Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

தனியார் பள்ளிகள் எனும் மால்கள் (2)

இந்த மாதிரி பள்ளிகளுக்கு வேறு சில அடிப்படையான பிரச்சனைகளும் உண்டு; கல்வி என்பது எதுவோ அதற்கு நேர் எதிரான திசையில் இவை படிப்பையும் அறிதலையும் கொண்டு செல்கின்றன.

கல்வி என்பது ஒரு மனிதன் தனக்குள் நிகழும் இயல்பான அறிதலுக்கு ஒரு வடிவம் கொடுப்பது; தான் அறிந்தவற்றை வெளிப்படுத்த, அடுத்து சமூகத்துக்கே படிப்பிக்க பயில்வது. முக்கியமாக: கல்வி என்பது ஒரு சில தகவல்களையோ திறன்களையோ குழந்தைகளிடம் திணிப்பதில்லை. இன்றைய கல்வி நிலையங்கள் கல்வியை ஏதோ சிரிஞ்சினால் மருந்தை செலுத்துவத்தை போல மாணவர்களுக்குள் செலுத்த முயல்கிறார்கள். இப்படி எதை ஏன் செலுத்த வேண்டும் என்பது குறித்தும் இவர்களுக்குள் தெளிவில்லை. எதை செலுத்தினால் ஆதரவு கிடைக்குமோ, எதை செலுத்தினால் குழந்தைகள்மகிழ்வார்களோ”, எதை செலுத்தினால் அவர்கள் எதிர்காலத்துக்கு ஏற்றமாதிரி மாறுவார்களோ அதை செலுத்துகிறார்கள்


நீங்கள் ஒரு மருத்துவரிடம் செல்கிறீர்கள். அவர் உங்களுக்கு திருப்தி தரும் வகையிலான மருந்துகளை மட்டும் தந்தால், ஒரு வாடிக்கையாளர்களாக உங்களை குஷிப்படுத்துவதே தன் இலக்கு என செயல்பட்டால் உங்கள் கதி என்ன? அதோகதி தான். இன்றைய தனியார் பள்ளிகள் நம் குழந்தைகளுக்கு பண்ணுவது இதைத் தான்.

இன்று நாம் பிறந்து ஆறு மாதங்களான குழந்தையிடம் இருந்தே இந்த ஆபாச பழக்கத்தை ஆரம்பிக்கிறோம் - அவர்களுக்கு ஸ்மார்ட் போன்களில் காணொளிகளை காண்பிக்கிறோம். மெல்ல மெல்ல இக்குழந்தைகள் ஸ்மார்ட் போன் போதைக்கு ஆட்படுகிறார்கள். உங்கள் கையில் இருந்து போன்களை தட்டிப்பறித்து அதை நீங்கள் அனுமதிக்க்காவிடில் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுகின்றன. அடடா விளையாட்டு வினையைக் விட்டதே என கவலைப்படுகிறீர்கள். இப்போது இந்த குழந்தைகளை வேறு இயல்பான காரியங்களில் ஈடுபடுத்தலாம் என்றால் இந்த குழந்தைகளால் சாதாரண விளையாட்டுகளில், எளிய அன்றாட நிகழ்வுகளில் தொடர்ந்து மனத்தை செலுத்தி மகிழ முடிவதில்லை என அறிகிறீர்கள். இவர்களின் மனம் ஒரு நிமிடத்துக்கு மேல் எதிலும் நிலைப்பதில்லை. தொடர்ந்து யுடியூப் நிகழ்ச்சிகளை ஸ்குரோல் செய்தும் மொபைலில் விளையாடியும் அவர்கள் அப்படி மாறிப் போயிருக்கிறார்கள். குழந்தைகளை, அவர்களின் கவனச்சிதறலை சமாளிக்க முடியாமல் பெற்றோர்கள் அவர்களை மூன்று மூன்றரை வயதில் இருந்தே பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள். அங்கு என பண்ணுகிறார்கள்?
 அங்கும் இந்த பிள்ளைகளை அமர வைத்து அதே யுடியூப் காணொளிகளை பெரிய திரையில் காண்பிக்கிறார்கள். இடையிடையே பாட்டுப்பாடி எதையாவது கற்பிக்கவும் முயல்கிறாரக்ள். ஆனால் குழந்தைகளின் மனம் எதிலும் ஈடுபடுவதில்லை. தொடர்ந்து பளீரென்ற வண்ணங்களை, அதிரடி செயல்பாடுகளை, உணர்ச்சிகளைத் தூண்டும் காணொளிகளைக் கண்டு கண்டு அவர்களுக்கு அலுத்துப் போய் இப்போது அதிலும் ஆர்வம் வருவதில்லை; அவர்களின் நரம்பு மண்டலம் இயல்பான விசயங்களால் தூண்டப்படுவதில்லை. நான் ஒரு ஸ்மார்ட் வகுப்பறைக்கு சென்று பார்த்த போது நாற்பது பிள்ளைகளில் ஒரு பிள்ளை மட்டுமே பத்து வினாடியாவது திரையை பார்க்கிறது என்பதை கவனித்தேன். பிற பிள்ளைகள் தம் வகுப்புக்கு வந்திருக்கும் புது ஆட்களை கூட கவனிப்பதில்லை. ஒரு நிமிடத்தில் பத்து இடங்களுக்கு அவர்கள் விழிகள் போய் வருகின்றன; ஆனால் ஒன்றிலும் ஊன்றி நிற்பதில்லை. ஒரு அழகான பைத்திய விடுதிக்கு போயிருப்பதை போல உணர்ந்தேன். (ஆனால், விசித்திரமாக, இங்கிருந்தால் உங்களுக்கு கசப்பை விட ஒருவித உற்சாகம் தொற்றும். அதற்குக் காரணம் இக்குழந்தைகளின் முழுக்க மழுங்கி விடாத குழந்தைமையின் மலர்ச்சி.)

