Skip to main content

கருத்தே வேண்டாம்டா!


நமது சிறு மற்றும் இடைநிலை இதழ்களில் கடந்த இரு பத்தாண்டுகளில் வெளியான கட்டுரைகளை இப்படி வகுத்துக் கொள்கிறேன்.
1)   2005 வரை - எந்த பிரச்சனையையும் சிக்கலாகவே காணும் (சிலநேரம் சிக்கலாக்கிக் காணும்) கட்டுரைகள்; அரசியல், சமூகம், ஈழப் போர் மற்றும் மனித உரிமைக் குற்றங்கள் மற்றும் இலக்கிய கட்டுரைகள்; சன்னமான கோட்பாட்டு சாயல் கொண்ட கட்டுரைகள். நிபுணர்களின் இறுதிக் காலம் இது.  எல்லா தளங்களிலும் மதிப்பீடுகள், தனித்த பார்வை, சமரசமற்ற நிலைப்பாடு ஓரளவு வெளிப்பட்ட கட்டுரைகளின் காலம். ஒரு குறிப்பிட்ட துறையில் படித்து அதைப் பற்றி தொடர்ந்து கருத்து கூறும் இத்தகையோர் இன்று அருகி வருகின்றனர். இதற்கு அடுத்த காலகட்டத்தில் படிக்கத் தெரிந்தவர் அனைவரும் நிபுணர்கள்.

2)   சமீபம் வரை – எந்த பிரச்சனை அல்லது விசயத்தையும் பற்றி மலை மலையாய் தகவல்களை தொகுத்தளிக்கும் தரும் கட்டுரைகள். குறிப்பாய் அரசியல் சர்ச்சைகள் மற்றும் உலக சினிமா குறித்த கட்டுரைகள். இணையம் பரவலாகி பல இணைய படைப்பாளிகள் நிலைப்பட்டு விட்ட காலம் இது. விகடன், நக்கீரன் முதல் சிறு / நடுநிலை பத்திரிகைகள் வரை சமூக அரசியல் பிரச்சனைகள் பற்றி ஒரே வகையான தகவல்பூர்வ கட்டுரைகள் முகப்புக் கட்டுரைகளான காலம். மதிப்பீடு, நிலைப்பாடு, தனித்த கோணம் ஆகியவை பின்னிலைப்பட்டு, பாரபட்சமற்ற தகவல்தொகுப்பு முன்னிலைப்பெற்ற காலம். அதே போல அரசியல் வரலாறு, தன்வரலாறு ஆகிய எழுத்து வடிவங்கள் பிரதானப்பட்ட காலம்.
3)   தற்போது – இப்போது தகவல்பூர்வ கட்டுரைகளின் இடத்தில் எளிய விளக்க கட்டுரைகள் வந்து விட்டன. இன்று ஒரு அரசியல், சமூக சர்ச்சை ஏற்பட்டால் அதைப் பற்றி தெளிவான விளக்கக் கட்டுரைகள் வருகின்றன. இம்மாத உயிர்மையில் ரபேல் ஊழல் குறித்து அத்தகைய எளிய, கச்சிதமான கட்டுரை ஒன்றை ஜி.கார்ல் மார்க்ஸ் எழுதியுள்ளார். இதுவரை வெளியான கட்டுரைகள் உண்மையிலே பிரச்சனை என்ன என நமக்கு புரியாத படி குழப்பத்துக்கு மேல் குழப்பம் விளைவித்தன. ஆனால் கார்ல் மார்க்ஸின் கட்டுரையில் இந்த சர்ச்சை என்ன என ஒரு குழ்ந்தை கூட விளங்கிக் கொள்ளும் அளவுக்கு தெளிவாகவும், சங்கிகளால் சுலபத்தில் மறுத்திட முடியாத படி தர்க்கபூர்வமாகவும் எழுதியுள்ளார். இதே இதழில் வெளியாகியுள்ள, ஸ்ரீதர் சுப்பிரமணியத்தின், ஓரினச்சேர்க்கையாளர்கள் மணம் புரியலாம் எனும் சட்டம் பற்றின கட்டுரைக்கும் இதையையே சொல்லலாம்.

எந்த செய்தி என்றாலும் இன்று அது சர்ச்சை ஆகிறது. சர்ச்சை என்றால் எதிரெதிர் நிலை எடுத்து முகநூலிலும் தலையங்கத்திலும் டிவியிலும் விவாதிக்கிறார்கள். ஒரே மாதிரி பத்து தகவல்களை இருவிதங்களில் மறைத்தும் கூட்டியும் குறைத்தும் குழப்பியும் தம் வாதத்துக்கு ஏற்ப முன்வைக்கிறார்கள். கண்ணை மூடி கூகிள் செய்தால் ரபேல் ஊழல் நடக்கவே இல்லை என வாதிடும் (சங்கிகளின்) நூறு பதிவுகளை, குறிப்புகளை, தரப்புகளைப் பார்க்க முடியும். ஆக, இன்று தகவல்சார் கட்டுரை எழுதுவோர் இந்த வாத பிரதிவாதங்களை வாசகர்களுக்கு தொகுத்து அளித்து அதற்கான தம் தரப்பு விளக்கங்களையும் தருகிறார்கள். கடந்த சில வருடங்களில் இப்பணியில் நம் எழுத்தாளர்களுக்கு ஒரு நிபுணத்துவமே வந்து விட்டது. இன்று வெறுமனே ஒரு பிரச்சனையைப் பற்றி பேச முடியாது – அதை ஒட்டி நிகழும் பற்பல குழப்பங்களையும் இன்று தொகுத்தளிக்க வேண்டும். ஒரு மாதம் பிக்பாஸ் வீட்டில் போய் இருந்து விட்டு திரும்பி மாத இதழ் ஒன்றை எடுத்து கடந்த மாத சர்ச்சை என்ன என வாசித்தால் ஒரு அபாரமான தெளிவும் நிம்மதியும் கிடைக்கும் எனத் தோன்றுகிறது. இதை டிவி ஊடகத்தால் நிச்சயம் தர முடியாது.
அதே சமயம், இதே ஊழல் எண்பதுகளில் வெடித்திருந்தால் நிறப்பிரிகையிலோ, தொண்ணூறுகளில் என்றால் காலச்சுவடிலோ மிக வித்தியாசமான கோணத்தில், கூர்மையான, ஒரு கட்டுரை வந்திருக்கும்.
அது ஒரு கனாக்காலம் என்றெல்லாம் நான் பாடவில்லை. ஆனால் இன்று பார்வைகளும் கருத்துக்களும் மலிந்து போன நிலையில் “கருத்தே வேண்டாம்டா” என ஓய்ந்து விட்டோமா எனத் தோன்றுகிறது.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...