Skip to main content

பசி (2)


Image result for urban women painting

கட்டிடத்தின் பின்வாயிலைத் தாண்டி சென்றான். அங்கு வருகைப்பதிவேட்டில் பெயரெழுதும் இடத்தில் துவங்கி உள்ளே லாபி வரைக்கும் நிறைய நிறைய பெண்கள். நிறைய வண்ணத்தாள்களை கிழித்து பறக்க விட்டது போல் அவர்கள் குறுக்குமறுக்குமாய் நடந்து போனார்கள். அதற்கு பின்னரும் நிறச்சாயல்கள் காற்றில் மிதப்பதாய் அவனுக்கு தோன்றியது. வரவேற்பு மேஜையில் இருந்த பெண் துவங்கி அங்கு வேலை செய்யும் பெண்கள் வரை நிறைய மேக்கப்பும் குறைவான ஆடையும் அணிந்திருந்தார்கள். அவன் தரையை பார்த்து நடக்க முடிந்தவரை முயன்றான். ஆனாலும் ஆயிரமாயிரம் பெண்ணுடல்கள் மத்தியில் தான் தடுக்கி விழுவதான உணர்வு அவனுக்கு ஏற்பட்டது. மின் தூக்கி அருகே காத்திருந்த போது கண்ணை மூடி மூச்சை நன்றாய் இழுத்து விட்டான்.

மின் தூக்கிக்குள் அவனுடன் எட்டு பெண்கள் நின்றிருந்தார்கள். அவர்கள் மத்திய வர்க்கத்தை சேர்ந்த சுரிதார் அணிந்த வற்றலான பெண்கள். அவர்களுடன் நிற்க சற்று சகஜமாய் உணர்ந்தான். ஒருத்தியின் பெரிய உதடுகள் மீண்டும் மீண்டும் அவன் கண்ணில் பட்டன. அவளை பார்க்காமல் தவிர்க்க முடியவில்லை. அவனுக்கு நேராய் நின்றிருந்தாள். பக்கத்தில் திரும்பினால் யாரையாவது இடிக்க நேரும் என்பதால் அசையாமல் நின்றான். அவளது கண்களைப் பார்த்தால் அது உரையாட முயல்வது போல் ஆகும் என்பதால் முடிந்தவரை அவள் தலைக்கு மேல் பார்வையை உயர்த்தினான். ஆனால் பார்வை மீண்டும் மீண்டும் வழுக்கி உதடுகளுக்கு வந்தது. ஒவ்வொரு முறையும் அவள் சன்னமாய் புன்னகைத்தாள். ஒரு கட்டத்தில் தன்னை மறந்து அவள் உதடுகளையே நிலைத்து பார்த்தான். அவன் வாயில் எச்சில் ஊறியது. எதையாவது சாப்பிட்டாக வேண்டும் எனத் தோன்றியது.

அவன் இறங்க வேண்டிய தளத்தில் அவனுடன் வெளியேறின பெண்கள் அவனை இயல்பாய் உரசியபடி சென்றனர். அவர்கள் சென்றபின்னரும் அவர்களின் உடல் அங்கங்களின் அமைப்பு, மென்மை, உடைகளின் தன்மை, வெம்மை, வாசனை என தனித்தனியாக மனதில் தோன்றிக் கொண்டிருந்தது. சாப்பிட வேண்டும் என மீண்டும் நினைத்தான். ஒரு பொரித்த கோழிக்காலின் மினுமினுவென்ற மேற்புறம், அதன் இதமான சொரசொரப்பு, தோலை பிய்த்து விரலால் அழுத்தினால் சூடான வெளுத்த தசை, அதன் பசையான வழவழப்பு…..

மூன்று நாட்களாய் டீ மட்டுமே. பசித்து பசித்து பசியே இல்லாமல் ஆகி விட்டது. இப்போது கையில் உள்ள பணத்தில் அந்த வளாகத்தில் உள்ள கபெட்டீரியாவில் காபி கூட குடிக்க முடியாது. வெளியே வாயிலின் அருகே ஒரு தள்ளுவண்டிக்கடையில் சில ஊழியர்கள் சாப்பிடுவதை பார்த்திருந்தான். அங்கே சாப்பிட்டால் திரும்ப செல்லும் போது பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஷேர் ஆட்டோவில் ஏற காசு இருக்காது. மேலும் எதற்கு சாப்பிட வேண்டும் எனத் தோன்றி விட்டது. சாப்பிட்டு என்ன ஆகப் போகிறது?

வேகமாய் சூயிங்கம்மை மென்று கொண்டான். தன் வாய்க்குள் இருப்பது அப்போது தன்னைக் கடந்து போன ஒல்லியான இளம்பெண்ணின் ஒரு அந்தரங்க பாகம் என கற்பனை தோன்றியது. வாய்க்குள் உடனே ஊறிய வெதுவெதுப்பான எச்சில் அவளது கசியும் குருதி. ரத்த வாசனை. கைகள் நடுங்கின.

