Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

சங்கர் கணேஷும் இளையராஜாவும் ஒன்றா? (1)

இல்லைஎன குழந்தையிடம் கேட்டாலும் சொல்லி விடும். ஆனால் பேஸ்புக்கில் செந்தில்வேல் என்பவர் இது போன்ற உதாரணத்தை வைத்து இலக்கியம், இலக்கியமற்றது எனும் தரம் பிரித்தலும் சரியே என வாதிட்டிருந்தார். இது போன்ற பார்க்கஅடடேஎன சொல்ல வைக்கும் வாதங்கள் அடிப்படையில் பிழையானவை. ஏனென சொல்கிறேன்

சினிமாவைப் பொறுத்தமட்டில் சங்கர் கணேஷும் ராஜாவும் வணிக இசையமைப்பாளர்களே. அவர்களுக்கான மரியாதை ரசிகர்கள் மத்தியில் வேறுவேறாக இருக்கலாம். ஆனால் சங்கர் கணேஷ் இசையமைத்தால் அப்படத்தை சீண்ட மாட்டோம் என எந்த தொழில்நுட்ப கலைஞரோ சக இயக்குநர் நடிகர் பாடகர் சொல்ல மாட்டார்கள். பாடல் நன்றாக அமைந்தால் அதை ரசிப்பார்கள், கொண்டாடுவார்கள்; இல்லாவிட்டால் மறந்து விடுவார்கள். இதே விதிதான் ராஜாவுக்கும். ஆனால் இலக்கிய எழுத்து, இலக்கியமற்ற சமரச எழுத்து எனும் பாகுபாட்டின் பிரச்சனை அதில் ஒரு தூய்மைவாதம் உள்ளது, அது ஒரு மற்றமையை முன்னெடுக்கிறது என்பது
.தா., ஏன் சு.ரா சிறந்தவர் எனக் கேட்டார் அவர் இலக்கியவாதி, பாலகுமாரனைப் போல சமரசம் பண்ணாதவர்  என ஒருவர் சுலபமாக முகாம் பிரித்து விடுவார். இங்கு ஒரு பிரதி அதனளவில் அனறி அதன் மற்றமையை (வெகுஜன வாசிப்பு) பொறுத்து மதிப்பு பெறுகிறது. சு.ரா அவரைப் போன்று எழுதாதவர்களால் மதிப்படைகிறார். அது தவறு - சு.ரா என்ற பெயரை நீக்கி விட்டு அவரை வாசித்து மதிப்பிட நம்மால் இயல வேண்டும். அவர் யார் அல்ல என்பது அவரை தீர்மானிக்க கூடாது. (இதற்கு அடுத்து, சு.ராவின் நவீனத்துவ ஸ்டைல், அவரது புறவடிவத்தின் சங்கதிகளைத் தாண்டி வெறும் ஆழ்மனப் பாய்ச்சலாக, சிக்கலான மொழி அமைப்பாக அதைக் கண்டு நம்மால் அதனுள் பயணிக்கவும் மதிப்படவும் முடிய வேண்டும். உணர்ச்சியற்ற, உருவக நடையில் எழுதியுள்ளார் என்பதால் மட்டுமேஆனா இலக்கியம்என கூவினால் அது சிறுபிள்ளைத்தனமான வாசிப்பு.)
 ஒரு வெகுஜன எழுத்து மேடையில் நீங்கள் வீற்றிருந்தால் நீங்கள் எழுதுவது தரமற்றது என நான் முடிவெடுப்பேன் என ஒருவர் சொல்வது (ஜெயமோகனைப் போல்) வெகுஜன எழுத்தை மற்றமையாக வைத்து இலக்கியத்தை மதிப்பிடும் ஒரு மேம்போக்கான காரியம் ஆகி விடும். இந்த நிலைப்பாடே இலக்கிய விரோதமானது.
பரங்கிமலை ரயில்நிலையம்எழுதி கடந்த வருடம் அமேசான் கிண்டில் போட்டியில் பரிசு வென்ற சென் பாலனை கார்ல் மார்க்ஸ் நிராகரிப்பதும் இப்படியே இருக்கிறது
சென் பாலன் தான் ஒரு இலக்கியவாதி அல்ல, வெகுஜன எழுத்தாளன் அல்ல என்கிறார். கார்ல் மார்க்ஸ் ஒரு வெகுஜன படைப்பாகவும் உங்கள் நாவல் தரமாக இல்லை என்கிறார். அதன் பிறகு தன்னை மருத்துவராகவும் சென் பாலனை ஒரு நோயாளியாகவும் கற்பித்து தனது விமர்சனம்கடுமையாகத் தான் இருக்கும்என்கிறார். ஒரு விமர்சகன் தன்னை மருத்துவராக கருதும் அளவுக்கு நம் சூழல் அவ்வளவு விஷமாக மாறி விட்டதா? கடவுளே! ஒரு மருத்துவன் ஒரு நோயாளியை கருணைக்கொலை பண்ணலாம், அவனது உறுப்பை வெட்டி நீக்கலாம். நீங்களெல்லாம் இலக்கிய அதிகாரம் பெற்றால் இதையே தான் எழுத்தாளனுக்கும் பண்ணுவீர்களா?
