Skip to main content

Dispossessed - மொழியாக்க கதைகள் (2)


Dispossessed என்பது நவீன கோட்பாடுகளில் கவனம் பெறும் சொல். நிலத்தை இழந்தவர்கள், சொந்த அடையாளத்தை, பண்பாட்டு வேரை தொலைத்தவர்கள், உளவியல், ஆன்மீக ரீதிகளில் மையத்தில் இருந்து கழன்று வந்து தனித்து விடப்பட்டவர்கள், அகத்தில் இருந்து சிதறிப் போய் உழல்பவர்கள் என பல நிலைகளில் உள்ளவர்களை இக்கதைகள் சித்தரிக்கின்றன. ஐம்பதுகளில் இருந்து 2017இல் எழுதுகிறவர்கள் வரை பிரதிநுத்துவப்படுத்துகின்றனர். தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இருந்து 16 கதைகள். 

இக்கதைகளின் படைப்பாளிகளையும் அவர்களிடம் இருந்து பதிப்புரிமையை பெற்றுள்ள பிரசுர நிறுவனங்களையும் தொடர்பு கொண்டு இக்கதைகளுக்கான அனுமதியை பெறுவது சுலபமல்ல. அது ஒரு தனியாளாய் சாத்தியமாகும் ஒன்றல்ல. ஆகையால் இந்நூலை விற்க வேண்டாம், உள்சுற்றுக்கு மட்டும் வைத்துக் கொள்ளலாம் என முடிவெடுத்தோம். (ஏற்கனவே ஒரு பாடத்துக்கு நாங்கள் இவ்வாறு ஒரு தொகுப்பு நூலை உள்சுற்றுக்கென வைத்திருக்கிறோம்.) ஆனாலும் சு.ராவின் கதைக்காக மட்டும் காலச்சுவடு கண்ணனிடம் தெரிவித்து அவரை வெளியீட்டின் போது பேசக் கேட்டேன். அவருக்கு வேறு கூட்டம் அப்போது இருந்ததால் முடியவில்லை.
லக்கான நூலை விட இதை எடிட் செய்வது சவாலாக அமைந்தது. அத்தனை கதைகளையும் படித்து தேர்ந்தெடுத்து ஒரு வடிவத்துள் கொண்டு வருவது மூட்டைகளை சுமந்து அடுக்குவது போன்ற கடும் பணி. அடுத்து சரித்தன்மை. கன்னடக் கதையை ஒரு நண்பரின் உதவியுடன் சரி பார்த்தேன். தமிழும் மலையாளமும் எனக்கு தெரியும் என்பதால் நானே ஒப்பு நோக்கிக் கொண்டேன். ஆனால் அது மட்டுமல்ல, மொழியாக்க மொழி எல்லா கதைகளுக்கு சீராக வர வேண்டும்; கதைகளின் தொனியும் ஒரே ஸ்ருதியில் அமைய வேண்டும். பல்வேறு மொழிபெயர்ப்பாளர்களின் கையிருந்தாலும் அது ஒற்றைக் கை எழுதியது போன்ற தோரணையை கொண்டிருந்தால் வாசிக்க லகுவாக அழகாக இருக்கும். இறுதியாய் இலக்கணத் தவறுகளை திருத்த வேண்டும். இப்பணிகளை நான் முடித்து விட்டு, மாணவர்களைக் கொண்டு ஒரு ஆசிரியக் குழு அமைத்து இரண்டாம் நிலை திருத்தங்களை மேற்கொண்டேன். அடுத்து, அட்டையை அமைக்கும் பணி. அதில் நான் கூடுதல் கவனம் எடுத்துக் கொண்டேன். லக்கான் நூலுக்கு அட்டைப்படம் வரைந்தவர் நிதின் எனும் மாணவர். அவரது கோட்டோவிய பாணி எனக்கு பிடித்தமானது – அவரைக் கொண்டே