Skip to main content

உணவு என்பது வெறும் உணவல்ல

Image result for indian lunch

நாம் எந்த புது ஊருக்குப் போனாலும் முதலில் கவலைப்படுவது உணவைப் பற்றித் தான். அங்குள்ள மனிதர்கள் கூட பொருட்டில்லை. ஏன்?
மனிதர்களுடன் தானே அங்கு அன்றாடம் உறவாடுகிறோம். மனித உறவுகள் தாமே நமது வெற்றி தோல்விகளை, சிக்கல்களை, தீர்வை, நிம்மதியை, மகிழ்ச்சியை, அவஸ்தைகளை தீர்மானிக்கப் போகிறது. ஆனால் விஷயம் அதில்லை.

 கணிசமான வெளி மனிதர்களுடனான நமது சடங்கு ரீதியானது. அவர்கள் நமக்கு குறியீடுகள் மட்டுமே. அவர்கள் எதைக் குறிக்கிறார்களோ அந்தளவுக்கு எதிர்வினையாற்றி விட்டு கடந்து விடலாம். உயரதிகாரி என்றால் வணக்கம் வைக்க வேண்டும், அவர் தலையாட்டி விட்டு போய் விடுவார்; கீழ்நிலை வேலையாள் என்றால் நமக்கு வணக்கம் வைப்பார்கள், நாம் தலையாட்டி விட்டு கடப்போம். எங்கு போனாலும் நமக்கென்று ஒரு மிகச்சின்ன வட்டம் அமைகிறது. அதனுள் பேசி கலந்து கைகுலுக்கி மகிழ்ந்து வெளியேறி வீடு திரும்பி விடுவோம்.
 ஆனால் உணவு அப்படி அல்ல. உணவுடன் நமக்கு ஆத்மார்த்தமான உறவு உள்ளது. ஏனென்றால் உணவு நமது தன்னிலையை (subjectivity) கட்டமைக்கிறது. நீங்கள் யாரென்பதை உங்கள் உணவு மூலமே நிறுவுகிறீர்கள். நீங்கள் மதியம் தயிர்சாதம் விரும்பும் ஆளா நீங்கள் ஒரு குறிப்பிட்ட வகை மனிதர். நீங்கள் பிரியாணியை வெட்டுபவர் என்றால் ஒரு மனிதர்; சப்பாத்தி என்றால் வேறு. நான் சமூகப்பின்னணியை, சாதியை, மதத்தை இங்கு குறிக்கவில்லை. உங்கள் தனிமனித அடையாளமே உங்கள் உணவு மூலம் தான் தீர்மானமாகிறது.
 என் அப்பா முன்பு மதியம் உணவருந்த மாட்டார். டீயும் கடலை மிட்டாயும் மட்டுமே. முப்பது வருடங்களாய் அப்படித் தான். அதுவே “அவர்”. அவர் மதியம் சோறும் குழம்பும் பொரியலும் கூட்டுமாய் உண்டால் வேறு மனிதராகி விடுவார். நீங்கள் யாரென்பது பற்றி உங்களுக்கே ஒரு தீர்மானம், புரிதல், சித்திரம் இருக்கிறது. இதை நீங்கள் தேர்ந்தெடுக்கும் உணவு வழி சிறுக சிறுக உருவாக்குகிறீர்கள். இதனால் தான் நீங்கள் ஒரு புது ஊருக்குப் போனால் உங்கள் ஊர் உணவையே தொடர்ந்து உண்ண ஏங்குகிறீர்கள் (நாவின் சுவையும் ஒரு காரணம் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் இந்த நாவுச் சுவை உங்கள் தன்னிலையின் ஒரு பகுதி; உங்களை அறியாது உங்களை நீங்கள் வடிவமைக்கும் செயல்.)
கேரளாக்காரர்கள் எங்கு போனாலும் தங்கள் ஊர் உணவு கிடைக்கும் இடத்தை கண்டு பிடித்து விடுகிறார்கள். சமைப்பதற்கான பிரத்யேகப் பொருட்களை சேகரிக்கிறார்கள். ஊரிலிருந்து கொண்டு வருகிறார்கள். தமிழர்கள் வெளிநாடு போனால் “அங்கே சரவண பவன் உண்டு. ஆம்பூர் பிரியாணி கிடைக்கும்.” என்று யாரோ ஆறுதல்படுத்துகிறார்கள். சொந்த ஊர் உணவின் சுவை நாவில் பட்டதும் மனிதர்கள் ஆறுதலாகி ஆழ்ந்த திருப்தி கொள்கிறார்கள். தாம் மாறவில்லை; சிதைந்து உருக்குலைய வில்லை எனும் உணர்வு நெஞ்சில் பரவுகிறது.
