முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இச்சை என்பது மூன்று நிமிட சமாச்சாரம் அல்ல (3)


Image result for desire painting

என்னை மிகவும் மூச்சு முட்ட செய்யும் ஒன்றே என்னை புத்துணர்வூட்டவும் செய்கிறது என்பதை நான் அறிந்திருக்கிறேன். ஆனால் உறவில் சுலபத்தில் நாம் இந்த இருமையில் ஒன்றை மட்டுமே ஒருவர் மீது சுமத்தி, அது மட்டுமே அவர் என கருத வாய்ப்பதிகம். இவர் என்னை மூச்சுத் திணறடிக்கிறார் என எண்ணும் போது இவரிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதே நம் ஒரே பிரார்த்தனையாக இருக்கிறது. நாம் நம்மை அறிவது போல்நாம் நமது முரண்களை உணர்வதைப் போல - அடுத்தவரை அறிய முடிவதில்லை. இது பிரிவுகளுக்கு இட்டுச் செல்கிறது.
 நாணயத்தை சுண்டும் போதும் தலை விழுகிறது என்றால் அதன் பொருள் அடுத்த முறை அது விழும் போது பூவாகவும் இருக்கலாம் என்பதே. சந்தர்ப்பமும் மனநிலையையும் வாழ்க்கை நிலையும் சாதகமாக இருந்தால் இப்போது நீங்கள் நேசித்த ஒருவரை வெறுக்க காரணமாக உள்ள விசயமே அவரை மோகிக்க மீண்டும் காரணமானதாக மாறலாம்.
கீழே வருவது அறிவியல் இச்சைக்கு தரும் விளக்கம்:

