Skip to main content

ஷாக் (2)


Image result for pain of love painting
என் பார்வை  அப்போது அங்கு வந்த ப்ரியா மீது சாய்ந்தது. கன்னம் வற்றி, நெற்றியில் கவலைக் கோடுகளுடன் அலுப்பாக தெரிந்தாள். என் கண்களை கவனித்ததும் அவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
அட ஒண்ணும் ஆகாதுங்க. தொடுங்க
தொட்டேன். ஒன்றும் தெரியவில்லை.
ஒரு வைப்ரேஷன் தெரியுதா?”
இல்லீங்க

அதான். ஆனால் எனக்குத் தெரியுது. சில நேரம் எதாவது உலோகத்தைத் தொடுகையில் எனக்கு சின்னதா ஷாக் கூட அடிக்குது. போனவாட்டி நீங்க இது பற்றி சொன்ன போது விசித்திரமா பட்டுச்சு. இப்போ...”
என்ன சொல்றீங்க? அதெப்படி உங்களுக்கு திடீர்னு? சேச்சே
இது காதலில் விழுற மாதிரி இல்லையா?”
ஆங்?”
I know this is a stupid comparison. ஆனால் காதல் வயப்பட்டிருக்கையில் நமக்கு மட்டும் தான் அந்த அவஸ்தை என நினைப்போம். இந்த நிலைமின்சாரப் பிரச்சனையும் அப்படித் தான். ஆனால் உங்களுக்கு மட்டுமல்ல பல லட்சம் பேர் இதனால் அவதிப்படுகிறார்கள்.
அவரது சொற்கள் எனக்கு ஊடாய் கடந்தன. சும்மா சொன்னேன்,
என்னால் நம்ப முடியல சார்!”
 நேத்து ப்ரியா காப்பி கொணந்தாளே அதை வாங்கின போது ஸ்ர்ர்ன்னு ஒரு ஷாக். கையை விட்டதுல மொத்தமும் கொட்டிடுச்சு. ஆனால் அடுத்த வாட்டி அவள் காப்பியை கொணந்து கீழே வச்ச பின்னே நானா எடுத்தா ஷாக் இல்ல.”
ஆமா. அதுக்கு பின்னே தான் நான் இதைப் பற்றி தேடித் தேடி படிச்சேன். Static electric field. அது தான் இந்த விசித்திரத்துக்கு எல்லாம் காரணம். இதுக்கு முன்னே எனக்கு இருந்ததில்லை. ஆனால் இந்த மருந்து மாத்திரை, அலைச்சல், பதற்றம், கவலை, பின்னே lack of sex, ஆமா செக்ஸ், she hardly touches me now…
அவர் ஏன் அப்படிச் சொன்னார்? ப்ரியா சட்டென முகம் சிவந்து கண் நிறைந்து போய் எழுந்து நின்றாள். வேகமாய் பக்கத்து அறைக்கு சென்று கதவை சாத்தினாள். அக்ஷய் கணினியை விட்டு எழுந்து ஓடி வந்து அவன் அப்பா கையை கட்டிக் கொண்டான். அவர் அவனை ஒற்றைக் கையால் அணைத்துக் கொண்டார்.
சாரி சாரிநான் அப்படி சொல்லி இருக்க கூடாது.”
நான் பேச்சை மாற்றினேன். அவருக்கு பிரியமான பாடல் ஒன்றை கிட்டாரில் மீட்டி கேட்பித்தேன். நான் முடித்த போது அவர் என் கையைப் பற்றி தழுதழுத்தார். ஆச்சரியமாய் எங்களுக்குள் ஷாக்கே இல்லை. இதைச் சொன்னதும் அவர் கண்கள் ஜொலிக்க சிரித்தார்.
தீராவியாதியாளன் ஒருவர் மருத்துவமனையில் தன்னை ஒத்த இன்னொருவனைக் கண்டதும் கொள்ளும் நிம்மதியைப் போல இது இல்லையா?”