 சென் பாலனின் அரசியல் நிலைப்பாடுகள் அவரது புனைவில் வெளிப்படையாக, பிரச்சார உத்தியாக வந்துள்ளது என்பது கார்ல் மார்க்ஸின் குற்றச்சாட்டு. இதைசுரண்டல்என்கிறார். இதுவே ஒரு தட்டையான பார்வை தான். “சுரண்டாமல்நீங்கள் எழுதவே முடியாது. புலப்படாமல் நாசூக்காக சுரண்டலாம், சென் பாலனைப் போன்று வெளிப்படையாக பண்ணலாம். உதாரணத்துக்கு, நீங்கள் தமிழில் பெண் பாத்திரங்களை மட்டும் எடுத்துப் பாருங்கள். அதில் இல்லாதசுரண்டலா”? தஸ்தாவஸ்கியின்பேதைநாவலில் அவர் கர்த்தரின் பிம்பத்தில் ஒரு அப்பழுக்கற்ற ஆன்மாவாக பிரதான பாத்திரமான மிஷ்கினை காட்ட முயன்றுசுரண்டிஇருப்பார். தஸ்தாவஸ்கி ஒரு மேம்பட்ட படைப்பாளி என்பதால் மிஷ்கினின் குழப்படிகள், முரண்பாடுகளையும் அந்த மேன்மையான பிம்பத்துடன் கொண்டு வருவார். இப்போது அது கர்த்தரை போற்றும் பிரச்சார எழுத்தாக தோன்றாது. ஆனால் அதன் அடிவேர் இறங்கி நிற்பது சுரண்டலில் தான். அவரது வாசகர்கள் யாருமே கிறித்துவர்கள் அல்லவென்றால் அவர் அப்படி அப்பாத்திரத்தை அமைக்க மாட்டார். “குற்றமும் தண்டனையில்சோனியா பதின்வயது விபச்சாரி. ஆனால் அவளது இளம் உடல் அவளை அப்பழுக்கற்றவளாக மனதளவில் காட்ட, கர்த்தருடன் ஒப்பிட உதவுகிறது. இதுவே சோனியா அறுபது வயது கிழவி என்றால் அப்படி காண்பித்தால் எடுபடாது. “கரமசோவ் சகோதரர்கள்நாவலின் முடிவில் அவர் எதிர்கால நம்பிக்கையை குறிப்புணர்த்த குழந்தைகளை பயன்படுத்தி இருப்பார். குழந்தையை கண்டாலே புத்துணர்ச்சி, நம்பிக்கை, களங்கமற்ற வாழ்க்கை சாத்தியம் என நம் மனிதமனம் பார்த்து பழக்கப்பட்டிருக்கிறது. தஸ்தாவஸ்கி இதை வைத்து நம்மைசுரண்டுகிறார்”. தஸ்தாவஸ்கி மனித உடல்களை பயன்படுத்தும் விதத்தை நாம் உற்று கவனித்தாலே அதில் நிறைய சுரண்டல்களை நாம் கவனிக்கலாம். கார்ல் மார்க்ஸ் தன் எழுத்தை பரிசீலித்தால் அதிலும் காணலாம்

சுரண்டுவது என்பது அசைவம் சாப்பிடுவது போல. கறிக்கடையில் நின்று கோழியை ஒருவர் நீரில் அமுக்கி கொன்று கழுத்தை வெட்டுவதை எல்லாம் பார்த்து வாங்கி வருவது வெகுஜன படைப்பு; அதையே பிரியாணியாக யாரோ சமைத்து கவிச்சி வாடை இன்றி நெய்மணக்க மென்மையாக ஆக்கி தந்தால் அது உயர் இலக்கியம். இரண்டுக்கும் வித்தியாசம் அதன் தீவிரத்தில் என்பதை நான் மறுக்க மாட்டேன். ஆனால் நீங்கள் குறிப்பிடும் பிரச்சார நெடி என்பது ஒரு தொழில்நுட்ப பிரச்சனை மட்டும் தான் என்பதற்காக இந்த உதாரணத்தை தருகிறேன்.

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...