Skip to main content

இந்துத்துவாவுக்கு இந்து மதம் முக்கியமல்ல (4)

 Image result for gandhi
 காந்தி தேசவிடுதலைக்காக போராடினாலும், தேசத்தின் தந்தையாக அறியப்பட்டாலும் அவர் மக்கள் ஒற்றை அடையாளத்தின் கீழ் ஒரு தேசிய இனமாய் தொகுக்கப்பட வேண்டும் என விரும்பவில்லை. இந்தியாவும் இந்திய பண்பாடும் இம்மக்களும் பன்மைத்துவம் கொண்டவர்கள், நெகிழ்வானவர்கள், மற்றமையை தமது வாழ்வின் ஒரு பகுதியாய் ஏற்று இணங்கி செல்லக் கூடியவர்கள் என அவர் நினைத்தார். அதனாலே யாரையும் எதையும் வெறுக்க வேண்டியதில்லை என்றார். இந்தியா ஒரு தேசமாய் சுயாட்சி பெற வேண்டும் என்பதை விட ஆன்மீக ரீதியாய் தன்னிறைவு பெற்ற, வறுமை நீங்கி கல்வி பெற்ற நாடாக வேண்டும் என்றே காந்தி நம்பினார். அந்த நிலைக்கு நம்மை எடுத்துப் போக ஆங்கிலேயரால் முடியுமெனில் அவர்களே ஆளட்டுமே என அவர் கூறினார்.

 ஜாலியன் வாலாபாக் படுகொலை தான்வெள்ளையர் அத்தகுதியை இழந்து விட்டனர்என காந்தியை அவநம்பிக்கை கொள்ள வைத்தது. தேச விடுதலைக்குப் பிறகு காங்கிஸர் கலைக்கப்பட வேண்டும் என அவர் கோரியது, ஆட்சிப் பொறுப்பேற்க மறுத்தது ஆகிய நடவடிக்கைகள் அவர் ஐரோப்பிய வரையறைக்கு உட்பட்ட நவீன தேசிய அமைப்பில் நம்பிக்கை அற்றவர் என்பதைக் காட்டியது.
மேலும் நவீன தேசங்கள் நகரங்களை மையமிட்டவை. நவீன வளர்ச்சியை மைய விசையாய் கொள்பவை. ஆனால் காந்தியோ இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் உள்ளது என்றார். எந்திரமயமாக்கல் இந்தியாவுக்கு ஊறு விளைவிக்கும் என்றார். காந்தியால் தேசம் எனும் கருத்தாக்கத்தை ஏற்றுக் கொண்டிருக்க முடியாததற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாய் இருந்திருக்கலாம்.
காந்தி இந்து மதத்தை அவ்வளவு தீவிரமாய் முன்னெடுத்து, ஒரு துறவி போன்றே தன்னைக் காட்டிக் கொண்டார் என்றால் அக்காலத்தைய இந்துத்துவர்கள் நவீனர்களாய், ஐரோப்பிய சாயல் கொண்டவர்களாய், பழமையான இந்து மத சடங்குகளில் நம்பிக்கை அற்றவர்களாய், நாத்திகர்களாய் அல்லது மதசீர்திருத்தவாதிகளாய் இருந்தனர். அவர்கள் நகரங்களின் மைந்தர்களாய், கிராமங்களுடன் தொடர்பற்றவர்களாய் இருந்தனர். காந்தி மக்களை நோக்கிநாம் கிராமங்களை நோக்கி செல்வோம்என்றால், இந்துத்துவர்களோநாம் நகரங்களை நோக்கி நகர்வோம், அங்கே வளர்ச்சி சாத்தியம், அதுவே முன்னேற்றம்என்றனர்.
இந்திய நகரமயமாக்கல் எனும் தனது பிஞ்சு பாதங்களை பதித்து நடக்கத் தொடங்கிய காலம் அது. அப்போது நகரம் சார்ந்த படித்த மத்திய, மேல்மத்திய வர்க்க இந்துக்களுக்கு ஒற்றைபட்டையான ஒரு இந்து மதம் தேவைப்பட்டது. ஆயிரக்கணக்கான கடவுளர்களும் பல்லாயிரம் சடங்குகளும் இல்லாத (கிறித்துவம் போன்ற) எளிமையாக்கப்பட்ட ஒரே கடவுள், ஒரே வேதபுத்தகம் கொண்ட ஒரு இந்து மதம் அவர்களுக்கு தேவைப்பட்டது. அந்த ஒற்றை பட்டையான இந்து எனும் அடையாளத்தின் கீழ் படித்த மேற்தட்ட இந்துக்கள் திரள விரும்பினர். அத்தகைய ஒரு சித்தாந்தத்தை அவர்களுக்காக அன்று உருவாக்கி அளித்தவரே சாவார்க்கர். ஆனால் அச்சித்தாந்தம் மக்களால் முழுக்க ஏற்கப்பட்டு பரவலாக ஒரு அரசியல் விசையாக மாறுவதற்கு அரை நூற்றாண்டுக்கு மேல் தேவைப்பட்டது.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், இந்தியா சுதந்திரம் பெறத் தயாராகி வந்த காலகட்டத்தில், நகரமயமாக்கலின் முதல் கட்டத்தில் இருந்த இந்தியாவில் ஏற்பட்ட ஒரு சமூக அழுத்தத்தின், தேசியமாக்கல் இச்சையின் முகம் தான் சாவார்க்கர் என்கிறார் ஆஷிஸ் நந்தி. மோடியின் ஆட்சியின் கீழ் இன்று வளர்ச்சி, முன்னேற்றம், பொருளாதாரம் ஆகிய கோஷங்களின் அடிப்படையில் இந்துத்துவா கொடி பறப்பது எதேச்சையானது அல்ல. இதன் வேர் 1930களிலேயே ஆழ இறங்கி பதிந்து விட்டது. மதம் அன்றும் இன்றும் இந்துத்துவர்களுக்கு மக்களை ஒருங்கிணைப்பதற்கான ஒரு சாக்குபோக்கு மட்டும் தான், உணர்ச்சிகரமாய் தந்திரம் மட்டும் தான். தேசிய அடையாளத்தின் கீழ், நகரமயமாக்கலையும் முதலாளித்துவ பாய்ச்சலையும் முன்னெடுத்து மக்களை திரட்டுவதே அவர்களின் பிரதான அஜெண்டா.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...