Skip to main content

புனைவு எழுதுவது ஏன் அபுனைவை விட சவாலாக உள்ளது?


எழுதுவது என்றுமே சவால்தான். இல்லை என்று யாராவது சொன்னால் அது பொய். ஆனாலும் அபுனைவுடன் ஒப்பிட்டால் புனைவு எழுதுவது கூடுதல் சிரமம், அல்லது இன்னும் துல்லியமாக சொல்வதானால் கூடுதல் சவால் என்பேன். இன்று நானும் ஆயுஷும் நாவல் கலையின் நுணுக்கங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது இந்த கேள்வியை அவன் என்னிடம் கேட்டான். அவன் கடந்த இரு வருடங்களாக அபுனைவு எழுதி வருகிறான். அவனால் நினைப்பதை இப்போது ஒரு கட்டுரையாக வேகமாக எழுத முடிகிறது. அதற்கான மனக்குவிப்பு அமைந்து வருகிறது. ஆனால் சிறுகதையோ நாவலோ எழுதும் போது மனம் சிக்குண்டது போல ஸ்தம்பிக்கிறது. இது ஏன்?
 நான் அவனிடம் என் நாவல் எழுதும் அனுபவங்களை பகிர்ந்து கொண்டேன். ஒவ்வொரு நாளும் எழுதி வரும் போது, குறிப்பாக எழுதும் முன்பு, அன்றைக்கு எதை எப்படி எழுதி நகர்த்தி செல்வது என குழப்பம் வருகிறது, எழுத முடியுமா என கேள்வி எழுகிறது, அந்த கேள்வி ஒரு பயமாக மாறி, பயத்தை மறைக்க முயன்று அது பதற்றமாக உருக்கொண்டு என்னை அழுத்துகிறது. இது ஏன்?


முதல் காரணம்: அபுனைவு எழுதும் போது எதை எழுதப் போகிறோம் என முன்கூட்டியே தெரிந்திருக்கிறது; ஆனால் புனைவுக்கு ஒரு வரைவு இருந்தாலும் கூட அடுத்து என்ன என்பது ஒரு மர்மமே. எதிர்பாராமைகள் நிறைந்தது புனைவு; எதிர்பாராமைகளே புனைவின் சுவாரஸ்யம், அவையே புனைவை சவால் நிரம்பியது ஆக்குகின்றன. ஆனால் புனைவை சவால் ஆக்குவது பிரதானமாக இதுமட்டும் அல்ல.

புனைவுக்குள், குறிப்பாக ஒரு நாவலுக்குள், பல (சிந்தனை / உணர்வு / வரலாற்று / தத்துவார்த்த / பண்பாட்டுத்) தரப்புகள் உண்டு. ஒன்றுக்கொன்று முரண்படுகிற தரப்புகளாக இவை இருக்கும். உதாரணமாக பிறழ்வு உறவுகளை எடுத்துக் கொள்வோம். மணமான ஒருவர் தான் நம் நாயகன் - அவர் தன் மனைவியை மனதார விரும்புகிறவர், தன்னையும் மீறி மற்றொரு பெண்ணை நேசிக்கிறார். இங்கே தாம்பத்ய அன்பும், காதலும் இரு வேறு தரப்புகள். இரண்டையும் அங்கே தெளிவாக முன்வைக்க வேண்டும், அதுவும் சமமாக தெளிவாக. இரண்டையும் மனம் பிடித்து தொங்குவதற்கான காரணங்கள் தெளிவாகத் தெரிய வேண்டும். தர்க்கபூர்வ காரணங்கள் அல்ல, உணர்வுரீதியான காரணங்கள். அந்த காரணங்களை நீங்கள் வரலாற்றில், சமூகவியலில், உளவியலில், நடைமுறையில் கண்டுபிடிக்க முடியாது, அதை நீங்கள் அந்த பாத்திரத்தின் உணர்வுத் தளத்தில், அவன் / அவளது அகச்சாய்வுகளில், இருண்மைக்குள் தான் கண்டுபிடிக்க முடியும். ஒவ்வொரு பாத்திரத்துக்கும் அவரவருக்கான நியாயங்கள் இருக்கும். அவரளவில் அது தர்க்கபூர்வமாகவும் பிறருக்கு அபத்தமாகவும் இருக்கும். இதுவே அந்த பாத்திரத்தின் சாரம். ஒரு படைப்பாளி இந்த தரப்பை கண்டுணர்வதே பெரிய சவால் (செகாவ் தனதுநாயுடன் தோன்றிய சீமாட்டிசிறுகதையில் இதை அபாரமாக செய்திருப்பார்.) ஒரு நாவல் என்றால் இது போல பல்வேறு தரப்புகளை கண்டறிந்து மோத செய்ய முடிய வேண்டும். அப்போதே அது சிக்கல்களும் முடிச்சுகளும் நிரம்பிய சுவாரஸ்யமான வியப்பூட்டும் படைப்பாகும்.

