முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சாருவை யார் சொந்தம் கொண்டாடுவது? (1)


Image result for charu nivedita

லுலு என்பவர் யாரென்றே எனக்கு இதுவரை தெரியாது. அவரை படித்ததும் இல்லை. (அவர் படிக்கத் தகுதியற்றவர் என்றல்ல இதன் பொருள். எனக்கு இன்னும் வாய்க்கவில்லை.) சாரு அவரைப் பாராட்ட, அதற்கு எதிர்வினையாக சாருவின் ரசிகர்களே அவரை வறுத்தெடுக்க எனக்கு இதற்கு முன்பு நேர்ந்த இது போன்ற சில விபத்துக்கள் நினைவு வந்தன. சாருவுக்கும் அவரது நண்பர்கள் / வாசகர் வட்டத்தினருக்கு மட்டுமே நிகழும் விபத்துக்கள் இவை.
நான் முன்பு சாருவை என் நூல் வெளியீடு ஒன்றுக்கு அழைத்தேன். அவரும் ஒப்புக் கொண்டார். அடுத்த நாளே சாருவின் சார்பில் ஒரு நண்பர் அழைத்து நிகழ்ச்சிக்கு வர முடியாது என தெரிவித்தார். இதை அடுத்து எனக்கும் சாருவுக்கும் ஒரு மோதல் இணையத்தில் நடந்தது. அன்று நான் மிகவும் எரிச்சலடைந்ததற்கு காரணம் யாரோ அவரிடம் கோள்மூட்டி என் நிகழ்ச்சிக்கு வர விடாமல் தடுத்திருக்கிறார்கள் என்பதை நான் உணர்ந்தது தான். இதுவே பின்னர் வேறு நண்பர்களுக்கும் நடந்துள்ளது. சாரு யாரையாவது பாராட்டினாலோ பாராட்டப் போவதாய் தெரிய வந்தாலோ அவரது அப்போதைய நண்பர்கள் முழுமூச்சாய் அதை தடுப்பார்கள். லஷ்மி சரவணகுமாரை சாரு பாராட்டிய அடுத்த நொடியே இது ரணகளத்தில் முடியப் போகிறது என நான் ஊகித்தேன். அப்படியே நடந்தது.

சாருவை ஒருவர் நெருங்குவது கவர்னர் மகளான நக்மாவை பிரபுதேவா காதலிப்பது போலத் தான். கரும்பூனைகள், லாடம் அடிக்கும் போலீஸ், குண்டு வைப்பவர்கள் என பல அரண்களைக் கடந்து தான் ஒரு சின்ன முத்தமாவது அவருக்கு நீங்கள் கொடுக்க இயலும்!

