முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“90களின் தமிழ் சினிமா” பேட்டி (10)



(எனது 90களின் தமிழ் சினிமா” நூலை ஒட்டி World of Appu இணையதளத்தில் வெளியான பேட்டி இது.)
Image result for pather panchali train track
Image result for kattradhu thamizh


20. குறைந்த பட்ஜெட் திரைப்படங்கள் எடுப்பது மலையாள சினிமாவின் வலிமை என்று சொல்கிறீர்கள். இது மலையாள சினிமாவுக்கு எப்படி சாத்தியமாயிற்று?
கேரளாவின் வலுவற்ற பொருளாதார சூழல் தான் அதற்கு காரணம். அம்மாநிலத்தைப் பொறுத்தமட்டில் அது ஒரு எதிர்மறை விசயம். ஆனால் அவர்களின் சினிமா அதனால் மறைமுக பயன் பெற்றுள்ளது. ஆனால் குறைந்த பட்ஜெட் மட்டும் அல்ல அனுகூலம்;
அதை பயன்படுத்தி வீரியமான, சமூகப் பிரச்சனைகளைப் பேசுகிற, பண்பாட்டு தத்துவார்த்த, சமூக உளவியல் சிக்கல்களைப் பேசுகிற படங்களை எடுக்கும் இயக்குநர்கள், அவர்களை ஆதரிக்கும் நட்சத்திர நாயகர்கள், அவர்களுக்கு நீடித்த ஆதரவை பல பத்தாண்டுகளாய் வழங்கும் பார்வையாளர்கள் என பல காரணிகள் இந்த சுண்டைக்காய் பொருளாதார அமைப்பைக் கொண்டு அற்புத படங்களை தொடர்ந்து எடுக்கும் சாத்தியத்தை ஏற்படுத்துகிறார்கள்.

அர்ப்பணிப்புள்ள, ஊக்கமுள்ள கலைஞர்களும், பண்பாட்டு ஓர்மையும் பொறுப்புணர்வும் கொண்ட பார்வையாளர் பரப்பும் தமிழகத்தில் உண்டென்றால் இந்த கடும் வியாபார போட்டி சூழலிலும் நம்மா காத்திரமான ஆழமான குறைந்த பட்ஜெட் படங்களை தர முடியும். நூறு கோடி சொத்து கொண்ட ஒரு குடும்பத்தினர் தினமும் பிச்சை எடுத்து உணவருந்துவது போன்ற நிலைமை நம்முடையது. எல்லாம் இருந்தும் எதுவும் இல்லை!

1.   தமிழ்நாட்டில் "film appreciation" இல்லை என்று இயக்குனர் ராம் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். இந்த சினிமா ரசனையை மக்களிடையே எவ்வாறு வளர்க்கலாம்?
அவரது புகார் தமிழில் விமர்சனம் என்ற பெயரில் கதையை மட்டுமே அலசுகிறார்கள் என்பது.
 ராம் சொல்வது உண்மை தான். சினிமா என்பது அதன் கதையோ வசனமோ அல்ல. சினிமா ஒரு காட்சிபூர்வ ஊடகம். ஒரு படம் எப்படி சமூகம், மனித மனம், தத்துவச் சிக்கல்கள், அரசியல் பிரச்சனைகள் ஆகியவற்றை பேசுகிறது என்பதை முழுக்க காட்சி பிம்பங்கள், ஒளிப்பதிவு, காட்சித் தொகுப்பு, வேறு பல தொழிற் நுட்பங்கள் வழி பேச முடியும்.
 இப்படியான சினிமா மொழியின் தாக்கம் கூர்மையானது, வலுவானது; நீண்ட காலம் நம் மனதில் நீடிப்பவை சினிமா உருவாக்கும் பிம்பங்கள். “பதேர் பாஞ்சாலியில்நவினம் ஒரு கிராமத்தில் ஊடுருவதை சித்தரிக்க ரயிலை, ரயில் வரும் அதிர்வை இரண்டு பிள்ளைகள் தண்டவாளத்தில் காதுவைத்து உணரும் இடத்தை பயன்படுத்துவார் சத்ய ஜித்ரே. இது ஒரு தொன்மமாக மாறி நம் நினைவுகளில் நிலைத்து விட்டது. தமிழில் மூன்றாம் பிறையில்பாலு மகேந்திரா இந்த காட்சியை ஒரு ஹோமெஜ் போல் பயன்படுத்தி இருப்பார்.
 சத்ய ஜித்ரே காட்டும் ஒரு அழியும் சமூக பண்பாட்டு வாழ்வின் உருவகம் தான் அக்காட்சி மாரில் பாயும் கத்தி போல ரயில் அந்த ஊருக்குள் வருகிறது. ராமின் படங்களில் ரயில் மட்டுமல்ல மனிதர்கள் புது ஊர் ஒன்றுக்கு பயணப்படும் எல்லா வாகனங்களும் இழப்போடு, ஏக்கத்தோடு, எதிர்மறை உணர்வுகளோடு சம்மந்தப்பட்டிருக்கும். “கற்றது தமிழில் இருந்து தரமணிவரை இதைப் பார்க்கலாம். இந்த சின்ன ஒரு சரடை எடுத்துக் கொண்டு நீங்கள் விரிவாய் அவர் சினிமாவைப் பற்றி பேச முடியும். தமிழ் படித்ததால் வேலை இல்லை, வேலை இல்லாதவனுக்கு மதிப்பில்லை, ஐடி தொழில் மனித விழுமியங்களை சீர்குலைக்கிறது என்பதெல்லாம் அவர் சினிமாவில் மேல்பூச்சு. அதைக் கடந்து தன் படங்களை விவாதிக்க வேண்டும் என அவர் விரும்புகிறார். அது நிகழவில்லையே என ஆதரங்கப் படுகிறார்.
நான் சமீபத்தில் இருவர்படத்தின் ஒளிப்பதிவை மட்டுமே கொண்டு அப்படத்தை முற்றிலும் மாறுபட்டு அர்த்தப்படுத்தி ஒரு கட்டுரையை உயிர்மை பத்திரிகையில் வெளியிட்டேன். நான் சினிமா மொழியை பொருட்படுத்தி எழுத முயன்ற முதல் கட்டுரை அது. நான் இதை தொடர்ந்து செய்வேனா எனத் தெரியவில்லை. நான் முழுநேர சினிமா விமர்சகன் அல்ல. ஆங்கிலத்தில் wolfcrow போன்ற யூடியூப் அலைவரிசைகளில் வெளிவரும் சினிமா மொழி அலசல்களைக் காண்கையில் இவையெல்லாம் எப்போது தமிழில் நிகழப் போகின்றன எனும் ஆதங்கம் எனக்கும் ஏற்படுகிறது.
நல்ல விமர்சன போக்கு எதிர்கால சினிமாவை செழுமைப்படுத்தும். அதையே ராம் கோருகிறார். நியாயம் தான்!  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...