இதை செய்வதற்கான முதல் தடை நீங்கள் ஒரு கதையை சொல்லும் போது அந்த கதையின் போக்கு குறித்த நியாயங்கள் உங்களுக்கு தெளிவாக தெரிந்திருக்காது என்பதே. .தா., அபிராமி ஏன் தன் குழந்தைகளுக்கு விஷமளித்து கொன்றாள் என்பது உங்களுக்கு அவரைப் பற்றி ஒரு நாவல் எழுதும் போது தெரிந்திருக்காது. ஆனால் ஒரு கட்டுரையாக எழுதும் போது கொலைக்கான காரணங்களை சுலபமாக அடுக்க முடியும். ஏனென்றால் அத்தரப்புகள் ஏற்கனவே தயாராக உள்ளன. நீங்கள் அந்த தரப்புகளின் தர்க்கத்தை மட்டுமே அபுனைவில் பரிசீலிக்கிறீர்கள்

ஒரு கட்டுரை / கட்டுரை நூல் எழுதும் போது அங்கு ஒரு தரப்பு உண்டா என ஆயுஷ் என்னிடம் கேட்டான். நான் அவனிடம் சொன்னேன், “ஆம் உண்டு. ஒரு அபுனைவில் அதை எழுதுகிறவன் தான் பாத்திரம். எழுத்தாளன் தன்னை பாத்திரமாக நம்பியே தன் தரப்பில் இருந்து பேசுகிறான். அதாவது கட்டுரையாளன் தன்னையே பாத்திரமாக்கிய பின்னரே எழுதத் தொடங்குகிறான். அபுனைவிலும் உள்ள புனைவுத் தன்மை இது தான். ஆனால் புனைவில் அவன் தன்னை மட்டுமே பாத்திரமாக்கி கதை சொல்ல முடியாது. (ஆட்டோபிக்‌ஷனில் ஓரளவுக்கு முடியும் என்றாலும்) நாவல் எழுதுவது ஒரே கட்டுரை நூலை நான்கு ஐந்து விதங்களில் மாறுபட்ட, முரண்பட்ட நோக்குகளில் இருந்து எழுதிப் பார்ப்பது போன்றது. அதாவது ஒரே கருத்தை நான்கைந்து கோணங்களில் இது முழுக்க முரண்பட்ட முன்வைப்பது. அதுவும் கட்டுரையில் தர்க்கரீதியாக வைக்கும் கோணத்தை இங்கு உணர்வுநிலையில் இருந்து செய்ய வேண்டும்.”