இந்த பிள்ளைகள் வளர வளர பள்ளிகளும் கல்லூரிகளும் இவர்களுக்கான அறிவை இவர்களின் இந்த அடிப்படையான பிழையான கவனமின்மை ஆளுமைக்கு ஏற்றபடி தகவமைத்து அளிப்பார்கள். இவர்கள் அன்றாடம் ஒரு நூறு விசயங்களைக் கற்பார்கள். எதிலிருந்தும் காத்திரமாக ஒன்றை பெற முடியாது. ஏனென்றால் இவர்களை வாடிக்கையாளர்களாக நடத்தும் கல்வி அமைப்புகள் இவர்கலின் பிழையான மனப்போக்கை, கோணலான வாழக்கைப் போக்கை மேலும் சிக்கலாக்கி அதை சுரண்டி வியாபாரம் பார்க்கின்றன

நாளை இந்த பிள்ளைகள் கல்லூரிக்கு வரும் போதும் பேராசிரியர்களான நாங்கள் மேலோட்டமாக நிறைய தகவல்களை அவர்களுக்கு அளிப்போம். ஒரு தெளிவான லட்சியத்துடன், சமூக அரசியல் நம்பிக்கையும் இவர்களை வடிவமைக்காமல் இவர்களின் தேவைக்கு (உடனடி திருப்தி, கேளிக்கை, கவனத்தை திரட்டாமல் ஓடிக்கொண்டே இருப்பது) ஏற்ப வகுப்புகளை நடத்துவோம். இதே போன்று பவர் பாயிண்ட், காணொளிகள், ஆக்டிவிட்டிகள் என நமது கார்ப்பரேட் கல்லூரி வகுப்பறைகள் இருக்கும். ஜெர்மானிய தத்துவத்தை கற்க வேண்டுமா? ஒரே மணிநேரத்தில் சில காணொளிகள் காட்டி, ஜோக்குகள் சொல்லி, சில விளையாட்டுகளை ஆட வைத்து அவர்கள் அனைத்தையும் கற்று விட்டதாக ஒரு பாவனையை காட்டி முடித்து விடுவோம். இவர்கள் வெளியே சென்று நுனிநாக்கு ஆங்கிலத்தில் அனைத்தைப் பற்றி மேலோட்டமாக பேசி விடும் போலி மனிதர்களாக ஆவார்கள்


Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...