Skip to main content

காதலை மிஸ் பண்ணுவதும் ஒருவித நேசத்தை உணர்வதே

(பீட்டர் ஹேண்ட்கேயின் The Great Fall நாவலில் இருந்து)



உண்மை தான்: அவன் அவளை நேசிக்கவில்லை, அவளிடமே அதை சொல்லியும் இருக்கிறான், துவக்கத்தில் ஒருமுறை, அதன் பிறகு மற்றொரு முறை; அதன் பிறகு அதற்குத் தேவையும் இருக்கவில்லை. “நான் உன்னை நேசிக்கல”. முதல் தடவை இதை அவள் கேட்டாள் என்றால் இரண்டாம் முறை காதிலே வாங்கிக் கொள்ளவில்லை. தான் காதலை உணர்கிறேன், தன்னால் அவனிடம் காதலைப் பற்றிப் பேச முடிகிறது என்பதே அவளுக்கு போதுமானதாக இருந்தது; மேலும் அவன் அவளைத் தடுக்கவில்லை என்பதும். “நீ என் காதலன். சின்ன வயதில் இருந்து இப்போது தான் முதன்முதலில் ஒருவரிடம் நான் நானாக இருக்க முடிகிறது. இந்த பகுதியில் யாருமே, இந்த நாட்டில் யாருமே நம்மளவுக்கு அதிக நேரம் படுக்கையின்பத்தை அனுபவிப்பதில்லை. ஒவ்வொரு முறையும் நாம் உலகை தோற்கடித்தோம். உலகை நம் முன் மண்டியிட செய்தோம். சர்வ சக்தி வாய்ந்ததாக, முழுமையான கட்டுப்பாட்டை செலுத்துவதாய் சொல்லப்படுகிற இந்த காலத்தை பழிவாங்கி இருக்கிறோம். அவர்களை முறியடித்து விட்டோம், அவர்கள் நம் மீது கட்டுப்பாட்டை விதிக்க முடிவதில்லை இப்போது, அவர்கள் போட்டியிலே இல்லை ; நாம் இருவரும், நீயும் நானும், மட்டுமே இங்கு முக்கியம். நாமே முக்கியம்.”


அவனும் அவளை தன் போக்கில் இருக்க விட்டான், அவளை சுதந்திரமாக இருக்க விட்டான். இருந்தாலும் அவன் அதை மிஸ் பண்ணினான், அவன்காதலைமிஸ் பண்ணினான். தினமும் அதை மிஸ் பண்ணினான், சில நேரம் குறைவாக வலித்ததது, சில நேரம் வலிகளுக்கெல்லாம் வலியாக அது மாறியது, தொடர்ச்சியான வலியாக, எப்படி எப்படியோ அமைந்தது. காதலை மிஸ் பண்ணுவது அவனை வெறிகொள்ளச் செய்தது, தன் மீதும் பிற விசயங்கள் மீதும், ஆனாலும் கடைசியில் அது அவனை மீறிப் பெருகியது. துல்லியமாக சொல்வதெனில், கோபவெறி காதலை மிஸ் பண்ணுவதால் அல்ல அதன் இன்மையாலே அவனுக்கு ஏற்பட்டது. காதலை மிஸ் பண்ணுவதும் ஒருவித நேசத்தை உணர்வதே, சொல்லப் போனால், அதுவே பூரணமாக, எதிர்காலம் குறித்து அதிக நம்பிக்கையை தருவதாக, கண்ணுக்கு முன் வந்து நிற்கும், தொட்டுணர முடிகிற, கைக்கொள்ள முடிகிற காதலை விட அதிக எதிர்பார்ப்புகளைத் தருவதாக இருக்கும்; எப்படியென்றால் ஒருவர் தன் வசம் இல்லாத ஒருத்தியை நினைத்துஉன்னை மிஸ் பண்ணுகிறேன்என சொல்வாரே அதைப் போன்ற காதல். அவன் அப்போது காதலை மிஸ் பண்ணவில்லை. அது அவனிடம் அதிர்ச்சிகரமாக தன் இன்மையை அறிவித்தது; அன்று காலையில் கூட, நாம் குறிப்பிடும் இதே காலை வேளையில் கூட. “இருந்தாலும் நான் அதை மிஸ் பண்ணுகிறேன்,” அவன் சத்தமாக தனக்கே சொல்லிக் கொண்டான். “அது இல்லாமல், அதனால் ஆசீர்வதிக்கப்படாமல், அதோடு இருக்காமல், ஒரு நொடியேனும் அதனூடே இருக்காமல், என்னுடைய இந்த தினம் மதிப்பிழக்கிறது, வெறுமனே தன் நாளை வீணடிக்கிற ஒருவனாகிறேன். மற்றொரு பக்கம், நான் போலியான நட்புகளைத் தூக்கி எறிந்தது குறித்து மகிழ்ச்சியும் கொள்கிறேன்.”

தமிழில்: ஆர். அபிலாஷ்

(பக். 18-19)

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...