Skip to main content

ஹெரால்டு புளூம் எனும் எலும்புக்கூடு (2)


பிரதியை எழுத்தாளனிடம் இருந்து விலக்கி, அடுத்து மெல்ல மெல்ல பிரதியிடம் இருந்து அர்த்தத்தை பிரித்து, அர்த்தத்தில் இருந்து வாசிப்பை விடுதலை அடைவதே வாசிப்பின், மனித இருப்பின் நோக்கம் எனும் இடத்துக்கு கடந்த அரைநூற்றாண்டுக்கு மேலான கோட்பாட்டு விமர்சனம் வந்தடைந்துள்ளது என்றால் ஹெரால்ட் புளூமோ இந்த முன்னெடுப்பை நேர் மாறாக செய்தார் - வாசிப்பின் நோக்கம் என்பது புளூமைப் பொறுத்தமட்டில் எழுத்தாளனின் நோக்கத்தை அந்த பிரதியில் கண்டடைவது. அதை உறுதிப்படுத்த அவர் எழுத்தாளனின் பேட்டியில் இருந்து வாக்கியங்களை மேற்கோள் காட்டுவார். பிறகுநீ அப்போ இப்படி சொன்னே இல்ல, அதான் இப்படி இப்போ இந்த கதையை எழுதி இருக்கேஎன தீர்ப்பு எழுதுவார். இது நமது காவல்துறை விசாரணை பண்ணி குற்றவாளிக்கு முதல் தகவல் அறிக்கை எழுதுவதற்கு இணையாக இருக்கும். ஹெமிங்வேயின்கடலும் கிழவனும்”, தல்ஸ்தாயின்அன்னா கரனினாஆகிய நாவல்களுக்கு புளூம் எழுதிய விமர்சனங்கள் இதற்குஉன்னதஉதாரணங்கள்.

புளூமின்அன்னா கரனினாஇலக்கிய விமர்சனம் சுவாரஸ்யமானது என்றாலும் அவர் அன்னா என்பது தல்ஸ்தாயே தான் என முடிவுக்கு வரும் இடம் மிக மிக சிக்கலானது. அடுத்து அவர் தல்ஸ்தாயே தல்ஸ்தாயை காதலிக்கிறார் எனும் அவதானிப்பை வைக்கிறார். ஏன்
நீங்கள் வாழ்க்கைக்கதை விமர்சனத்தை செய்யும் போது எழுத்தாளன் எழுதுவது தன் கதையையே எனும் எளிமைப்படுத்தலை விமர்சனமாக முன்வைக்கிறீர்கள். இப்போதுஎழுத்தாளன் ஏன் தன் கதையை சொல்ல இலக்கிய பிரதி ஒன்றை உருவாக்க வேண்டும்?” என புளூமிடம் கேட்பீர்கள். அதற்கு எழுத்தாளன் தன் வாழ்க்கைக் கதையையே நேரடியாக (கதைக்குப் பதிலாக) எழுதலாமே? இதற்கு பதிலளிக்க புளூம் பிராயிடிடம் செல்கிறார்
எழுத்தாளன் தான் நேரடியாக தன்னிடம் எதிர்கொள்ள முடியாத / விரும்பாத தனக்குள்ளே அழுத்தி அடக்கப்பட்ட உணர்வுகளை கதாபாத்திரங்கள் மூலம் சித்தரித்து எதிர்கொள்கிறான் எனும் இடத்திற்க்கு வருகிறார் புளூம். இப்போது எழுத்தாளன் தான் எதிர்கொள்ள விரும்பாத சுயபிம்பத்தை ஒரு பாத்திரமாக்கி அதனுடன் உரையாடுகிறான், அதுவே இலக்கிய பிரதி என முடிவு செய்கிறார் அவர். இங்கு, எழுத்தாளன் இரண்டு குரல்களாக பிரிகிறான் - தனது இருண்மையை அவன் தனது பகுத்தறிவின் ஒளியில் அடைவதே படைப்பூக்கமாகிறது என புளூம் சொல்கிறார் (இது ஏற்கனவே பிராயிட் சொன்னது தான்). ஆக அவர் ஒரு காதல் கதையை படித்தால் அதில் வரும் பெண்ணும் அந்த பெண்ணை காதலிக்கும் ஆணும் அதை எழுதுகிற எழுத்தாளனே தான் எனும் எளிமைப்படுத்தப்பட்ட பார்வையை வந்தடைகிறார் (இதனாலே அன்னா வழி தல்ஸ்தாயே தல்ஸ்தாயையே காதலிக்கிறார் எனும் அபத்தமான பார்வையை புளூம் முன்வைக்கிறார்). எந்த படைப்பில் இந்த சுய-ஆட்கொள்ளலை ஒரு எழுத்தாளன் கடந்து செல்கிறானோ அதுவே மேம்பட்ட படைப்பு என சொல்கிறார். “கடலும் கிழவனும்நாவலில் சாண்டியாகோவும் அவன் பிடிக்கும் அந்த பெரிய மீனும் ஹெமிங்வேயே தான் என புளூம் சொல்கிறார். ஹெமிங்கே தன் சுய-மோகத்தை மீற முடியாததால் இந்நாவல் ஒரு தோல்விப்படைப்பே என்கிறார். ஆனால் ஹெமிங்வேயின் தனிவாழ்க்கையைக் கடந்து தன்னால் அந்நாவலை, ஒரு பிரதியாக மட்டுமே, வாசிக்க முடியவில்லை என்பது தன் விமர்சனத்தையே ஒருதோல்வி விமர்சனம்ஆக்குகிறது என்பது பற்கள் உதிர்ந்த காலத்திலும் புளூமுக்கு ஏனோ புரியவில்லை.

