Skip to main content

உறவுச்சிக்கல்கள் பாலியல் குற்றமாகும் தருணம் – சுபாய் கய் – கேட் ஷர்மா விவகாரம் (2)

Image result for subhash ghai kate sharma



இப்போது கேட் ஷர்மா வழக்குக்கு வருவோம். இப்பெண்ணும் இயக்குநருக்கு ஒரு எல்லை வரை இடமளித்திருக்கிறார். இல்லையென்றால் பிற ஆண்கள் முன்னிலையில் மசாஜ் பண்ணியிருக்க மாட்டார். ஆனால் முன்னர் குறிப்பிட்ட பெண்ணைப் போல இவர் வெறும் ஊழியர் அல்ல. இவர் இயக்குநரின் தோழி. சற்று நெருக்கமானவர். பிறர் முன்னிலையிலான அந்த மசாஜ் ஒருவிதத்தில் அப்பெண்ணுக்கு இயக்குநர் மீதுள்ள உரிமைக்கான ஒரு நிலைநாட்டல் (அவர் வயதானவர் என்பதால் மசாஜ் செய்ய இசைந்தேன் என்பது நம்பும்படியாய் இல்லை). ஆனால் பெண்கள் ஒரு உறவில் பல நிலைகளை வைத்துள்ளார்கள் – கொஞ்சம் பாலியல் சாயலுள்ள நட்பு, விளையாட்டான பாலியல் தன்மையுள்ள நட்பு, ஓரளவு பொறுத்துப் போகும் உறவு, முழுமையான காதலாகும் முன்பான பரிசோதனை உறவு. சில பெண்கள் ஒரே சமயம் பரிசீலனையில் பல ஆண்களை வைத்திருப்பார்கள். இது தவறான நடத்தை அல்ல. ஆனால் ஆண்களுக்கு இந்த நுணுக்கங்களை புரிந்து கொள்வது மிக மிக சிரமம். ஆண்களுக்கு பாலியல் என்பது படுக்கையில் தொடங்கி படுக்கையில் முடிகிறது. பெண்களுக்கு தொடுகையுடன் மட்டும் முடிகிற, பார்வையில், மொழியில் மட்டும் முடிந்து போகிற செக்ஸ் உண்டு. இத்தகைய ஆண்-பெண் புரிதலின்மையே குற்றங்களில் போய் முடிகிறது.

