Skip to main content

பிக்பாஸ்: யஷிகாவின் யுக்தியும் தர்க்க விளையாட்டும் (2)


Image result for yashika anand
செப்டம்பர் முதல் வாரம் நடைபெற்ற டாஸ்க் சற்றே சிக்கலானது. போன் மணி அடிக்க அதை எடுக்கிறவர் அடுத்த வாரம் வெளியேற்றத்துக்காக நாமினேட் ஆகிறார். அவர் தன்னை காப்பாற்றிக் கொள்ள இன்னொரு பங்கேற்பாளரை ஒரு கஷ்டமான டாஸ்கை செய்ய வைக்க வேண்டும். யஷிகாவை பிக்பாஸ் அழைத்து ஜனனியை தனது இமையை பிளீச் செய்ய வைக்க வேண்டும்; அப்படி செய்தால் நீங்கள் தப்பிக்கலாம் என்கிறார். யஷீகாவும் ஜனனிக்கும் சும்மாவே முட்டிக் கொள்ளும். இப்போது போய் எப்படி இந்த சிரமமான காரியத்தை செய்யும் படி வேண்டி ஏற்க வைப்பார்? ஜனனிக்கு கண்கள் தனித்து தெரியும். அந்த முட்டைக் கண்களை கூடுதலாய் மலர வைக்கும் இமைகள். அந்த இமைகளை பிளீச் செய்தால் ஒன்று அவை வெளிறும் அல்லது சிவக்கும். எந்த பெண்ணும் யோசிப்பாள். தான் வெறுக்கும் யஷிகாவுக்காக ஜனனி இதை செய்வாரா?
Image result for ஜனனி ஐயர்
பிக்பாஸில் எல்லா பங்கேற்பாளர்களும் தமக்கு ஒவ்வாத உடன்பாடில்லாத காரியங்களை எல்லாம் அடுத்தவர்களுக்கு செய்து தியாகியாக மக்களிடம் பெயரெடுக்க முயல்கிறார்கள். செண்ட்ராயன் தன் சுருள் முடியில் சாயம் பூசினார், விஜலக்ஷ்மி சாணி நிரம்பிய தொட்டியில் படுத்துக் கொண்டார், பாலாஜி மொட்டை அடித்தார்; ஜனனியும், ஆக, இதை செய்யலாம். ஆனால் யஷிகாவுக்காக செய்வாரா என்பதே கேள்வி. யஷிகா எப்படி ஒப்புக்கொள்ள வைக்கப் போகிறார்?
யஷிகா தன் மொத்த தந்திரத்தையும் காட்டின இடம் இது. அவர் ஜனனியிடம் போய் சொன்னார்: “நான் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறேன் என உங்களுக்குத் தெரியும். எனக்கு பிக்பாஸில் ஜெயிக்க வேண்டும். ஆனால் அதற்காக நீங்கள் இமையில் பிளீச் அடிப்பது சிரமம் தான். உங்களுக்காக பாலாஜி அண்ணன் மொட்டையெல்லாம் அடித்துக் கொண்டாரே? அப்படி இருக்க நீங்கள் எனக்காக இந்த தியாகத்தை செய்யலாம் தானே. உங்கள் கண்கள் தான் உங்களுக்குப் பிளஸ். அதை அசிங்கப்படுத்தும்படியாய் இந்த ப்ளீச் ஆகி விடலாம். ஆனால் என்னைக் காப்பாற்றுவதற்காக நீங்கள் இதை செய்ய வேண்டும்.”
1)   எந்த இடத்திலும் அவர் இறங்கி வந்து கெஞ்சவோ, தான் இதுவரை அவருடன் முறைத்துக் கொண்டதற்கு மன்னிப்பு கோரவோ இல்லை. ஏனென்றால் ஜனனி என்ன தான் வாயாடினாலும் இயல்பில் சற்று பணிந்து போகிறவர். அவரிடம் சற்று கெத்தாய் ஆதிக்க தொனியில் பேசினால் எடுபடும் என யஷிகா அறிந்து வைத்திருக்கிறார்.
2)   தனது பிக்பாஸ் போராட்டத்தை மிகைப்படுத்திப் பேசி, ஜனனியின் தியாகம் ஒரு உன்னத தியாகம் எனும் பிம்பத்தை ஏற்படுத்துகிறார். நாம் எப்போதுமே ஒரு பெரிய விசயத்துக்காக இழப்பை சந்திக்க தயங்க மாட்டோம் – அடுத்தவர்களின் விசயமே என்றாலும் கூட. ஆகையால் தான் யஷிகா “என்னை ப்ளீஸ் காப்பாற்றுங்கள்” எனக் கோராமல், “என்னைப் போன்ற ஒருவர் காப்பாற்றப்படுவது அவசியம், நான் அந்தளவுக்கு போராடி இருக்கிறேன், உழைத்திருக்கிறேன்” என பில்ட் அப் கொடுக்கிறார்.
3)   கடைசியாய் அவர் பாலாஜி ஜனனிக்காக அடித்த மொட்டையை, தியாகத்தை, ஏதோ யஷிகாவே ஜனனிக்காக செய்தது போல சித்தரித்தார். பாலாஜி செய்த தியாகத்துக்கு பதிலாக பாலாஜிக்காக ஜனனி பிளீச் செய்யலாம். ஏன் யஷிகாவுக்கு செய்ய வேண்டும். ஆனால் யஷிகா பேசும் போது அத்தியாகத்தை செய்தது பாலாஜி அல்ல, யஷிகாவே எனும் தொனி ஏற்பட்டது.

