Skip to main content

வலியைக் கண்டு ஓடுதல்


Image result for escapism painting

ரத்த பந்தத்தின் ஒரு வலிமை அது நெருங்கின உறவினர் குறித்து அளிக்கும் உள்ளார்ந்த ஒருவித புரிதல். மகனை ஒரு தாய் அறிவது போல, தம்பியை ஒரு அக்கா உள்ளுணர்வால் புரிந்து கொள்வது போல, சகோதரர்கள் பரஸ்பரம் அறிவது போல அவனுடன் நெடுங்காலம் பயணித்த நண்பர்கள் அல்லது காதலிகளால் கூட முடிவதில்லை. இதை என்னிடம் பத்து வருடங்களுக்கு முன்பு சொல்லி இருந்தால் பிற்போக்கான சிந்தனை என காறித் துப்பியிருப்பேன் (இந்த ரத்தவழியிலான இணக்கம், வலைதொடர்பு சாதியையும் பல சனாதன இயல்புகளையும் வளர்க்கிறது என சொல்லி). ஆனால் இன்று அது எந்தளவு உண்மை என அனுபவம் எனக்கு கற்றுத் தந்திருக்கிறது. நம் மூதாதையர் ரத்த பந்தங்களுக்கு, குடும்ப உறுப்பினர்களுக்கு, நெருங்கின நெருங்காத உறவுகளுக்கு கொடுத்த அதிமுக்கியத்துவத்தின் காரணத்தை இப்போது புரிந்து கொள்கிறேன். எப்படி?