இந்நூலுக்கும் ஒரு அபாரமான ஓவியத்தை வரைந்து பெற்றேன். அலெக்ஸ் எனும் மற்றொரு மாணவர் அட்டை வடிவமைப்பை எடுத்துக் கொண்டார். ஆச்சரியமாக அவர் நமது சந்தோஷ் நாராயணனைப் போல மினிமலிச பாணியில் ஆர்வம் கொண்டவர் என அறிந்து கொண்டேன். ஆக கோட்டோவியமும் மினிமலிசமும் சேர்ந்து ஒரு அபாரமான அட்டைப்படம் தயாரானது. (அதற்கான சில முக்கிய தொழில்நுட்ப, அழகியல் ஆலோசனைகளை வழங்கிய சந்தோஷுக்கு இங்கு என் நன்றிகளை பதிவு செய்து கொள்கிறேன்.) ஆனால் கல்வி அரையாண்டு முடிந்து போனதால் நூல் தயாரிப்பு நின்று போனது. இந்த அரைக் கல்வியாண்டு துவக்கத்திலேயே நூலை பிரசுரித்து வெளியிட்டு விட்டோம்.
கடத்தி வரப்பட்டவர்களைப் போன்ற பார்வையாளர்களை ஒரு கூடத்தில் வைத்து தனியாய் நூல் வெளியிடுவதில் எனக்கு உடன்பாடில்லை – அதனால் வகுப்பிலேயே வெளியிட்டேன். என்னுடன் நூலை எடிட் செய்த மாணவி மிருத்திகா துவக்க உரை வழங்கினார். 2008இல் தனது மராத்திய நாவல் மொழிபெயர்ப்புக்கு (டோப்பி ஷுக்லா) சாகித்ய அகாடெமி விருது பெற்ற பேராசிரியர் மீனாட்சி ஷிவ்ராமும் கவிஞரும் பேராசிரியருமான கெ.ஜெ ஜோஷியும், எங்கள் டீன் ஜான் ஜோசப் கென்னடியும் நூலை வெளியிட்டு பேசினர். நான் நன்றியுரை வழங்கினேன்.
இந்த தொகுப்பு பணியின் போது என்னை ஆச்சரியப்படுத்தின ஒன்று மலையாளிகளின் இலக்கிய ஆர்வம் – அவர்கள் அதிகமான கதைகளை மொழியாக்கினார்கள். கதைத் தேர்வும் அபாரமாய் இருந்தது. இதற்கு அடுத்து இந்தி. தமிழிலிருந்து சு.ராவின் விகாசம் கதையை ஒரு மாணவர் தானாகவே எடுத்து மொழியாக்கினார். மிச்ச இரு கதைகளில் ஒன்றை நானாக மொழியாக்கினேன் (ஜி.நாகராஜனின் “துக்க விசாரணை”); மற்றொன்றை (புதுமைப்பித்தனின் “இது மிஷின் யுகம்”) நான் தேர்ந்து கொடுத்து ஒரு மாணவி மொழியாக்கினாள். தமிழ் மாணவர்களுக்கு ஆங்கில அறிவும் புத்திசாலித்தனமும் உண்டு – ஆனால் தமிழ் இலக்கிய பரிச்சயம் ஏனோ மிகவும் குறைவு. இந்நிலை விரைவில் மாற வேண்டும்.
மொழிபெயர்ப்பு நூல் பிரசுரம் எவ்வளவு சவாலான அதே நேரம் சாகசமான வேலை என அறிந்து கொண்டேன். திறமை மிக்க மாணவர்களை சரிவர பயன்படுத்தி இத்தகைய பணியை நிறுவனங்கள் பெரிய அளவில் செய்தால் இதுவரை மொழிபெயர்ப்பே காணாத பல இந்திய மொழிகளில் இருந்து ஆயிரக்கணக்கான கதைகளை ஆண்டு தோறும் கொணர முடியும். அந்த காலம் விரைவில் மலரட்டும்!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...