Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

உறவுச்சிக்கல்கள் பாலியல் குற்றமாகும் தருணம் – சுபாய் கய் – கேட் ஷர்மா விவகாரம் (2)

Image result for subhash ghai kate sharma



இப்போது கேட் ஷர்மா வழக்குக்கு வருவோம். இப்பெண்ணும் இயக்குநருக்கு ஒரு எல்லை வரை இடமளித்திருக்கிறார். இல்லையென்றால் பிற ஆண்கள் முன்னிலையில் மசாஜ் பண்ணியிருக்க மாட்டார். ஆனால் முன்னர் குறிப்பிட்ட பெண்ணைப் போல இவர் வெறும் ஊழியர் அல்ல. இவர் இயக்குநரின் தோழி. சற்று நெருக்கமானவர். பிறர் முன்னிலையிலான அந்த மசாஜ் ஒருவிதத்தில் அப்பெண்ணுக்கு இயக்குநர் மீதுள்ள உரிமைக்கான ஒரு நிலைநாட்டல் (அவர் வயதானவர் என்பதால் மசாஜ் செய்ய இசைந்தேன் என்பது நம்பும்படியாய் இல்லை). ஆனால் பெண்கள் ஒரு உறவில் பல நிலைகளை வைத்துள்ளார்கள் – கொஞ்சம் பாலியல் சாயலுள்ள நட்பு, விளையாட்டான பாலியல் தன்மையுள்ள நட்பு, ஓரளவு பொறுத்துப் போகும் உறவு, முழுமையான காதலாகும் முன்பான பரிசோதனை உறவு. சில பெண்கள் ஒரே சமயம் பரிசீலனையில் பல ஆண்களை வைத்திருப்பார்கள். இது தவறான நடத்தை அல்ல. ஆனால் ஆண்களுக்கு இந்த நுணுக்கங்களை புரிந்து கொள்வது மிக மிக சிரமம். ஆண்களுக்கு பாலியல் என்பது படுக்கையில் தொடங்கி படுக்கையில் முடிகிறது. பெண்களுக்கு தொடுகையுடன் மட்டும் முடிகிற, பார்வையில், மொழியில் மட்டும் முடிந்து போகிற செக்ஸ் உண்டு. இத்தகைய ஆண்-பெண் புரிதலின்மையே குற்றங்களில் போய் முடிகிறது.

