Skip to main content

செயலியை பயன்படுத்துவதும் காதலிப்பதும் ஒன்றா?


ஶ்ரீவள்ளியின்பொல்லாத மைனாக்கள்தொகுப்பு குறித்து பேசிய பா.வெங்கடேசனின் உரை ஒரு சிறப்பான தீவிரமான உரையாடல் (https://m.youtube.com/watch?v=Fr_SQpsarDQ&fbclid=IwAR0dGW-DHYygDurttPeh1X-ZlxJwj_tr0mhvp5SuAfAAk5UCt83b4nXg7bo). அதை ரசித்தேன். அதேவேளை அவருடன் என்னால் உடன்பட முடியாத சில புள்ளிகளும் உண்டு. என்னென்ன?

ஶ்ரீவள்ளியின் கவிதைகளில் உள்ள சங்கக் கவிதை நீட்சியை நாம் அறிவோம். அதன் உன்மத்தம், உள்முரண், பித்து நிலை, பரவசம், துயருற்றவாறே அதில் மீட்சி விழையாவது திளைத்தல் ஆகியவை, அதே நேரம், ஆதி தமிழ்க்கவிதையின் இயல்புகள் அல்ல என்பதையும் கவிதை வாசகர்கள் கவனித்திருப்பார்கள். இந்த அம்சத்தை பா. வெங்கடேசன் அழகாக சுட்டிக் காட்டி இருந்தார். எனக்கு இருந்த ஒரே மனக்குறை அவர் பிடிவாதமாக இந்தமைனாக்களைபின்நவீன பிரதிகளாக மட்டும் கூண்டிலிட்டு பூட்டி ரசிக்க பார்க்கிறார் என்பது. கவிதையில் எப்போதுமே மைனாக்கள் சுதந்திரமாகவே இருக்கும் என்பதை அவர் மறந்து விட்டார்.


 .தா., பிரிவின் கடும் துயரில் ஶ்ரீவள்ளியின் கவிதைசொல்லி ஒரு மனத்திளைப்பை உணர்கிறார். நீ இல்லை என்னுடன் என்னுடம் எனும் போது இந்த பிரிவு சீக்கிரம் முடியட்டும் என அவசப்படுபவர், நீ இருக்கிறாய் என்னுடன் எனும் போதுசீக்கிரம்போய் விடு என அவசப்படுத்துகிறார். இதே நிலையை நீங்கள் பாப்லோ நெருதாவின் பல கவிதைகளில் காண முடியும். “இன்றிரவு துயர்மிகு வரிகளை எழுதப்போகிறேன்ஒரு உதாரணம்.
 காதலி இல்லாத அந்த கடும் தனிமையான இரவில் அவள் காதலின் இழப்பை பேசும் போது அதை ஒரு சிறிய கொண்டாட்டமாக, அவள் இல்லாதிருப்பதில் அவள் இருப்பதை ரசித்து சிலாகிப்பதாக குறிப்புணர்த்துவார் நெருதா. அந்த துயரகவிதையை நாம் தொடர்ந்து ரசிப்பதன், அதை மீள மீள மொழியாக்குவதன் காரணம் அது தான். கூரை எரிந்து விட்டது, இனி நிலவை நன்றாக பார்க்கலாம் எனக் கோரும் பாஷோவின் ஹைக்கூவும் ஓரளவுக்கு இந்த மனநிலை கொண்டது தான் (இயற்கை ரசனை, இக உலக வெறுப்பு எனும் கட்டமைப்பை தாண்டி பார்த்தோமானால்). 
இதைப் பற்றி பேசும் போது தெரிதா சொல்வதை நாம் கவனிக்க வேண்டும். இருப்பது, இல்லாமல் போவது (presence - absence) என்பவை மொழியின் அடிப்படை செயல்பாட்டில் உறைந்துள்ள ஒன்று என்கிறார். நீங்கள் ஒரு சொல் மூலம் (யானையை பார்க்கப் போன குருடர்களின் கதையைப் போல) அதை முழுக்க உணர்த்துவதில்லை - அது இருக்கிறது எனும் போதே அது இல்லை என்பதையே சேர்த்தே சொல்கிறோம் என்கிறார். (அவர் கையெழுத்து என்பதை உதாரணமாக காட்டுகிறார். கையெழுத்திட்டவர் இல்லை என்றாலே கையெழுத்துக்கு மதிப்பு தோன்ற முடியும். நீங்கள் கையெழுத்திடாத ஒரு காசோலையை எடுத்துக் கொண்டு வங்கிக்கு சென்றுஇது நான் தான்என சொன்னால் ஏற்க மாட்டார்கள்.) ஶ்ரீவள்ளியின் பிரிவுத் துயரம் கூட அது உணர்த்தும் பொருளில் தொடர்ந்து இருந்தும் இல்லாமல் ஆகியிருக்கிறது என்பதாலே அது தொடர்ந்து வாசிக்கையில் இன்பமளிக்கிறது. இது மொழியின் அடிப்படையான சுபாவம். இது ஒரு பின்நவீன இயல்பு மட்டுமல்ல. எல்லா காலத்திலும் நாம் அப்படித் தான் இருந்திருக்கிறோம்.