கைநடுக்கத்துடன் பிளாஸ்டிக் பையை திறந்து ஒரு மஞ்சள் ரப்பர் பேண்டை எடுத்து தனது நீண்ட முடியை கொண்டை இட்டு கட்டிக் கொண்டான். நிறுவனத்தின் கண்ணாடி வாயிலில் முகத்தைப் பார்த்தான். சவரம் செய்து பளபளப்பாக இருந்தது. அந்த குதிரைவால் முடி அவனுக்கு சற்று கூடுதல் பெண்மை சேர்த்தது. தொப்பையை அசைத்தபடி ஒரு செக்யூரிட்டி நடந்து வந்தார். சாப்பாட்டு டப்பாவை அலம்பி மேஜையில் கவிழ்த்து விட்டு அவனருகே நெருங்கினார். அவர் அவனிடம் சி.வியை வாங்கி விட்டு காத்திருக்க சொன்னார். சற்று நேரம் கழித்து ஒரு விண்ணப்ப படிவம் தந்து நிரப்ப சொன்னார். அதையும் கொடுத்து விட்டு அரைமணி நேரம் இருந்தான்.

உணவு இடைவேளை முடித்து இயல்பான மெத்தனம் தெரிய ஒவ்வொருவராய் அலுவலகத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். கறுப்பாய் ஒல்லியாய் ஒரு பெண் வெளியே வந்தாள். செல்போனில் பேசியபடி குறுக்குநெடுக்காய் நடந்தாள். தன் அம்மாவிடம் பேசினாள். அன்று இரவு வரை வேலையை நீடிக்க வேண்டி உள்ளதால் வீட்டுக்கு வர தாமதமாகும் என தெரிவித்தாள். இந்நேரம் அங்கு செக்யூரிட்டியாக வேலை பார்க்கும் ஒரு பெண் அவளருகே வந்து சிநேகமாய் தோளை ஒட்டி நின்றாள். இவளைப் பார்த்து அவள் புன்னகைத்தாள். தான் இரவு வந்ததும் மதிய உணவை உண்டு விடுவதாய் போனில் எதிர்முனையில் உள்ள அம்மாவிடம் உறுதி அளித்தாள். பிறகு அம்மா பேசுவதைக் கேட்டு குழந்தை போல் சிரித்தாள். அடிக்கடி நாணத்தால் வாயை பொத்திக் கொண்டாள். அவளது செக்யூரிட்டி தோழி அடிக்கடி அவளைப் பார்த்து சிரிப்பதும் தலையாட்டுவதுமாய் இருந்தாள். அவள் பேசி முடித்ததும் இவளிடம்இப்போ தான் லஞ்சுக்கு கிளம்பறேன். வரியா?” எனக் கேட்டாள்.
 இவள்நான் பன்னெண்டுக்கே சாப்டேன்என்றாள்.
பார்த்தியாஎன அவள் உதடு பிதுக்கினாள்.
இல்லெப்பா ரொம்ப பசியெடுத்துது. காலைல மூணே இட்லி தான் சாப்டேனா அதான் தாங்கல. நீ வூட்டுக்கு கிளம்பலெ?”
எக்ஸ்டென்ஷன்
எடுத்து வந்திருக்கியா?”
இல்ல காண்டீன் போறேன்
இப்போ சாப்பாடு தீந்திருக்குமே. வெளியே போனா பாய்க்கடையில பிரியாணி இருக்கும். வாங்கியாரவா?”
இல்ல. மெக்டொனால்ட்ஸில வாங்கி சாப்புடுறேன்
இவள் அவள் தோளை பற்றி சிநேகமாய் சிரித்தாள். அவளது கூந்தலைத் தொட்டு தடவி எதையோ விசாரித்தாள். பிறகு அவள் நினைவு வந்தவளாய்என்ன சாப்பாடு?” என்றாள்.
நேத்தைய புளிக்குழம்பு. சாதம். தொட்டுக்க வெளியே பொரிச்ச மீன் வாங்கிக் கிட்டேன். முள்ளுமீனு. நல்லாவே இல்ல. நீ ஏன் இவ்வளவு லேட்டா வரெ? ஒரு மணிக்கு எப்பவுமே கிளம்பிடுவ இல்ல?” என்றாள் இவள்.
எக்ஸ்டெண்ட் பண்ண சொல்லிக் கேட்டாங்க. அப்பவே ரொம்ப பசிச்சுது. ஆனால் காலைல தந்த பைலை முடிச்சுட்டு சாப்பிடாலுமுன்னு உட்கார்ந்தேனா அப்பிடியே மறந்திட்டேன். பிறகு பசி போயிடுச்சு. இப்போ எதுனாச்சும் வாங்கி கொறிச்சுட்டு வரலாமுன்னு வெளியே வந்தேன். அம்மா வீட்ல முருங்கைக்கா சாம்பாரும் உருளைக்கிழங்கு பொரியலும் எனக்காக பண்ணி வச்சிருக்கிறதா சொன்னாங்க. நான் அதை வந்து சாப்பிட மாட்டேனோன்னு அவங்களுக்கு ரொம்ப வருத்தம். அதைக் கேட்ட பின்னே இப்போ சாப்பிடணமுன்னு ஆசையா இருக்குதுடி”.
இவள் அவள் தோளைப் பற்றி ஆறுதல் சொன்னாள். இருவரும் பேசியபடி மின் தூக்கிக்குள் நுழைந்து கீழே சென்றார்கள்.

(தொடரும்)

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...