அறிதல் என்பது, லகான் போன்ற நவீன உளவியலாளர்களின் நோக்கில், தன்னையோ உலகையோ அறிவது அல்ல - அறிதல் என்பது அறிதலைக் கடந்து செல்வதே. அப்படி கடந்து செல்லும் பொருட்டே மனிதன் இலக்கியத்தை உருவாக்குகிறான், நுகர்கிறான், அதன் பொருட்டே அவன் உலகுடன் தொடர்ந்து உரையாடலில் ஈடுபடுகிறான். அறிதலின் ஆழத்தில் உள்ளது சூன்யமே, அர்த்தமல்ல. ஒரு பிரதியினுள் விரவியுள்ள உள்முரண்களையும் அடுக்கடுக்கான இருமைககளையும் ஒரு வாசகன் கண்டுகொள்ளும் இடத்தே அவன் பெரும் வாசிப்பின்பத்தை அடைகிறான் என தெரிதா வலியுறுத்துகிறார். நீங்கள் ஒரு கதை / கவிதைக்குள் இதுஅதுஎன அறியும் சற்று முன்பே இதுஅதுவல்லஎன்பதையும் உணர்கிறீர்கள். அப்படி உணரும் போதே அந்த பிரதியின் அர்த்தம் தன்னையே ரத்து பண்ணுகிறது