 புணர்ச்சி மற்றும் இனவிருத்திகாக மட்டுமே நாம் எதிர்பாலினத்தின் பால் ஈர்க்கப்படுகிறோம். நமது காதல் இனவிருத்தியில் நாம் ஈடுவதற்காக இயற்கை நம் உடலை வைத்து ஆடும் ஒரு விளையாட்டு; ஒருவரிடம் நம் காம நோக்கம் நிறைவேறின பின் அவரை விடுத்து அடுத்த துணையை நாடிச் செல்வதே வலுவான எதிர்கால தலைமுறையினரை உருவாக்க உதவும்.”
என்னைப் பொறுத்தமட்டில், இது ஒரு தட்டையான விளக்கம். நாம் இனவிருத்திக்கு அப்பாலும் ஏன் நேசத்துக்கு உரியவர்கள் மீது இவ்வளவு உணர்வுபூர்வமான ஈடுபாட்டுடன் இருக்கிறோம்? நமது இருப்பு, மகிழ்ச்சி, நிறைவு, வாழ்வின் அர்த்தம் ஆகியவை எப்படி நாம் இச்சிக்கும், விரும்பும், நேசிக்கும் ஒருவரின் அருகாமையால் ஒரு மேஜிக் போல சுலபத்தில் சாத்தியமாகிறது எனும் கேள்விகளுக்கு மேற்சொன்ன அறிவியல் விளக்கத்தில் பதில் இல்லை.
ஒரு நண்பர் என்னிடம் இக்கேள்வியை கேட்டார்: “என்ன தான் பெரிய மனதுடன், தர்க்க ரீதியாய் யோசித்தாலும், ஒரு பெண் நம்மை நிராகரிப்பதை நம்மால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை இல்லையா? அது அவளது சுதந்திரம் என அந்நிராகரிப்பை மன்னித்து நம்மால் ஏற்க முடிவதில்லை தானே?”
புணர்ச்சிக்காக மட்டுமே ஒரு பெண்ணை நாடுகிறோம் என்றால் நிராகரிப்பு ஏமாற்றத்தையே ஏற்படுத்தக் கூடாது. இந்த உலகில் உடல்களுக்கா பஞ்சம்? மேலும் இச்சை பெருகும் போது எல்லா பெண்ணுடல்களும் ஒன்று தானே? ஆக, நமது ஏமாற்றத்திற்கான காரணமே வேறு:
ஒரு பெண் (ஆண்) நம் வாழ்வில் வரும் போது நம்மை உருமாற்றுகிறார்; நமது உரையாடல்களில் வண்ணமேற்றுகிறார்; நம் இருப்பில் தித்திப்பை, கிளர்ச்சியை, வெளிச்சத்தை கொணர்கிறார்; மேலும் அர்த்தபூர்வமாய் இவ்வாழ்வை அறிய உதவுகிறார். வாசனை மிக்க ஒரு மலர்க்கொத்து நம் அறைக்குள் வருவது போன்றதே பிரியத்துக்கு உரியவர் நம் வாழ்வுக்குள் நுழைவது. அவர் இல்லாமல் ஆகும் போது நம் அறை வாசனையற்றதாக ஆகிறது. நம் மொழி சொற்கள் இல்லாமல் வெறுமையாகிறது. நம் பகல்களில் இருள் சூழ்கிறது. நம் இருப்பு எடையிழக்கிறது. எதிலும் அர்த்தம் காண முடியாமல் போகிறது. இதைத் தான் நம்மால் உண்மையில் தாங்க முடியாமல் போகிறது. மூன்று நிமிட செக்ஸ் நிறைவேற்றம் மட்டுமே நம் இச்சையின் நோக்கம் எனில் உலகம் இவ்வளவு சிக்கலாய், குழப்பமாய், எதிர்பாராமைகள் நிறைந்ததாய் இராது.
இச்சை நம் பாலுறுப்புகளில் குடியிருக்கிறது என அறிவியல் கோருவது உண்மை அல்ல; இச்சை நம் மொழியில், நாம் உருவாக்கும் பல்வேறு குறியீடுகள், உருவகங்களில் வாழ்ந்து தழைக்கிறது; பல்கி பெருகுகிறது. அடுத்தவர் மீதான இச்சை நம் மீதான, நமது இருப்பு மீதான, நமது வாழ்வின் அர்த்தங்கள் மீதான இச்சையாக திரும்புகிறது.
 இந்த உருமாற்றம் இச்சையைப் பற்றி யோசிக்கும் பேசும் கற்பனை செய்யும் ஒவ்வொருவருக்குள்ளும் நிகழ்கிறது. இதனால் தான் தன்னை நிராகரிக்கும் பெண்ணை தாக்கி அழிக்க ஒரு ஆண் விழைகிறான். தன்னை நிராகரிக்கும் ஆணை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என ஒரு பெண் தவிக்கிறாள். ஏனெனெனில் அவர் உங்கள் உடலை நிராகரிக்கவில்லை; உங்கள் இருப்பை, வாழ்வில் உங்கள் நிலைப்பை, உங்களை பாதுகாக்கும் நம்பிக்கைகளை மறுக்கிறார். சிதைக்கிறார். நீங்கள் யாருமில்லை; நீங்கள் யாருடனும் இல்லை; உங்களுக்கு இங்கு இடமே இல்லை என உங்களை ஒரு நிமிடம் எண்ண வைக்கிறார். அதை உங்களாலோ யாராலோ தாங்கிக் கொள்ள இயலாது. உங்கள் கழுத்தில் கத்தி வைப்பவரை கூட மன்னிப்பீர்கள். ஆனால் வெறும் தூசாக உங்களை மாற்றியவரை மன்னிக்கவே இயலாது.
இச்சிப்பது என்பது இச்சிப்பது மட்டுமே அல்ல. நீங்கள் யார் எனும் கேள்விக்கான விடை தேடலே இச்சையில் இருந்து தான் துவங்குகிறது. அடுத்த முறை ஐ லவ் யூ சொல்லும் போது அதை நீங்கள் உங்களுக்கும் தான் சொல்லிக் கொள்கிறீர்கள் என்பதை மறவாதீர்கள்.
பி.கு: நான் காதலையும் காமத்தையும் தனித்தனியாய் காணவில்லை. இச்சை என இரண்டையும் சேர்த்தே குறிக்கிறேன்.

நன்றி: தீராநதி, 2018



கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
I don't know whether ur articles like this are getting due readership, sir?!
Have u read Alain Badiou's "In praise of love"?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.