முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிக்பாஸ்: ஷெரினும் அப்பாவும்


பெண்களின் அபாரமான சாமர்த்தியம் என சில சொற்களில் அவர்கள் பல சங்கதிகளை உணர்த்தி விடும் பாங்கை சொல்வேன். ஒரு விசயத்தை ஒரு குறிப்பிட்ட சந்தர்பத்தில் சொன்னால் அதன் பொருளே முழுக்க மாறி விடும் என்பதையும் அவர்கள் நன்கு அறிவார்கள். வாழைப்பழத்தில் ஊசி போல நைசாக ஒரு சேதியை உணர்த்தி விட்டு கடந்து போய் விடுவார்கள். பார்க்க ரொம்ப தத்தியாக தெரியும் பெண்கள் கூட, சில நேரம், அவர்களே இந்த மொழித்திறனும் சமயோஜிதமும் அதிகம் படைத்தவர்களாக இருப்பார்கள். ஆமாம், நான் சொல்வது பிக்பாஸில் ஷெரினைப் பற்றியே தான்

அப்பெண் சிலநேரம் வெள்ளாந்தியாக தெரிவார்; மனத்தில் பட்டதை தயங்காமல் போட்டுடைப்பார். உணர்ச்சிவசப்படுவார், ஆனால் எப்போது ஒதுங்கிப் போக வேண்டும், எதை உதாசீனிக்க வேண்டும் என அறிந்திருப்பார். அடுத்தவர்கள் துன்பப்படும் போது அவர் சொல்லுகிற சிறிய அறிவுரைகள் கூர்மையாக இருக்கும். இந்த வாரம் குடும்ப உறுப்பினர்கள் தொகுதி தொகுதியாக, தனியாக கூட, பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து, ரகசியமாகவும் வெளிப்படையாகவும், பிக்பாஸின் தரப்பில் இருந்து, அவர்கள் சொல்லிக் கொடுத்த வசனங்களை தயங்காமல் ஒப்பித்து விட்டு போகிறார்கள். எல்லாரும் ஒன்றே போலஅடுத்தவங்களைப் பற்றி கவலைப்படாதீங்க”, “நன்றாக அடித்தாடுங்க”, “யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதீங்க”, “குடும்பத்தை மறந்து உங்க பெயரை கெடுத்துக்காதீங்கஎன்பதான அறிவுரைகளை வழங்கினர். பிக்பாஸ் இவர்களுக்கு வசனங்களை சற்றே மாற்றி மாற்றி எனும் கொடுத்திருக்கலாம். இந்த ஆபாசங்களுக்கு இடையில் (கவினை அவரது நண்பர் வந்து அறைந்தது தான் இருப்பதிலேயே ஆக ஆபாசமானது) சில சுவாரஸ்யமான விசயங்களும் தாம் நடந்தன. அவற்றில் ஒன்று ஷெரின் தன்னைப் பார்க்க வந்திருந்த அம்மாவிடம் தன் அப்பாவைப் பற்றி பேசிய விதம்.

ஷெரின் உடைந்த குடும்பத்தில் இருந்து வருகிறார். அப்பா பிரிந்து போய் விட்டார். தாயிடம் வளர்ந்திருக்கிறார். ஆக அவர் தன் அம்மாவிடம் பேசும் போது சேரனைப் பார்க்கும் போது தனக்கு தன் அப்பாவின் நினைவு வந்ததாக சொன்னார். அம்மாவின் முகம் உடனே சற்றே வெளுத்து விடுகிறது. அவருக்கு அது பிடிக்கவில்லை எனத் தெரிந்தது. ஷெரினின் அம்மா அந்த வீட்டில் இருந்த சில நிமிடங்களில் அவர் நிலையற்ற பரபரப்பான மனம் கொண்டவர் என தெரிந்தது. ஆக, ஷெரினால் சுலபத்தில் தன் அப்பாவைப் பற்றி அம்மாவிடம் வழக்கமான சந்தர்பங்களில் பேசியிருக்க முடியாது. ஆனால் ஒரு பொதுவெளியில் இது சாத்தியமாகும். லட்சம் பேர் பார்க்கிற ஒரு இடத்தில் அவரது அம்மா நிதானம் பாராட்டியே ஆக வேண்டும். ஆகையால் அவர் அம்மாவிடம் வீடு எனும் வீடற்ற அந்த வெளியில் வைத்து அப்பாவைப் பற்றி பேசுகிறார். அதற்கு சேரனுடன் பழகியதை ஒரு முகாந்திரமாக்குகிறார். இது கேட்க நம்பும்படியாக ஆரம்பத்தில் தெரிந்தாலும் ஒரு சரியான காரணம் அல்ல. ஏனென்று சொல்கிறேன்.

