Skip to main content

Metooவும் மத-ஒழுக்கவாதிகளும்: அப்பாலே போ சாத்தானே! (3)


Image result for victorian morality

மனித உறவுகளில் பல வீழ்ச்சிகளும் முரண்களும் சமரசங்களும் உண்டு. கராறான நல்லவன்கெட்டவன் எனும் இருமைக்கு ஆண்-பெண் உறவுகளில் பெரிய மதிப்பில்லை. நாம் நம்புகிறவர்கள், நாம் விரும்புகிறவர்கள் எல்லாம் நமக்கு நல்லவர்களே. தன் கணவன் ஒரு தோழிக்கு ஆபாசமாய் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினால் உடனே ஒரு பெண் அவனை மன்னிக்கலாமா அல்லது அவனை விவாகரத்து பண்ண வேண்டுமா? ரேடிக்கல் பெண்ணியவாதிகள்எந்த சமரசமும் கூடாது, அவனை உதைத்து வீட்டை விட்டு துரத்துஎன்பார்கள். இந்தியாவில் எத்தனையோ குடும்பங்களில் கள்ள உறவுகளை ஜீரணித்து தாம்பத்ய பந்தங்கள் உயிர்வாழ்கின்றன

தாம்பத்யம் இப்படி மிக மிக சிக்கலான ஒன்று. மனிதர்கள் தொடர்ந்து உருமாறும் உயிர்கள். எளிய கட்டமைப்புகளைக் கடந்த பிரியமும் கருணையுமே நம் காதல்களை, தாம்ப்தயங்களை உய்விக்கின்றன. ஆனால் ரேடிக்கல் பெண்ணியவாதிகள் சிலுவை எடுத்துக் காட்டிஅப்பாலே போ சாத்தானேஎன கூவும் பாதிரியாரைப் போன்றவர்கள். ஆண்கள் எல்லாரும் சாத்தான்கள் எனும் போது சாத்தானுடன் சமரசம் பண்ணலாமா? கூடாது என்பார்கள் அவர்கள். ஹிலாரியின் சமரசம் என்பது அவரது அரசியல் வாழ்க்கைக்கு, குடும்ப நலனுக்கு, தனிப்பட்ட மகிழ்ச்சிக்கு அவசியமாக இருந்திருக்கலாம். அவரை பெண்கள் பெருமளவில் ஆதரித்திருந்தால், இன்று டிரம்பின் பெண் நலனுக்கு எதிரான வலதுசாரி வரிச்சலுகை ரத்துகளை தவிர்த்திருக்க முடியலாம். அரசியல் என்பது எளிய மற்றமை உருவாக்கமோ, மற்றமையை கடுமையாய் வெறுத்து போருக்காக அறைகூவல் விடுக்கும் முனைப்போ அல்ல என்கிறார் சூசன். Metoo இயக்கத்தின் முக்கிய குறையாக இந்த இருமையைக் காணும் சூசன், இதைக் கடந்து வந்து பரந்துபட்ட அரசியல் சமூக பொருளாதார அக்கறைகளை அது உள்ளடக்க வேண்டும் என்கிறார். ஆனால் அதற்கு ரேடிக்கல் பெண்ணியம் கிறித்துவ மதவாத கதையாடலின் பிடியில் இருந்து விடுபட வேண்டுமே!
சரி செக்ஸ்-நேர்மறை பெண்ணியவாதிகளுக்கும் போர்னோ எதிர்ப்பாளர்களுக்குமான மோதலுக்கு வருவோம்.
அறுபது-எழுபதுகளின் போர்னோ-எதிர்ப்பு பெண்ணியவாதிகள் குடும்ப அமைப்பை விடுத்து ஏன் விபச்சாரத்தை தாக்கினார்கள்?
1)   குடும்ப அமைப்பு ஒப்பிடுகையில் ஆபத்து குறைவானது. ஆகையால் அதை தாக்க வேண்டியதில்லை.
2)   விக்டோரிய காலகட்டத்தில் இருந்தே ஓங்கி ஒலிக்கும் ஒழுக்கவாத குரல்கள் உருவாக்கி வைத்துள்ள செக்ஸ்-வெறுப்பு கதையாடலை இந்த போர்னோ-எதிர்ப்பு பெண்ணியவாதிகள் தமக்கு சாதகமாய் பயன்படுத்திக் கொண்டார்கள். குடும்ப செக்ஸை எதிர்ப்பது மிக மிக சிரமம், ஆனால் ஏற்கனவே அதிகார வர்க்கம் கண்டிக்கிற ஒழுக்க மீறல் செயலொன்றை (விபச்சாரம், போர்னோ) எதிர்ப்பது உடனடி வெகுமக்கள் ஆதரவை தமக்குப் பெற்றுத் தரும் என இவர்கள் அறிந்திருந்தனர்.
