Skip to main content

முகிலன் மீதான பாலியல் குற்றச்சாட்டும் இந்துத்துவ-பெண்ணிய கைகோர்ப்பும்


பெண்ணியத்துக்கும் ஹிந்து தேசியவாதத்துக்கும் உள்ள தொடர்பு வெகுநுட்பமானது. பெண்கள் தம்மை ஒரு அதிகாரத் தரப்பாக உணரும் காலகட்டம் ஒன்றில் அவர்கள் ஒழுக்கவாதம் எனும் ஆண் ஆயுதத்தை எடுத்து ஆண்களுக்கு எதிராகவே பயன்படுத்துவார்கள். மற்றொரு பக்கம் இந்துத்துவர்களும் இதே ஒழுக்கவாதத்தைக் கொண்டு சுதந்திரவாதத்தை தாக்குவார்கள். ஆண்-பெண் உறவு குடும்ப ஒழுக்கவியலில் இருந்து பிறழக் கூடாது எனும் ஒப்பந்தம் இரு தரப்புக்கும் உள்ளதை நாம் காண வேண்டும். ஐரோப்பாவிலும் ஒரு காலத்தில் தேவாலயத்தின் பின்னணியில் தான் முதல் தலைமுறை பெண்ணியவாதிகள் ஒழுக்க சுத்தீகரிப்பை மேலெடுத்தார்கள். அது பின்னர் பால் சமத்துவ இயக்கமானது. முகிலன் விவகாரத்தில் நாம் இதை இன்று அப்பட்டமாக காண்கிறோம். இன்று பெண்ணிய ஆயுதம் சுல்பமாய் இந்துத்துவர்களின் கையில் போகிறது. சற்று முன்பு தான் ஒரு தலைமை நீதிபதியை இதே சிலுவையில் அறைந்தார்கள். போராளிகள் எல்லாம் பெண் விசயத்தில் பொறுக்கிகள் என தாமரை இப்போது சொல்லுவதில் எனக்கு அதிர்ச்சி இல்லை
பெண்ணியவாதிகளுக்கும் இந்துத்துவர்களுக்குமான இலக்குகள் வேறு, ஆனால் ஆயுதம் ஒன்றே.

சில மாதங்களுக்கு முன்பு மீ டூ குறித்தான ஒரு கட்டுரையில் நான் இதைப் பேசிய போது பலரும் ஒத்துக் கொள்ளவில்லை. இன்று பலரும் சொல்கிறார்கள், விக்டோரிய ஒழுக்கவாதத்தை சில பெண்ணியவாதிகள் முன்னெடுக்கிறார்கள் என்று. இதை நாம் மேலும் விரிவாக விவாதிக்க வேண்டும். அல்லாவிட்டால் பெண்ணியத்தை முழுக்கவே ஒழுக்கவாதிகள் ஹைஜேக் பண்ணி விடுவார்கள். அதற்கு முதல் படியாக பெண்ணியவாதிகள் செய்ய வேண்டியது பெண்ணியத்தை பாலியல் சர்ச்சைகளில் இருந்து விடுதலை பண்ணி, சமூக அரசியல் ஏற்றத்தாழ்வுகளின், இயங்கியலின் பின்னணியில் வைத்து விவாதிக்க ஆரம்பிப்பது. செக்ஸில் மட்டும் தானா ஒடுக்குமுறை நடக்கிறது?

இப்பிரச்சனை குறித்து இளங்கோ கிருஷ்ணன் முகநூலில் எழுதிய குறிப்பு கீழே
நேற்று ஒரு தோழியிடம் பேசிக்கொண்டிருந்தேன். ஆண்களுக்கு இது ஒரு பெரிய பலவீனம்தானே என்றார். அவர் சொன்னது முகிலன் விவகாரத்தை மனதில் வைத்து...

எனக்கு உடனடியாக என்ன சொல்வது என்று தெரியவில்லை. இதில் நுட்பமான சிக்கல்கள் நிறைய உள்ளன. நாம் இன்னமும் பாலியல் சார்ந்த உரையாடல்களில் போன நூற்றாண்டு மதிப்பீடுகளையே கொண்டிருக்கிறோம். குறிப்பாக, பெண்கள் இதில் மிகவும் தடுமாறுகிறார்கள். ஒரே சமயத்தில் விடுதலையும் கட்டுப்படுதலும் வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆண் பாலியல் விடுதலையை முன்வைக்கும் அளவுக்கு பெண்ணுக்கு அது ஏனோ சாத்தியமாகவில்லை. எவ்வளவு முற்போக்கான பெண்ணியம் பேசும் பெண்களும் ஒரு கட்டுப்பெட்டியான பெண்கள் போலவே இவ்விஷயத்தில் சிந்திக்கிறார்கள்

அடல்ட்ரி என்றோர் விஷயம் உண்டு. அது இருவருக்கும் இடையே அந்தரங்கமானது. ஒரு கட்டத்தில் உறவு வரைக்கும் தயாராகும் பெண் அதிலிருந்து வெளியேறியதும் அதன் மொத்தக் குற்றக்கணக்கையும் ( அது குற்றமா என்ன) ஆணின் தலையில் கட்ட விழைவது துரதிர்ஷ்டம்

அவன் சமூக செயல்பாட்டாளனாகவோ, கலைஞனாகவோ, பொது வாழ்வில் இருப்பவனாகவோ இருந்துவிட்டால் ஒட்டுமொத்த சமூகமும் விக்டோரிய ஒழுக்கவாதத்தை கையில் எடுக்கிறது. தனிப்பட்ட வாழ்வில் அந்தரங்கமாய் அதை மீறுபவர்கள்கூட கூச்சமின்றி கல்லெடுக்கிறார்கள்ஆண் நிர்தாட்சண்யமாய் கழுவில் ஏற்றப்படுகிறான். அவனின் இதுவரையான போராட்டங்கள், தியாகங்கள், அர்ப்பணிப்புகள் யாவும் வெறும் பெண் பிடிக்கும் தந்திரமென குறுக்கப்பட்டு காறி உமிழப்படுகிறது.


அவனின் அரசியல் எதிரிகளுக்கும், தத்துவ எதிரிகளுக்கும் இந்த முட்டு சந்து வாகாய் இருக்கிறது. அவனை பேசவே விடாமல் இதில் வைத்து வெளுத்துக்கட்டிவிடுகிறார்கள்.”

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...