 நான் இவ்வழக்குகளில் ஆண்களை முழுக்க குற்றம் சொல்ல மாட்டேன் என்றாலும் பெண்களை ஆதரிப்பதே நியாயம் என நினைக்கிறேன். ஏனென்றால் கராறான தோழமை என்றால் பத்து நிமிட மசாஜ் எல்லாம் அங்கே சாத்தியமில்லை. கேட் ஷர்மா விசயத்தில் அதையும் மீறி ஒரு அணுக்கமான இடத்தை அவர் சுபாய் கய்க்கு அளிக்கிறார். அவரை உரிமை கொண்டாட விரும்பி இருக்கிறார். ஆனால் அதே நேரம் அவருக்கு தன்னை முழுமையாய் ஒப்புக் கொடுக்க விரும்பவில்லை. ஆனால் விரும்பி மசாஜ் செய்து விடும் ஒரு தோழி தன்னை ஏன் அணைக்கவோ முத்தமிடவோ அனுமதிப்பாள் என சுபாய் கய் எதிர்பார்ப்பதும் பெரிய குற்றமல்ல.
இதை உறவுச்சிக்கல் எனப் பார்க்கவும் வழியுள்ளது. ஆனால் இது ஒரு பாலியல் குற்றமாவது அவர் கேட் ஷர்மாவுக்கு தன் படத்தில் வாய்ப்பளிக்க மாட்டேன் என எச்சரித்த போது தான். இது சம்மந்தமாய் கேட் ஷர்மாவுக்கு அவர் அளித்த குறுஞ்செய்திகளே முக்கியமான ஆதாரம். இப்போது இது பலாத்கார வழக்கல்ல, வேலையிடத்தில் நடைபெற்ற பாலியல் தொந்தரவு வழக்கு. இதை அவர் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியும் – தன்னை இயக்குநர் அணைத்ததை அவர் நிரூபிக்க தேவையில்லை. இந்த குறுஞ்செய்திகளே போதும் என நினைக்கிறேன். (ஆனால் தன்வசம் இத்தகைய ஆதாரம் இல்லாததாலே சின்மயி இப்போது பொய்யறியும் சோதனைக்கு வைரமுத்து உடன்பட வேண்டும் என கோருகிறார் என நினைக்கிறேன்.)
மசாஜ் விசயமே இங்கு முக்கியமல்ல என்றாலும் அவர் ஏன் அதை இங்கு கொண்டு வருகிறார்?
கட்டியணைத்து முத்தமிட முயன்றது ஒரு தனியான அறையில். அதில் ஆதாரமில்லை என்பது தன் குற்றச்சாட்டை பலவீனமாக்கும் என அவர் அஞ்சுகிறார். ஆகையால் மசாஜ் சம்பவத்தை கொண்டு வருகிறார். ஆனால் இது தன் தரப்பை பலவீனமாக்கும் என அவர் உணரவில்லை என்பது பரிதாபம்.
சினிமாத் துறையில் என்றில்லை, செல்வாக்கும் அதிகாரமும் கொண்ட பல ஆண்களும் பாலியல் வறட்சியால் இது போன்ற குற்றங்களில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள். அவர்களாக போய் பெண்களை பலவந்தப்படுத்துவதில்லை. பாலியல் நோக்கத்துடன் ஒரு உறவை துவங்குகிறார்கள்; பெண்ணுக்கு பல நம்பிக்கைகளை, உத்தரவாதங்களை அளிக்கிறார்கள். ஆனால் செக்ஸ் ஒன்றையே அடிப்படை நோக்கமாய் வைத்து பெண்ணை நெருங்குவது பிரச்சனையிலே போய் முடியும். ஆண்கள் ஒரு கடையில் பொருள் வாங்குவது போல செக்ஸை பார்க்க பெண்கள் ஒரு சிக்கலான, பல அடுக்குகள் கொண்ட ஒரு உறவின் ஒரு நிலையாக மட்டுமே செக்ஸை பார்க்கிறார்கள். என்னதான் வாக்குறுதிகள் அளித்தாலும், தற்காலிக செக்ஸ் நோக்கங்களுக்கு உடன்படுவதை பெரும்பாலான இந்தியப் பெண்கள் விரும்புவதில்லை.
ஒரு விமானப்பணிப் பெண் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ரணதுங்கா பற்றி சொன்ன குற்றச்சாட்டும் இவ்வகையானதே. இருவரும் பரஸ்பரம் பழக்கமானவர்கள். ஒரு நட்சத்திர விடுதியின் நீச்சல்குளத்தின் அருகே இருக்கையில் அவர் தன் கையைப் பிடித்து இழுத்ததாய் அப்பெண் ஓட்டல் நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்க, நிர்வாகவோ “இது உங்கள் தனிப்பட்ட பிரச்சனை, நாங்கள் தலையிட முடியாது” என பொறுப்பற்று பதில் சொல்லி விட்டது. பின்னர் அப்பெண் முகநூலில் இதை பதிவு செய்தார்.
வேலையிடங்களில் ஆண்கள் இப்படி கொக்கி போடுவதும் ஆபத்தில் போய் முடிகிறது.
ஆனால் இதையெல்லாம் சொல்வது எளிது – பல உறவுச் சிக்கல்களில், பாலியல் வறட்சியில் மாட்டி ஆண்கள் நிலையற்று இருக்கும் போது அவர்கள் எல்லா இடங்களிலும் கொக்கி போடுகிறார்கள், அந்த கொக்கியில் பின்னர் அவர்களே மாட்டிக் கொள்கிறார்கள்.
நம்மூரில் பதியப்படும் கணிசமான பலாத்கார வழக்குகள் அந்நியர்களுக்கு இடையில் நடப்பதல்ல. நமது உறவுச் சிக்கல்களே குற்றங்களாய் பரிணமிக்கின்றன என்பதாலே இதையெல்லாம் சொல்கிறேன்.


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...