Skip to main content

ஒரே சமயம், இரு மொழிகளில் தீவிரமாய் எழுத முடியுமா?




கடந்த மூன்று மாதங்களில் நான்நிறையஎழுதினேன். ஆனால் பிளாகை தொடர்ந்து அப்டேட் செய்ய வில்லை. மொத்தமாய் 8 பதிவுகள் தான். இதற்கு முந்தின மாதங்களில் சராசரியாய் மாதத்துக்கு 30 பதிவுகள் ஏற்றுவேன். கடந்த சில மாதங்களில் நான் தமிழில் எழுதியது வெகுவாய் குறைந்து போனது. ஏன் இந்த வித்தியாசம்? காரணம் எளிது, சுவாரஸ்யமானதும் கூட. இது என்னைப் பற்றி வித்தியாசமான ஒன்றை எனக்கு சொல்லித் தந்தது. முதலில் காரணம், அடுத்து படிப்பினை.


கடந்த மூன்று மாதங்களில் நான் ஜெர்மானிய தத்துவ அறிஞர் ஹைடெக்கர் குறித்து ஒரு ஆங்கில நூலை நண்பர்கள் இருவருடன் இணைந்து எழுதுவதில் ஈடுபட்டிருந்தேன். நூல் முடிந்து இறுதி கட்ட வேலைகள் நடக்கின்றன. இரண்டு வாரங்களில் வெளிவரும். ஜூன் மாதம் பல்கலைக்கழகம் திறந்த பின் நூலை வெளியிட உத்தேசம். இந்த காலகட்டத்தில் நான் தினமும் தத்துவம் வாசிப்பது, நண்பர்களுடன் கூட்டாய் வாசிப்பது, விவாதிப்பது, வீட்டுக்கு சென்று எழுதுவது என்றிருந்தேன். இது வழக்கமே என்றாலும் நான் ஆங்கிலத்தில் இப்படி முழுக்க புழங்குவது இதுவே முதல் முறை. இதற்கு முன்பு இரு ஆங்கில நூல்களுக்கு சில பக்கங்கள் பங்களித்திருக்கிறேன். ஆனால் இவ்வளவு தீவிரமாய் அதிகமாய் ஆங்கிலத்தில் முன்பு எழுதினதில்லை.