இதை சொல்லும் போது எனக்குத் தோன்றிய முதல் உதாரணம் தி.ஜாவின்மோகமுள்”. பாபு தன்னை விட மூத்தவளான யமுனாவை காதலிக்கிறான். ஏன் அப்படி அவன் செய்கிறான் என்பதே நாவலின் மையக் கேள்வி. நாவலின் போக்கினூடே தி.ஜா இக்கேள்விக்கு பலவிதமான பதில்களை தொகுக்கிறார். இறுதியில் நாம் புரிந்து கொள்கிறோம் - பாபுவினுடையது சாத்தியமாகாத பிறழ்வுறவின் கதை மட்டுமல்ல; இசையில், அன்பில், காமத்தில், வாழ்க்கைத் தேடலில் மிகையை நாடி, தன் லட்சியத்தை தொடர்ந்து தள்ளிப் போடும் ஒரு இளைஞனின் கதையும் தான்.
 பாபு நாவல் முழுக்க இசையை கற்றபடியே இருக்கிறான்; கற்று முடித்து கச்சேரி பண்ண தயங்குகிறான். ஏனென்றால் எதையொன்றையும் நாம் முற்றும் தெரிந்து கொண்டு செயல்படும் போது அங்கு ஒரு ஏமாற்றம் வந்து விடும்; ஆனால் அதை அடையும் ஒரு நொடி முன்பு வரை நமக்கான சாத்தியங்களுக்கு வானமே எல்லையாக இருக்கும். இதை உணர்ந்தே பாபு முதலில் யமுனாவை நேசித்து அவள் பொருட்டு தன் காதலை தள்ளிப் போடுகிறான்; பிறகு அவளுக்காக தன் இசையை தள்ளிப் போடுகிறான். இறுதியில் பல வருடங்களுக்குப் பிறகு யமுனாவே அவனை நாடி வந்து, அவளுடன் உடலுறவு கொண்ட பின்பு இவ்வளவு தானா, இதற்குத் தானா எனும் கேள்வி, ஏமாற்றத்தின் கசப்பு அவனை உலுக்குகிறது. யமுனா இதற்கு நேரெதிர் கோடியில் இருக்கிறாள் - அவள் நடைமுறையை தேவைக்கு அதிகமாய் புரிந்து கொண்டவள். திருமணம் என்பதை தன்னை அடிமைப்படுத்தும், தனது சுயமரியாதையை பறிக்கும் என எண்ணி தொடர்ந்து அதை தள்ளிப் போடுகிறாள். ஒரு கட்டத்தில் வேறுவழியின்றி, பசிக்கொடுமை தாளாதே அவள் பாபுவை நாடுகிறாள். அது ஒரு சமசரம். எவ்வளவு தான் யமுனா ஒவ்வொரு சமூக அமைப்பிலும் மாட்டாமல் அவள் தப்பித்து சென்றாலும் அந்த சுதந்திரமும் ஒரு முடிவுக்கு வருகிறது. இருவரும் இருவித நாட்டங்களை முழுக்க மாறுபட்டு அணுகும் ஆட்கள். இருவரும் அப்படி இருக்க அவர்களுக்கான நியாயங்கள் உண்டு. அவர்களுக்கு மட்டுமே புரியும் தர்க்கம் உண்டு. தி.ஜா இது என்ன என விவாதிப்பதில்லை; ஆனால் இந்த நியாயப்படி அவர்கள் நாவல் முழுக்க பயணிக்கிறார்கள். இது ஏற்படுத்தும் சிக்கல்களே நாவலின் உச்சங்களை ஏற்படுத்துகின்றன.

இப்போது நான் சொல்லியிருப்பதைப் போல பாபு மற்றும் யமுனாவின் அடிப்படையான நோக்கங்களை வரையறுப்பது கட்டுரை; ஆனால் அதை வரையறுக்க முடியாதபடி கையாள்வது நாவல். கிளியை இறகுகளை நறுக்கி கூண்டு வைத்தால் கட்டுரை; இறகுகள் வளர விட்டு பறக்க விட்டு ஆகாயத்தை அது ஆளும் போது இங்கிருந்தே அதை கட்டுபடுத்தி தேவைப்படும் போது வரவழைத்து மீண்டும் கூண்டு அடைக்க முடிவது நாவல்


Comments

Lakshmi Narayanan said…
பிரமாதம் அபிலாஷ் சார்.

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...