அலுவலகத்தில் எனக்கு மேலாளரான ப்ரியா இப்போது மற்றொருத்தியாக மாறிப் போனாள். அவளது நடவடிக்கைகளில் ஏதோ இனம்புரியாத மாற்றங்கள். என்னை ஒன்று புறக்கணித்தாள்; அல்லது குற்றவாளிக் கூண்டில் நிறுத்தினாள். ஒருநாள் நான் தனியாய் இருக்கையில் சுவரைப் பார்த்தபடி என்னிடம் பேசினாள்:
வீட்டுக் கோவத்தை முழுக்க உன் மேல காட்டுறேன் இல்லையா? ஏன் உன்னை இப்படி வதைக்கிறேன்? சத்தியமா தெரியல…”
 வேலையை விடலாம் என அந்த தருணத்தில் முடிவெடுத்தேன்.
அடுத்த நாள் சீக்கிரமாகவே சென்று விட்டேன். வரவேற்பறை தாண்டினதும் வரும் அந்த சின்ன சந்திப்பு அறை. ஒரு சின்ன மேஜை. சில பத்திரிகைகள். இரண்டு நாற்காலிகள். விடாமல் சொட்டும் ஏ.ஸி. அவளை முதன்முதலாய் பார்த்த இடம் அது. சரியாய் பதிமூன்று மாதங்களுக்கு முன்.
அன்று என் கையில் ஏற்கனவே சில நிறுவனங்களின் ஆபர் லெட்டர்கள் இருந்தன. மேலான சம்பளம், நல்ல பொறுப்புகள். சரி, இந்த வேலை வேண்டாம், ஆனால் இறுதி கட்ட நேர்முக சந்திப்பை மட்டும் முடித்து விடுவோம் என காத்திருந்தேன். அதற்குத் தான் டையை அடிக்கடி லகுவாக்கி மொபைலை பார்த்தபடியான அந்த காத்திருப்பு. அப்போது தான்  அவ்வறையை சிலமுறைகள் கடந்து போன அவளை முதலில் பார்த்தேன். நீல காட்டன் சேலை; தலையில் கொஞ்சமாய் மல்லிகை. அழகாய் மூக்குத்தி. அந்த அலுவலகத்தில் அப்படி ஒரு தோற்றத்தில் நான் பார்க்கும் முதல் பெண்.
அங்கு உள்ள ஒரு சீனியர் என்றே அவளைப் பற்றி முதலில் எண்ணினேன். ஆனால் அந்த அறைக்குள் எனது இறுதி கட்ட நேர்முகத்தை எடுப்பதற்கு அவளே வருவாள் என சற்றும் நான் எதிர்பார்க்கவில்லை.
கண்ணாடிக் கதவைத் திறந்து எனக்கு எதிரே அமர்ந்து கோப்பில் இருந்து சில காகிதங்களை எடுத்து பார்வையை ஓட்டினாள். முந்தானையை சரி செய்தாள். இருக்கையில் நகர்ந்து அமர்ந்தாள். என்னிடம் அவள் கேட்ட அலுவல் நிமித்தமான கேள்விகள் எப்படியோ எனது இருப்பை அவள் துல்லியமாய் அந்தரங்கமாய் உணர்ந்து கொண்டதை சொல்லின. நான் மேஜையில் சாய்ந்து கிட்டத்தட்ட அவள் முகவாயை தொடும் வண்ணம் நகர்ந்து மென்மையாய் பேசினேன். அவள் கேட்டதற்கெல்லாம் சரி என்றேன். இந்த வேலை உறுதியானதல்ல, இது ஒரு பைலட் புரோஜக்ட், புரோஜக்ட் வெற்றி பெற்றால் மட்டுமே ஊதியம் உயரும், உங்கள் அனுபவத்துக்கு இதை விட சிறப்பான பொறுப்புகள் வெளியே கிடைத்தால் போய் விடுவீர்களா? அவள் விரும்பியதை நான் சொன்னேன். நான் விரும்பியதை அவள் கேட்டாள். நாங்கள் பரஸ்பரம் கைமாறின சொற்கள் முழங்கையில் ஏறி கொத்தி விளையாடும் கலர் கலரான கோழிக்குஞ்சுகளைப் போல நடந்து கொண்டன.
நான் எழுந்து கண்ணாடிக் கதவின் பிடியில் கைவைத்தேன். பட்டென மெல்லிய அதிர்ச்சி தாக்கியது. ஒரு நொடி திடுக்கிட்டு தடுமாறினேன். அது தான் துவக்கம்.

(தொடரும்)

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...