என் அக்காவிடம் மிக குறைவாகவே இதுவரையில் உரையாடி இருக்கிறேன்அதாவது நான் மற்றவர்களிடம் வாயாடி உள்ளதை ஒப்பிடுகையில். சமீபத்தில் அவள் என்னிடம் ஒன்று சொன்னாள். இதுவரை யாருமே என்னைப் பற்றி அவ்வளவு துல்லியமாய் கூர்மையாய் அவதானித்ததில்லை: “உனக்கு தனிப்பட்ட வாழ்க்கை பிரச்சனைகளை எதிர்கொள்ள துணிவில்லை. ஏதாவது சிக்கல் என்றால் தலையை மணலுக்குள் புதைத்துக் கொள்கிறாய். யார் பிரச்சனையை எழுப்புகிறார்களோ அவர்களிடம் பேசுவதை முழுக்க தவிர்த்து அவர்களிடம் இருந்து தப்பித்துச் செல்வதற்கான வழிகளை நாடுகிறாய். ஒன்றுமே நடவாதது போல பாவனை செய்கிறாய். ஆனால் எந்த பிரச்சனையையும் நேருக்கு நேர் எதிர்கொள்ளாவிடில், தொடர்ந்து உறைநிலையில் வைத்தால், அது சரியாகாது; மேலும் பல புதிய பிரச்சனைகளை அது அழைத்து வரும். எவ்வளவோ எழுதுகிறாய், ஆனால் ஏன் இந்த சின்ன உண்மை உனக்குப் புரியவில்லை.” நான் விக்கித்து விட்டேன். என்ன பதில் சொல்லவென தெரியவில்லை. புன்னகைத்து தலைகுனிந்து கொண்டேன். பின்னர் தொடர்ந்து அது குறித்தே யோசித்துக் கொண்டிருந்தேன்.
மிக நெருங்கின தனிப்பட்ட உறவுகளிடம், நான் மிக மிக முக்கியமாய் கருதும் ஆட்களிடம் நீண்ட காலமாய் இப்படித் தான் நடந்து கொண்டிருக்கிறேன். வேறு நபர்கள் என்னை காயப்படுத்தினால் அதை பேசி தீர்வு காண்பது என எளிது. எனது குறைபாடுகளையும் யோசித்து சீர் செய்ய முயல்கிறேன். அதைப் பற்றி பொதுவெளியில் எழுதவும் நான் தயங்குவதில்லை. என் மனத்தை தீர அலசி அதைப் பற்றி விரிவாக கட்டுரைகள் எழுதி இருக்கிறேன். என் பால்ய கால அனுபவங்களைமிக அந்தரங்க அனுபவங்களைக் கூடஎன் முதல் நாவலில் சித்தரித்திருக்கிறேன். என் நண்பர்கள், என் அலுவலக சகபாடிகள், சமூகவலைதள சகஹிருதயர்கள் என யாரிடமும் நான் பகையை பெரிதாய் வளர்ப்பதோ, காயம்பட்டு அவர்களிடம் பேசாமல் ஓடி ஒளிவதோ இல்லை. முந்தாநாள் அடித்து கட்டிப்பிடித்து மண்ணில் புரண்டிருப்பேன். ஆனால் அடுத்த நாள் கூசாமல் போய் மன்னிப்பு கேட்டு நண்பராகி விடுவேன். சின்ன வயதில் இருந்தே இதுவே என் இயல்பு. ஆனால் நான் மிக ஆழமாய் நேசிக்கிறவர்கள் விசயத்தில் மட்டும் நான் நேர்மாறாக இருக்கிறேன். இதைத் தான் அக்கா குறிப்பிட்டாள்.
என் அப்பாவுக்கு மிகவும் உடல் நலமில்லாமல் ஆகி அவர் இறுதி கட்டத்தில் இருந்த வேளை அது. சென்னையில் இருந்து அவரைப் பார்க்க ஊருக்கு சென்றிருந்தேன். எங்கள் இருவருக்கும் இடையில் ஒரு பேசிக் கொள் முடியாத பிரியம் உண்டு. அவரை வெறுத்து அதே சமயம் அதே உக்கிரத்துடன் நேசித்து அதை வெளியே சொல்லிக் கொள்ளத் தெரியாமல் தவித்துக் கொண்டிருப்பேன். அந்த ஒரு வாரமும் அப்படித் தான் போனது.
நான் மிகவும் சிரமப்பட்டு அப்பாவைக் காண சென்ற போது அவரோ என்னை பொருட்படுத்தவே இல்லை. அதனால் காயப்பட்டு மிக பதற்றமாக இருந்தேன். இனிமேல் அவருடன் இருக்க வேண்டாம் என கடுங்கோபத்தில் ஒருநாள் புறப்பட்டு விட்டேன். கிளம்பும் போது கூட அவர் என் கையைப் பிடித்துபோகாதே இருஎன சொல்ல மாட்டாரா என ஏக்கமாய் இருந்தது. ஆனால் அவரோ சாதாரணமாய்சரி போய் வாஎன்றார். சென்னையை நெருங்கிய போதுஅப்பா காலமாகி விட்டார்என சேதி வந்தது. அப்படியே திரும்பி வந்தேன். அவரது ஈமக்கிரியை முடிந்து மசானத்தில் அவரது கடைசித் துண்டு எலும்பை கையில் எடுத்து பார்த்த போது தான் மடையுடைத்துக் கொண்டு அழுகை வந்தது. (அதன் பிறகு அந்த அனுபவத்தையேஅப்பாவின் புலிகள்என்றொரு கதையாக வனைந்தேன்.)
