் மாற்று தரப்பினர் படை இருக்கிறார்கள். அவர்கள் சாதியவாதிகள் அல்ல. இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் அல்ல. ஆனால் தம் மதத்தை, மரபை, சடங்கு சம்பிரதாயங்களை அவர்கள் முக்கியம் என நினைக்கிறார்கள். “நான் பூணூல் போட்டுக் கொள்வேன், என் சாதிக்குள் மணம் புரிவேன். அதில் என்ன தப்பு? என் மதத்தை என் உடையில் தரித்துக் கொள்வேன். அதில் எனக்கு என்ன கூச்சப்பட வேண்டியிருக்கிறது?’ என கேட்கிறார்கள். இதே மக்கள் குஜராத் கலவர வன்முறையையோ தருமபுரி கௌரவக் கொலைகளையோ ஏற்க மாட்டார்கள். இஸ்லாமியர்களை இந்தியாவை விட்டு துரத்த வேண்டும் எனும் மரபான இந்துத்துவாவினரை எதிரொலிக்க மாட்டார்கள்.

 இவர்கள் தமது இருப்புக்கு சாதி, மத அடையாளங்கள் அவசியம் என கோருகிறார்கள். முற்போக்கினர் முன்புள்ள கேள்வி இது: இவர்களை நாம் மரபான இந்துத்துவர்களாக மட்டும் கண்டு, கேலி செய்து பழித்து அந்நியப்படுத்த போகிறோமா அல்லது இவர்களின் அக்கறைகளை புரிந்து கொண்டு இவர்களுடன் உரையாடப் போகிறோமா?

நன்றி: கல்கி 

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...