Skip to main content

தனியார் பள்ளிகள் எனும் மால்கள் (1)


சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு நான் ஓசூர் அருகே என் நண்பன் பணிபுரியும் ஒரு தனியார் பள்ளிக்கு சென்று பார்த்தேன். அன்றே அவர்கள் நவீன வசதிகளுடன் பார்க்க வியப்பு தரும் வகையில் வகுப்பறைகளை வடிவமைத்திருந்தார்கள். (நிச்சயமாய்) வியந்தேன். ஏனென்றால் அன்று நான் வேலை செய்த கல்லூரிகளில் கூட அத்தகைய வசதிகள் இல்லை. அதன் பிறகு திருச்சியில் ஒரு பிரசித்தமான தனியார் பள்ளிக்கு சில முறைகள் சென்று நவீன கவிதை குறித்து பட்டறைகள் நடத்தினேன். அந்த பள்ளியின் கட்டமைப்பு, அது தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து அறிவுத்துறைகள், கலைத்துறைகளை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவதை பாராட்டினேன். என் குழந்தைப் பருவத்தில் என் பள்ளியில் நான் ஒரு எழுத்தாளனையோ கலைஞனையோ கண்டதில்லை; நான் நவீன இலக்கியத்தை வெளியே தேடி அடைய வேண்டியிருந்தது. எனக்கு 12 வயதிருக்கும் போது மனுஷ்யபுத்திரன் என் வகுப்புக்கு வந்து நவீன கவிதையை பற்றி பேசினாலோ ஒரு நாட்டுப்புற கலைஞர் கூத்து வடிவம் பற்றி பயிற்சி வழங்கினாலோ அது ஒரு அபாரமான திருப்புமுனையாக எனக்கு இருந்திருக்கும் தானே

ஆனால் நான் அன்றே மற்றொரு சிக்கலையும் இத்தகைய பள்ளிகளில் கவனித்தேன் - அவர்கள் அறிவு, கலை ஆகியவற்றை ஒரு வியாபார பண்டமாக, வாழ்க்கை வெளியே இருக்கும் ஒரு வாங்கத்தக்க உறையிலிட்டு முத்திரை பதித்த பொருளாக (சாக்லேட், லேஸ் சிப்ஸ் போல) காண்கிறார்கள். அவர்கள் தம் வியாபார சூழ்ச்சிக்கு ஆளுமைகளை ஒரு விளம்பர கருவிகளாக பயன்படுத்துகிறார்கள் என்பது. இது எனக்குள் ஆழமான கசப்பை ஏற்படுத்தியது.
 மற்றொரு பக்கம் இந்த மாணவர்களை படிப்பின் பெயரில் சுயமாய் யோசிக்கவோ செயல்படவோ விடாமல் கிட்டத்தட்ட சிறைவைத்து அன்றாடம் தேர்வு எழுத வைத்து படிப்பை ஒரு வதை அனுபவமாக மாற்றிக் கொண்டிருந்தார்கள். அதாவது ஒருநாள் ஒரு அறிவுஜீவி வந்து வண்ணதாசனின் கதையைப் பற்றியோ ஒரு அறிஞர் வந்து சாக்ரடீஸ் பற்றியோ பேசுவார்கள்; இதன் அடுத்த கட்டம் இவர்கள் சொந்தமாய் சிந்திக்க, விவாதிக்க, படைக்க சந்தர்பங்களை உருவாக்கி அதன் வழி அவர்களின் அறிவையும் ஆளுமையையும் மேம்படுத்துவதாக இருக்க வேண்டும். இலக்கியமும் தத்துவமும் முன்னிறுத்துவது இத்தகைய சுதந்திரமான, சுய-வளர்ச்சி வாழ்க்கை முறையையே; ஆனால் இந்த பள்ளிகளிலோ நீங்கள் எந்த தத்துவத்தை அறிமுகப்படுத்துகிறீர்களோ அதற்கு நேர்மாறான வாழ்க்கைமுறையை குழந்தைகள் மீது திணிக்கிறீர்கள். நாளும் பொழுதும் அவர்கள் மனனம் செய்து, தேர்வை மட்டுமே இலக்காக வைத்து பயிற்சிகள் எடுத்து சம்பாதிக்கும் கருவிகளாக உருவாக்கப் படுகிறார்கள்; அவர்களின் அறிவும் படைப்பாளுமையும் இவ்வாறு மழுங்கடிக்கப்படுகின்றன. இந்த மேளாவின் நடுவே சித்தார் இசைக்கவும் ஆலாபனை பண்ணவும் பெயர்பெற்ற கலைஞர்களையும் படைப்பாளுமைகளையும் இந்த பள்ளி நிர்வாகங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன என அப்போது நினைத்தேன்.