ஜும்பா லஹிரியின் Namesake நாவலின் துவக்கத்தில் அமெரிக்காவுக்கு புதிதாய் சென்ற மணப்பெண்ணான ஆஷிமா தனது ஊரைப் பற்றின நினைவேக்கத்தில் தவிப்பாள். அவர் கர்பிணி வேறு. அவளுக்கு பிடித்த உணவைப் பண்ணித் தர அவளது அம்மா அங்கில்லை. அதனால் அவளே கொல்கொத்தாவின் தெரு உணவான ஜல்மூரி (நம்மூரில் பேல்பூரி) பண்ணத் துவங்குவாள். அந்த உணவு அவளை சில நிமிடங்கள் கொல்கொத்தாவுக்கு கூட்டிப் போய் விடும்.
(சிலர் எந்த ஊருக்குப் போனாலும் அந்த ஊர் உணவை விரும்பி உண்பார்கள். இவர்கள் வேரற்று உலவ விரும்பும் ஆளுமை கொண்டவர்கள்.)
சென்னையில் கல்லூரியில் படிக்கையில் எனக்கு பிரகாஷ் பத்ரா என ஒரு வங்காளி நண்பன் இருந்தான். அவன் என்னை ஒருநாள் ஒரு சின்ன வங்காளி உணவகத்துக்கு அழைத்துப் போனான். அங்கு சுவையான ரொட்டியும் வங்காள சப்ஜியும் வாங்கித் தந்தான். நான் அதன் பிறகு அங்கு அடிக்கடி செல்ல ஆரம்பித்தேன். இன்னொரு நண்பர். வறுமையில் இருந்தார். எம்.பில் பண்ணிக் கொண்டிருந்தார். அருகில் இருந்த பிரியாணிக் கடைக்கு அவர் சரியாக 11: 30க்கு போவார். அப்போது அங்கே 25 ரூபாய்க்கு குஷ்கா கிடைக்கும். கொஞ்சம் தாமதமானால் பிரியாணி மட்டுமே இருக்கும் (விலை 45). நண்பர் இருந்த நிலையில் அவருக்கு அது சிறந்த ஏற்பாடு. என்னை ஒருநாள் அந்த வேளைக்கு அழைத்துப் போய் குஷ்கா வாங்கித் தந்தார். அதன் சுவையை மெச்சிக் கொண்டே சாப்பிட்டார். இருவரும் தத்தமது நிலையை, அடையாளத்தை (தன்னிலையை) என்னிடம் தாம் அன்றாடம் உண்ணும் பிரத்யேக உணவை பங்கிட்டே வெளிப்படுத்தினார்கள்.
எனது தோழி ஒரு கல்லூரியில் முனைவர் பட்ட நெறியாளர். அவரிடம் ஆயுவு செய்யும் திபெத்திய மாணவர்கள் தமது ஊரின் பிரத்யேக தேயிலையை பெட்டி பெட்டியாக வாங்கி அளிப்பார்கள். திபெத்திய சின்னம் பதித்த சேலையை பரிசளிப்பார்கள். அதை நம்மால் பயன்படுத்த முடியாது. ஆனாலும் ஏன் அளிக்கிறார்கள்? அவர்கள் நம்மிடம் பேச முயலும் மொழி அது.
(என்னைப் போல்) பேலியோ உணவுப்பழக்கத்தை பின்பற்றுபவர்கள் அதன் மிஷனரிகள் போல் ஆகி விடுவார்கள். என் தோழி ஒருவரின் மகனுக்கு அடிக்கடி சளி, ஜுரம் என படுத்தி எடுக்கும். நான் ஒருநாள் அப்பையனிடம் அறிவுரைத்தேன்: “தம்பி நீ சாப்பிடும் தானியங்கள் தாம் உன் தற்காப்பு சக்தியை அடியோடு படுக்க வைக்கிறது. நீ பலவீனமாகி விட்டாய். தானிய உணவுகளை விட்டு விடு. உனக்கு எந்த நோய்த்தொற்றும் ஏற்படாது.” நான் இதைச் சொன்னதும் தோழி என் மீது ஒரே பாய்ச்சலாய் பாய்ந்து விட்டார், “அவனே ஏதோ மூணு வேளை சாப்பிட்டு கிட்டு இருக்கிறான். அதையும் பேலியோ கீலியோன்னு கெடுத்திராதே. சோறு, சப்பாத்தி, தோசை எல்லாம் உடம்புக்கு நல்லது தான்.”
“அதில்ல. அவனுக்கு அடிக்கடி ஜுரம் வருதேன்னு…”
“ஜுரம் வரது நல்லது தான். அப்போ தான் தற்காப்பு சக்தி அதிகமாகும். நீ வாயை மூடு”

அவர் ஏன் அப்படி பதற்றமாகிறார் என எனக்கு புரிந்தது. அவர் சமைத்து அந்த உணவை மட்டும் பரிமாறவில்லை; தன் அன்பையும் எண்ணங்களையும் பரிமாறுகிறார். வாழ்க்கைமுறையை, பண்பாட்டை பகிர்கிறார். மகன் பேலியோவுக்கு மாறி விட்டால் அவன் அவரிடம் இருந்து தனியாகி விடுவான். அவர்களுக்குள் பேசப்படும் அந்தரங்கமான மொழியை துண்டாக்க நான் யார்?

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...