முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்துத்துவாவுக்கு இந்து மதம் முக்கியமல்ல (4)

 Image result for gandhi
 காந்தி தேசவிடுதலைக்காக போராடினாலும், தேசத்தின் தந்தையாக அறியப்பட்டாலும் அவர் மக்கள் ஒற்றை அடையாளத்தின் கீழ் ஒரு தேசிய இனமாய் தொகுக்கப்பட வேண்டும் என விரும்பவில்லை. இந்தியாவும் இந்திய பண்பாடும் இம்மக்களும் பன்மைத்துவம் கொண்டவர்கள், நெகிழ்வானவர்கள், மற்றமையை தமது வாழ்வின் ஒரு பகுதியாய் ஏற்று இணங்கி செல்லக் கூடியவர்கள் என அவர் நினைத்தார். அதனாலே யாரையும் எதையும் வெறுக்க வேண்டியதில்லை என்றார். இந்தியா ஒரு தேசமாய் சுயாட்சி பெற வேண்டும் என்பதை விட ஆன்மீக ரீதியாய் தன்னிறைவு பெற்ற, வறுமை நீங்கி கல்வி பெற்ற நாடாக வேண்டும் என்றே காந்தி நம்பினார். அந்த நிலைக்கு நம்மை எடுத்துப் போக ஆங்கிலேயரால் முடியுமெனில் அவர்களே ஆளட்டுமே என அவர் கூறினார்.

 ஜாலியன் வாலாபாக் படுகொலை தான்வெள்ளையர் அத்தகுதியை இழந்து விட்டனர்என காந்தியை அவநம்பிக்கை கொள்ள வைத்தது. தேச விடுதலைக்குப் பிறகு காங்கிஸர் கலைக்கப்பட வேண்டும் என அவர் கோரியது, ஆட்சிப் பொறுப்பேற்க மறுத்தது ஆகிய நடவடிக்கைகள் அவர் ஐரோப்பிய வரையறைக்கு உட்பட்ட நவீன தேசிய அமைப்பில் நம்பிக்கை அற்றவர் என்பதைக் காட்டியது.
மேலும் நவீன தேசங்கள் நகரங்களை மையமிட்டவை. நவீன வளர்ச்சியை மைய விசையாய் கொள்பவை. ஆனால் காந்தியோ இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் உள்ளது என்றார். எந்திரமயமாக்கல் இந்தியாவுக்கு ஊறு விளைவிக்கும் என்றார். காந்தியால் தேசம் எனும் கருத்தாக்கத்தை ஏற்றுக் கொண்டிருக்க முடியாததற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாய் இருந்திருக்கலாம்.
காந்தி இந்து மதத்தை அவ்வளவு தீவிரமாய் முன்னெடுத்து, ஒரு துறவி போன்றே தன்னைக் காட்டிக் கொண்டார் என்றால் அக்காலத்தைய இந்துத்துவர்கள் நவீனர்களாய், ஐரோப்பிய சாயல் கொண்டவர்களாய், பழமையான இந்து மத சடங்குகளில் நம்பிக்கை அற்றவர்களாய், நாத்திகர்களாய் அல்லது மதசீர்திருத்தவாதிகளாய் இருந்தனர். அவர்கள் நகரங்களின் மைந்தர்களாய், கிராமங்களுடன் தொடர்பற்றவர்களாய் இருந்தனர். காந்தி மக்களை நோக்கிநாம் கிராமங்களை நோக்கி செல்வோம்என்றால், இந்துத்துவர்களோநாம் நகரங்களை நோக்கி நகர்வோம், அங்கே வளர்ச்சி சாத்தியம், அதுவே முன்னேற்றம்என்றனர்.
இந்திய நகரமயமாக்கல் எனும் தனது பிஞ்சு பாதங்களை பதித்து நடக்கத் தொடங்கிய காலம் அது. அப்போது நகரம் சார்ந்த படித்த மத்திய, மேல்மத்திய வர்க்க இந்துக்களுக்கு ஒற்றைபட்டையான ஒரு இந்து மதம் தேவைப்பட்டது. ஆயிரக்கணக்கான கடவுளர்களும் பல்லாயிரம் சடங்குகளும் இல்லாத (கிறித்துவம் போன்ற) எளிமையாக்கப்பட்ட ஒரே கடவுள், ஒரே வேதபுத்தகம் கொண்ட ஒரு இந்து மதம் அவர்களுக்கு தேவைப்பட்டது. அந்த ஒற்றை பட்டையான இந்து எனும் அடையாளத்தின் கீழ் படித்த மேற்தட்ட இந்துக்கள் திரள விரும்பினர். அத்தகைய ஒரு சித்தாந்தத்தை அவர்களுக்காக அன்று உருவாக்கி அளித்தவரே சாவார்க்கர். ஆனால் அச்சித்தாந்தம் மக்களால் முழுக்க ஏற்கப்பட்டு பரவலாக ஒரு அரசியல் விசையாக மாறுவதற்கு அரை நூற்றாண்டுக்கு மேல் தேவைப்பட்டது.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், இந்தியா சுதந்திரம் பெறத் தயாராகி வந்த காலகட்டத்தில், நகரமயமாக்கலின் முதல் கட்டத்தில் இருந்த இந்தியாவில் ஏற்பட்ட ஒரு சமூக அழுத்தத்தின், தேசியமாக்கல் இச்சையின் முகம் தான் சாவார்க்கர் என்கிறார் ஆஷிஸ் நந்தி. மோடியின் ஆட்சியின் கீழ் இன்று வளர்ச்சி, முன்னேற்றம், பொருளாதாரம் ஆகிய கோஷங்களின் அடிப்படையில் இந்துத்துவா கொடி பறப்பது எதேச்சையானது அல்ல. இதன் வேர் 1930களிலேயே ஆழ இறங்கி பதிந்து விட்டது. மதம் அன்றும் இன்றும் இந்துத்துவர்களுக்கு மக்களை ஒருங்கிணைப்பதற்கான ஒரு சாக்குபோக்கு மட்டும் தான், உணர்ச்சிகரமாய் தந்திரம் மட்டும் தான். தேசிய அடையாளத்தின் கீழ், நகரமயமாக்கலையும் முதலாளித்துவ பாய்ச்சலையும் முன்னெடுத்து மக்களை திரட்டுவதே அவர்களின் பிரதான அஜெண்டா.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...