Skip to main content

மிஷிமா- தற்கொலையும் கலையும் அருகருகே வந்தால்? (2)

மிஷிமாவின் எழுத்துக்கள் தமிழில் பரவலாய் மொழியாக்கம் வழி அறிமுகமாகவில்லை. எஸ்.ரா சில கட்டுரைகளில் மிஷிமாவின் வாழ்க்கையை சுருக்கமாய் சித்தரித்திருக்கிறார். குறிப்பாய், மிஷிமா ராணுவ முகாம் ஒன்றை கைப்பற்றி ஜப்பானிய சாமுராய் முறையில் தன் வயிற்றை வாளால் கிழித்து உயிரை விட்ட சம்பவம். நினைக்க நினைக்க ஏற்க முடியாத, தர்க்க ரீதியில் புரிந்து கொள்ள சிரமமான முடிவு மிஷிமாவுடையது. டேமியன் பிளானகனின் சிறப்பு அவர் மிஷிமாவை ஒரு உளவியல் நோயாளி ஆக்காமல், அவரது அகச்சிக்கலை இலக்கிய மற்றும் உளவியல் கோணத்தில் வெற்றிகரமாய் விளக்கி விடுகிறார் என்பது. இது மிக மிக சிரமமான காரியம். அகத்தூண்டுதலினால் நடத்தப்படும் எழுத்தே இதை சாதிக்கும்.  

பிளானகன் மேலும் ஜப்பானின் சமூக வரலாற்று பின்னணியையும் அலசுகிறார் - இரண்டாம் உலகப்போரிலும் அதன் பின்னரும் ஜப்பானிய சமூகத்தில், அரசியலில் நிகழ்ந்த பெரிய மாற்றங்களை விவரிக்கிறார். இவற்றை ஜப்பானிய சமூக மனம் எதிர்கொண்ட விதத்தின் இலக்கிய தூல வடிவமே மிஷிமாவின் வாழ்க்கை என்கிறார். விக்டர் பிராங்கிள் ஹிட்லரின் யூத முகாமில் மனிதர்களின் உளவியல் வெளிப்பட்ட விதம் பற்றி எழுதியவை, எரிக் புரோமின் Fear of Freedom, மற்றும் ஹைடெக்கர் மரணம் குறித்து கூறியவை எனக்கு நினைவுக்கு வந்தன. பிளானகன் இந்த கோட்பாடுகளை மனதில் வைத்தபடி, ஆனால் வெளிப்படையாய் குறிப்பிட்டு எழுத்தின் பாய்ச்சலை தடை படுத்தாமல், நடையை எளிமையாய் அமைத்திருக்கிறார்

Yukon Mishima நூலின் முதல் அத்தியாயமே நம்மை பதற வைக்கக் கூடியது. 1970ஆம் ஆண்டில் நவம்பர் 25 அன்று மிஷிமா தான் உருவாக்கிய தனியார் ராணுவப் படையினர் சிலருடன் சாமுராய் வாட்கள் ஏந்தி டோக்யோ ராணுவத் தளத்துக்கு செல்கிறார். அங்கு அவர் ராணுவ தளபதியை சிறைபிடித்து அவரை விட வேண்டுமானால் ராணுவ வீரர்கள் அனைவரும் ஓரிடத்தில் கூடி தன் கருத்துக்களை கேட்க வேண்டும் எனக் கோருகிறார். இதன்படி ராணுவ வீரர்கள் கீழ்த்தளத்தில் கூடுகின்றனர். மேல்தளத்தில் நின்று மிஷிமா தன் அமைப்பின் கொள்கைகளையும் அறிக்கையை வெளியிட்டு பேசுகிறார். தேசத்தையும் தேசத்தின் ஆன்மாவான மன்னரையும் காப்பாற்றுவதற்காக ராணுவம் மேற்கத்திய (அமெரிக்க சார்பு) உலக அரசியலை எதிர்த்து நிற்க வேண்டும், அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும், ராணுவத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும், நாட்டில் மன்னரின் அதிகாரத்துக்கு சவாலாய் கலகங்கள் நடைபெறக் கூடாது என்பவை அவரது கோரிக்கைகள். வீரர்களில் பலருக்கும் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. அவர்கள் கூச்சலிட்டு எதிர்ப்பை தெரிவித்தனர். மிஷிமாவை பரிகசித்தனர். மிஷிமா இதை ஏற்கனவே எதிர்பார்த்து தயாராக வந்திருந்தார். அவர் தளபதியை விடுவித்து விட்டு சாமுராய் முறையில் தன் சகா ஒருவரின் உதவியுடன் சாமுராய் முறையில் செப்புக்கு எனும் தற்கொலை பண்ணிக் கொள்கிறார். இது ஒருவர் மண்டியிட்டு அமர்ந்து வாளால் தன் அடிவயிற்றைக் கிழிப்பதாகும். குடல் வெளிவந்து ரத்தம் வெளிப்பாய அவர் மெல்ல மெல்ல கடும் துன்பத்தை அனுபவித்து இறக்க நேரிடும். வேதனையை முடித்திட (இதற்காகவே நியமிக்கப்பட்ட) உதவியாளர் ஒருவர் அப்போது தனது வாளால் சாமுராயின் தலையை சீவி விட வேண்டும். இதுவே சாமுராய் நடைமுறை. ஆனால் மிஷிமா தேர்ந்தெடுத்த உதவியாளரால் முதல் வெட்டில் துல்லியமாய் சீவ முடியவில்லை. ஆகையால் இன்னொரு உதவியாளர் தன் வாளால் அக்காரியத்தை முடித்தார். மிஷிமாவின் இந்த முடிவு பல கேள்விகளை எழுப்புகிறது:
ஒரு எழுத்தாளன், அதுவும் நவீன எழுத்தாளன், ஏன் மன்னருக்காய் உயிர் துறக்க வேண்டும்?
தன் எழுத்து வாழ்வின் உச்சத்தில் இருக்கிற ஒரு நட்சத்திரம் ஏன் இவ்வளவு அபத்தமாய் தொனிக்கும் ஒன்றை செய்ய வேண்டும்?
தேசத்தை காப்பாற்ற உத்தேசித்திருந்தால் அவர் அரசியலில் புகுந்து போராடி இருக்கலாமே! அப்போதைய ஜப்பானிய பிரதமர் மிஷிமாவை தேர்தலில் போட்டியிட்டு மந்திரி சபையில் போட்டியிடும்படி கேட்டுக் கொள்கிறார். ஆனால் மிஷிமா அதை ஏற்கவில்லை. ஏன்?
மரணத்தின் அழகியலை, செக்ஸுடனும் வாழ்வின் பூரணத்தன்மையுடனும் மிஷிமா தன் எழுத்தில் இணைக்கிறார். இதுவே அவரது இலக்கிய பிரதிகளின் பெரிய சுவாரஸ்யம். இதே மரண அழகியலை நேர் வாழ்வில் அவர் ஏன் நிகழ்த்திப் பார்த்தார்?


