Skip to main content

சங்கர் கணேஷும் இளையராஜாவும் ஒன்றா? (1)

இல்லைஎன குழந்தையிடம் கேட்டாலும் சொல்லி விடும். ஆனால் பேஸ்புக்கில் செந்தில்வேல் என்பவர் இது போன்ற உதாரணத்தை வைத்து இலக்கியம், இலக்கியமற்றது எனும் தரம் பிரித்தலும் சரியே என வாதிட்டிருந்தார். இது போன்ற பார்க்கஅடடேஎன சொல்ல வைக்கும் வாதங்கள் அடிப்படையில் பிழையானவை. ஏனென சொல்கிறேன்

சினிமாவைப் பொறுத்தமட்டில் சங்கர் கணேஷும் ராஜாவும் வணிக இசையமைப்பாளர்களே. அவர்களுக்கான மரியாதை ரசிகர்கள் மத்தியில் வேறுவேறாக இருக்கலாம். ஆனால் சங்கர் கணேஷ் இசையமைத்தால் அப்படத்தை சீண்ட மாட்டோம் என எந்த தொழில்நுட்ப கலைஞரோ சக இயக்குநர் நடிகர் பாடகர் சொல்ல மாட்டார்கள். பாடல் நன்றாக அமைந்தால் அதை ரசிப்பார்கள், கொண்டாடுவார்கள்; இல்லாவிட்டால் மறந்து விடுவார்கள். இதே விதிதான் ராஜாவுக்கும். ஆனால் இலக்கிய எழுத்து, இலக்கியமற்ற சமரச எழுத்து எனும் பாகுபாட்டின் பிரச்சனை அதில் ஒரு தூய்மைவாதம் உள்ளது, அது ஒரு மற்றமையை முன்னெடுக்கிறது என்பது
.தா., ஏன் சு.ரா சிறந்தவர் எனக் கேட்டார் அவர் இலக்கியவாதி, பாலகுமாரனைப் போல சமரசம் பண்ணாதவர்  என ஒருவர் சுலபமாக முகாம் பிரித்து விடுவார். இங்கு ஒரு பிரதி அதனளவில் அனறி அதன் மற்றமையை (வெகுஜன வாசிப்பு) பொறுத்து மதிப்பு பெறுகிறது. சு.ரா அவரைப் போன்று எழுதாதவர்களால் மதிப்படைகிறார். அது தவறு - சு.ரா என்ற பெயரை நீக்கி விட்டு அவரை வாசித்து மதிப்பிட நம்மால் இயல வேண்டும். அவர் யார் அல்ல என்பது அவரை தீர்மானிக்க கூடாது. (இதற்கு அடுத்து, சு.ராவின் நவீனத்துவ ஸ்டைல், அவரது புறவடிவத்தின் சங்கதிகளைத் தாண்டி வெறும் ஆழ்மனப் பாய்ச்சலாக, சிக்கலான மொழி அமைப்பாக அதைக் கண்டு நம்மால் அதனுள் பயணிக்கவும் மதிப்படவும் முடிய வேண்டும். உணர்ச்சியற்ற, உருவக நடையில் எழுதியுள்ளார் என்பதால் மட்டுமேஆனா இலக்கியம்என கூவினால் அது சிறுபிள்ளைத்தனமான வாசிப்பு.)
 ஒரு வெகுஜன எழுத்து மேடையில் நீங்கள் வீற்றிருந்தால் நீங்கள் எழுதுவது தரமற்றது என நான் முடிவெடுப்பேன் என ஒருவர் சொல்வது (ஜெயமோகனைப் போல்) வெகுஜன எழுத்தை மற்றமையாக வைத்து இலக்கியத்தை மதிப்பிடும் ஒரு மேம்போக்கான காரியம் ஆகி விடும். இந்த நிலைப்பாடே இலக்கிய விரோதமானது.
பரங்கிமலை ரயில்நிலையம்எழுதி கடந்த வருடம் அமேசான் கிண்டில் போட்டியில் பரிசு வென்ற சென் பாலனை கார்ல் மார்க்ஸ் நிராகரிப்பதும் இப்படியே இருக்கிறது
சென் பாலன் தான் ஒரு இலக்கியவாதி அல்ல, வெகுஜன எழுத்தாளன் அல்ல என்கிறார். கார்ல் மார்க்ஸ் ஒரு வெகுஜன படைப்பாகவும் உங்கள் நாவல் தரமாக இல்லை என்கிறார். அதன் பிறகு தன்னை மருத்துவராகவும் சென் பாலனை ஒரு நோயாளியாகவும் கற்பித்து தனது விமர்சனம்கடுமையாகத் தான் இருக்கும்என்கிறார். ஒரு விமர்சகன் தன்னை மருத்துவராக கருதும் அளவுக்கு நம் சூழல் அவ்வளவு விஷமாக மாறி விட்டதா? கடவுளே! ஒரு மருத்துவன் ஒரு நோயாளியை கருணைக்கொலை பண்ணலாம், அவனது உறுப்பை வெட்டி நீக்கலாம். நீங்களெல்லாம் இலக்கிய அதிகாரம் பெற்றால் இதையே தான் எழுத்தாளனுக்கும் பண்ணுவீர்களா?