இது என் மனத்தின் திசையை மெல்ல மாற்றி விட்டிருக்கிறது என்பதை இப்போது உணர்கிறேன். ஆகையால், எழுதும் தூண்டுதல் ஏற்படும் போதெல்லாம் நான் அதை ஹைடெக்கர் நூலை நோக்கி திசை மாற்றி இருக்கிறேன். உதாரணமாய், புல்வாமா தாக்குதல் நடந்த போது நான் ஆழமாய் தூண்டப்பட்டேன். ஆனால் அதை தமிழில் எழுதாமல் மரணம் குறித்து ஹைடெக்கரும் பிறரும் சொல்வதென்ன என தேடி அறிந்து, பின்னர் என் எண்ணங்களை ஒரு தனி அத்தியாயமாய் ஆங்கிலத்தில் எழுதினேன். தலித் அரசியலின் சிக்கல், அடையாளம், பெண்மை மனநிலை, பெண் மொழி குறித்தெல்லாம் நான் தமிழில் எழுத வேண்டியது இந்நூலில் வேறு வடிவில் இடம் பெற்றன. அதன் பிறகு இரண்டு மொழியாக்க நூல்களில் (தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு) வேலை செய்யத் தொடங்கினேன். அவற்றில் ஒன்றை முடித்தேன். இந்த ஈடுபாடுகள் மெல்ல மெல்ல என்னை வேறு பக்கம் இழுத்து விட்டன.
 இது சரியா தவறா, ஒரு தமிழ் எழுத்தாளன் தன் ஆற்றலை ஆங்கிலத்தில் மடைமாற்றலாமா என்று கேட்டால் என்னிடம் பதில் இல்லை. ஆனால் வேறு சில விசயங்களை தெரிந்து கொண்டேன்.
  1. மொழி நமது மனப்போக்கை, விருப்பங்களை, மனத்தின் பாய்ச்சலை வெகுவாக தீர்மானிக்கிறது. ஆங்கிலம்-தத்துவம்-ஹைடெக்கர் என ஒரு தடம் உருவானதும் எங்கு போகும் தேவை ஏற்பட்டாலும் கால்கள் அந்த தடத்தில் நடக்கவே பிரியப்படுகின்றன. அதாவது, நாம் செல்ல வேண்டிய இடம் அல்ல, நாம் அமைக்கும் பாதையே நம் அகப்பாய்ச்சலை, போக்கை தீர்மானிக்கிறது. அது ஒரு neural networkஆக நமக்குள் அமைந்து விடுகிறது. அதைத் தாண்டி சென்று இரு குதிரைகளில் பயணிப்பது, ஆங்கிலத்திலும் தமிழிலுமாய் எழுதுவது, சுலபமல்ல.
  2. மொழியில் ஒரு சுகம் உள்ளது. ஆங்கிலத்தின் சுவையும் சௌகர்யமும் வேறு, தமிழின் சுவையும் லாவகமும் வேறு. ஒன்றில் சற்று காலம் பயின்றால் அதன் மடியில் விழுந்து விடுவோம். அதில் இருந்து எழுந்து மீள்வது சுலபமல்ல. ஒவ்வொரு நாளும் காலையில் நான் யோசிக்காமலே மடிக்கணினியை திறந்து தமிழில் சரளமாய் எழுதி வந்தேன். இதுவே என் மொழி, இதில் பயில்வதே எனக்கு அளிக்கப்பட்ட பணி, இது என் பிறவிக்கடன் என்றெல்லாம் சொல்லி வந்தேன். ஆனால் ஒரு புதுக்காதலி வந்ததும் மனம் தடுமாறுகிறது. என்னை அறியாமலே நான் ஆங்கிலத்திடம் வசியப்படுகிறேன்.
  3. இந்த படிப்பினை எல்லாருக்கும் உதவும் என நான் கூறவில்லை. என்னைப் போன்றவர்களுக்கு, போதை மனநிலை கொண்டவர்களுக்கு, மொழியின் சுவையில் சொக்கிப் போகிறவர்களுக்கு, ஒரு சொல்லை எழுதும் போதே அதன் தேன்சுவை நரம்பில் ஊறுவதை உணர்பவர்களுக்கு, சொற்களில் திளைத்துக் கொண்டிருக்கவே மணிக்கணக்காய் பேசவும் எழுதவும் ஏங்குகிறவர்களுக்கு, இது உதவும். இரு மொழிகளில் ஒரே சமயம் இயங்குவது ஆரோக்கியமானது அல்ல.
  4. இதற்கு முன்பு ஆங்கிலத்தில் அதிகமாய் எழுதும் சில பேராசிரிய தமிழர்கள் மீது எனக்கு கோபம் வந்ததுண்டு. அவர்கள் ஆங்கிலத்தில் புழங்கினால் கிடைக்கும் அங்கீகாரத்துக்காக, வசதிக்காக தமிழை புறக்கணிக்கிறார்கள் என நான் நினைத்ததுண்டு. ஆனால் அப்பார்வை தவறாக இருக்கலாம் என இப்போது புரிகிறது.ஆரண்ய காண்டத்தில்அந்த வசனத்தில் சொல்லப்படுவது போல நீங்கள் ஒன்று கமலாக இருக்கலாம், இல்லை ரஜினியாக இருக்கலாம், இரண்டும் வெவ்வேறு மொழிகள், மனம் ஒரு சமயம் ஒன்றுக்கு தான் வசப்படும். எதுவென்பது உங்கள் தீர்மானம்.
  5. இனி நான் ஆங்கிலத்தில் புழங்கும் முன் அது என்னை எங்கே எடுத்துச் செல்லும் என்பதில் தெளிவாக இருப்பேன். ஒன்று முழுக்க ஆங்கிலத்தில் எழுதுவதை கைவிடுவேன். அல்லது, ஒரு துல்லியமான காலத்தை தீர்மானித்து அப்போது மட்டும் ஆங்கிலத்தில் எழுத முயல்வேன். அல்லது ஆங்கிலத்தில் எழுதத் துவங்கும் போது தமிழில் அதை விட அதிகமாய் எழுதி, ஒரு போதையை இன்னொன்றால் முறியடிக்க முயல்வேன்.
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்கு தானே மருந்து
(குறள் எண் 1102) [இவள் தந்த காதல் நோய்க்கு இவளே மருந்தாவாள்]

எந்தமருந்துவேலை செய்யும் என முயன்று பார்த்து சொல்கிறேன்.




Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...