முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முணுக்கென்றால் நிகழும் விவாகரத்துகள் (1)


Image result for divorce
சமீபத்தில் ஒரு தோழி தனது மணமுறிவு பற்றி பேசிக் கொண்டிருந்தார். “என் திருமண வாழ்வு மகிழ்ச்சியற்றதாகி விட்டது. இனிமேலும் இதையே பொறுத்துக் கொள்ள முடியாது. யாருக்காகவும் நான் என் நிம்மதியை தியாகம் செய்ய இயலாது. நான் என் மன ஆரோக்கியத்தை காப்பாற்ற வேண்டுமல்லவா? ஆகையால் என் கணவரிடம் இதைப் பற்றி ஒருநாள் விவாதித்தேன்.”

“அவர் என்ன சொன்னார்?”
“அவர் என்ன சொல்வதற்கு? எல்லா கணவர்களையும் போல முரண்டு பிடித்தார். என்னை கெட்ட வார்த்தையால் திட்டினார். மிரட்டினார். அடிக்க வந்தார். அடுத்த நாள் முகத்தை திருப்பிக் கொண்டு பேசாமல் இருந்தார். மறுநாள் வந்து என்னிடம் அழுதார். ஆனால் அவரை விட்டு விலகுவது என நான் அப்போது உறுதியாக தீர்மானித்திருந்தேன். இப்போ பிரிஞ்சு தனியா வந்திருக்கேன். டைவர்ஸ் அப்ளை பண்ணி இருக்கேன்.”
“அவருக்கு உங்களுடன் இருக்க விருப்பம் இருந்ததா?”
“ஆண்கள் என்றுமே மனைவியின் நலன், தேவை, பிரச்சனை பற்றி கவலைப்பட்டதில்லை. அவர்களுக்கு நான் ஒரு உடைமை. ஓட்டையோ உடைசலோ இருக்கட்டுமே என்பது அவரது அணுகுமுறை. நீ பார்த்திருப்பாயே, ரெண்டு பெண்டாட்டி வைத்திருக்கிற ஆண்கள் இரண்டு பெண்களையும் தக்க வைக்கவே ஆசைப்படுவார்கள் – ஒருவரிடம் திருப்தி இல்லை என்றாலும் கூட. அது ஒரு டிப்பிக்கல் ஆண் நிலைப்பாடு.”
நான் மீளவும் கேட்டேன்,
“அவருக்கு உங்கள் மீது விருப்பமில்லையா?”
அவர் எரிச்சலானார், “ஏன் திரும்பத் திரும்ப கேட்குறே? அவருக்கு விருப்பமிருந்தா தான் என்ன? நான் சந்தோஷமா இல்ல. என் சந்தோஷம் முக்கியம் இல்லையா? ஏன் அவரோட வசதிக்காத இந்த உறவை நான் சகிச்சுக்கணும்?”
திருமண உறவில் தனிநபர் திருப்தி முக்கியம் என்கிற தரப்பே என்னுடையதும். ஆனால் அப்படி ஒருவருக்கு அதிருப்தி என்றால் அந்த உறவை காப்பாற்ற சிறிய முயற்சிகளையாவது அவர் எடுக்க வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் இன்று நாம் அத்தகைய சகிப்புத் தன்மையை இழந்து வருகிறோம் என்பது ஒரு பக்கம் என்றால், எதற்கு மணவாழ்வை முறிக்க வேண்டும் என்பதிலும் அவர்களுக்கு தெள்வில்லை என்பது இன்னொரு பக்கம். நான் அத்தோழியிடம் கேட்டேன்,
“நீங்கள் சந்தோஷமாக இல்லைன்னு சொல்றீங்களா? இல்லை திருமண உறவில் நீங்கள் சந்தோஷமா இல்லைங்கிறீங்களா?”
“என்ன ஸ்டுப்பிட் கேள்வி. ரெண்டும் ஒண்ணு தானே?”
“ரெண்டும் ஒண்ணு இல்லீங்க. நீங்க தனிப்பட்ட முறையில் சந்தோஷமா இருக்கிறது வேறே, திருமணத்தில் சந்தோஷமா இருக்கிறது வேறே. ஒன்று இன்னொன்றுக்கு உதவலாம். ஆனால் இரண்டும் ஒன்றல்ல.”
“என்ன தான் சொல்றே?”
“நீங்க திருமண வாழ்வில் சந்தோஷமா இல்லைன்னா அதை சரி செய்றதுக்கு முயற்சிக்கலாம். ஆனால் நீங்க உங்க வாழ்க்கையில் பொதுவாக சந்தோஷமாக இல்லை என்றால் அது வேறு பிரச்சனை. அதை மண முறிவு மூலம் சரி செய்ய முடியாது.”
“அவரோட நான் மகிழ்ச்சியால் இல்லைங்கிறதுனால தானே என் வாழ்க்கை நரகமாச்சு?”
“சரி இது உண்மைன்னா, அவரை விட்டு பிரிஞ்ச பிறகு ரொம்ப குதூகலமா இருக்கீங்களா?”
“இல்லை இப்பவும் அந்த பாதிப்பு என்னை விட்டுப் போகல”
“அந்த மனச்சோர்வை முழுக்க போயிடுச்சா?”
“இல்லை”
“இல்லைன்னா உங்க சோர்வோட காரணம் அவர் இல்லை தானே? இல்லை என்றால் அவரை பிரிந்த மறுகணம் உங்க வாழ்வே சொர்க்கமாக ஆகணுமே?”
அவர் கோபத்தில் போனை துண்டித்து விட்டார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...