Skip to main content

புத்தகக் கண்காட்சி 2020: நாவல்கள் எனும் ஆடிப்பெருக்கு



ஒவ்வொரு கண்காட்சியிலும் இதை கவனிக்கலாம்: ஒவ்வொரு மூன்று, நான்கு வருடங்களும் புத்தக வரவில் புது வெள்ளம் பாய்கிறது. இந்த முறை கண்காட்சியில் நான் அதிகமாய் நாவல்களைக் கண்டேன். அதிகமாய் வலைதளங்களில் பேசப்பட்டவையும் நாவல்கள் தாம். அடுத்து புதிய புதிய பொருளில் அபுனைவு நூல்களும் குவிந்துள்ளன. அதுவும் அரசியல் சமூக நூல்கள். கவிதை நூல்களும் மலிந்துள்ளன என்றாலும் நான் எடுத்து வாசித்துப் பார்த்தவரையில் உருப்படியாய் புதிய தொகுப்புகளில் கண்ணில் படவில்லை (ஒருவேளை நான் அதிக அக்கறையுடன் கவிதைகளைத் தேடியிருக்க மாட்டேன்).

 நாவல் வடிவிலும் பரீட்சார்த்த முயற்சிகள் அரிதாகி எதார்த்தவாத கதைகளே அதிகமாகி விட்டன. அதுவும் நிறைய பேர் முகநூல் எழுத்து அல்லது சிறுகதையில் இருந்து தம் முதல் நாவல்களை வெளியிட்டிருக்கிறார்கள். எந்தளவுக்கு என்றால் ஏற்கனவே தடம் பதித்த எழுத்தாளர்களை விட புத்தகமே வெளியிடாத இளம் பேஸ்புக்கர்களை இது நெருக்கடியில் தள்ளி உள்ளது. யாவரும் டாட்காம் சென்ற போது ஜீவ.கரிகாலன் தான் கொண்டு வந்துள்ள புது எழுத்தாளர்களின் நாவல்களை அடுக்கடுக்காய் காண்பித்தார்; அசந்து போனேன். பிரியா விஜயராகவனின்அற்றவைகளால் நிரம்பியவள்நாவலை அரங்கில் இருந்தே சில அதியாயங்கள் படித்தேன். முதலில் ஆச்சரியப்படுத்தியது தன் முதல் நாவலையே இவ்வளவு பெரிதாக எழுதியிருக்கிறாரே என்பது. அடுத்து தலைமுறைகளின் கதையை எழுதாமல் ஒரு பெண்ணின் கதையை பல நாடுகளுக்கு எடுத்துப் போய் அந்தரங்கமான அனுபவங்களின் தொகுப்பாக எழுதியிருக்கிறார் என்பது. அடுத்து தனித்தமிழில் எழுதுகிற மெனக்கேடு ஒன்றும் அவருக்கு இல்லை - ஆங்கிலச் சொற்களை அப்படியே பயன்படுத்துகிறார்; சிறிய அதிர்ச்சி மதிப்பும் சிலாகிப்பும் கலந்து பாலியலை எழுதுகிறார். இது இன்றைய முகநூல் எழுத்தின் தாக்கத்தினால் இருக்கலாம்
படித்தவரையில் அந்த நாவலில் ஒரு நாவலாசிரியருக்கான பல லட்சணங்களைக் கண்டேன்.


புது எழுத்தாளர்களின் நாவல் முயற்சிக்கு பேஸ்புக் பெரிய அடித்தளம் எனத் தோன்றுகிறது. தினமும் இங்கு எழுதுவது அவர்களுக்கு சரளமான மொழிநடையையும் தம் கதையை சொன்னாலே அது நல்ல கதையாக அமையும் எனும் நம்பிக்கையையும் கொடுக்கிறது. இரண்டுமே புனைவெழுத்தாளனுக்கு அவசியமான இயல்புகள். நான் இந்த போக்கை ஆரோக்கியமானதாகப் பார்க்கிறேன் - ஒருவர் தன் முதல் நாவலை எழுதுவது ஒன்றும் சாதாரண விசயம் அல்ல. நீங்கள் எந்தளவுக்கு அதிகமாய் வாசிக்கிறீர்களோ அந்தளவுக்கு எழுதுவது சிரமமாகும். இத்தனை அற்புதமான நாவலாசிரியர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் செய்தாக வேண்டும்; அவர்களின் சாதனைக்கு சற்றும் குன்றாமல் செய்ய வேண்டும். ஒரு குறிப்பிட்ட சூழலை, சம்பவத்தை, பாத்திர அமைப்பை அவர்களுக்கு ஒப்பாக நாமும் எழுத வேண்டும் என்கிற அழுத்தங்கள் நாவலை சரளமாக எழுதிப் போக சிலநேரம் பாதகமாகும். சிலபேருக்கு இத்தகைய எதிர்பார்ப்புகளே நாவலை துவங்குவதற்கு தடையாகும். ஆனால் தோளில் பாரமில்லாமல் பயணத்தை ஆரம்பிக்கிறவர்கள் சுலபத்தில் இலக்கை தொட்டு விடுகிறார்கள். அடுத்தடுத்து இவர்கள் எழுதுவது மற்றும் நாவலின் கலையை கற்றும் அனுபவத்தில் உணர்ந்தும் அறிவது முக்கியமாக இருக்கும். 2023இல் இவர்களே அடுத்தடுத்த நாவல்களை வெளியிடுவார்களா அல்லது வேறு ஆட்கள் வருவார்களா எனப் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...