முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சங்கர் கணேஷும் இளையராஜாவும் ஒன்றா? (2)

பிரச்சாரமாக இல்லாத ஒன்று எப்படி இலக்கியமாகாதோ அதே போல பிரச்சாரமாக இருப்பதால் ஒன்று இலக்கியமல்லாமல், படிக்க அருகதை அற்றதாக ஆகாது. கார்ல் மார்க்ஸ் உங்களுடையது ஒருவித அலெர்ஜி. அது விமர்சன நோக்கு அல்ல. சொல்லப் போனால் அது ஒரு பிழையான வாசிப்பு முறை.
சென் பாலனும் எழுதி முதிர்ந்த பின் நீங்கள் எதிர்பார்க்கும் இந்த தளுக்கையெல்லாம் பழகிக் கொள்வார் எனலாம். ஆனால் அது மட்டுமே அவரை தரமானவராக்காது. (தரம் என்பது சிடுக்கு, உள்முரண், சிக்கல்கள், கட்டற்ற பாய்ச்சல் மட்டுமே. அது தலையை படிய வாரிக் கொள்வது அல்ல. அது புறவடிவத்தையும் கடந்தது.)


 இதே தட்டையான பார்வையை வைத்து நீண்ட காலமாக தி.ஜாவையும் வண்ணதாசனையும் நாம் பின் வாசலில் நிறுத்தி இருந்தோம் (அதற்காக சென்பாலனும் திஜாவும் ஒன்று என நான் சொல்ல வரவில்லை). ஒருவர் பரவலாக படிக்கப்பட்டாலே அவர் மேம்போக்கானவர், மலினமானவர் என நினைக்க தலைப்பட்டோம். நாம் இந்த குறுகியவாதத்தில் இருந்து மீண்டு வர வேண்டும்
செந்தில்வேல் போன்றவர்களிடம் திரும்ப வருகிறேன்: நியாயமாக, தர்க்கரீதியாக, சங்கர் கணேஷை இளையராஜாவிடம் அல்ல சங்கீத மும்மூர்த்திகளுடன் ஒப்பிட வேண்டும். அதை செய்ய மாட்டீர்கள். அதை கற்பனையே பண்ண முடியாது என நினைப்போம். ஆனால் சாஸ்திரிய இசையை நன்கு அறிந்தவர்கள் வெகுஜன இசை மேடைகளுக்கும் வருகிறார்கள். நித்யஶ்ரீ, ஜக்ஜீத் சிங் போன்றவர்கள் இரண்டு மேடைகளிலும் புழங்குகிறார்கள். இரண்டு இசையும் அதன் தீவிரத்தை பொறுத்து ஒன்றல்ல என அறிவார்கள் அறிவார்கள். ஆனால் இரண்டு இசையிலும் நாம் ரசிக்கத் தக்க அம்சங்கள் உண்டு, மரபார்ந்த இசை சில நேரம் தட்டையாகவும் சினிமா இசை உணர்வுரீதியாக மனதை அசைப்பதாகவும் ஆழம் கொண்டதாகவும் அமையலாம் என அறிவார்கள். இளையராஜா தனது பேட்டி ஒன்றில் தன்னால் சின்ன சின்ன சப்தஙக்ளிலும் இசையை உணர முடிந்ததுண்டு, அப்படியே தனது பதின்பருவ இசைப்பயிற்சி துவங்கியது என சொல்லி இருக்கிறார்


வித்தியாசங்களே இல்லை என நான் கூறவில்லை; ஆனால் வித்தியாசங்களை தர அளவுகோல்களாக மாற்ற வேண்டாம் என்கிறேன். ஒருவர்நான் பேஸ்புக்கில் எழுதுவது எதையுமே படிக்க மாட்டேன்என்றால் அவர் சில நல்ல கவிதைகளை, சுய அனுபவ பதிவுகளை, தீவிர அரசியல் தத்துவ குறிப்புகளை இழந்து விடுவார். வெகுஜன எழுத்தை ஒரேயடியாக நிராகரிப்பவருக்கும் இதுவே நடக்கும். நீங்கள் ஒரு ஊரில் வசிக்கிறீர்கள். அங்கு சாதி வெறி கொண்டவர்கள் இருக்கிறார்கள். நீங்கள் முற்போக்காளர். நீங்கள் சாதி வெறியை எதிர்க்கிறீர்கள். நீங்க இந்த அடிப்படையில் அவர்களிடம் பேசாமலே தவிர்த்தால் இழப்பு உங்களுக்குத் தான். இந்த உலகில் சிலர் அழகானவர்கள், சிலர் அழகற்றவர்கள். சிலர் மென்மையானவர்கள், சிலர் முரடர்கள். ஆனால் நாம் அழகானவர்களால், மென்மையானவர்களால் மட்டும் ஈர்க்கப்படுவதில்லையே. வித்தியாசங்களை கடந்து செல்வதே மானுட வாழ்வு. வித்தியாசங்களை கடந்து பார்ப்பதே இலக்கிய நோக்கு!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

சாருவும் கெர்ட் வொனெகெட்டும்

  எனக்கு சாருவின் நகைச்சுவையில் உள்ள கட்டற்ற தன்மை பிடிக்கும். அதை ஒரு அபத்த நகைச்சுவை என்று சொல்லலாம். அதில் ஒரு குழந்தைமை எப்போதும் இருக்கும். குறிப்பிட்ட நபர்களை, நம்பிக்கைகளை பகடி செய்வது அவரது நோக்கமாக இருக்காது. யாருமே பார்க்கவோ பேசவோ விரும்பாத ஒன்றைப் பகடி செய்வார். அந்த ஒன்று சந்தர்ப்பத்துக்கு ஏற்ப மாறும். அதை ஒரு எதிர்மறை கடப்புநிலைப் பொருள் (negative transcendent) என்றோ நிகழாத இன்மை (unrealized emptiness) என்றோ சொல்லலாம். எதிர்மறை கடப்புநிலைப் பொருள் என்றொன்றைப் பற்றி யாரும் சொல்லியிருக்கவில்லை. குந்தர் ஆண்டர்ஸ் இதை எதிர்காலத்தில் தொழில்நுட்ப ஆதிக்கத்தால் நாம் நமது முன்னேற்றத்தால் நம்மைதே கடந்து அழிவை நோக்கிப் போவோம் எனும் பொருளில் பயன்படுத்தினார். நான் இதை வெற்றுக்குறிப்பான் எனும் பொருளில் பயன்படுத்துகிறேன். சாரு தொடர்ந்து ஆன்மீகம், தன்னைக் கடந்த மகத்தான அனுபவங்கள் குறித்து எழுதுவார். அதனூனே தான் அவரது இந்தப் பகடியும் நிகழும். அவரது எழுத்தின் அடிநாதமே சொல்ல வரும் விசயத்தைக் கடந்த உணர்வுநிலையை நமக்குத் தருவதுதான். இதுவே அதன் கடப்புநிலைத்தன்மை. ஆனால் அவர் நகைச்சுவை என்று வ...