முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காதலை மிஸ் பண்ணுவதும் ஒருவித நேசத்தை உணர்வதே

(பீட்டர் ஹேண்ட்கேயின் The Great Fall நாவலில் இருந்து)



உண்மை தான்: அவன் அவளை நேசிக்கவில்லை, அவளிடமே அதை சொல்லியும் இருக்கிறான், துவக்கத்தில் ஒருமுறை, அதன் பிறகு மற்றொரு முறை; அதன் பிறகு அதற்குத் தேவையும் இருக்கவில்லை. “நான் உன்னை நேசிக்கல”. முதல் தடவை இதை அவள் கேட்டாள் என்றால் இரண்டாம் முறை காதிலே வாங்கிக் கொள்ளவில்லை. தான் காதலை உணர்கிறேன், தன்னால் அவனிடம் காதலைப் பற்றிப் பேச முடிகிறது என்பதே அவளுக்கு போதுமானதாக இருந்தது; மேலும் அவன் அவளைத் தடுக்கவில்லை என்பதும். “நீ என் காதலன். சின்ன வயதில் இருந்து இப்போது தான் முதன்முதலில் ஒருவரிடம் நான் நானாக இருக்க முடிகிறது. இந்த பகுதியில் யாருமே, இந்த நாட்டில் யாருமே நம்மளவுக்கு அதிக நேரம் படுக்கையின்பத்தை அனுபவிப்பதில்லை. ஒவ்வொரு முறையும் நாம் உலகை தோற்கடித்தோம். உலகை நம் முன் மண்டியிட செய்தோம். சர்வ சக்தி வாய்ந்ததாக, முழுமையான கட்டுப்பாட்டை செலுத்துவதாய் சொல்லப்படுகிற இந்த காலத்தை பழிவாங்கி இருக்கிறோம். அவர்களை முறியடித்து விட்டோம், அவர்கள் நம் மீது கட்டுப்பாட்டை விதிக்க முடிவதில்லை இப்போது, அவர்கள் போட்டியிலே இல்லை ; நாம் இருவரும், நீயும் நானும், மட்டுமே இங்கு முக்கியம். நாமே முக்கியம்.”


அவனும் அவளை தன் போக்கில் இருக்க விட்டான், அவளை சுதந்திரமாக இருக்க விட்டான். இருந்தாலும் அவன் அதை மிஸ் பண்ணினான், அவன்காதலைமிஸ் பண்ணினான். தினமும் அதை மிஸ் பண்ணினான், சில நேரம் குறைவாக வலித்ததது, சில நேரம் வலிகளுக்கெல்லாம் வலியாக அது மாறியது, தொடர்ச்சியான வலியாக, எப்படி எப்படியோ அமைந்தது. காதலை மிஸ் பண்ணுவது அவனை வெறிகொள்ளச் செய்தது, தன் மீதும் பிற விசயங்கள் மீதும், ஆனாலும் கடைசியில் அது அவனை மீறிப் பெருகியது. துல்லியமாக சொல்வதெனில், கோபவெறி காதலை மிஸ் பண்ணுவதால் அல்ல அதன் இன்மையாலே அவனுக்கு ஏற்பட்டது. காதலை மிஸ் பண்ணுவதும் ஒருவித நேசத்தை உணர்வதே, சொல்லப் போனால், அதுவே பூரணமாக, எதிர்காலம் குறித்து அதிக நம்பிக்கையை தருவதாக, கண்ணுக்கு முன் வந்து நிற்கும், தொட்டுணர முடிகிற, கைக்கொள்ள முடிகிற காதலை விட அதிக எதிர்பார்ப்புகளைத் தருவதாக இருக்கும்; எப்படியென்றால் ஒருவர் தன் வசம் இல்லாத ஒருத்தியை நினைத்துஉன்னை மிஸ் பண்ணுகிறேன்என சொல்வாரே அதைப் போன்ற காதல். அவன் அப்போது காதலை மிஸ் பண்ணவில்லை. அது அவனிடம் அதிர்ச்சிகரமாக தன் இன்மையை அறிவித்தது; அன்று காலையில் கூட, நாம் குறிப்பிடும் இதே காலை வேளையில் கூட. “இருந்தாலும் நான் அதை மிஸ் பண்ணுகிறேன்,” அவன் சத்தமாக தனக்கே சொல்லிக் கொண்டான். “அது இல்லாமல், அதனால் ஆசீர்வதிக்கப்படாமல், அதோடு இருக்காமல், ஒரு நொடியேனும் அதனூடே இருக்காமல், என்னுடைய இந்த தினம் மதிப்பிழக்கிறது, வெறுமனே தன் நாளை வீணடிக்கிற ஒருவனாகிறேன். மற்றொரு பக்கம், நான் போலியான நட்புகளைத் தூக்கி எறிந்தது குறித்து மகிழ்ச்சியும் கொள்கிறேன்.”

தமிழில்: ஆர். அபிலாஷ்

(பக். 18-19)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...