 நான் இவ்வழக்குகளில் ஆண்களை முழுக்க குற்றம் சொல்ல மாட்டேன் என்றாலும் பெண்களை ஆதரிப்பதே நியாயம் என நினைக்கிறேன். ஏனென்றால் கராறான தோழமை என்றால் பத்து நிமிட மசாஜ் எல்லாம் அங்கே சாத்தியமில்லை. கேட் ஷர்மா விசயத்தில் அதையும் மீறி ஒரு அணுக்கமான இடத்தை அவர் சுபாய் கய்க்கு அளிக்கிறார். அவரை உரிமை கொண்டாட விரும்பி இருக்கிறார். ஆனால் அதே நேரம் அவருக்கு தன்னை முழுமையாய் ஒப்புக் கொடுக்க விரும்பவில்லை. ஆனால் விரும்பி மசாஜ் செய்து விடும் ஒரு தோழி தன்னை ஏன் அணைக்கவோ முத்தமிடவோ அனுமதிப்பாள் என சுபாய் கய் எதிர்பார்ப்பதும் பெரிய குற்றமல்ல.
இதை உறவுச்சிக்கல் எனப் பார்க்கவும் வழியுள்ளது. ஆனால் இது ஒரு பாலியல் குற்றமாவது அவர் கேட் ஷர்மாவுக்கு தன் படத்தில் வாய்ப்பளிக்க மாட்டேன் என எச்சரித்த போது தான். இது சம்மந்தமாய் கேட் ஷர்மாவுக்கு அவர் அளித்த குறுஞ்செய்திகளே முக்கியமான ஆதாரம். இப்போது இது பலாத்கார வழக்கல்ல, வேலையிடத்தில் நடைபெற்ற பாலியல் தொந்தரவு வழக்கு. இதை அவர் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியும் – தன்னை இயக்குநர் அணைத்ததை அவர் நிரூபிக்க தேவையில்லை. இந்த குறுஞ்செய்திகளே போதும் என நினைக்கிறேன். (ஆனால் தன்வசம் இத்தகைய ஆதாரம் இல்லாததாலே சின்மயி இப்போது பொய்யறியும் சோதனைக்கு வைரமுத்து உடன்பட வேண்டும் என கோருகிறார் என நினைக்கிறேன்.)
மசாஜ் விசயமே இங்கு முக்கியமல்ல என்றாலும் அவர் ஏன் அதை இங்கு கொண்டு வருகிறார்?
கட்டியணைத்து முத்தமிட முயன்றது ஒரு தனியான அறையில். அதில் ஆதாரமில்லை என்பது தன் குற்றச்சாட்டை பலவீனமாக்கும் என அவர் அஞ்சுகிறார். ஆகையால் மசாஜ் சம்பவத்தை கொண்டு வருகிறார். ஆனால் இது தன் தரப்பை பலவீனமாக்கும் என அவர் உணரவில்லை என்பது பரிதாபம்.
சினிமாத் துறையில் என்றில்லை, செல்வாக்கும் அதிகாரமும் கொண்ட பல ஆண்களும் பாலியல் வறட்சியால் இது போன்ற குற்றங்களில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள். அவர்களாக போய் பெண்களை பலவந்தப்படுத்துவதில்லை. பாலியல் நோக்கத்துடன் ஒரு உறவை துவங்குகிறார்கள்; பெண்ணுக்கு பல நம்பிக்கைகளை, உத்தரவாதங்களை அளிக்கிறார்கள். ஆனால் செக்ஸ் ஒன்றையே அடிப்படை நோக்கமாய் வைத்து பெண்ணை நெருங்குவது பிரச்சனையிலே போய் முடியும். ஆண்கள் ஒரு கடையில் பொருள் வாங்குவது போல செக்ஸை பார்க்க பெண்கள் ஒரு சிக்கலான, பல அடுக்குகள் கொண்ட ஒரு உறவின் ஒரு நிலையாக மட்டுமே செக்ஸை பார்க்கிறார்கள். என்னதான் வாக்குறுதிகள் அளித்தாலும், தற்காலிக செக்ஸ் நோக்கங்களுக்கு உடன்படுவதை பெரும்பாலான இந்தியப் பெண்கள் விரும்புவதில்லை.
ஒரு விமானப்பணிப் பெண் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ரணதுங்கா பற்றி சொன்ன குற்றச்சாட்டும் இவ்வகையானதே. இருவரும் பரஸ்பரம் பழக்கமானவர்கள். ஒரு நட்சத்திர விடுதியின் நீச்சல்குளத்தின் அருகே இருக்கையில் அவர் தன் கையைப் பிடித்து இழுத்ததாய் அப்பெண் ஓட்டல் நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்க, நிர்வாகவோ “இது உங்கள் தனிப்பட்ட பிரச்சனை, நாங்கள் தலையிட முடியாது” என பொறுப்பற்று பதில் சொல்லி விட்டது. பின்னர் அப்பெண் முகநூலில் இதை பதிவு செய்தார்.
வேலையிடங்களில் ஆண்கள் இப்படி கொக்கி போடுவதும் ஆபத்தில் போய் முடிகிறது.
ஆனால் இதையெல்லாம் சொல்வது எளிது – பல உறவுச் சிக்கல்களில், பாலியல் வறட்சியில் மாட்டி ஆண்கள் நிலையற்று இருக்கும் போது அவர்கள் எல்லா இடங்களிலும் கொக்கி போடுகிறார்கள், அந்த கொக்கியில் பின்னர் அவர்களே மாட்டிக் கொள்கிறார்கள்.
நம்மூரில் பதியப்படும் கணிசமான பலாத்கார வழக்குகள் அந்நியர்களுக்கு இடையில் நடப்பதல்ல. நமது உறவுச் சிக்கல்களே குற்றங்களாய் பரிணமிக்கின்றன என்பதாலே இதையெல்லாம் சொல்கிறேன்.


Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...