Skip to main content

“90களின் தமிழ் சினிமா” பேட்டி (9)



Image result for காற்று வெளியிடை
காற்று வெளியிடை


(எனது 90களின் தமிழ் சினிமா” நூலை ஒட்டி World of Appu இணையதளத்தில் வெளியான பேட்டி இது.)

18. சமூகத்திலும் அரசியலிலும் நிகழ்ந்து வரும் மாற்றங்கள் சினிமாவில் எப்படிப் பிரதிபலிக்கிறது என்று இந்தப் புத்தகத்தில் நிறைய எழுதியிருக்கிறீர்கள். இலக்கியத்திலும் அத்தகைய மாற்றங்கள் பிரதிபலிக்கப்படுகிறதா?



ஆர். அபிலாஷ்: இல்லை, இலக்கியம் அவ்வாறு சமூகத்திலும் அரசியலும் உடனுக்குடன் நிகழும் மாற்றங்களை பிரதிபலிப்பதில்லை. சொல்லப் போனால் மிக நுணுக்கமான தீவிரமான பண்பாட்டு நகர்வுகளைக் கூட உடனுக்குடன் காட்டுவது சினிமா தான். இலக்கியம் சமூக கலாச்சார நகர்வுகளை, அசைவுகளை, சரிவுகளை உருவகமாய் மாற்றுகிறது. அதற்கு ஒன்றோ இரண்டோ பத்தாண்டுகள் தேவைப்படுகின்றன. ஈழப் படுகொலைகள் முடிந்த பின், குருதியை மண் உறிஞ்சிய பின், காற்றில் ஓலங்கள் கரைந்து மறைந்த பின், ஈழப் போர் இலக்கியம் உக்கிரமாய் எழுந்து வந்தது. அதுவும் கூட நேரடியான அனுபவ சாட்சியங்களாய்த் தான். அடுத்த 25 ஆண்டுகளில் அந்த போர் அனுபவங்கள் மேலும் ஆழமாய் தீவிரமாய் பேசப்படலாம். ஜெயமோகனின்விஷ்ணுபுரம்படிக்கையில் அது நேருவின் காலம் துவங்கி இந்தியா முழுக்க இடதுசாரிகள் வீழ்ச்சியடைந்த காலம் வரையிலான காலகட்டத்தின் சித்திரம் என எனக்குத் தோன்றியது. அதாவது நமது சுதந்திரத்துக்குப் பின்னான இந்தியா குறித்த ஒரு உருவக / நீதிக் கதையாக அதைப் படிக்க முடியும். அதே போலத் தான்பொன்னியின் செல்வனும்”. “விஷ்ணுபுரத்தின்தீவிரமும் சிக்கலும் இல்லையெனிலும், “பொன்னியின் செல்வனில்சுதந்திரம் பெற்ற இந்தியாவின் லட்சியவாதமும் துடிப்பும் நிறைந்த, கல்மிஷம் இல்லாத ஒரு இளைஞனின் பார்வையில் (வந்தியத்தேவனின் பார்வையில்) சோழ சாம்ராஜ்யத்தின் சரிவும் வீழ்ச்சியும் சதி வலைகளும் சூழ்ச்சிகளும் சித்தரிக்கப்படுகின்றன. சுந்தரச்சோழர் இந்திய தேசத்துக்கான உருவகமா அல்லது காந்தியின் குறியீடா?
ஆனால் சினிமா இப்படி வரலாற்றை தின்று செரித்து புத்துருவாக்கம் செய்வதில்லை. அது உடனுக்குடன் எதிர்வினை ஆற்றக் கூடியது.

19. அரசியல் சரிநிலைகளை நிராகரிப்பது பின்-நவீனத்துவத்தின் கூறுகளில் ஒன்றாகச் சொல்லப்படுகிறது. திரைப்படங்களுக்கு நம் சமூகத்தில் அதிக கவனம் கிடைக்கிறது. இவ்விரண்டு விஷயங்களையும் வைத்து பார்க்கும் போது, இன்று பின்-நவீனத்துவத்தை அறிந்துகொண்டு சினிமா இயக்க வரும் ஒருவர், அரசியல் சரிநிலைகளைக் கவனத்தில் கொள்ள வேண்டுமா?

ஆர். அபிலாஷ்: இன்றைய காலத்தின் ஆபத்தே அரசியல் சரிநிலைகள் தாம்அவை நம்மை சதா எச்சரிக்கை உணர்வுடன் இருக்க செய்கிறன. யாரையும் காயப்படுத்தக் கூடாது, நாம் பிற்போக்கு எனும் பிம்பம் ஏற்படக் கூடாது எனும் பீதி நம் மென்னியை பிடித்து நெரிக்கிறது. ஒரு படைப்பாளிக்கு அபாரமான சுதந்திரம் முக்கியம். அவன் தன்னை மொத்த சமூகத்துக்கும் பொறுப்பாக கருதும் போது, தன் பிம்பம் குறித்த மிதமிஞ்சிய பிரக்ஞை கொள்ளும் போது, தன் சுதந்திரத்தை இழக்கிறான். பின்நவீனத்துவம் அறிந்தவரோ அறியாதவரோ சரிநிலைகளை கைவிட வேண்டும்; அது தான் முக்கியாம். .தா., மணிரத்னம் பின்நவீனத்துவவாதி அல்ல. அவரது காற்று வெளியிடைஅரசியல் சரிநிலைகள் அற்ற ஒரு படம்.
இப்படம் தன்முனைப்பு மிக்க ஆனால் மூர்க்கமாய் ஒரு பெண்ணை நேசிக்கிற ஆணின் காதலை அவன் கோணத்தில் இருந்து பேசியது; அவனது குரூரத்தை, அக்கறையின்மையை, முரட்டுத்தனத்தை சித்தரித்தது; அத்தோடு அவனை எல்லா குறைகளை சகித்துக் கொண்டு ஒரு பெண் கசிந்துருகி காதலிப்பதையும் காட்டியது. இதை நம் பெண்ணியவாதிகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அவர்கள் இப்படத்தை கடுமையாய் எதிர்த்தனர்.
 பெண்ணியவாதிகள் எதிர்பார்ப்பது அப்பெண் அவனை உதறிக் கொண்டு சுதந்திரமாய் வாழ்வதாய் மணிரத்னம் சித்தரித்திருக்க வேண்டும் என்பது. அது கருத்தியலுக்கு உவப்பாய் இருக்கலாம்; ஆனால் வாழ்க்கைக்கு நியாயமாய் இருக்காது. நிஜ வாழ்க்கையில் காதல் பல தீமைகளின் ஊடாய் தான் உயிர்க்கிறது, தழைக்கிறது; இப்பெண் ஏன் அவளை மதிக்காத அந்த ஆண் மீது இப்படி பைத்தியமாய் இருக்கிறாள் என்ற கேள்விக்கு சுலபத்தில் பதில் இருப்பதில்லை; காதல் நம்மை ஒரு அடிமையாய் இருக்க செய்கிறது; அதில் மனம் திளைக்க செய்கிறது. வாழ்க்கையை பகுத்தறிவுடன் மட்டும் எதிர்கொள்ளும் சில எளிய பெண்ணியவாதிகளுக்கு இந்த ஆழம் புரியாது.
ஒரு படைப்பாளி இவர்களைப் புறக்கணிக்க வேண்டும்.



Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...