Skip to main content

தீப்தி நேவல் கவிதைகள் (1)


Image result for deepthi naval

அறிமுகம்:
தீப்தி நேவல் எண்பதுகளின் மாற்று சினிமா இயக்கத்தின் தாரகை. ஒரு பக்கம் நடிகையாக அவர் பிரசித்தமானவர் என்றால் இன்னொரு பக்கம் இலக்கியம், ஓவியம், புகைப்படக் கலை ஆகியவற்றிலும் ஆர்வம் கொண்டவர். “தோ பைசே கி…” என ஆரம்பமாகும் நீண்ட தலைப்பு கொண்ட படம் ஒன்றை இயக்கினார். 2009இல் நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் இப்படம் சிறந்த திரைக்கதைக்கான பரிசை வென்றது. ஒரு கவிஞராக தீப்தி நேவல் முக்கியமானவர். அவர் கவிதைகள் ஜப்பானிய கவிதைகளை நினைவுபடுத்தும் மென்மையும் நுணுக்கமும் கொண்டவை.

 முதல் வாசிப்பில் வெகுசாதாரணமானவையாக வாசகனுக்கு இவை தோன்றலாம். ஆனால் மீளமீள வாசிக்கையில் எப்படி எளிய புற விவரிப்புகள் ஒரு உருவகமாய், குறியீடாக மாறுகின்றன என்பது வாசகனுக்கு துலங்கத் துவங்கும். ஒரு கார் பயணத்தை நினைவுகளை கைவிட்டு புது உறவை நோக்கிச் செல்லும் அகப்பயணத்தின் உருவகமாய் அவர் எந்த பிரயத்தனங்களும் இன்றி மாற்றுவார். இந்த சாதாரணத்துவத்தின் நுணுக்கம் தான் தீப்தியின் கவிதைகளின் சிலாக்கியமான அம்சம்.
அவரது கவிதைகள் நவீனத்துவ கவிதைகளின் வடிவ நேர்த்தியும் தனிமனிதக் குரலும் காட்சிபூர்வமும் உணர்ச்சிக்குவிப்பும் கொண்டவை. உணர்ச்சிகளை அடங்கின தொனியில் பேசுபவை..
 தீப்தி நேவல் எண்பதுகளில் இருந்தே இந்தியிலும் ஆங்கிலத்திலும் கவிதைகள் எழுதி வருகிறார். 1983இல் அவரது முதல் தொகுப்பு இந்தியில் வெளியானது (”லம்ஹா லம்ஹா”). 2004இல் அவரது Black Wind and Other Poems எனும் கவிதைத் தொகுப்பு வெளியானது. இதில் The Silent Scream எனும் ஒரு பகுதியை ஒரு தனி தொகுப்பு எனலாம். பைத்தியம் எனும் தலைப்பில் அவர் எழுதின பல நுட்பமான, இருண்மைக்கு வெகு அருகில் செல்கிற, மனதை கலங்கடிக்கும் கவிதைகள் இப்பகுதியில் இடம்பெற்றுள்ளன. இக்கவிதைகள் தோன்றிய கதை சுவாரஸ்யமானது. தமிழ்க் கவிஞர்கள் யாரேனும் இத்தகைய சாகசம் ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார்களா என்பது ஐயமே! Ankahi எனும் தனது படம் ஒன்றிற்காக, மனநலம் அற்றவர்களை அணுக்கமாய் கவனிக்கும் நோக்கில், நேவல் ஒரு மனநல மருத்துவமனைக்கு சென்று நான்கு மணிநேரங்கள் செலவழிக்கிறார். அந்த அனுபவம் அவரை உலுக்கிறது. அதன் பிறகு, 1993இல், அவர் மனநலமற்ற பாத்திரம் ஒன்றை நடிக்க நேரும் நடிகை எப்படி அதனால் பாதிக்கப்படுகிறார் என்பதை சித்தரிக்கும் ஒரு படத்தின் திரைக்கதையை எழுதுகிறார். இதற்காக ஆய்வு செய்யும் நோக்கில் ஒரு மனநல மருத்துவமனையில் இரண்டு வாரங்களுக்கு மேல் நோயாளிகளுடன் தங்குகிறார். அவர்களை அணுக்கமாய் கவனிக்கிறார். ஒரு பெண் அவரிடம் “ரொம்ப உணர்ச்சிகரமான ஆட்கள் மட்டுமே பைத்தியமாவார்கள்” என்று அடிக்கடி கூறுகிறார். நேவல் அப்போது ஒரு உண்மையை உணர்கிறார். பைத்தியம் என்பது நோய் அல்ல. ஒரு மிகு உணர்ச்சி நிலை. அகம் கட்டற்று வெளிப்படும் நிலை. மேலும் மனப்பிறழ்வு எப்படி ஒரு வைரஸ் போல் இயல்பானவர்களைக் கூட தொற்றிக் கொள்ளும் என உணர்கிறார். மனநலம் பாதிக்கப்பட்டவர்களுடன் பழகுவது நமது அணுகுமுறையை, உடல்மொழியை, பேசும் பாணியை நாம் அறியாமலே மாற்றக் கூடும். அந்த மருத்துவமனையில் இருந்து வெளியேறிய பின் தீப்திக்கு புற உலகத்து மனிதர்கள் விசித்திரமானவர்கள் என தோன்றுகிறது. மனநல மருத்துவமனை உண்மையான உலகம், அதற்கு வெளியே உள்ளது போலியான உலகம் என நினைக்கிறார். இது அவருக்குள் முரண்பாடுகளை ஏற்படுத்துகிறது. புற உலகுடன் பொருத்தப்பட முடியாமல் திணறுகிறார். இந்த மனநிலையை ஒட்டி எழுதின கவிதைகளே அவரது The Silent Scream தொகுப்பில் இடம்பெறுகின்றன. மேலும், மருத்துவமனைக்குள் உறவினர்களால் தள்ளப்பட்ட எந்த மனநோயும் அற்ற பெண்களின் அவலம், மனநலமற்ற பெண்களின் அன்றாடம் அனுபவிக்கும் கடும் துயரம், வலி, மற்றும் குழப்பநிலை, பாலியல் ஒடுக்குமுறை சிகிச்சைகளின் பெயரில் மனித உடல் கண்காணிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுவது ஆகியவற்றையும் இக்கவிதைகளில் பதிவு செய்கிறார்.
மேற்சொன்ன இரு தொகுப்புகளில் இருந்தும் சில கவிதைகளை மொழியாக்கியுள்ளேன். வரும் நாட்களில் அவற்றை இங்கு வெளியிடுகிறேன்...

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...