இப்போது லுலு எழுதுவது குப்பையா உன்னதமா என்பதை விட ஏன் இவ்வளவு வன்மமாய் இதை எதிர்கொள்கிறார்கள் என்பது தான் எனக்கு ஆர்வமூட்டுவதாய் உள்ளது.
சாரு புதிதாக யாரை நெருங்கினாலும் சாருவை யாராவது நெருங்கினாலும் ஒரு வாரத்துக்குள் சாருவின் நண்பர்கள் அவரை சுற்றி நின்று தாக்குவார்கள். அல்லது சாருவே இந்த புதுவரவை நிராகரித்து அடித்து துவைத்து துரத்தி விடுவார். அப்படி அவரை இவர்கள் செய்ய வைப்பார்கள்.
இதற்கு பின்னால் இயங்குவது பொறாமை, மலினமான வயிற்றெரிச்சல் என்றெல்லாம் நான் முன்பு நம்பி இருக்கிறேன். இப்போது சாருவின் மீது இவர்களுக்கு உள்ள மிதமிஞ்சிய அன்பே அவர்களை இப்படி செய்ய வைக்கிறது என தோன்றுகிறது.
இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என புரிந்து கொள்ள ஜெயமோகன், எஸ்.ரா போன்றோரின் வாசகர்கள் ஏனிப்படி இல்லை என்று கேட்க வேண்டும். பின்னவர்கள் வெறும் வாசகர்களாக மட்டுமே – அறிவார்ந்த, கலாச்சார தளத்தில் – ஜெ.மோ அல்லது எஸ்.ராவை அணுகுகிறாரக்ள். அதனால் பெரிய பொறாமை பூசல்கள் அங்கு இல்லை. ஆனால் சாருவின் வாசகர்கள் / நண்பர்கள் அவரை உணர்வுரீதியாய், ஒரு வித “காமத்துடன்” அணுகுகிறார்கள். சாருவும் அவ்வாறு தான் அவர்களை நடத்துகிறார்.
 ஆனால் சாருவுக்கு யார் மீதும் பொறாமை இருப்பதில்லை. எனக்குத் தருவதை விட அதிக பிரியத்தை உன் காதலியிடம் ஏன் காட்டுகிறாய் என அவர் உங்களிடம் கோபிக்க மாட்டார்.
 ஏனென்றால் சாரு எதைப் பற்றியும் எவரைப் பற்றியும் அதிக நேரம் சிந்திக்க மாட்டார். அவர் எந்த கணத்தில் இருக்கிறாரோ அந்த கணத்தைத் தாண்டி சிந்தித்து மூளையை பாரமேற்றுவதில்லை. சிந்தனைகள், கருத்துக்கள், மனநிலை, அடிதடி, கோபம், மனம் கசிதல், உற்சாகம் எல்லாமே அவருக்கு செருப்பைப் போல. சுலபத்தில் கழற்றி வைத்து அடுத்த வேலைக்கு போய் விடுவார். மனிதர்கள் கூட அவருக்கு கிட்டத்தட்ட ஒரு ஆடை போலத் தான். ஒன்றை கழற்றி விட்டு இன்னொன்றை அணிந்து கொள்வார்.
இது சாருவுக்கு இயல்பாக அமைந்த ஒரு சிறப்பான அணுகுமுறை. இதுவே அவரை சதா இறகு போல் சன்னமாய், நீர்க்குமிழி போல் எங்கு வேண்டுமெனிலும் மெல்லென போய் அமரக் கூடியவராய், உற்சாகத்தில் திளைப்பவராய் வைத்துள்ளது. அவர் எந்த பாரத்தையும் தன் இதயத்தில் சுமப்பதில்லை.

இதே காரணத்தால் தான் அவர் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை கூறி வருகிறார். சாருவின் மனநிலைப்படி அவரால் எந்த கருத்துநிலையுடனும் நிரந்தரமாய் பிணைந்திருக்க முடியாது. நேற்றைய சாரு இன்றைய சாரு அல்ல. அவரிடம் ஒரு தொடர்ச்சியை எதிர்பார்ப்பதே அபத்தம் தான்.

கருத்துகள்

PV இவ்வாறு கூறியுள்ளார்…
மனித உளவியல்படி எவரும் புதுத்தொடக்கத்தை தங்கள் சிந்தனைகளில் உருவாக்க முடியாது. No one can begin on a tabla rasa. ஆனால் முயற்சிப்பது உண்டு. ஓரளவுக்கு வெற்றி கிடைக்கலாம். அங்கும் ஆழநோக்கின், அப்புதிய சிந்தனைகளுக்கு அடித்தளம் ஏற்கன்வே இருக்கிறது. இது ஃப்ராயிட் உளவியல். சப் கான்சியஸ். இதன்படி, அறிவழகன் தன்னை விட்டு விலகவே முடியாது. விலகியதாக நடிக்கலாம். நான் அவரெழுதும் பழைய கட்டுரைகளை - திணமனியிலும் அவர் இணையத்திலும் - தொடர்ந்து வாசித்தேன்: எனக்குப் பட்டது அவர வட்டத்தில் அவர் வாழ்கிறார்; அதன்படியே அவர் கட்டுரைகள். Once an actor, always an actor . சாமான்ய மனிதர்களுக்கு பிம்பங்கள் இல. அப்படியே இருந்தாலும் அதனால் பெருஞ்சிறை அவர்களுக்கு உருவாகாது. நடிகர்கள், எழுத்தாளர்கள் பிம்பங்கள் அறிந்தும் அறியாமலும் உருவாக்கப்பட்டு அவர்கள் சிறைப்படுகிறார்கள். கருத்தில் மட்டுமன்று, எழுத்து நடையிலும் கூட சிறைப்படுகிறார்கள். அறிவழகனின் பார்வையையும் எழுத்து நடையும் அவரின் கல்லறை வரை செல்லும். அதைப்போலவே மற்றவர்களும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...