என் அம்மாவிடமும் ஏதாவது ஒரு சின்ன விசயத்துக்காக முரண்பட்டு கோபித்து மாதக்கணக்கில் பேசாமல் இருந்திருக்கிறேன். அக்காவிடமோ வருடக்கணக்கில். இதையடுத்து நான் மிகவும் வருத்தப்பட்டு பேசாமல் இருந்தது ஜெயமோகனிடத்தில் தான். அவரது ஒரு சின்ன உதாசீனம் எனக்கு ஏற்படுத்தும் வலி மிகப்பெரியது. அதை நினைத்தே கசந்து மௌனமாகி இறுகிப் போய் விடுவேன். அப்படியே பத்து வருடங்களுக்கு மேலாக பேசாமல் இருந்து விட்டு, கடந்த வருடம் நான் சென்னையில் இருந்து கிளம்பும் போதுஇனி வாழ்க்கையே முடிந்து விட்டதுஎன மிகையாக எண்ணி மனம் மிகவும் கனத்துப் போன நிலையில் அவரை அழைத்து சில நிமிடங்கள் பேசினேன். அவர் மிக இயல்பாய் அன்பாய் பேசினார். சென்னையை விட்டு வர மிகப்பெரிய பலமாய் அவரது சொற்கள் அமைந்தன. ஆனால் அடுத்தடுத்த மாதங்களில் மீண்டும் அவர் என்னிடம் இருந்து விலகி விட்டார் எனத் தோன்ற கசந்து போய் அகல்யையாகி விடுவேன். இன்றும் அவரிடத்து என் உறவு அப்படியே நீடிக்கிறது.
பெங்களூர் வந்த பின் சாலையில், கடைகளில், குடியிருப்பில், புகைப்படங்களில் குழந்தைகளைக் காணும் போதெல்லாம் என் கண்கள் தளும்பி விடும். என் மகன் என் மனம் முழுக்க நிறைந்து விடுவான். அவன் என் வசம் இல்லை எனும் நினைவு என்னை கொல்லாத நாளில்லை. எவ்வளவு மகிழ்ச்சியான தருணத்திலும் மாரில் பாய்ந்த ஒரு வாளைப் போல அவன் முகம் இருந்து கொண்டிருக்கும். மறக்க முயலும் போதெல்லாம் அவன் முகம் என்னுள் ஆழமாய் இறங்கிக் கொண்டிருக்கும். ஆனால் அவனைத் தேடிப் போய் அணைத்துக் கொள்ள என்னால் முடியாது. இப்போது அவனை முழுக்கவே நான் இழந்து விட்டேன் எனும் நிலைமை. இனி அவனுடன் வாழவோ, அவனை கையில் ஏந்தவோ உணவு தரவோ அவனுடன் புது இடங்களுக்குப் பயணிக்கவோ அவனது அந்த நசநசவென்ற பேச்சை ரசிக்கவோ முடியாது. ஆனாலும் நான் நினைத்தால் அவனைத் தேடி அடைந்து காண முடியும். ஆனால் என்னால் முடியாது. அந்த வேதனையை, துயரத்தை என்னால் தாள முடியாது. தாள முடியாது எனும் அச்சமே என்னை அந்த உறவுச்சிடுக்கை அவிழ்க்க விடாமல் செய்கிறது.
வலியைக் கண்டு ஓடும் இயல்பு என் உடல் வலிகளின் மீதான் அச்சத்தில் இருந்து தோன்றியது என எண்ணுகிறேன். சின்ன வயதில் இருந்தே நான் வலிகளோடு தான் வாழ்ந்திருக்கிறேன்ஆக காலில் சின்னதாய் காயம்பட்டாலே ஒவ்வொரு நிமிடமும்ஐயோ வலிக்குமேஎன எண்ணி காலை அசைக்காமலே வைத்திருப்பேன். லேசாய் கழுத்து வலி ஏற்பட்டாலே நான் பண்ணும் அதகளம் கண்டு கூட இருப்பவர்கள் பயந்து விடுவார்கள். மிக சன்னமாய் வேதனை ஏற்பட்டாலே வலிநிவாரண மருந்துகளை உட்கொள்ளும் வழக்கம் அப்படியே ஏற்பட்டது. வலி சகிப்பின்மை என் உடலில் இருந்தே என் மனத்துக்கு, என் இயல்புக்கு பற்றிப் படர்ந்திருக்க வேண்டும்.
இது என் வாழ்நாள் சிக்கல். அதுவாகவே தானாக ஒருநாள் அவிழ்ந்து சரியானால் தான் உண்டு. அன்று நான் வலியைக் கண்டு ஓடாமல் அதை அரவணைத்துக் கொள்பவனாக இருப்பேன்!


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...