ஶ்ரீவள்ளியின் இச்சையைப் (அல்லது பிரிவு துயர் அல்லது காதல் இன்பம்) பற்றி பேசும் போது அது தொடர்ந்து ஒன்றை அடையாமல் தள்ளிப் போடும், தள்ளிப் போடுவதன் மூலம் அந்த கணத்தில் ஆழ்ந்து போய் அனுபவிக்கும் நிலை என பா. வெங்கடேசன் அழகாக அவதானிக்கிறார். அவர் இதை தொழில்நுட்பம் கட்டமைக்கும் சுயம் / மனநிலை என சொல்வதைத் தான் என்னால் ஏற்க முடியவில்லை

ஏனென்றால் நீங்கள் இந்த உள்முரணை, திளைப்பை, பரவசத்தை உணர தீவிர உணர்வுநிலைக்கு செல்ல வேண்டும். காதல் பிரிவில் தவிப்ப்பது, மனம் சிதறி கலங்குவது, தன் கண்ணீரில் உப்பு சுவையில் ஒரு வெம்மையை இன்பத்தை அறிவது என்பதும் ஒரு மொபைல் செயலி மூலம் தனது தற்படத்தை பதிவேற்றி குதூகலிப்பதும் ஒன்றல்ல. தொழில்நுட்பம் நம்மை இன்று எந்த தீவிர எதிர்நிலைக்கும், முரண் நிலைக்கும் செல்ல முடியாமல் ஒருவித தட்டையான உணர்வுநிலைக்குள் சிறைவைத்திருக்கிறது என்பதே உண்மை. நெடுஞ்சாலை பயணத்தின் போது மோட்டலின் ரம்மியமான சூழலில் காப்பி அருந்துவதும் (வெங்கடேசனின் உவமை) காதலியின் மடியில் கிடந்து உன்மத்தத்தை உணர்ந்தபடி அதில் தான் இருப்பதை உணர்ந்து துணுக்குறுவதும் நேர் எதிரான மனநிலைகள்

இன்றைய காலம் என்பது தன்னிலை முன்னிறுத்தப்படும் காலம் என பா. வெங்கடேசன் ஆரம்பத்தில் சொல்கிறார். அடுத்து, இந்த தன்னிலையின் பெயரிலேயே இன்று வாழ்க்கையின் ஒவ்வொரு அனுபவமும் அறியப்படுவதை விவரிக்கிறார். இன்று பொதுக்கருத்து என ஒன்று இல்லை, சாராம்சமான கருத்துநிலை என்பதே, ஒருவர் தான் காண்பதே தனதுண்மை என நம்புவதாக அது மாறி உள்ளது என்கிறார். ஆனால் அவரே தான்தொழில்நுட்பத்தால் கட்டமைக்கப்பட்ட தன்னிலைஎன ஒரு பிரயோகத்தை வைக்கிறார். தன்னிலை அவ்வளவு சுதந்திரமாக தான் காண்பதே தனக்கான உண்மை என கருத வாய்ப்பு உண்டென்றால் அந்ததான்எப்படி மற்றொன்றால் (தொழில்நுட்பம்) கட்டமைக்கப்பட்ட தன்னிலையாக இருக்க முடியும்? அது சுதந்திரமாக, சுயகட்டமைப்பாக அல்லவா இருக்க வேண்டும்? இது முரண் அல்லவா

இறுதியாக சுதந்திரம், தன்னிலை குறித்து ஹைடெக்கர் என்ன சொல்கிறார் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். நவீன வாழ்க்கையில் மனிதன்உலகில்இருந்து தொழில்நுட்பத்தால் துண்டிக்கப்படுவதைப் பற்றி சற்று கவலையுடன் பேசுகிறார் ஹைடெக்கர். இதைவீழ்ச்சி” (fallenness) என சொல்கிறார். ஆனால் இங்கு தொழில்நுட்பம் என்பது டெக்னிக்கலான தொழில்நுட்பம் மட்டுமல்ல. நீங்கள் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும், நீங்கள் ஒரு கேள்விக்கு பதில் சொல்லி ஆக வேண்டும் என்பது கூடடெக்னாலஜிதான். இப்போது நீங்கள் முழுமையாக உலகுடனான உங்கள் இருப்பை உணர முடியாதாகிறது. நீங்கள் ஒரு குளத்தில் போய் முக்குளித்து எழுவது உங்கள் ஆழமான தன்னிலை அனுபவம். ஆனால் ஒரு தாளை புரட்டுவது துண்டுபட்ட தன்னிலை. நான் டெக்னாலஜி உருவாக்கும் தன்னிலையை இப்படித் தான் பழுதான ஒன்றாக பார்க்கிறேன். அதை நீங்கள் பெருந்தேவியின் எதிர்கவிதைகளில் காணலாம். ஆனால் ஶ்ரீவள்ளியின் கவிதைகளில் காணும் பரவசமும் கட்டற்ற பறத்தலும் சற்றே ரொமாண்டிக்கான ஆட்படலும்  “டெக்னாலஜியால்தோன்றுவது அல்ல. நான் பா. வெங்கடேசனுடன் முரண்படும் முக்கியமான இடம் இது தான்.

கடைசியாக, ஶ்ரீவள்ளியின் கவிதைசொல்லி உணரும் அந்த தன்னிலையின் பாரம் (கூடலின் போது அவர் தன்னை அங்கு பாரமாக உணர்கிறார்) சற்றே பின்நவீன சாயல் கொண்ட நிலை தான். அது ஒரு நல்ல அவதானிப்பு. ஆனால் அதையே நாம் பழைய கவிதைகளிலும் காண்கிறோமே:
என்னைப் பார்க்க வந்தவர்
தன்னைப் பார் என

சொல்லிச் சென்றார்” (நகுலன்)

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...