Skip to main content

சாருவை யார் சொந்தம் கொண்டாடுவது? (1)


Image result for charu nivedita

லுலு என்பவர் யாரென்றே எனக்கு இதுவரை தெரியாது. அவரை படித்ததும் இல்லை. (அவர் படிக்கத் தகுதியற்றவர் என்றல்ல இதன் பொருள். எனக்கு இன்னும் வாய்க்கவில்லை.) சாரு அவரைப் பாராட்ட, அதற்கு எதிர்வினையாக சாருவின் ரசிகர்களே அவரை வறுத்தெடுக்க எனக்கு இதற்கு முன்பு நேர்ந்த இது போன்ற சில விபத்துக்கள் நினைவு வந்தன. சாருவுக்கும் அவரது நண்பர்கள் / வாசகர் வட்டத்தினருக்கு மட்டுமே நிகழும் விபத்துக்கள் இவை.
நான் முன்பு சாருவை என் நூல் வெளியீடு ஒன்றுக்கு அழைத்தேன். அவரும் ஒப்புக் கொண்டார். அடுத்த நாளே சாருவின் சார்பில் ஒரு நண்பர் அழைத்து நிகழ்ச்சிக்கு வர முடியாது என தெரிவித்தார். இதை அடுத்து எனக்கும் சாருவுக்கும் ஒரு மோதல் இணையத்தில் நடந்தது. அன்று நான் மிகவும் எரிச்சலடைந்ததற்கு காரணம் யாரோ அவரிடம் கோள்மூட்டி என் நிகழ்ச்சிக்கு வர விடாமல் தடுத்திருக்கிறார்கள் என்பதை நான் உணர்ந்தது தான். இதுவே பின்னர் வேறு நண்பர்களுக்கும் நடந்துள்ளது. சாரு யாரையாவது பாராட்டினாலோ பாராட்டப் போவதாய் தெரிய வந்தாலோ அவரது அப்போதைய நண்பர்கள் முழுமூச்சாய் அதை தடுப்பார்கள். லஷ்மி சரவணகுமாரை சாரு பாராட்டிய அடுத்த நொடியே இது ரணகளத்தில் முடியப் போகிறது என நான் ஊகித்தேன். அப்படியே நடந்தது.

சாருவை ஒருவர் நெருங்குவது கவர்னர் மகளான நக்மாவை பிரபுதேவா காதலிப்பது போலத் தான். கரும்பூனைகள், லாடம் அடிக்கும் போலீஸ், குண்டு வைப்பவர்கள் என பல அரண்களைக் கடந்து தான் ஒரு சின்ன முத்தமாவது அவருக்கு நீங்கள் கொடுக்க இயலும்!