அப்பாவைப் போன்ற ஒருவருடன் நீங்கள் பழக நேர்ந்தால், அவர் father figure (தந்தை படிமம்), ஆகும் பட்சத்தில் நீங்கள் உங்கள் அப்பாவை நினைவுகொள்ள மாட்டீர்கள். இன்மை தான் ஒருவரது நினைவை உக்கிரமாக்கி எங்க வைக்கும். அப்பாவுக்கு தற்காலிக மாற்றாக ஒருவர் தோன்றும் பட்சத்தில் பெரும்பாலானவர்கள் அப்பாவை மிஸ் பண்ண மாட்டார்கள். உளவியலாளர் லக்கான் குழந்தைகளின் மனவளர்ச்சியின் போக்கைப் பற்றி சொல்கையில் நான்கு, ஐந்து வயதுக்குப் பிறகு நாம் கணிசமான தந்தை படிமங்களை, நம்மையறியாமலே, நாடி அடைவதாக சொல்கிறார். நாம் மதிக்கும் மூத்தவர்கள், அண்ணன்கள், ஆசிரியர்கள், தலைவர்கள், நாம் ரசிக்கும் கருத்தாளர்கள், முன்மாதிரிகள் என பலர். வாழ்நாள் முழுக்க நாம் தந்தை படிமங்களை நாடியபடியே இருக்கிறோம் - இதற்கு ஒரு எல்லை இல்லை. அப்பாவே இல்லாமல் போகும் போதும் கூட இந்த தேடல் அப்படியே தான் தொடர்கிறது. அப்பா மாதிரிகளை நாம் தேடுவது அப்பா இல்லாததால் அல்ல. அப்பாவின் இருப்பை உலகம் முழுக்க உணர்வதற்காகவே. இதனாலே, ஷெரினின் கூற்று நிஜமல்ல என தோன்றுகிறது

ஆனால் ஷெரினின் அம்மாவும் ஒன்றும் சளைத்தவர் அல்ல. அவர் நீ விரும்பி இருந்தால் உன் அப்பாவை இங்கே பிக்பாஸ் வீட்டுக்கு அழைத்து வந்திருக்கலாமே என்கிறார். அதாவது, தன்வாழ்வில்”, தன்குடும்பத்துள்அல்ல, அந்த பிக்பாஸ் வீட்டுக்குள் மட்டும் என் முன்னாள் கணவரை நீ அழைத்துக் கொள்ளலாம் என்கிறார். மேலும் ஒரு வினாடியில் அவர் தான் பிரிந்து விட்ட முன்னாள் கணவரின் இடத்தை ஒரு பொதுவயமான, அதிகாரபூர்வ விசயமாக மாற்றி விடுகிறார் - அதில் தனக்கு எந்த பொறுப்பும் இல்லை, எந்த கருத்தும் இல்லை, அவர்உனக்கு அப்பா, ஆனால் எனக்கு யாருமில்லைஎன்பது போல. இந்த விசயங்களை அவர் சில மைக்ரோ நொடிகளில் உணர்த்தி விடுகிறார். உடனே ஷெரின் சுதாரித்து தனக்கு அப்படி அப்பாவை அழைக்க வேண்டிய தேவையில்லை என சொல்கிறார். அப்பாவை தான் மிஸ் பண்ணியதை மட்டுமே குறிப்பிட்டதாக சொல்கிறார். இப்படி சட்டென அம்மாவுடன் சமரசம் பண்ணியும் கொள்கிறார்.

இதில் இன்னொரு சங்கதியையும் கவனியுங்கள். இந்த சம்பாஷணையின் சில நொடிகளே வரும் பகுதியை உலகம் முழுக்க இருந்து மக்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள் என ஷெரின் அறிவார். அவரது அப்பா கூட கவனித்துக் கொண்டிருக்கலாம். ஷெரினுக்கு தன் அப்பா மீது சற்றே கோபமும் ஏமாற்றமும் இருந்தால், அதனாலே அவர் அவரிடம் நேரடியாக உரையாட, அழைப்பு விடுக்க தயங்கினால், இப்போது மிக சுலபமாக, வலுவாக, தன் அப்பாவுக்கு ஒரு இதயபூர்வ அழைப்பை, பிக்பாஸ் வழி, விடுத்து விட்டார்.

இது முடிந்து அவரது அம்மா வழக்கம் போல பிக்பாஸ் சொல்லிக் கொடுத்த அறிவுரை வசனத்தை ஒப்பிக்க தொடங்குகிறார். ஷெரின் அவரிடம்வாயை மூடுஎன சொல்லாமல் அப்படியே அணைத்துக் கொண்டு கொஞ்சி வாயை மூடி விடுகிறார். அப்படியே பொத்தி கொண்டு போய், சிரித்து, மனநிலையை மாற்றி, அம்மா தான் சொல்ல வந்ததை மறக்க செய்து, வெளியே அழைத்து போய் விடுகிறார்.


இதையே நீங்கள் முகினும் சேரனும் தம் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டுக்கு வந்த போது நடந்து கொண்டதுடன் ஒப்பிட்டு பாருங்கள் - இந்த ஆண்கள் மகிழ்ச்சியாக சற்று நேரம் இருந்தார்கள், ஆனால் தாம் நினைப்பதை இப்படி நுணுக்கமாக, மறைமுகமாக உணர்த்த அவர்களுக்குத் தெரியவில்லை. பொதுமைப்படுத்தும் ஆபத்தை உணர்ந்தே இதை சொல்கிறேன் - பெரும்பாலான ஆண்களுக்கு மொழியை பயன்படுத்த தெரியாது. அவர்களின் மனம் முழுக்க காரியத்திலேயே இருக்கிறது என்பதால் எதை சொல்வது எப்படி செய்வது என புரியாமல், உணர்ச்சிகரமான மனநிலையில், விக்கித்து உட்கார்ந்து விடுகிறார்கள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...