Skip to main content

சங்கர் கணேஷும் இளையராஜாவும் ஒன்றா? (2)

பிரச்சாரமாக இல்லாத ஒன்று எப்படி இலக்கியமாகாதோ அதே போல பிரச்சாரமாக இருப்பதால் ஒன்று இலக்கியமல்லாமல், படிக்க அருகதை அற்றதாக ஆகாது. கார்ல் மார்க்ஸ் உங்களுடையது ஒருவித அலெர்ஜி. அது விமர்சன நோக்கு அல்ல. சொல்லப் போனால் அது ஒரு பிழையான வாசிப்பு முறை.
சென் பாலனும் எழுதி முதிர்ந்த பின் நீங்கள் எதிர்பார்க்கும் இந்த தளுக்கையெல்லாம் பழகிக் கொள்வார் எனலாம். ஆனால் அது மட்டுமே அவரை தரமானவராக்காது. (தரம் என்பது சிடுக்கு, உள்முரண், சிக்கல்கள், கட்டற்ற பாய்ச்சல் மட்டுமே. அது தலையை படிய வாரிக் கொள்வது அல்ல. அது புறவடிவத்தையும் கடந்தது.)


 இதே தட்டையான பார்வையை வைத்து நீண்ட காலமாக தி.ஜாவையும் வண்ணதாசனையும் நாம் பின் வாசலில் நிறுத்தி இருந்தோம் (அதற்காக சென்பாலனும் திஜாவும் ஒன்று என நான் சொல்ல வரவில்லை). ஒருவர் பரவலாக படிக்கப்பட்டாலே அவர் மேம்போக்கானவர், மலினமானவர் என நினைக்க தலைப்பட்டோம். நாம் இந்த குறுகியவாதத்தில் இருந்து மீண்டு வர வேண்டும்
செந்தில்வேல் போன்றவர்களிடம் திரும்ப வருகிறேன்: நியாயமாக, தர்க்கரீதியாக, சங்கர் கணேஷை இளையராஜாவிடம் அல்ல சங்கீத மும்மூர்த்திகளுடன் ஒப்பிட வேண்டும். அதை செய்ய மாட்டீர்கள். அதை கற்பனையே பண்ண முடியாது என நினைப்போம். ஆனால் சாஸ்திரிய இசையை நன்கு அறிந்தவர்கள் வெகுஜன இசை மேடைகளுக்கும் வருகிறார்கள். நித்யஶ்ரீ, ஜக்ஜீத் சிங் போன்றவர்கள் இரண்டு மேடைகளிலும் புழங்குகிறார்கள். இரண்டு இசையும் அதன் தீவிரத்தை பொறுத்து ஒன்றல்ல என அறிவார்கள் அறிவார்கள். ஆனால் இரண்டு இசையிலும் நாம் ரசிக்கத் தக்க அம்சங்கள் உண்டு, மரபார்ந்த இசை சில நேரம் தட்டையாகவும் சினிமா இசை உணர்வுரீதியாக மனதை அசைப்பதாகவும் ஆழம் கொண்டதாகவும் அமையலாம் என அறிவார்கள். இளையராஜா தனது பேட்டி ஒன்றில் தன்னால் சின்ன சின்ன சப்தஙக்ளிலும் இசையை உணர முடிந்ததுண்டு, அப்படியே தனது பதின்பருவ இசைப்பயிற்சி துவங்கியது என சொல்லி இருக்கிறார்


வித்தியாசங்களே இல்லை என நான் கூறவில்லை; ஆனால் வித்தியாசங்களை தர அளவுகோல்களாக மாற்ற வேண்டாம் என்கிறேன். ஒருவர்நான் பேஸ்புக்கில் எழுதுவது எதையுமே படிக்க மாட்டேன்என்றால் அவர் சில நல்ல கவிதைகளை, சுய அனுபவ பதிவுகளை, தீவிர அரசியல் தத்துவ குறிப்புகளை இழந்து விடுவார். வெகுஜன எழுத்தை ஒரேயடியாக நிராகரிப்பவருக்கும் இதுவே நடக்கும். நீங்கள் ஒரு ஊரில் வசிக்கிறீர்கள். அங்கு சாதி வெறி கொண்டவர்கள் இருக்கிறார்கள். நீங்கள் முற்போக்காளர். நீங்கள் சாதி வெறியை எதிர்க்கிறீர்கள். நீங்க இந்த அடிப்படையில் அவர்களிடம் பேசாமலே தவிர்த்தால் இழப்பு உங்களுக்குத் தான். இந்த உலகில் சிலர் அழகானவர்கள், சிலர் அழகற்றவர்கள். சிலர் மென்மையானவர்கள், சிலர் முரடர்கள். ஆனால் நாம் அழகானவர்களால், மென்மையானவர்களால் மட்டும் ஈர்க்கப்படுவதில்லையே. வித்தியாசங்களை கடந்து செல்வதே மானுட வாழ்வு. வித்தியாசங்களை கடந்து பார்ப்பதே இலக்கிய நோக்கு!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...