.தா., “மோகமுள்நாவலில் பாபு யமுனாவை மிதமிஞ்சி விரும்புவதாலே அவளை அடைய தொடர்ந்து முயலாமல் விட்டு விலகி செல்கிறான் (அவளை அடைவது அருவருப்பானது என நினைப்பதாலோ அந்த கூச்சத்தினாலோ குற்றவுணர்வாலோ அல்ல.) யமுனாவும் பாபுவை விரும்பினாலும் அவனை தான் அடைய நினைப்பதே உள்ளுக்குள் அவனை அடைய விரும்பாமல் இருப்பது தான் என உணர்கிறாள். அதாவது பாபுவின் இச்சை முன்னோக்கி ஓடினால் யமுனாவின் இச்சை பின்னோக்கி ஓடுகிறது. இருவரின் இச்சையையும் வாசகன் அதன் உள்முரண்களுடன் மட்டுமே அறிகிறான். இந்த இச்சை என்பது நிகழும் போதே நிகழாமலும் இருக்கிறது. ஒரு பெண் ருதுவாகும் போதே குழந்தையாகவும் நீடிப்பது போன்றது இது. இதுவேமோகமுள்ளின்வாசிப்பு இன்பம். அந்த இன்பம் எனும்அதுஎதுவென வாசகன் முழுக்க பகுத்துணர தி.ஜா விடுவதில்லை என்பதே அவரது கலை. நம் ஒவ்வொருவரது மோகம் என்பதும் தள்ளிப் போடுவது தானே! நாம் ஒருத்தியை மோகிக்கும் போதே அவளை மோகிக்காமல் மற்றொருத்தியாக மாற்றவும் செய்கிறோம் தானே. இப்போதுமோகமுள்ளைவாசிப்பது நம் இருப்பை உணரும் அனுபவமாகிறது. “அதுவேமோகமுள்ளை மகத்தான இலக்கியமாக்குகிறது.
இப்படியே இலக்கிய வாசகன் இலக்கியத்தை அணுகுகிறான் எனும் முக்கியமானபுரிதல்புளூமைப் போன்ற ஆரம்பநிலை உருவியல் (formalist) விமர்சகர்களுக்கு என்றுமே விளங்கியதில்லை என்பது ஒரு பெரும் துயரம். ஒரு பெண்ணின் உடலைப் பார்த்து அதுவே பெண்மை என நம்புவதைப் போன்ற அபத்தம் இது

நாகார்ஜுனரின் பௌத்த தத்துவ பரிச்சயம் கொண்ட இந்திய வாசகர்களுக்கு இத்தகைய விமர்சங்களின் பிழை எதுவென சுலபத்தில் புரியும். ஆனால் புளூமுக்கோ, .நா.சு போன்ற ரசனைவாதிகளுக்கோ ஆச்சரியமாக இந்த நுணுக்கம் விளங்கவில்லை. இவர்களை நாம் மேற்கின் புலனறிவாதம் (empiricism) எனும் அறிவியல் சார் பொருண்மைவாத தரப்பாக புரிந்து கொள்ளலாம். மொழி, பண்பாடு, இலக்கியம், தத்துவம், மெய்யியல் ஆகிய துறைகளின் நேரெதிர் பள்ளியை சேர்ந்த இத்தகைய விமர்சகர்கள் இலக்கிய வாசிப்புக்கு செய்த பங்களிப்பு என்பது பெருமளவு பாதகமே அன்றி சாதகமானது அல்ல.

புளூமின் விமர்சனத்தைப் படிக்கையில் எனக்கு, சுவாரஸ்யமாக, நான் பங்குபெற்ற விஷ்ணுபுரம் வாசகர் வட்ட விவாதங்கள் நினைவுக்கு வருகின்றன. இவர்களும் புளூமைப் போன்றே ஒரு பிரதியை படைப்பாளியின் வாழ்க்கை, ஊர்ப்பின்னணி, அவனது வரலாறு மற்றும் பிரதியின் எளிய வடிவ சங்கதிகளைக் கொண்டே சுருக்கி புரிந்து கொள்கிறார்கள். ஒருவேளை புளூம் தமிழகம் வந்திருந்தால்விஷ்ணுபுரம் மேற்கத்திய விமர்சகர் விருதுஎன ஒன்றை அமைத்து அவருக்கு அளித்து விழா எடுத்திருப்பார்கள் எனத் தோன்றுகிறது. சொர்க்கத்தில் இருந்து .நா.சுவும் பூ தூவியிருப்பார்


ஹெரால்ட் புளூம் 89 வயது வரை உயிருடன் வாழ்ந்த, தன் இருப்பால் இலக்கிய வாசிப்பை மேலும் மேலும் பின்னுக்கு நகர்த்திய, ஒரு எலும்புக்கூடு. அவருக்கு தமிழில் வாரிசுகள் இன்றும் இருக்கிறார்கள் என்பது ஒரு வேடிக்கையான துன்பியல்.  

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...