Skip to main content

சின்மயியின் முன்னுக்குப் பின் முரணான நிலைப்பாடுகள்


Image result for chinmayee

சின்மயி வைரமுத்து மீது குற்றச்சாட்டு வைத்த பின் 2004இல் இருந்து சமீபம் வரை அவரும் அவரது தாயாரும் வைரமுத்துவை புகழ்ந்தது (வைரமுத்துவும் ரஹ்மானும் தண்ணீர் ஊற்றி வளர்த்த செடி என் மகள்), அவருக்கு பத்மஸ்ரீ கிடைத்த போது கொண்டாடியது, தன் திருமணத்துக்கு அவரை அழைத்து காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியது ஆகிய சான்றுகளைக் காட்டிஒருவர் உங்களிடம் 2004இல் தவறாக நடந்து கொள்ள முயன்றிருந்தால் அவரை எப்படி பாராட்டி திருமணத்துக்கு அழைக்க முடியும்?” என டிவிட்டரில் பலரும் சின்மயியிடம் கேட்டார்கள். அதற்கு பதிலளித்த சின்மயி வைரமுத்துவுடன் 2004க்குப் பின் சில மேடைகளை பகிர்ந்து கொண்டதற்கு மட்டும் விளக்கம் அளித்துள்ளார். அந்நிகழ்ச்சிகளை கவனித்துக் கொண்டது தான் அல்ல, “அதற்கு பொறுப்பானவரிடம் என் தேதிகளை ஒப்படைத்த நிலையில் எனக்கு முடிவெடுக்கும் வாய்ப்பு இருக்கவில்லைஎன்கிறார். ஆனால் இந்த விளக்கம் ஏற்கும்படியாய் இல்லை. சின்மயி இவ்விவகாரத்தில் முரண்படவே செய்கிறார்.