தர்க்கத்தில் ஒரு வாக்கியம் ஒரு முதற்கோள் (premise) மற்றும் அதன் விளைவினால் (conclusion) தோன்றுவது என்பார்கள்.
 “பசிக்குது, சோறு போடுங்க” என்பதில் ”பசிக்குது” முதற்கோள், “சோறு போடுங்க”” அதன் விளைவு. வெறுமனே “சோறு போடுங்க” என்றாலே உங்களுக்கு பசிக்கிறது எனும் அர்த்தம் வந்து விடும். பசியில்லாமல் நீங்கள் அப்படி கேட்க மாட்டீர்கள்.
”வெயில் அடிக்கிறது” என்றால், அவ்வளவு நேரமும் வெயில் இல்லை, இப்போது தான் அடிக்கிறது என பொருள் வந்து விடும்.
முதற்கோள் அடித்தளம் என்றால் அதன் மீது கட்டி எழுப்பப்பட்ட கட்டிடமே விளைவு / முடிவு.
யஷிகா இங்கு என்ன செய்கிறார் என்றால் சாமர்த்தியமாய் ஒரு செயலுக்கான முதற்கோளை இன்னொன்றுக்கு பொருத்துகிறார்.
“பாலாஜி மொட்டை அடித்து தியாகம் செய்தார். அதனால் ஜனனி அவருக்கு கடன்பட்டிருக்கிறார்” என்பதில் முதற்கோள் “பாலாஜி மொட்டை அடித்து தியாகம் செய்தார்.” அதை யஷிகா எடுத்துக் கொண்டு “பாலாஜி மொட்டை அடித்து தியாகம் செய்தார். அதனால் எனக்கு நீங்கள் கடன்பட்டிருக்கிறீர்கள்” என இணைத்து பித்தலாட்டம் செய்கிறார். இதை சரிவர யோசிக்காமல் கேட்டுக் கொண்டால் “ஆமா சரி தானே” எனத் தோன்றும்.

இது பாஜகவினர் தமக்கு எதிராய் போராடுகிறவர்கள் தேச துரோகிகள் என்பது போல.
பாஜகவினரின் கோரலை நாம் இப்படி வகுத்துக் கொள்ளலாம்.
முதற்கோள்: பாஜக என்பது தேசப்பற்றாளர்களின் கட்சி. தேசப்பற்றாளர்களை எதிர்ப்பது தேசத்துரோகம்.
இதில் இருந்து நாம் வகுப்பது
பாஜக = தேசப்பற்று
முடிவு: ஆக பாஜகவை எதிர்ப்பவர்கள் அனைவரும் துரோகிகள்.

இது கேட்க சரியாக தோன்றினாலும் தவறான வாதம். பிழை முதற்கோளில் உள்ளது. பாஜக என்பது தேசப்பற்று மட்டுமல்ல; அக்கட்சி மதவாதமும் தான். ஆக முதற்கோளின் சரியான வழிப்பொருள் (derivative): பாஜக = தேசப்பற்று / மதவாதம்.
ஆக, இதன் சரியான முடிவு – “பாஜகவை எதிர்ப்பவர்கள் அனைவரும் துரோகிகள் அல்லது மதவாத எதிர்ப்பாளர்கள்”

இதே போன்ற ஒரு உதவி கோரும் நிலை ஐஸ்வர்யாவுக்கு ஏற்பட்ட போது அவர் பதற்றப்பட்டு குழம்பி செண்ட்ராயனிடம் பொய் சொல்லி பெரிய குழப்பங்களை ஏற்படுத்தி கெட்ட பெயரை சம்பாதித்தார். ஆனால் யஷிகாவோ ஒரு தேர்ந்த வியாபாரியைப் போல தேர்ந்த சொற்களால் பித்தலாட்டமான வாதங்களால் ஜனனியை மறுவாதமே இன்றி ஏற்றுக் கொள்ள வைத்து விட்டார். அவர் ஒரு வியாபார குடும்பத்தை சேர்ந்தவர். பேசி எதையும் விற்கும் திறன் அவர் ரத்தத்திலே உண்டு போல!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...