Skip to main content

ஜுரம் காட்டும் பாசம்



கடந்த மூன்று வருடங்களாக, பெங்களூருக்கு வந்த பின், எனக்கு அதிகமாய் ஜுரம், ஜலதோஷம் போன்ற தொற்றுநோய்கள் வந்ததில்லை - சற்று காலம்  பேலியோ டயட்டில் இருந்தேன்; அதன் பிறகு ஒருவேளை மட்டும் உண்னுகிற intermittent fasting உணவுமுறைக்கு மாறினேன். இந்த இரண்டும் தான் என் உடல்நலனை ஓரளவுக்கு காப்பாற்றி வந்திருக்க வேண்டும் - ஏனென்றால் பெங்களூரில் காற்று மற்றும் நீர் மாசு அதிகம், அதோடு குளிர் காற்று வேறு; மக்கள் தும்மிக் கொண்டும் இருமிக் கொண்டும் இருப்பது இங்கு வாடிக்கை. ஆனால் நீண்ட காலத்துக்குப் பிறகு எனக்கும் ஜுரம் வந்து விட்டது. இவ்வளவு நாள் பார்க்காத வருத்தமோ என்னமோ வந்ததும் என்னை ஆரத்தழுவி கசக்கி பிழிந்து விட்டது. முதலில் மருந்துக்கடையில் தொண்டை வலி, ஜலதோசத்துக்கு மாத்திரை. அடுத்து ஜுரம் வெளித்தெரிய மருத்துவரிடம் போனேன். அவரது ஊசி இரண்டு மணிநேரத்துக்கு வேலை செய்து விட்டு தன் வேலையை பார்க்க போய் விட்டது. மருத்துவர் என்னைப் பார்க்கும் போதெல்லாம்உங்க இடது கை நடுங்குதேஎன்பார். என் கண்ணுக்கு மட்டும் அந்த நடுக்கம் புலப்படாது. இம்முறையும் மறக்காமல் சொன்னார். ஜுரத்திற்குப் பிறகு ரெண்டு கைகளும் வேறு சதா நடுங்குகின்றன. எழுதினால் கை வலிக்கிறது

பா. வெங்கடேசனிடம் சொன்னால்டெங்கு பரவுதுஎன பயமுறுத்துகிறார். இது வேறயா என நினைத்துக் கொண்டேன். அண்மையில் எந்த கொசுவையும் நான் சந்திக்க நேரவில்லை என்பதால் பெரிய பயமில்லை.
இரவெல்லாம் மீண்டும் ஜுரம் படுத்தி எடுத்து விட்டது - நள்ளிரவில் எழுந்து இருமினால் நெஞ்சு வலிக்கிறது. வாயில் கசப்பு. பழைய அரசுப்பேருந்தில் பயணிப்பது போல மெல்லிய நடுக்கம் உடம்புக்குள் ஊடுருவுகிறது. இதோடு என் ரத்த சர்க்கரை வேறு டிராப்பிக்கில் நடுரோட்டில் வாகனத்தில் இருந்து இறங்கி வந்து சண்டை போடுகிறவரைப் போல தாவித் தாவி குதிக்கிறது. ஜுரத்தின் பின்விளைவு என புரிந்து கொண்டேன். சர்க்கரை அளவைக் குறைக்க இரட்டிப்பு இன்சுலின் எடுத்துக் கொள்ள வேண்டும். அது குறைந்தால் ஜுரமும் கட்டுக்குள் வந்து விடும் எனத் தோன்றுகிறது
நேற்றிரவு அம்மா போன் செய்துஉனக்கு உடம்புக்கு ஒன்றுமில்லையே?” என விசாரித்தார். நேற்றைக்கு முந்தைய தினம் அவருக்கு ஒரு கனவாம். அதில் நான் உடல் நலிவுற்றிருக்கிறேன். அதனால் என்னை நேற்று முழுக்க போனில் பிடிக்க முயன்றிருக்கிறார். இது ஏற்கனவே பலமுறை நடந்திருக்கிறது. எனக்கு இப்படி ஆகும் போதெல்லாம் அவர் போனில் வந்து விடுவார். சில நாட்களில் நான் ஜம்மென்று இருக்கும் போது கூட அம்மாவிடம் இருந்து இத்தகைய அழைப்பு வரும் என்பதால் (அடிக்கடி அவர் கனவில் நான் வியாதிஸ்தனாகத் தோன்றுகிறேன் போல) இதன் மன அலைகளின் தொடர்பாக்கம் பற்றியெல்லாம் நான் மெனக்கெட்டு யோசிக்க வில்லை. அவரது பாசத்தை மட்டும் இதில் இருந்து எடுத்துக் கொள்கிறேன்.


ஜுரம் என்பது நன்றாக ஓடுகிற நமது வாழ்வின் குறுக்கே வந்து மனதைக் கலைக்கும் தற்காலிகக் காதலைப் போன்றது. அது கடந்து போன பிறகு தான் தள்ளிப் போட்ட பல பிரச்சனைகள் கதவைத் தட்டி பஞ்சாயத்தைக் கூட்டும். இந்த ஜுரம் சீக்கிரம் சரியாக வேண்டும் - எழுதி முடிக்கப்படாதவை, எடுத்து முடிக்காத வகுப்புகள் ..., விடுப்பெடுத்து ஜாலியாக வேறு பல வேலைகளை மறந்து விட்டு படுத்த வாக்கில் நாவல் படிப்பது இப்போது நன்றாக இருந்தாலும், இது முடிந்ததும் அவை டெர்மினேட்டர் படத்து ஆர்னல்டு ஷுவஸ்னேக்கர் போல வந்து துரத்தி துரத்தி சுடும். அதுக்கு ஜுரப் பாசமே பரவாயில்லை

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...