சமீபத்தில் நான் மற்றொரு பள்ளிக்கு சென்றேன் - இது மிகச்சிறிய தனியார் பள்ளி. ICSE பாடத்திட்டம். முன்பு நான் பார்த்தது போன்றே துலங்கும் நவீன ஸ்மார்ட் வகுப்பறைகள். இயந்திர ஒழுங்குடன் மாணவர்கள் பாடங்களை, கலைகளை (தபலா, கீபோர்ட் என) பழகுகிறார்கள்; விளையாடுகிறார்கள்; கராத்தே பயில்கிறார்கள். இனிமையாக பேசும், மனதை துள்ள வைக்கும் இயல்பு போன்ற பட்டாம்பூச்சிகள் இந்த குழந்தைகள். இவர்களுடன் சில மணிநேரங்கள் இருந்தாலே சில மாதங்களுக்கான புத்தணர்ச்சியை பெறுவீர்கள். பள்ளி முடிந்ததும் அவர்கள் தம் ஆசிரியர்களுக்குபை மாஸ்டர்என தவறாமல் சொல்லி விடைபெறுகிறார்கள். பிள்ளைகள் தாறுமாறாய் ஓடுவதோ கத்தி கூப்பாடு இடுவதோ இல்லை - இந்த அம்சத்தை நான் ஆரம்பத்தில் ரசித்தாலும் இது சரியில்லையே என போகப்போக பிசிறு தட்டியது
பின்னர் இந்த குழந்தைகளில் சிலரிடம் பேசிய போது ஒன்றை கவனித்தேன் - நான் என் கிராமத்தில், சென்னையின் எளிய குடியிருப்புகளில், நான் வேலை செய்த அடித்தட்டு மக்கள் அதிகம் வரும் கல்லூரிகளில் கண்ட ஒரு தனித்துவம், சுயமான பார்வை, தன்னிச்சையாய் தன்னை வெளிப்படுத்தும் விளையாட்டுத்தனம் இவர்களிடம் இல்லை. இவர்கள் வெளியில் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த ஒரு பிரக்ஞையை சின்ன வயதிலேயே (ஐந்து வயதில் இருந்தே) பெற்று விடுகிறார்கள். இவர்கள் ஓடினால் ஒரு வரிசையிலேசீராகஓடுவார்கள்; இவர்கள் சிரித்தாலும் ஒரு குறிப்பிட்ட அலைவரிசையிலே சிரிப்பார்கள். இவர்களிடம் ஒரு வெளிநபர் கேள்வி கேட்டால் சொல்லிக்கொடுத்தது போல கச்சிதமாக பதிலளிக்கிறார்கள். இவர்களுக்குள்ளும் ஒரு குறும்புத்தனம், தன் போக்கில் மனதைப் பாய விடுவது, வெளியுலகின் போக்குகளுக்கு தன்னை ஈடுகொடுக்கும் விருப்பு, ஒவ்வொரு நொடியும் தன்னை புதிதாக உருவாக்கிக் கொள்ளும் தன்மை இருக்கலாம். ஆனால் அப்படியே எப்போதும் இருக்க முடியாதபடி அவர்கள் 24 மணிநேரமும் ஒரு கண்காணிப்பு சிறையில் வைக்கப்படுகிறார்கள் (இவர்களின்ஸ்மார்ட்வகுப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் வைத்திருக்கிறார்கள்). யோசிக்கவே முடியாதபடி ஏதாவது ஒரு ஆக்டிவிட்டி இவர்களுக்கு ஒவ்வொரு நொடியும் தரப்படுகிறது. ஒரே மைதானத்தில் சில நூறு குழந்தைகளை நிறுத்தி வைத்து ஒரே நேரத்தில் கராத்தேவும் ஆரோக்கியத்துக்கான சில பயிற்சிகளையும் வழங்குகிறார்கள். அது என்னவென்றே தெரியாமல் அவர்கள் கைகால்களை நீட்டி கத்துகிறார்கள்; அந்த நேரங்களில அவர்கள் தன்னிச்சையாக உலகை கவனிக்கவோ, சக குழந்தைகளிடம் சேட்டை பண்ண, சண்டை போட, பேசி பழகி புது சொற்கள், கற்பனையான உலகங்களை உருவாக்க முடியாமல் போகிறது. ஒருநாள் முடிந்ததும் இந்த குழந்தைகள் அடைகிற களைப்பானது இவர்களின் பெற்றோர்கள் தம் வேலையிடங்களில் அடைவதை விட அதிகமானது.
இதன் முடிவில் இவர்கள் வெளிவாழ்க்கைக்கான சில அடிப்படையான திறன்களைப் பெறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சுயமாய் சிந்திக்கும் தனித்துவமான ஆளுமைகளாக மலர்வது தடைபடும். இந்த மாதிரி பள்ளிகளில் படித்திருந்தால் நான் இந்த மாதிரி இப்போது ஆகியிருக்க மாட்டேன். மௌனியும் அசோகமித்திரனும் சு.ராவும் ஜெயமோகனின் சாருவும் மனுஷ்யபுத்திரனும், .மார்க்ஸும், ராஜ் கௌதனமனும், ராஜன்குறையும், ஸ்டாலின் ராஜாங்கமும் சற்றுக்கு பின்னுக்கு சென்றால் பெரியாரும் அயோத்திராஸ் பண்டிதரும் பாரதியும் முழுக்க வேறுமாதிரிஉருவாகிஇருப்பார்கள். இந்த தனியார் பள்ளிகளைப் பார்க்கையில் எனக்கு எதிர்கால சமூகம் குறித்த ஒரு கவலை வயிற்றில் பந்தாக திரள்கிறது; ஒரு பயம் என்னை முழுக்க ஆக்கிரமிக்கிறது


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...