மிஷிமாவின்செப்புக்குவின் பிரதான இலக்கு ஜப்பானின் வெளியுறவு அரசியலில் மாற்றம் மற்றும் அரசியலமைப்பின் திருத்தத்தை கோருவது மட்டுமல்ல எனக் காட்டுகிறது. இதற்கு முன்னர் மிஷிமா பெரிய சமூக அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டவர் அல்ல. அறுபது, எழுபதுகளில் ஜப்பான் தன் சம்பிரதாயமான மரபார்ந்த கலாச்சார விழுமியங்களை விடுத்து அமெரிக்க தாராளவாத எந்திரமயமாக்கல் போக்கை ஆவேசமாய் தழுவுகிறது. இரண்டாம் உலகப்போரின் போதான பெரிய சேதங்களும் வீழ்ச்சியும் இதற்கு ஒரு பிரதான காரணம். இந்த மேற்குடனான உறவால் ஜப்பான் செழிக்கிறது; புதிய பொருளாதார அலையினால் மிஷிமா போன்ற எழுத்தாளர்களும் பலனடைகிறார்கள். மிஷிமா தான் எழுத்தின் வருமானத்தினால் மட்டுமே கோடீஸ்வரர் ஆகிறார். நிறைய நாடகங்களை எழுதுகிறார். அவரது நாவல்கள் படமாக்கப்படுகின்றன. இவை பெரும் வெற்றி பெறுகின்றன. அவர் நடிகராகிறார். பாடி பில்டிங் செய்து மாடல் ஆகிறார். உலகெங்கும் அவரது புகழ் பரவுகிறது. நோபல் பரிசு வாய்ப்பு அவரது வீட்டு அழைப்பு மணியை அடித்து நிற்கிறது. ஆனால் இதே காலகட்டத்தில் தான் ஜப்பானிய சமூகம் மிகப்பெரிய பண்பாட்டு உளவியல் வறட்சியை அனுபவிக்கிறது. வாழ்வில் பிடிப்பிழந்து, அர்த்தத்தை எதிலும் காண முடியாது எந்திரம் போல வாழ்ந்து, கேளிக்கைகளின் பின்னால் அலைந்து ஒரு தலைமுறை சீரழிகிறது. இந்த உணர்வுகளை மிஷிமாவும் தன் ஆன்மாவில் உணர்கிறார். தான் வாழ்வின் மீது கட்டுப்பாட்டை இழந்து சருகு போல் மாறுவதை அறிகிறார். இலக்கியம் கூட இனி பெரிய சவால் அல்ல என அவருக்குத் தோன்றுகிறது. அல்லது இலக்கியம் எதனால் தன்னை ஈர்த்ததோ அதை மேலும் உக்கிரமாய் தான் தேடி அடைய வேண்டிய காலம் கனிந்து விட்டது என உணர்கிறார். இதை ஒட்டுமொத்த சமூகத்துக்கும் உணர்த்தி தன் முடிவை தேடிக் கொள்வது அவசியம் என முடிவெடுக்கிறார்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...