Skip to main content

இச்சை என்பது மூன்று நிமிட சமாச்சாரம் அல்ல (3)


Image result for desire painting

என்னை மிகவும் மூச்சு முட்ட செய்யும் ஒன்றே என்னை புத்துணர்வூட்டவும் செய்கிறது என்பதை நான் அறிந்திருக்கிறேன். ஆனால் உறவில் சுலபத்தில் நாம் இந்த இருமையில் ஒன்றை மட்டுமே ஒருவர் மீது சுமத்தி, அது மட்டுமே அவர் என கருத வாய்ப்பதிகம். இவர் என்னை மூச்சுத் திணறடிக்கிறார் என எண்ணும் போது இவரிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதே நம் ஒரே பிரார்த்தனையாக இருக்கிறது. நாம் நம்மை அறிவது போல்நாம் நமது முரண்களை உணர்வதைப் போல - அடுத்தவரை அறிய முடிவதில்லை. இது பிரிவுகளுக்கு இட்டுச் செல்கிறது.
 நாணயத்தை சுண்டும் போதும் தலை விழுகிறது என்றால் அதன் பொருள் அடுத்த முறை அது விழும் போது பூவாகவும் இருக்கலாம் என்பதே. சந்தர்ப்பமும் மனநிலையையும் வாழ்க்கை நிலையும் சாதகமாக இருந்தால் இப்போது நீங்கள் நேசித்த ஒருவரை வெறுக்க காரணமாக உள்ள விசயமே அவரை மோகிக்க மீண்டும் காரணமானதாக மாறலாம்.
கீழே வருவது அறிவியல் இச்சைக்கு தரும் விளக்கம்:

