Skip to main content

“முலைகள்” கடந்து வந்த பாதை



பண்டைய தமிழர் நம்மைப் போல பெண்ணுடலை பொத்திப் பாதுகாக்க வேண்டிய “செல்வமாக”, ஆண் சமூகத்தின் “உடைமையாக” கருதினார்களா அல்லது அது மிக இயல்பான ஒன்றாக கருதப்பட்டதா? இன்று இந்நிலை எப்படி உள்ளது? இலக்கியத்தில் இதற்கு கிடைக்கும் பதில்கள் என்ன?
கம்பராமாயணம் போன்ற காப்பியங்களோ, திருக்குறள் போன்ற நீதி இலக்கியமோ, சங்க இலக்கியமோ பெண் உடல் வர்ணனைகள் மலிந்து கிடக்கின்றன. கொசலை நாட்டு தெருக்களில் எதிர்படும் மகளிர், அந்தரப்புர அழகியர் என யாரைக் குறித்தென்றாலும் கம்பன் தடமுலைகளைக் குறிப்பிடாமல் நகர்வதில்லை. ஏன்?

பெண்ணின் மேலுடலை மறைப்பது இந்திய வரலாற்றில் சமீபத்தைய நிகழ்வு என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அன்று பெண்ணின் முகத்தை பாராட்டி ரசிப்பது போன்றே முலைகளைப் பற்றி விவரிப்பதும் இருக்க வேண்டும். அதாவது பாலுறுப்பு எனும் மிகையான சமூகக் கூச்சம் இல்லாதிருந்திருக்க வேண்டும். உதாரணமாய் சிலப்பதிகாரத்தில் பதிகத்தின் முதல் பாடலில் ஒற்றை முலையுடன் கண்ணகி மரத்தின் கீழ் நிற்கும் சித்திரம் வருகிறது. அவள் முலையை திருகி வீசுவதும் தெருவிலே பட்டவர்த்தமாய் நடக்கிறது. முலை எனும் சொல்லின் வேர்ச்சொல்முல்” – இதன் பொருள் முன்னே. முலை என்றால் முன்னிற்கும் உறுப்பு என அர்த்தம். அவ்வளவு தான். அதில் எந்த கவர்ச்சியான உட்செய்தியும் இல்லை. ஆதி தமிழர் முலையை இவ்வாறு ஒரு சாதாரண உடலுறுப்பாகவே கண்டனர்.
கம்பராமாயணத்தில் நூற்றுக்கணக்கான முறை முலைகள் வருகின்றன.