3)   தீவிர பெண்ணியவாதத்தில் உறைந்திருந்த பாலியல் ஒழுக்கவாதம், தூய்மைவாதம் (puritanism), ஒழுக்க எதேச்சதிகாரம் இந்த போராட்டங்களில் வெளிப்பட்டதாய் செக்ஸ்-நேர்நிலை பெண்ணியவாதியான எல்லென் வில்லிஸ் தான் 1981இல் வெளியிட்ட கட்டுரை ஒன்றில் சொல்கிறார் (Lust Horizons: Is the Women’s Movement Pro-sex?).
மூன்றாம் அலை பெண்ணியம் போர்னோவை ஒரு குற்றமாய், ஆணாதிக்க நிகழ்த்தலாய் பார்ப்பதில்லை. இச்சையை முன்னெடுப்பது ஆதிக்க எதிர்ப்பின் முக்கிய உத்தி என மூன்றாம் அலை பெண்ணியவாதிகள் கருதுகிறார்கள். இன்று பெண்களுக்கான மென்-போர்னோ பரவலாக உள்ளது. இன்று தம்பதிகள் போர்னோவை செக்ஸுக்கு முன்பான ஒரு பிரதான ஊக்கியாக கருதுகிறார்கள். இன்று பெண்களுக்கு சேவை செய்யும் ஆண் விபச்சாரிகள் ஒவ்வொரு நகரத்திலும் (சென்னையில் கூட) இருக்கிறார்கள். ஆனால் இன்றைய கணிசமான ரேடிக்கல் பெண்ணிவாதிகள் போர்னோ எதிர்ப்பாளர்களே. செக்ஸை நான்கு சுவர்களுக்குள் முடக்குவதே சிறந்தது என நம்புபவர்களே. உதாரணமாய், ஒரு ரேடிக்கல், போர்னோ-எதிர்ப்பு பெண்ணிவாதியால் ரப்பர் ஆண்குறி போன்ற ஒரு செக்ஸ் பொம்மையை ஏற்க முடியாது. அவர்களைப் பொறுத்தமட்டில், ஆண்குறி என்பது அது ஒரு பொம்மை என்றாலும் ஒரு ஆதிக்க குறியீடே.
இன்றைய metoo இயக்கம் ரேடிக்கலான, போர்னோ-எதிர்ப்பு பெண்ணியத்தின் ஒரு நகலைப் போன்றே உள்ளது. ஆணுடலை ஆணாதிக்கமாகவும் செக்ஸை அச்சம் தரும் ஒன்றாகவும், பாலுறவை ஒடுக்குமுறையாகவும் காண்பவர்களாகவே இவர்களில் கணிசமானோர் தெரிகிறார்கள். ஆகையால் தான் நேரடியான பாலியல் அத்துமீறல்களை பதிவு செய்யும் போதே ஒரு ஆணின் செக்ஸ் விருப்ப வெளிப்பாட்டை, அவன் பெண்ணுடலை உற்றுப் பார்ப்பதை, அவன் அவளிடம் வழிவதை, ஒரு பெண்ணின் தோற்றத்தை அவன் பாராட்டுவதை எல்லாம் ஒரு மறைமுக வன்முறையாய், மென்மையான பலாத்காரமாய் இந்த இயக்கம் பார்க்கிறது; பெண்ணின் கழுத்துக்குக் கீழ் ஒரு நொடி பார்த்தவனைக் கூட ரேப்பிஸ்டாக முத்திரை குத்துகிறது. ஒரு திருமணமான ஆள் / அந்நியன் / நண்பன் ஒரு பெண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் காதல் கடிதம் எழுதினால், அதற்கு அவளது பதிலை வினவினால் அதை பாலியல் ஒடுக்குமுறையாய் metoo போராளிகள் பார்க்கிறார்கள்.
உடல்மொழியிலோ பார்வையிலோ சொற்கள் வழியாகவோ பெண்ணிடம் விருப்பம் தெரிவித்தாலே அது மறைமுக பலாத்காரம் எனும் கதையாடல் இன்று ஏன் metooவினால் வலுப்பெற்றுள்ளது என நாம் யோசிக்க வேண்டும்.
ஆண்கள் தமது செக்ஸ் விழைவுகளை, இச்சையை அடக்கிக் கொள்ள வேண்டும். பெண்ணாகவே நேரடியாய் விரும்பி வேண்டாத வரை ஆண்கள் தம் இச்சையை காட்டுவது தப்பாகும். ஏன்?
 ரேடிக்கல் பெண்ணியவாதிகளின் வாதம் இப்படிப் போகும்: “செக்ஸ் என்பது ஆண் அதிகாரம் வெளிப்படும் செயல்பாடு. ஆக ஆண் அதிகாரத்தை எதிர்க்க பெண்கள் முதலில் செக்ஸை எதிர்க்க வேண்டும். ஒரு ஆண் தனது விருப்பத்தை காட்டும் போது தன் அதிகார ஆயுதத்தையே பெண்ணை நோக்கி உயர்த்துகிறான். பெரும்பாலான பெண்கள் ஆண் அதிகாரத்தை அஞ்சியே ஆண் விருப்பத்துக்கு உடன்படுகிறார்கள். சில பெண்கள் இதை அறிந்தும் சிலர் அறியாமலும் செய்கிறார்கள்.”


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...