 புணர்ச்சி மற்றும் இனவிருத்திகாக மட்டுமே நாம் எதிர்பாலினத்தின் பால் ஈர்க்கப்படுகிறோம். நமது காதல் இனவிருத்தியில் நாம் ஈடுவதற்காக இயற்கை நம் உடலை வைத்து ஆடும் ஒரு விளையாட்டு; ஒருவரிடம் நம் காம நோக்கம் நிறைவேறின பின் அவரை விடுத்து அடுத்த துணையை நாடிச் செல்வதே வலுவான எதிர்கால தலைமுறையினரை உருவாக்க உதவும்.”
என்னைப் பொறுத்தமட்டில், இது ஒரு தட்டையான விளக்கம். நாம் இனவிருத்திக்கு அப்பாலும் ஏன் நேசத்துக்கு உரியவர்கள் மீது இவ்வளவு உணர்வுபூர்வமான ஈடுபாட்டுடன் இருக்கிறோம்? நமது இருப்பு, மகிழ்ச்சி, நிறைவு, வாழ்வின் அர்த்தம் ஆகியவை எப்படி நாம் இச்சிக்கும், விரும்பும், நேசிக்கும் ஒருவரின் அருகாமையால் ஒரு மேஜிக் போல சுலபத்தில் சாத்தியமாகிறது எனும் கேள்விகளுக்கு மேற்சொன்ன அறிவியல் விளக்கத்தில் பதில் இல்லை.
ஒரு நண்பர் என்னிடம் இக்கேள்வியை கேட்டார்: “என்ன தான் பெரிய மனதுடன், தர்க்க ரீதியாய் யோசித்தாலும், ஒரு பெண் நம்மை நிராகரிப்பதை நம்மால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை இல்லையா? அது அவளது சுதந்திரம் என அந்நிராகரிப்பை மன்னித்து நம்மால் ஏற்க முடிவதில்லை தானே?”
புணர்ச்சிக்காக மட்டுமே ஒரு பெண்ணை நாடுகிறோம் என்றால் நிராகரிப்பு ஏமாற்றத்தையே ஏற்படுத்தக் கூடாது. இந்த உலகில் உடல்களுக்கா பஞ்சம்? மேலும் இச்சை பெருகும் போது எல்லா பெண்ணுடல்களும் ஒன்று தானே? ஆக, நமது ஏமாற்றத்திற்கான காரணமே வேறு:
ஒரு பெண் (ஆண்) நம் வாழ்வில் வரும் போது நம்மை உருமாற்றுகிறார்; நமது உரையாடல்களில் வண்ணமேற்றுகிறார்; நம் இருப்பில் தித்திப்பை, கிளர்ச்சியை, வெளிச்சத்தை கொணர்கிறார்; மேலும் அர்த்தபூர்வமாய் இவ்வாழ்வை அறிய உதவுகிறார். வாசனை மிக்க ஒரு மலர்க்கொத்து நம் அறைக்குள் வருவது போன்றதே பிரியத்துக்கு உரியவர் நம் வாழ்வுக்குள் நுழைவது. அவர் இல்லாமல் ஆகும் போது நம் அறை வாசனையற்றதாக ஆகிறது. நம் மொழி சொற்கள் இல்லாமல் வெறுமையாகிறது. நம் பகல்களில் இருள் சூழ்கிறது. நம் இருப்பு எடையிழக்கிறது. எதிலும் அர்த்தம் காண முடியாமல் போகிறது. இதைத் தான் நம்மால் உண்மையில் தாங்க முடியாமல் போகிறது. மூன்று நிமிட செக்ஸ் நிறைவேற்றம் மட்டுமே நம் இச்சையின் நோக்கம் எனில் உலகம் இவ்வளவு சிக்கலாய், குழப்பமாய், எதிர்பாராமைகள் நிறைந்ததாய் இராது.
இச்சை நம் பாலுறுப்புகளில் குடியிருக்கிறது என அறிவியல் கோருவது உண்மை அல்ல; இச்சை நம் மொழியில், நாம் உருவாக்கும் பல்வேறு குறியீடுகள், உருவகங்களில் வாழ்ந்து தழைக்கிறது; பல்கி பெருகுகிறது. அடுத்தவர் மீதான இச்சை நம் மீதான, நமது இருப்பு மீதான, நமது வாழ்வின் அர்த்தங்கள் மீதான இச்சையாக திரும்புகிறது.
 இந்த உருமாற்றம் இச்சையைப் பற்றி யோசிக்கும் பேசும் கற்பனை செய்யும் ஒவ்வொருவருக்குள்ளும் நிகழ்கிறது. இதனால் தான் தன்னை நிராகரிக்கும் பெண்ணை தாக்கி அழிக்க ஒரு ஆண் விழைகிறான். தன்னை நிராகரிக்கும் ஆணை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என ஒரு பெண் தவிக்கிறாள். ஏனெனெனில் அவர் உங்கள் உடலை நிராகரிக்கவில்லை; உங்கள் இருப்பை, வாழ்வில் உங்கள் நிலைப்பை, உங்களை பாதுகாக்கும் நம்பிக்கைகளை மறுக்கிறார். சிதைக்கிறார். நீங்கள் யாருமில்லை; நீங்கள் யாருடனும் இல்லை; உங்களுக்கு இங்கு இடமே இல்லை என உங்களை ஒரு நிமிடம் எண்ண வைக்கிறார். அதை உங்களாலோ யாராலோ தாங்கிக் கொள்ள இயலாது. உங்கள் கழுத்தில் கத்தி வைப்பவரை கூட மன்னிப்பீர்கள். ஆனால் வெறும் தூசாக உங்களை மாற்றியவரை மன்னிக்கவே இயலாது.
இச்சிப்பது என்பது இச்சிப்பது மட்டுமே அல்ல. நீங்கள் யார் எனும் கேள்விக்கான விடை தேடலே இச்சையில் இருந்து தான் துவங்குகிறது. அடுத்த முறை ஐ லவ் யூ சொல்லும் போது அதை நீங்கள் உங்களுக்கும் தான் சொல்லிக் கொள்கிறீர்கள் என்பதை மறவாதீர்கள்.
பி.கு: நான் காதலையும் காமத்தையும் தனித்தனியாய் காணவில்லை. இச்சை என இரண்டையும் சேர்த்தே குறிக்கிறேன்.

நன்றி: தீராநதி, 2018



Comments

Anonymous said…
I don't know whether ur articles like this are getting due readership, sir?!
Have u read Alain Badiou's "In praise of love"?

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...