முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாலகுமாரன் எனும் பேரலை (4)


 Image result for balakumaran
தங்குதடையின்றி பலவித முரணான இசைவான மன உணர்வுகள் சுழித்தோடும் ஆற்றுப்பெருக்காய் தன் மொழியை பாலகுமாரன் வைத்திருந்தது ஒரு அற்புதம்.

 இரும்புக்குதிரைகள்நாவலில் ஏழை இளம்பெண் காயத்ரி காதலெல்லாம் தனக்கு சரிப்படாது என சிந்திக்கிறாள். “தனக்கென்னவோ இவர்களை விடலைப்பையன் என்று தான் நினைக்க முடிகிறதே தவிர இவர்களோடு பேச முடியும், சிரிக்க முடியும் என்றே தோன்றவில்லை. … தெருவில் நடக்கையில் பரக்க பரக்க பார்க்கும் பையனை எப்படி நேசிப்பது?” (96).
 இதை அடுத்து அவள் சிந்தனை முன்னுக்குப் பின் முரணாய் வளர்ந்து போகும். வாலிப பையன்களா? அவர்கள் பால் எனக்கு என்ன ஈர்ப்பு வர முடியும்? இப்படி நினைத்தவள் அடுத்து தன் வீட்டுக்கு ஒருநாள் அப்பாவை பார்க்க வந்து இலக்கியமும் தத்துவமும் பேசி திளைத்துக் கொண்டிருந்த வாலிபர்களை சிலரை எண்ணி லயிக்கிறாள். அந்த இளைஞர்கள் தன் மீது காட்டிய அலட்சியம் அவளை ஈர்க்கிறது.
முதலில் அப்பா வயதுள்ள ஒருவரின் அனுபவமே தன்னை ஈர்க்கும் என்றவள் இப்போது ஏன் ஏற்கனவே மணமான இந்த இளைஞர்களை நோக்கி ததும்பி சரிகிறாள்? இந்த மனநிலை ஏன் இப்படி என பாலகுமாரன் விளக்குவதில்லை.
 ஏன் சாத்தியமில்லாத காதல் இலக்குகள் அவளை ஈர்க்கின்றன? அவள் வாழ்வு இப்படித் தான் நிழலுருவங்களை நாடிப் பாய்ந்து அல்லோலப்படப் போகிறதா? ஏன் அப்படி? தெளிவாக யோசிக்கத் துவங்கும் ஒரு பெண் தன்னையறியாது தெளிவின்மையை நோக்கி வழுவும் இந்த இடம் அழகானது. வாழ்க்கையின் ஆழம், அழகு, உண்மை, சிலாக்கியம் இந்த பகுத்தறிவை மீறின தெளிவின்மையில் தான் இருக்கிறது.
ஒரு பெண் தன் கணவன் தன்னை தேவடியா என அழைத்தாள் சிலிர்ப்பாளா? அல்லது கொந்தளிப்பாளா? சூழல், தொனி, மன அமைப்பு என பல காரணிகள் இதை தீர்மானிக்கும். ஒரு சமயம் இதைக் கேட்டு வெறுப்பாகும் ஒரு பெண் இன்னொரு சமயம் இதைக் கேட்டு லயித்து சுகிக்கலாம். “மெர்க்குரிப்பூக்களில்இதை ஓரிடத்தில் பாலகுமாரன் தொட்டுக் காட்டுகிறார்:
விரல்கள் அவள் உடம்பு முழுக்க அலைந்து என்ன செய்வது என தெரியாமல் தவித்தன. சாவித்திரி கூச்சத்துடன் நெளிந்து இன்னும் நெருக்கமானாள்.
என்ன தேடறேள் இப்போ?’ – சாவித்திரி கொஞ்சினாள். கணேசன் சாவித்திரியின்  காதைக் கடித்தான். ‘தேவிடியா தேவிடியாஎன முணுமுணுத்தான்.
சாவித்திரி கணேசனின் கன்னத்தை கிள்ளினாள்.
வெளியே சொன்னால் வெட்கக்கேடு. எப்பக் கண்டாலும் பொண்டாட்டியைத் தேவிடியான்னு கூப்பிடறது. தேவிடியாளைத் தான் பொண்டாட்டியா நினைச்சுப்பான்னு கேள்விப்பட்டிருக்கேன் இங்க என்னமோ தலைகீழ் பாடமா இருக்கே!’ ” (மெர்க்குரிப்பூக்கள், 19)
இதைச் சொல்கிற சாவித்ரி மிக முதிர்ச்சியானவள். ஆண்களின் ஆதிக்க மனப்பான்மையை அவள் நாவலில் இன்னொரு இடத்தில் விமர்சிப்பாள். “தங்கச்சிஎன சுப்பையா அவளிடம் நெகிழும் போது அவள் கூடவே கலங்குகிறாள். ஆனால் அடுத்த நாள் இந்த நெகிழ்வு ஒரு போலித்தனம் என்கிறாள்.
 தன் கணவன் கணேசனின்தேவடியாவிளியும் ஒரு ஆண்-மைய கர்வம் என அவளுக்கு பிறிதொரு சமயம் தோன்றலாம். இரண்டுமே சரி தான். இரண்டிலுமே அவள் இருக்கிறாள். மனிதர்கள் இப்படி இருப்பார்கள்; இதுவே மனிதனின் உண்மை இயல்பு; இதுவே மனித மனத்தின் அழகு என பாலகுமாரன் சுட்டிக்காட்டுகிறார்.

கருத்துகள்

Massy spl France. இவ்வாறு கூறியுள்ளார்…
ஒரு எழுத்தாளனின் சிந்தனையின் வடிவங்கள் மற்றும் அவரது மனதின் கட்டமைப்புகளை படம் பிடித்து காட்ட முயற்சிக்கும் உங்களது பதிவு அற்புதம் நண்பரே. உமது எழுத்திலும் நல்ல முதிற்சி தெரிகிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...