 சென் பாலனின் அரசியல் நிலைப்பாடுகள் அவரது புனைவில் வெளிப்படையாக, பிரச்சார உத்தியாக வந்துள்ளது என்பது கார்ல் மார்க்ஸின் குற்றச்சாட்டு. இதைசுரண்டல்என்கிறார். இதுவே ஒரு தட்டையான பார்வை தான். “சுரண்டாமல்நீங்கள் எழுதவே முடியாது. புலப்படாமல் நாசூக்காக சுரண்டலாம், சென் பாலனைப் போன்று வெளிப்படையாக பண்ணலாம். உதாரணத்துக்கு, நீங்கள் தமிழில் பெண் பாத்திரங்களை மட்டும் எடுத்துப் பாருங்கள். அதில் இல்லாதசுரண்டலா”? தஸ்தாவஸ்கியின்பேதைநாவலில் அவர் கர்த்தரின் பிம்பத்தில் ஒரு அப்பழுக்கற்ற ஆன்மாவாக பிரதான பாத்திரமான மிஷ்கினை காட்ட முயன்றுசுரண்டிஇருப்பார். தஸ்தாவஸ்கி ஒரு மேம்பட்ட படைப்பாளி என்பதால் மிஷ்கினின் குழப்படிகள், முரண்பாடுகளையும் அந்த மேன்மையான பிம்பத்துடன் கொண்டு வருவார். இப்போது அது கர்த்தரை போற்றும் பிரச்சார எழுத்தாக தோன்றாது. ஆனால் அதன் அடிவேர் இறங்கி நிற்பது சுரண்டலில் தான். அவரது வாசகர்கள் யாருமே கிறித்துவர்கள் அல்லவென்றால் அவர் அப்படி அப்பாத்திரத்தை அமைக்க மாட்டார். “குற்றமும் தண்டனையில்சோனியா பதின்வயது விபச்சாரி. ஆனால் அவளது இளம் உடல் அவளை அப்பழுக்கற்றவளாக மனதளவில் காட்ட, கர்த்தருடன் ஒப்பிட உதவுகிறது. இதுவே சோனியா அறுபது வயது கிழவி என்றால் அப்படி காண்பித்தால் எடுபடாது. “கரமசோவ் சகோதரர்கள்நாவலின் முடிவில் அவர் எதிர்கால நம்பிக்கையை குறிப்புணர்த்த குழந்தைகளை பயன்படுத்தி இருப்பார். குழந்தையை கண்டாலே புத்துணர்ச்சி, நம்பிக்கை, களங்கமற்ற வாழ்க்கை சாத்தியம் என நம் மனிதமனம் பார்த்து பழக்கப்பட்டிருக்கிறது. தஸ்தாவஸ்கி இதை வைத்து நம்மைசுரண்டுகிறார்”. தஸ்தாவஸ்கி மனித உடல்களை பயன்படுத்தும் விதத்தை நாம் உற்று கவனித்தாலே அதில் நிறைய சுரண்டல்களை நாம் கவனிக்கலாம். கார்ல் மார்க்ஸ் தன் எழுத்தை பரிசீலித்தால் அதிலும் காணலாம்

சுரண்டுவது என்பது அசைவம் சாப்பிடுவது போல. கறிக்கடையில் நின்று கோழியை ஒருவர் நீரில் அமுக்கி கொன்று கழுத்தை வெட்டுவதை எல்லாம் பார்த்து வாங்கி வருவது வெகுஜன படைப்பு; அதையே பிரியாணியாக யாரோ சமைத்து கவிச்சி வாடை இன்றி நெய்மணக்க மென்மையாக ஆக்கி தந்தால் அது உயர் இலக்கியம். இரண்டுக்கும் வித்தியாசம் அதன் தீவிரத்தில் என்பதை நான் மறுக்க மாட்டேன். ஆனால் நீங்கள் குறிப்பிடும் பிரச்சார நெடி என்பது ஒரு தொழில்நுட்ப பிரச்சனை மட்டும் தான் என்பதற்காக இந்த உதாரணத்தை தருகிறேன்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...