இப்போது லுலு எழுதுவது குப்பையா உன்னதமா என்பதை விட ஏன் இவ்வளவு வன்மமாய் இதை எதிர்கொள்கிறார்கள் என்பது தான் எனக்கு ஆர்வமூட்டுவதாய் உள்ளது.
சாரு புதிதாக யாரை நெருங்கினாலும் சாருவை யாராவது நெருங்கினாலும் ஒரு வாரத்துக்குள் சாருவின் நண்பர்கள் அவரை சுற்றி நின்று தாக்குவார்கள். அல்லது சாருவே இந்த புதுவரவை நிராகரித்து அடித்து துவைத்து துரத்தி விடுவார். அப்படி அவரை இவர்கள் செய்ய வைப்பார்கள்.
இதற்கு பின்னால் இயங்குவது பொறாமை, மலினமான வயிற்றெரிச்சல் என்றெல்லாம் நான் முன்பு நம்பி இருக்கிறேன். இப்போது சாருவின் மீது இவர்களுக்கு உள்ள மிதமிஞ்சிய அன்பே அவர்களை இப்படி செய்ய வைக்கிறது என தோன்றுகிறது.
இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என புரிந்து கொள்ள ஜெயமோகன், எஸ்.ரா போன்றோரின் வாசகர்கள் ஏனிப்படி இல்லை என்று கேட்க வேண்டும். பின்னவர்கள் வெறும் வாசகர்களாக மட்டுமே – அறிவார்ந்த, கலாச்சார தளத்தில் – ஜெ.மோ அல்லது எஸ்.ராவை அணுகுகிறாரக்ள். அதனால் பெரிய பொறாமை பூசல்கள் அங்கு இல்லை. ஆனால் சாருவின் வாசகர்கள் / நண்பர்கள் அவரை உணர்வுரீதியாய், ஒரு வித “காமத்துடன்” அணுகுகிறார்கள். சாருவும் அவ்வாறு தான் அவர்களை நடத்துகிறார்.
 ஆனால் சாருவுக்கு யார் மீதும் பொறாமை இருப்பதில்லை. எனக்குத் தருவதை விட அதிக பிரியத்தை உன் காதலியிடம் ஏன் காட்டுகிறாய் என அவர் உங்களிடம் கோபிக்க மாட்டார்.
 ஏனென்றால் சாரு எதைப் பற்றியும் எவரைப் பற்றியும் அதிக நேரம் சிந்திக்க மாட்டார். அவர் எந்த கணத்தில் இருக்கிறாரோ அந்த கணத்தைத் தாண்டி சிந்தித்து மூளையை பாரமேற்றுவதில்லை. சிந்தனைகள், கருத்துக்கள், மனநிலை, அடிதடி, கோபம், மனம் கசிதல், உற்சாகம் எல்லாமே அவருக்கு செருப்பைப் போல. சுலபத்தில் கழற்றி வைத்து அடுத்த வேலைக்கு போய் விடுவார். மனிதர்கள் கூட அவருக்கு கிட்டத்தட்ட ஒரு ஆடை போலத் தான். ஒன்றை கழற்றி விட்டு இன்னொன்றை அணிந்து கொள்வார்.
இது சாருவுக்கு இயல்பாக அமைந்த ஒரு சிறப்பான அணுகுமுறை. இதுவே அவரை சதா இறகு போல் சன்னமாய், நீர்க்குமிழி போல் எங்கு வேண்டுமெனிலும் மெல்லென போய் அமரக் கூடியவராய், உற்சாகத்தில் திளைப்பவராய் வைத்துள்ளது. அவர் எந்த பாரத்தையும் தன் இதயத்தில் சுமப்பதில்லை.

இதே காரணத்தால் தான் அவர் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை கூறி வருகிறார். சாருவின் மனநிலைப்படி அவரால் எந்த கருத்துநிலையுடனும் நிரந்தரமாய் பிணைந்திருக்க முடியாது. நேற்றைய சாரு இன்றைய சாரு அல்ல. அவரிடம் ஒரு தொடர்ச்சியை எதிர்பார்ப்பதே அபத்தம் தான்.

Comments

PV said…
மனித உளவியல்படி எவரும் புதுத்தொடக்கத்தை தங்கள் சிந்தனைகளில் உருவாக்க முடியாது. No one can begin on a tabla rasa. ஆனால் முயற்சிப்பது உண்டு. ஓரளவுக்கு வெற்றி கிடைக்கலாம். அங்கும் ஆழநோக்கின், அப்புதிய சிந்தனைகளுக்கு அடித்தளம் ஏற்கன்வே இருக்கிறது. இது ஃப்ராயிட் உளவியல். சப் கான்சியஸ். இதன்படி, அறிவழகன் தன்னை விட்டு விலகவே முடியாது. விலகியதாக நடிக்கலாம். நான் அவரெழுதும் பழைய கட்டுரைகளை - திணமனியிலும் அவர் இணையத்திலும் - தொடர்ந்து வாசித்தேன்: எனக்குப் பட்டது அவர வட்டத்தில் அவர் வாழ்கிறார்; அதன்படியே அவர் கட்டுரைகள். Once an actor, always an actor . சாமான்ய மனிதர்களுக்கு பிம்பங்கள் இல. அப்படியே இருந்தாலும் அதனால் பெருஞ்சிறை அவர்களுக்கு உருவாகாது. நடிகர்கள், எழுத்தாளர்கள் பிம்பங்கள் அறிந்தும் அறியாமலும் உருவாக்கப்பட்டு அவர்கள் சிறைப்படுகிறார்கள். கருத்தில் மட்டுமன்று, எழுத்து நடையிலும் கூட சிறைப்படுகிறார்கள். அறிவழகனின் பார்வையையும் எழுத்து நடையும் அவரின் கல்லறை வரை செல்லும். அதைப்போலவே மற்றவர்களும்.

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...