என் ஊகம் என்னவெனில், ஒருவேளை அவர் சொல்வது போல வைரமுத்து தவறு இழைத்திருந்தால், தனது திரைவாழ்க்கையை பாதுகாக்கும் பொருட்டு அவர் வைரமுத்துவிடம் நட்பு பாராட்டியிருக்கலாம். அதை நான் தப்பென்று சொல்ல மாட்டேன். வாழ்க்கை என்பதே பலவகையான சமரசம் தானே!
 அன்று நான் வெளிவந்து அவரைப் பற்றி பேசியிருந்தால் யாராவது ஏற்றுக் கொண்டிருப்பாரா? அன்று எனக்கு பேச ஒரு தளம் இல்லைஎன்றெல்லாம் சின்மயி சொல்வது சப்பைக்கட்டு.
இதற்கு ஒரு நல்ல ஆதாரம் அவர் இதுவரை திரைத்துறையின் முக்கிய இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட வி..பிகள் பற்றி எதுவும் வெளியிட வில்லை என்பது. திரைத்துறையில் நடக்கும் கேஸ்டிங் கவுச் குறித்து நன்கு அறிவோம். ஆனால் சின்மயி அது குறித்து வாயே திறக்கவில்லை. சுசித்ரா லீக்ஸ் பிரச்சனை எழுந்த போது நடிகைகள் பயன்படுத்தப்படுவது பற்றி பேசினாரா இவர்?
ஏன் இல்லை என்றால் அவர் சாமர்த்தியசாலி. சாமர்த்தியசாலியாய் இருப்பது தப்புமல்ல. நான் உண்மையில் இதைப் பாராட்டுகிறேன்.
சின்மயி சமரசம் செய்து கொண்டிருப்பார் என்றால் என்ன பொருள்? (சின்மயியின் குற்றச்சாட்டு உண்மையானால்)
வைரமுத்து அவரை இனி தொந்தரவு செய்ய மாட்டேன் என்று கோர, இவர் அதை ஏற்றுக் கொண்டு சமரசம் நடந்திருக்க வேண்டும். அல்லாவிடில் 2004க்கு பிறகு இவ்வளவு பாடல்கள் அவர் வைரமுத்துவுக்கு பாடவோ, வைரமுத்துவை விண்ணுயர புகழவோ அவரை திருமணத்துக்கு அழைத்து காலில் விழவோ செய்திருக்க மாட்டார்.
இருவருக்குமிடையே ஒரு சுமூகமான உறவு நிலவியிருக்கும். வைரமுத்து இவரை அதிகம் அண்டாமல் இணைந்து பணியாற்றி இருப்பார். “பெரியவர்இறங்கி வருகிறாரே என சின்மயியும் நெகிழ்ந்து பல சந்தர்பங்களில் அவரை புகழ்ந்திருப்பார். (மீண்டும் சொல்கிறேன்சின்மயியின் குற்றச்சாட்டு உண்மை எனும் பட்சத்தில் மட்டுமே இதைச் சொல்கிறேன்; அது பொய்யாகவும் இருக்கலாம்.)
ஆனால் இந்த சுமூக உறவுக்குப் பின்னால் சின்மயி புகைந்து கொண்டு தான் இருந்திருப்பார்.
இது பெண்களுக்கே உரிய ஒரு பிரத்யேக சுபாவம். அவர்களால் முரண்பாடுகளுடன் தொடர்ந்து வாழ முடியும். அப்படி முரண்பாட்டுக்குள் அவர்களைத் தள்ள கடுமையான அழுத்தங்கள் எல்லாம் அதற்குத் தேவையில்லை. மிகக் கடுமையாய் வெறுக்கிற ஒருவரையே மதிக்கவும் அவருடன் இணைந்து செயலாற்றவும் பெண்களால் முடியும். ஆனால் சூழ்நிலை என்றோ ஒருநாள் மாறும் போது அதே அவர் மீது கடுமையாய் தாக்குதல் நடத்தவும் அவர்களால் முடியும்.
ஏன் இத்தனைக் காலம் கழித்து?
முரண்பாடுகளுடன் வாழும் பெண்ணின் மன இயல்பு பற்றி சொன்னேனே. இந்த இயல்பு அவர்களுக்குள் கடும் அழுத்தத்தை உருவாக்கும். ஒரு கட்டத்தில் வெடித்து விடுவார்கள். அவரை புகழப் புகழ அவரை இகழ்வதற்கான சாத்தியங்களும் அவருக்குள் எட்டிப் பார்க்கும். அதை தலையில் தட்டி அப்போதைக்கு துயில வைப்பார்கள். ஒரு கட்டத்தில் புகழ வேண்டிய மனம் உறங்க காறித் துப்ப வேண்டிய மனம் விழிக்கும்.
சின்மயி செய்தது சந்தர்ப்பவாதமா என்றால் ஆமா மற்றும் இல்லை என்பேன்.
அவருக்கு உண்மையிலேயே வைரமுத்து மீது மரியாதை இருக்கலாம். அவரது பாடல் வரிகளை இவர் புகழ்ந்து எழுதியுள்ளதைப் பார்க்கும் போது இது தெரிகிறது. “சரசர சாரக் காத்துபாடலைப் புகழும் போது எப்படி வைரமுத்துவால் பெண் மனத்தை நுணுக்கமாய் புரிந்து கொண்டு இவ்வளவு எதார்த்தமாய் எழுத முடிகிறது என சிலாகிக்கிறார் சின்மயி. இது பாசாங்கு அல்ல.
