முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“90களின் தமிழ் சினிமா” பேட்டி (4)


(எனது 90களின் தமிழ் சினிமா” நூலை ஒட்டி World of Appu இணையதளத்தில் வெளியான பேட்டி இது.)

Image result for kadhal movie
 “காதல்”

6. ஒரு பேராசிரியராகத் தமிழக இளைஞர்களுக்கு ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்துங்கள். ஒருவரை ஒருவர் காதலிக்கும் இரண்டு தனிமனிதர்கள் வாழ்க்கையில் ஒன்றிணைய முடியாமல் இருப்பது காதல் தோல்வியா? அல்லது, ஒருவரின் காதலை இன்னொருவர் ஏற்றுக் கொள்ளாதது காதல் தோல்வியா?

ஆர். அபிலாஷ்: காதலர்கள் தம் விருப்பத்தையும் கடந்து இணைய முடியாமல் போவது காதல் தோல்வி அல்ல; அது சமூக அவலம். அதனால் தான் பாலாஜி சக்திவேலின்காதல்உள்ளிட்ட படங்கள் சாதியைப் போன்ற சமூக அவலங்களை சாடுகின்றன. ராமின்கற்றது தமிழ்”, “தரமணிஆகிய படங்கள் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் உருவாக்கும் தடைகள், அகச்சிக்கல்கள் எப்படி காதலர்களை பிரிக்கின்றன என்பதைப் பேசுகின்றன.

மணிரத்னம், கௌதம் மேனன் ஆகியோர் காதல் தோல்வியை அகவயமாய் பார்க்கிறார்கள்; சூழல் எப்படி காதலர்களை அகற்றி வைக்கிறது, தவிக்க விடுகிறது, பரஸ்பரம் வெறுத்து புண்படுத்த வைக்கிறது என அவர்களின் படங்கள் பேசுகின்றனஇதுவே நிஜமான காதல் தோல்வி. ஆனால் இதுவும் கூட காதல் தோல்வி அல்ல, காதலர்களின் தோல்வி தான். காதல் என்றும் தோற்பதில்லை.

7. காதலைப் பற்றிப் பேசுவதால் கேட்கிறேன். 90களில் வெளிவந்த பிரசித்தி பெற்ற காதல் திரைப்படமான "காதலுக்கு மரியாதை" படத்துடனான உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஆர். அபிலாஷ்: காதலுக்கு மரியாதை" என்னை பெரிதும் கவரவில்லை. மலையாளத்திலும் அதன் மூலமானஅனியத்தி பிறாவுபார்த்திருக்கிறேன்.
இப்படம் காதல் கதையின் பாவனையில் மரபான திருமணத்தை ஆதரிக்கும் ஒன்று. எல்லா காதல் திருமணங்களிலும் ஒரு சுயநலம் உள்ளது. காதலுக்குப் பின் இச்சுயநலத்தை ஜோடிகள் உணர்வார்கள். பெற்றோர்களை தவிக்க விட்டு விட்டோமே எனும் கவலை குற்றவுணர்வாகி அவர்களை அரிக்கும். தாம்பதிய பிரியமும் ஆசையும் ஒரு பக்கம், பெற்றோரை எதிர்த்து பிரிந்த தனிமை இன்னொரு பக்கம். இதனிடையிலான மோதலில் தான் காதல் திருமணம் பரிணமிக்கும்.
 "காதலுக்கு மரியாதை" படத்தில் திருமண ஜோடியின் இத்தவிப்பை திருமணத்துக்கு முன்பே நிகழ்வதாய், காதலர்கள் பெற்றோரிடமே மீள்வதாய் காட்டி இருப்பார்கள். காதலில் இருக்கும் பலரும் இதை உணர்ந்ததால், இப்படம் அவர்களது இம்மன உணர்வுகளை கற்பனை செய்து திளைக்க உதவியதால் வெற்றி பெற்றது. படத்தில் காதலுக்கு மரியாதை அளிக்கும் விதம் பெற்றோரே கடைசியில் காதலர்களை சேர்த்து வைப்பார்கள். இதன் மூலம் காதல் ஜோடிகள் நிஜத்தில் அனுபவிக்கும் அகப்போராட்ட்த்திற்கு ஒரு சுலப தீர்வையும் பாஸில் அளித்தார். அகப்போராட்டத்தை கடந்து வாழ்க்கைஎளிய தீர்வுகளின்றிஎப்படி நகர்கிறது என்று காட்டியிருந்தால் இது மேலும் சிறப்பான படமாக இருந்திருக்கும். “அலை பாயுதேஇதே அகச்சிக்கலை இதை விட அபாரமாய் கையாண்ட படம்.
 பாஸிலின் ஆரம்ப கால படங்களில் ஒன்றானவருஷம் பதினாறுஇதே காதலுக்கான குடும்ப எதிர்ப்பு சிக்கலை வேறு வகையில் கையாண்டிருக்கும். இப்படத்தின் மலையாள மூலமானஎந்நெந்நும் கண்ணேட்டென்றேஇன்னும் சிறப்பானது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.