Skip to main content

தனிமனிதன் எனும் பிரமை (2)

Image result for boys movie

கலைஞர்கள், படைப்பாளிகள், படைப்பு மனம் கொண்டவர்கள் ஒரு சிறுபான்மையினராக வாழ்க்கை முழுக்க நீடித்த பதின்பருவத்தில் வாழ்வார்கள். தொடர்ந்து “தன்னை” முன்வைக்க போராடிக் கொண்டிருப்பார்கள். பதின்வயதின் சிக்கல்களான வன்முறை, தீவிர போதைப் பழக்கம், கருத்து மோதல், சுய அடையாளத்தை சத்தமாய் அறிவிப்பது, பாலியல் பொறாமை மோதல்கள் ஆகியனவற்றை நாம் இலக்கிய குழுக்களில் இன்றும் காணலாம்.

 பொது சமூகம் எழுத்தாளனையும் கலைஞனையும் சற்று கோணலான பிரகிருதிகளாய் கருதுவது அவர்களின் இந்த “முதிராத”, “முதிர விரும்பாத” தன்மையினால் தான். மேற்கே ஷெல்லியில் இருந்து ஹெமிங்வே வரை, தமிழில் ஆத்மாநாம், ஜி.நாகராஜன், பிரமிள் முதல் லஷ்மி மணிவண்ணன் வரை நம் காண்பது இந்த நீட்டிக்கபட்ட “பாய்ஸ்” மனநிலை தான்.
பொதுவாக படைப்பாளிகள் “பதின்பருவத்தில்” நீடிக்கும் போது நாம் அவர்களை கலகக்காரர்கள் என்கிறோம். ஏனென்றால் சமூக போக்குகளுடனான தமது முரண்பாட்டுக்கு அவர்கள் அரசியல், கலை, உளவியல் சார்ந்த சித்தாந்த நியாயப்பாடுகளை அளிக்கிறார்கள். தாம் கலகக்காரர்கள் எனும் அதேவேளை தாம் அனுபவிக்கும் வேதனையை, பதற்றங்களை, நெருக்கடியை தொடர்ந்து பதிவு செய்யவும் செய்கிறார்கள்.
எழுத்தாளன் என்றாலே துயரத்தில் தோய்ந்தவன், தன் இருப்பு குறித்த ஐயப்பாடுகள் கொண்டவன் எனும் பிம்பம் உலகம் முழுக்க இருக்கிறது. இது பதின்பருவ நிலையின்மையை அவர்கள் கலையின், தத்துவத்தின், அதிகார எதிர்ப்பின் நுட்பமான தீவிரமான நிலைகளுக்கு எடுத்துப் போவதாலே நிகழ்கிறது.
 “முதிர்ச்சியான”, நரைகூடிய, சமூகப் பொறுப்பு கொண்ட “பாய்ஸாக” கலைஞர்கள் இருக்கிறார்கள். சமூகம் அவர்களின் இந்த பங்களிப்பை மதித்தாலும் அங்கீகரித்தாலும், முக்கிய ஆட்சி அதிகார முடிவுகளை எடுக்கும் வாய்ப்புகளை அது இந்த “பாய்ஸுக்கு” அநேகமாய் அளித்ததில்லை.
 ஒரு சிறந்த ஆட்சியாளனாக தத்துவவாதியும் சிந்தனையாளனுமே இருக்க இயலும் என பிளேட்டோ அறிவித்து எத்தனையோ நூற்றாண்டுகள் ஆகின்றன. ஆனால் அறிவுஜீவிகள் வரலாற்றில் எந்த சமூகமும் முழுக்க நம்பி பொறுப்பை கொடுப்பதாய் நிகழ்ந்ததில்லை. அப்படி நடந்தாலும் அந்த அறிவுஜீவி தன் “கலகக்கார பிம்பத்தை” கழற்றி வைத்து விட்டு “முதிர்ச்சியை” எடுத்து அணிந்தவனாக இருப்பான்.
Image result for karunanidhiImage result for nehru playboy

கலைஞர் கருணாநிதி இதற்கு நேர்மறை உதாரணம். நேரு ஒரு எதிர்மறை உதாரணம். கலைஞரின் அரசியல் வாழ்க்கை வெற்றிகரமானது, தத்தளிப்புகள் அற்றது. ஏனெனில் அவர் அரசியலில் டீனேஜ் கலகக்காரர் அல்ல. ஆனால் நேருவோ அவ்வாறு டீனேஜ் முகமூடியை கழற்ற முடியாது தத்தளித்தவர். சர்தார் பட்டேலிடம் இருந்து தொடர்ந்து தன் அரசியல் இடம் குறித்த நெருக்கடியை சந்தித்தவர்.
டீனேஜில் நாம் அனுபவிக்கும் உள்-போராட்டத்தின் மையமே “நான் தனி ஆள்” என காட்டும் விழைவு தான் என கூறினேன் அல்லவா; நமக்குள் இந்த ”தனி ஆள்” உண்மையிலே இருக்கிறானா? அல்லது இது ஒருவித பிரமையா? தனிமனித நிலை உன்னதமானதா அல்லது பொதுப்போக்கு / பொதுப்புத்தி என பழிக்கப்படும் சமூக மனநிலை சரியானதா? ஊரை எதிர்ப்பது சரியா ஊருக்கு வழங்கிப் போவது சரியா? இந்த கேள்விகளை எனது மாணவர் ஒருவர் சமீபத்தில் என்னிடம் எழுப்பினார்.
 அவர் பெயர் ஆதர்ஷ். ஆரம்பநிலை எழுத்தாளன். தன் கட்டுரைகளை எனக்கு அனுப்பி கருத்துக் கேட்பார். ஆய்ஷின் கேள்விகள் என்ன என அடுத்த பதிவில் பார்ப்போம்…
(தொடரும்)


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...