Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

“90களின் தமிழ் சினிமா” பேட்டி (10)



(எனது 90களின் தமிழ் சினிமா” நூலை ஒட்டி World of Appu இணையதளத்தில் வெளியான பேட்டி இது.)
Image result for pather panchali train track
Image result for kattradhu thamizh


20. குறைந்த பட்ஜெட் திரைப்படங்கள் எடுப்பது மலையாள சினிமாவின் வலிமை என்று சொல்கிறீர்கள். இது மலையாள சினிமாவுக்கு எப்படி சாத்தியமாயிற்று?
கேரளாவின் வலுவற்ற பொருளாதார சூழல் தான் அதற்கு காரணம். அம்மாநிலத்தைப் பொறுத்தமட்டில் அது ஒரு எதிர்மறை விசயம். ஆனால் அவர்களின் சினிமா அதனால் மறைமுக பயன் பெற்றுள்ளது. ஆனால் குறைந்த பட்ஜெட் மட்டும் அல்ல அனுகூலம்;
அதை பயன்படுத்தி வீரியமான, சமூகப் பிரச்சனைகளைப் பேசுகிற, பண்பாட்டு தத்துவார்த்த, சமூக உளவியல் சிக்கல்களைப் பேசுகிற படங்களை எடுக்கும் இயக்குநர்கள், அவர்களை ஆதரிக்கும் நட்சத்திர நாயகர்கள், அவர்களுக்கு நீடித்த ஆதரவை பல பத்தாண்டுகளாய் வழங்கும் பார்வையாளர்கள் என பல காரணிகள் இந்த சுண்டைக்காய் பொருளாதார அமைப்பைக் கொண்டு அற்புத படங்களை தொடர்ந்து எடுக்கும் சாத்தியத்தை ஏற்படுத்துகிறார்கள்.

அர்ப்பணிப்புள்ள, ஊக்கமுள்ள கலைஞர்களும், பண்பாட்டு ஓர்மையும் பொறுப்புணர்வும் கொண்ட பார்வையாளர் பரப்பும் தமிழகத்தில் உண்டென்றால் இந்த கடும் வியாபார போட்டி சூழலிலும் நம்மா காத்திரமான ஆழமான குறைந்த பட்ஜெட் படங்களை தர முடியும். நூறு கோடி சொத்து கொண்ட ஒரு குடும்பத்தினர் தினமும் பிச்சை எடுத்து உணவருந்துவது போன்ற நிலைமை நம்முடையது. எல்லாம் இருந்தும் எதுவும் இல்லை!

1.   தமிழ்நாட்டில் "film appreciation" இல்லை என்று இயக்குனர் ராம் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். இந்த சினிமா ரசனையை மக்களிடையே எவ்வாறு வளர்க்கலாம்?
அவரது புகார் தமிழில் விமர்சனம் என்ற பெயரில் கதையை மட்டுமே அலசுகிறார்கள் என்பது.
 ராம் சொல்வது உண்மை தான். சினிமா என்பது அதன் கதையோ வசனமோ அல்ல. சினிமா ஒரு காட்சிபூர்வ ஊடகம். ஒரு படம் எப்படி சமூகம், மனித மனம், தத்துவச் சிக்கல்கள், அரசியல் பிரச்சனைகள் ஆகியவற்றை பேசுகிறது என்பதை முழுக்க காட்சி பிம்பங்கள், ஒளிப்பதிவு, காட்சித் தொகுப்பு, வேறு பல தொழிற் நுட்பங்கள் வழி பேச முடியும்.
 இப்படியான சினிமா மொழியின் தாக்கம் கூர்மையானது, வலுவானது; நீண்ட காலம் நம் மனதில் நீடிப்பவை சினிமா உருவாக்கும் பிம்பங்கள். “பதேர் பாஞ்சாலியில்நவினம் ஒரு கிராமத்தில் ஊடுருவதை சித்தரிக்க ரயிலை, ரயில் வரும் அதிர்வை இரண்டு பிள்ளைகள் தண்டவாளத்தில் காதுவைத்து உணரும் இடத்தை பயன்படுத்துவார் சத்ய ஜித்ரே. இது ஒரு தொன்மமாக மாறி நம் நினைவுகளில் நிலைத்து விட்டது. தமிழில் மூன்றாம் பிறையில்பாலு மகேந்திரா இந்த காட்சியை ஒரு ஹோமெஜ் போல் பயன்படுத்தி இருப்பார்.
 சத்ய ஜித்ரே காட்டும் ஒரு அழியும் சமூக பண்பாட்டு வாழ்வின் உருவகம் தான் அக்காட்சி மாரில் பாயும் கத்தி போல ரயில் அந்த ஊருக்குள் வருகிறது. ராமின் படங்களில் ரயில் மட்டுமல்ல மனிதர்கள் புது ஊர் ஒன்றுக்கு பயணப்படும் எல்லா வாகனங்களும் இழப்போடு, ஏக்கத்தோடு, எதிர்மறை உணர்வுகளோடு சம்மந்தப்பட்டிருக்கும். “கற்றது தமிழில் இருந்து தரமணிவரை இதைப் பார்க்கலாம். இந்த சின்ன ஒரு சரடை எடுத்துக் கொண்டு நீங்கள் விரிவாய் அவர் சினிமாவைப் பற்றி பேச முடியும். தமிழ் படித்ததால் வேலை இல்லை, வேலை இல்லாதவனுக்கு மதிப்பில்லை, ஐடி தொழில் மனித விழுமியங்களை சீர்குலைக்கிறது என்பதெல்லாம் அவர் சினிமாவில் மேல்பூச்சு. அதைக் கடந்து தன் படங்களை விவாதிக்க வேண்டும் என அவர் விரும்புகிறார். அது நிகழவில்லையே என ஆதரங்கப் படுகிறார்.
நான் சமீபத்தில் இருவர்படத்தின் ஒளிப்பதிவை மட்டுமே கொண்டு அப்படத்தை முற்றிலும் மாறுபட்டு அர்த்தப்படுத்தி ஒரு கட்டுரையை உயிர்மை பத்திரிகையில் வெளியிட்டேன். நான் சினிமா மொழியை பொருட்படுத்தி எழுத முயன்ற முதல் கட்டுரை அது. நான் இதை தொடர்ந்து செய்வேனா எனத் தெரியவில்லை. நான் முழுநேர சினிமா விமர்சகன் அல்ல. ஆங்கிலத்தில் wolfcrow போன்ற யூடியூப் அலைவரிசைகளில் வெளிவரும் சினிமா மொழி அலசல்களைக் காண்கையில் இவையெல்லாம் எப்போது தமிழில் நிகழப் போகின்றன எனும் ஆதங்கம் எனக்கும் ஏற்படுகிறது.
நல்ல விமர்சன போக்கு எதிர்கால சினிமாவை செழுமைப்படுத்தும். அதையே ராம் கோருகிறார். நியாயம் தான்!  

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...