ஒரு உதாரணம் தருகிறேன்:
 கமலப் பொதியினை நகுவன புணர் முலை”. (நாட்டுப்படலம், 44)
புணர் முலை என்பது நெருங்கிய ஸ்தனங்கள். இந்த முலைகள் கட்டுக்குலையாதவை எனக் குறிப்பிட கம்பன் அவற்றை விரியாத தாமரை மொட்டுகளுடன் ஒப்பிடுகிறார். இப்பெண்களின் முலைகள் தாமரை மொட்டுகளை விட மேலானவை. ஏனெனில் மொட்டுகள் மலர்ந்து பின் வாடி விடும். ஆனால் பெண் முலைகளோ ஆணின் கரம் பட்டு மலராது பின் வாடாது மொட்டாகவே இருப்பவை.
அண்ணாதுரை வைணவ பக்தி இலக்கியத்தை விமர்சித்து, திராவிட அடையாளத்தை அதற்கு மாற்றாய் கட்டமைக்கும் நோக்கில் கம்பரசம் (1947) எனும் நூல் எழுதுகிறார். அதில் பக்கம் பக்கமாய் கம்பனின் பெண் பாலுறுப்பு வர்ணனைகளை மேற்கோள் காட்டி கம்பராமாயணத்தை ஆபாச இலக்கியம் என வரையறுக்கிறார்.
பழந்தமிழ் பெண்டிர் ஆடைக்கட்டுப்பாட்டை பொறுத்தமட்டில் கூடுதல் சுதந்திரத்துடன் இருந்திருக்கலாம். ஆனால் பெண்ணுடலை உடைமையாக காணும் நோக்கு அன்றும் வலுவாகவே இருந்தது.
நவீன காலத்தில் ஒரு பக்கம் பெண்கள் வேலை செய்யவும் சம்பாதிக்கவுமான வாய்ப்புகள் பெருக ஆடை சுதந்திரமும் பெண்களுக்கு கிடைக்கிறது. இன்னொரு பக்கம், இப்போது தான் பெண்கள் மீதான கண்காணிப்பும் கற்பு குறித்த விசாரணைகளும் பலாத்காரங்களும் வன்முறையும் அதிகமாகியுள்ளன. “முலை” என்ற சொல்லை வெளிப்படையாய் உச்சரிக்கவே நாம் தயங்குகிறோம். இப்போது பெண் உடலை வெளிப்படையாய் சித்தரிப்பதே பெண் சுதந்திரத்தை அடைய சிறந்த வழி எனும் நிலைப்பாட்டை பெண் கவிகள் உலகம் முழுக்க எடுக்கிறார்கள். “காலாவில்” ரஞ்சித் சொல்வது போல் “உடலே ஆயுதம்” எனும் இடத்திற்கு இவர்கள் வந்து சேர்கிறார்கள். தமிழிலும் இது நேர்கிறது.
ரெண்டாயிரத்தில் குட்டிரேவதி, மாலதி மைத்ரி, சல்மா, சுகிர்தராணி எனும் படைப்பாளிகளின் வருகை தமிழ் கவிதை உலகை தடம் புரள் செய்கிறது; புத்துணர்வு அளிக்கிறது. ஆனால் நவீன இலக்கியம் இதை சரிவர புரிந்து கொள்ளும் முதிர்ச்சியுடன் இல்லாததால் பெண் கவிதை கடும் சர்ச்சைக்குள் ஆகிறது. அண்ணா கம்பனை பழித்தது போன்றே இப்போது நம் பெண் கவிகள் பழிக்கப்படுகிறார்கள். குட்டிரேவதியின் “முலைகள்” (2002) எனும் தொகுப்பு ஏற்படுத்திய சலசலப்பை இங்கு குறிப்பிடலாம்.
ஆனால் பண்டைய இலக்கியத்தில் தென்படும் ஆண்-மைய நோக்கு, ஆணின் பார்வை (male gaze) குட்டிரேவதியின் கவிதைகளிலும் உள்ளது ஆச்சரியமே.
 பருவத்தின் வரப்புகளில்
மெள்ள அலை பொங்கி மலர்வதை
அதிசயித்துக் காத்தேன்” (முலைகள்)
 கம்பனைப் போன்றே குட்டிரேவதியும் முலையை ஒரு மலராகத் தான் காண்கிறார்.
ஆலிங்கனப் பிழிதலில் அன்பையும்
சிசுகண்ட அதிர்வின்
குருதியின் பாலையும்
சாறெடுக்கின்றன”

ஒரு நிறைவேறாத காதலில்
துடைத்தகற்ற முடியாத
இரு கண்ணீர்த்துளிகளாய்
தேங்கித் தளுப்புகின்றன” (முலைகள்)
இங்கு முலைகளின் இருப்பே ஆணின் தழுவலில் ஏற்படும் பூரிப்பிலும் மதலையின் உறிஞ்சுதலில் கிடைக்கும் புளகாங்கிதத்திலும், ஆணுடனான வருத்தத்தில் ஏங்கி தளும்புதலிலும் தான் நிகழ்கிறது. ஆணின்றி முலைகளை கட்டமைக்க முடியாது எனும் இடத்தில் மீண்டும் பெண்ணிருப்பு வந்து நிற்கிறது.
ஆனால் இதற்கான எதிர்நிலையில் நின்று லீனா மணிமேகலை, மாலதி மைதிரி, சுகிர்தராணி ஆகியோர் எழுதினர்.
குவிந்த என் மார்பின் மென்மைபற்றி
வெகுநேரம் வினாவெழுப்பிக் கொண்டிருந்த
அவளுடைய தேகமும்
மிகக் குழைவாக இருந்தது.
பிறகவள் மூச்சின் வெளிச்சத்தில்
உடலெழுத்துக்கள் ஒவ்வொன்றையும்
விடியும் வரை பழகிக் கொண்டிருந்தாள்
நீண்ட யுகங்களுக்குப் பிறகு
அன்று தான்
என்னுடல் என்னிடமிருந்தது.” (“உடலெழுத்து”, சுகிர்தராணி)
இப்படி ஆண் அதிகாரத்தை முறியடிக்க பெண் கவிகள் முலைகளை வெளிப்படையாய் சித்தரிக்கத் துவங்கின போது கடும் சர்ச்சைகள் கிளம்பின (அண்ணாவின் கம்பரசம் போன்றே); அவற்றின் தாக்கம் இன்னும் ஓயவில்லை.
நன்றி: விகடன் தடம்

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...