முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கிழக்கு பதிப்பக சிறுகதைப் போட்டி


கிழக்கு பதிப்பகம் நடத்தும் சென்னை நாள் சிறுகதைப் போட்டிக்கான நடுவர்களில் ஒருவராய் 44 கதைகளைப் (நானூற்று சொச்சம் பக்கங்கள்) படித்து மதிப்பெண் இட்டு இப்போது தான் அனுப்பி விட்டேன். கதைகள் பற்றின என் கருத்துக்களை இப்போதைக்கு கூறப் போவதில்லை. ஆனால் பொதுவாக ஆர்வமூட்டும் சற்றே ஆச்சரியப்படுத்தும் ஒரு  நல்ல வாசிப்பு அனுபவமாய் இது அமைந்தது எனபதை நிச்சயம் குறிப்பிட வேண்டும்.
 உணர்ச்சிகளை வைத்து விளையாடும் மலினமான வணிகக் கதை பாணியில் இருந்து இன்றைய வெகுஜன கதைசொல்லிகள் நகர்ந்து வந்திருக்கிறார்கள். இலக்கிய கதைகளுக்கு மட்டுமே உரித்தான சில கதைக்கருக்களை, களங்களை இன்று வெகுஜன எழுத்தில் கையாள்கிறார்கள். விளிம்புநிலையினர் பிரச்சனைகள், ஒடுக்கப்பட்டோர் நிலைமை முன்னுரிமை பெறுகின்றன. எப்போதும் போலவே வசனத்தை நன்றாய் எடுத்தாள்கிறார்கள்.
நமக்கு இப்போதைக்கு தேவை இத்தகைய கதைசொல்லிகளுக்கு ஒரு பெரும் கவனப் பரப்பு – டிவி போல, பெரிய மேடைகள் போல. கதையை படைப்பாளி சத்தமாய் வாசித்துக் காட்டுவதை, அதை உணர்ச்சிகரமாய் நிகழ்த்துவதை பல லட்சம் பேருக்கான ஒரு பொழுதுபோக்கு வடிவமாய் நம்மால் உருவாக்க முடிந்தால் அது சிறுகதை வடிவை ஒரு பெரிய இடத்துக்கு கொண்டு போக உதவலாம்; சிறுகதையாளர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயரும்; பல்லாயிரம் கதைகள் எழுதப்பட்டால் நூறு கதைகளாவது சாதனைப் படைப்புகள் ஆகும். பிக்பாஸில் அடிக்கொரு தரம் கேரள வெள்ளம் பற்றி பேசும் கமல் அதே பொறுப்புணர்வுடன் தனக்கு உவப்பான ஒரு சிறுகதையில் இருந்து அரைப்பக்கம் படித்து காண்பிக்கலாம். பிக்பாஸ் வீட்டுக்குள் ஒரு முக்கிய கதையை பரஸ்பரம் வாசித்துக் காட்டி நிகழ்த்துவதை ஒரு டாஸ்காக செய்ய சொல்லலாம்.
எப்படியோ நீங்கள் இத்தகைய முயற்சிகள் எடுக்காவிட்டாலும் பதிப்பகத துறையினரும் வாசக சாலை போன்ற இலக்கிய அமைப்புகளும் தொடர்ந்து முயன்றபடி தான் இருக்கிறார்கள்.
இந்த போட்டியை ஒருங்கிணைத்த கிழக்கு பதிப்பகத்துக்கு என் வாழ்த்துக்கள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...