ஆனால் இதைச் சொல்லும் போதே ஒரு பெண் மனத்தை இவ்வளவு நன்றாய் எழுத்தில் சித்தரிக்கத் தெரிந்தவர் நடப்பில் அதே புரிதலுடன் கண்ணியமாய் தன்னை நடத்தவில்லையே என (ஒருவேளை அவரது குற்றச்சாட்டு உண்மையெனில்) சின்மயியின் மனம் சொல்லும்.
ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் அழைத்து விடுக்கும் போது பெண் அதை அவனது பிரச்சனையாக மட்டும் பார்க்க மாட்டாள். தன் மீதான பாலிய ஒழ்க்க விமர்சனமாகவும் அதைப் பார்ப்பாள். “இத்தனைப் பெண்கள் இருக்கையில் நான் மட்டும் ஏன் அப்படி ஒரு எண்ணத்தை ஏற்படுத்துகிறேன்? என்னைப் பார்க்க இவனுக்கு அப்படி ஒழுக்கமற்றவள் எனப் படுகிறதா?” என்றெல்லாம் அவர்கள் குமைவார்கள். ஆக அவர்களை அழைப்பது என்பது ஆயிரம் முறை முகத்துக்கு முன்னால் ஈனமானவளே என கூவுவதற்கு சமம். ஆகையால், விரும்பாத பாலியல் அழைப்பை பெண்கள் வெறும் அழைப்பாய் மட்டும் பார்ப்பதில்லை; அவர்கள் கடுமையாய் காயப்படுகிறார்கள். இவ்வளவு குழப்பங்கள் அவர்களுக்கு ஏற்படுவதை ஆண்கள் உணர்வதில்லை.
இப்படி அவமதிப்பு நிகழ்ந்த பின் அதை வெளியே சொல்லாமல் இருந்தால், அவருடன் சுமுகமாய் பணியாற்ற நேர்ந்தால், கூடுதல் சமாளிப்புக்காகவும் உண்மையாகவும் அவரை பலமுறை புகழவும் காலில் விழுந்து அவரிடம் ஆசி வாங்கவும் செய்தால் அப்பெண்ணுக்கு என்னவாகும்? ஒரு பக்கத்தை மட்டும் வைத்து அவரை புகழ்கிறேனே எனும் உறுத்தல் பாம்பாய் படமெடுத்து அவரைக் கொத்தும். ஒருநாள் சின்மயியே அந்த பாம்பாகி வெளிவந்து சீறி விட்டார். அது தான் நடந்திருக்க வேண்டும்.
நான் சின்மயியின் முரண்பட்ட செயல்களை ஒருவித உள்முரணின் வெளிப்பாடாக பார்க்கிறேன். இது பெண் உளவியலின் அடிப்படை இயல்பு என்கிறேன். அதேவேளை தன் தொழிலை பாதுகாத்துக் கொள்ளும் சின்ன சந்தர்ப்பவாதமும் இருக்கிறது.
மற்றபடி அவர் எந்த அச்சமும் இல்லாத பெண்ணுரிமைப் போராளி என சொல்ல மாட்டேன். காஸ்டிங் கவுச் விவகாரத்தில் அவர் மௌனம் காப்பது அதைக் காட்டுகிறது.
ஆனால் அவர் ஏன் போராளி ஆகி ஊருக்கே கொடி பிடிக்க வேண்டும்? அவசியமில்லை.
அவர் தன் தனிப்பட்ட கோபத்தை வெளிப்படுத்திய ஒரு சராசரி மனுஷி அவ்வளவு தான். தன்னை ஒத்த பெண்களின் டிவீட்களையும் இதை ஒட்டி அவர் பகிர்ந்திருக்கிறார். இதுவரையில் அவரது பகிர்வு அவரது திரைவாழ்வை முழுக்க காலி பண்ணாது என நம்புகிறேன். அவர் கர்நாடக இசைப் பாடகர்களை, பிராமண சங்கத் தலைவரை எல்லாம் இழுத்து விட்டிருக்கிறார். ஆனால் இவர்களுடன் அவர் எப்படியும் பணியாற்றப் போவதில்லை.
 ஆக, அவர் பெரிய ரிஸ்க் எடுத்திருப்பதாகவும் எனக்குத் தோன்றவில்லை. இனிமேல், வைரமுத்து பங்கேற்கும் படங்களில் அவர் பாடுவது சிரமமாகும். வைரமுத்துவின் பாடலாசிரியர் வாழ்க்கை அஸ்தமனத்தில் இருக்கும் இந்த சந்தர்பத்தில் சின்மயியின் பாடல் வாய்ப்புகளும் பெரிய அளவில் இனி பாதிக்கப்படாது என நினைக்கிறேன். இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் என யாரையும் சீண்டாமலே அவர் விளையாடி வருகிறார். Safe play!


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...