முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜுரம் காட்டும் பாசம்



கடந்த மூன்று வருடங்களாக, பெங்களூருக்கு வந்த பின், எனக்கு அதிகமாய் ஜுரம், ஜலதோஷம் போன்ற தொற்றுநோய்கள் வந்ததில்லை - சற்று காலம்  பேலியோ டயட்டில் இருந்தேன்; அதன் பிறகு ஒருவேளை மட்டும் உண்னுகிற intermittent fasting உணவுமுறைக்கு மாறினேன். இந்த இரண்டும் தான் என் உடல்நலனை ஓரளவுக்கு காப்பாற்றி வந்திருக்க வேண்டும் - ஏனென்றால் பெங்களூரில் காற்று மற்றும் நீர் மாசு அதிகம், அதோடு குளிர் காற்று வேறு; மக்கள் தும்மிக் கொண்டும் இருமிக் கொண்டும் இருப்பது இங்கு வாடிக்கை. ஆனால் நீண்ட காலத்துக்குப் பிறகு எனக்கும் ஜுரம் வந்து விட்டது. இவ்வளவு நாள் பார்க்காத வருத்தமோ என்னமோ வந்ததும் என்னை ஆரத்தழுவி கசக்கி பிழிந்து விட்டது. முதலில் மருந்துக்கடையில் தொண்டை வலி, ஜலதோசத்துக்கு மாத்திரை. அடுத்து ஜுரம் வெளித்தெரிய மருத்துவரிடம் போனேன். அவரது ஊசி இரண்டு மணிநேரத்துக்கு வேலை செய்து விட்டு தன் வேலையை பார்க்க போய் விட்டது. மருத்துவர் என்னைப் பார்க்கும் போதெல்லாம்உங்க இடது கை நடுங்குதேஎன்பார். என் கண்ணுக்கு மட்டும் அந்த நடுக்கம் புலப்படாது. இம்முறையும் மறக்காமல் சொன்னார். ஜுரத்திற்குப் பிறகு ரெண்டு கைகளும் வேறு சதா நடுங்குகின்றன. எழுதினால் கை வலிக்கிறது

பா. வெங்கடேசனிடம் சொன்னால்டெங்கு பரவுதுஎன பயமுறுத்துகிறார். இது வேறயா என நினைத்துக் கொண்டேன். அண்மையில் எந்த கொசுவையும் நான் சந்திக்க நேரவில்லை என்பதால் பெரிய பயமில்லை.
இரவெல்லாம் மீண்டும் ஜுரம் படுத்தி எடுத்து விட்டது - நள்ளிரவில் எழுந்து இருமினால் நெஞ்சு வலிக்கிறது. வாயில் கசப்பு. பழைய அரசுப்பேருந்தில் பயணிப்பது போல மெல்லிய நடுக்கம் உடம்புக்குள் ஊடுருவுகிறது. இதோடு என் ரத்த சர்க்கரை வேறு டிராப்பிக்கில் நடுரோட்டில் வாகனத்தில் இருந்து இறங்கி வந்து சண்டை போடுகிறவரைப் போல தாவித் தாவி குதிக்கிறது. ஜுரத்தின் பின்விளைவு என புரிந்து கொண்டேன். சர்க்கரை அளவைக் குறைக்க இரட்டிப்பு இன்சுலின் எடுத்துக் கொள்ள வேண்டும். அது குறைந்தால் ஜுரமும் கட்டுக்குள் வந்து விடும் எனத் தோன்றுகிறது
நேற்றிரவு அம்மா போன் செய்துஉனக்கு உடம்புக்கு ஒன்றுமில்லையே?” என விசாரித்தார். நேற்றைக்கு முந்தைய தினம் அவருக்கு ஒரு கனவாம். அதில் நான் உடல் நலிவுற்றிருக்கிறேன். அதனால் என்னை நேற்று முழுக்க போனில் பிடிக்க முயன்றிருக்கிறார். இது ஏற்கனவே பலமுறை நடந்திருக்கிறது. எனக்கு இப்படி ஆகும் போதெல்லாம் அவர் போனில் வந்து விடுவார். சில நாட்களில் நான் ஜம்மென்று இருக்கும் போது கூட அம்மாவிடம் இருந்து இத்தகைய அழைப்பு வரும் என்பதால் (அடிக்கடி அவர் கனவில் நான் வியாதிஸ்தனாகத் தோன்றுகிறேன் போல) இதன் மன அலைகளின் தொடர்பாக்கம் பற்றியெல்லாம் நான் மெனக்கெட்டு யோசிக்க வில்லை. அவரது பாசத்தை மட்டும் இதில் இருந்து எடுத்துக் கொள்கிறேன்.


ஜுரம் என்பது நன்றாக ஓடுகிற நமது வாழ்வின் குறுக்கே வந்து மனதைக் கலைக்கும் தற்காலிகக் காதலைப் போன்றது. அது கடந்து போன பிறகு தான் தள்ளிப் போட்ட பல பிரச்சனைகள் கதவைத் தட்டி பஞ்சாயத்தைக் கூட்டும். இந்த ஜுரம் சீக்கிரம் சரியாக வேண்டும் - எழுதி முடிக்கப்படாதவை, எடுத்து முடிக்காத வகுப்புகள் ..., விடுப்பெடுத்து ஜாலியாக வேறு பல வேலைகளை மறந்து விட்டு படுத்த வாக்கில் நாவல் படிப்பது இப்போது நன்றாக இருந்தாலும், இது முடிந்ததும் அவை டெர்மினேட்டர் படத்து ஆர்னல்டு ஷுவஸ்னேக்கர் போல வந்து துரத்தி துரத்தி சுடும். அதுக்கு ஜுரப் பாசமே பரவாயில்லை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...