ஒரு நாளின் சந்தோஷமான நேரம் என்பது காலை நேரம் தான்.
வீட்டு வேலை மொத்தமும் முடித்து, மறுபடி முகம் கழுவி, பவுடர்
பூசி, மையெழுதி, பீரோவிலிருந்து வாசனையெழ பிரித்தெடுத்து உடுத்திக் கொள்ளும் நேரம்
தான். தன் முகமே தனக்குப் பிடித்துப் போகும் நேரம் தான். இந்த எட்டரை மணி காலை தான்
சந்தோஷமான நேரம்.
(கரையோர முதலைகள், பாலகுமாரன்)
Comments